ஒரு நிசப்தமான இரவில்
வெற்று வானமும் ஒற்றை நிலவும்
என் உயிர்தடவிய கணங்களை
எழுத நினைத்த நிமிடங்களில்
வந்தது உன் நினைவு...!
கலைந்து செல்லும் மேகங்களில்
மறைந்து நின்று கண் சிமிட்டுவது...
நீயென்று கணித்து முடித்த கணத்தில்...
கை கொட்டி சிரித்தது .... நட்சத்திரம்...!
உடல் ஊடுருவி அணைத்தது
நீதான் என்று உணர்ச்சிவயப்பட்ட நேரத்தில்
பரிகசித்து..பயணம் முடித்திருந்தது
நடு நிசியின் ஊதக் காற்று....
கிறக்கத்தில் கண்மூடினால்...
நீ வருவதும்....கண் திறந்தால்
நீ மறைவதும் என்ற கண்ணாமூச்சியில்
வழிந்தோடிக் கொண்டிருந்த இரவில்
பரவிக்கிடந்த கருமையை
விரிந்து கிடக்கும் உன் கூந்தலென்று
நினைத்து முடித்த மாத்திரத்தில்
பரிகாசமாய் விடிந்தே போனது பொழுது....!
காதலில் தகிக்கும் எல்லோரும் 240 வால்ட் மின்சாரத்தை உடம்பில் ஏற்றுக் கொண்டிருப்பவர்கள்தான். ஒரு இரவின் வெறுமையில் ஒற்றை நிலவும் ...ஒரு நிலவுதான் யார் இல்லேன்னு சொன்னது...? காதல் தகிப்பில் ஒரு நிலவு என்பதே பெரிய சிலாகிப்பாக தெரிகிறது. காதல் வயப்படும் கணங்களில் எல்லாமே அர்த்தம் பொதிந்ததாயும் ஒரு வித குழந்தையை ஒத்த மனோ நிலையும் ஏற்படுவதுதான் அழகு.
ஒரு படத்துக்கு ட்ரெய்லர் மாதிரிதான்...ஆன்மிக உச்சத்துக்கான ட்ரெய்லர் காதல் அனுபவம். பெரும்பாலும் அதனை அன்னம் பிரிக்கும் பால் போல பிரித்து...உருவம் விலக்கி அருவத்தை உள்ளே வைத்து...அதாவது உணர்வுகளை உள்ளே படரவிட்டு....அதில் லயித்துக் கிடப்பது ஒரு அலாதியான அனுபவம். இந்த சந்தோசம் எங்கே இருந்து கிடைக்கிறது... நமக்குள்ளேதான்...ஆனால் அதற்கு ஒரு தூண்டு சக்தி....புறத்தில் தேவைப்படுகிறது....
பழக..பழக... புறத்தின் தொடர்பறுந்து..... நமக்குள் நாமே காதலோடு நிறைந்து கிடக்கும் ஆச்சர்யமும் நடக்கும்....அதற்கு..தேவை புரிதலுடன் கூடய பொறுமையான பயணம்.....!
தேவா. S
Photo Courtesy: Ms. Ramya Pilai
Article & image copy right @ http://maruthupaandi.blogspot.com
Comments
..... அனுபவம் பேசுதோ? ரைட்டு!!!
விரிந்து கிடக்கும் உன் கூந்தலென்று
நினைத்து முடித்த மாத்திரத்தில்
.... sweet!!!
நீ வருவதும்....கண் திறந்தால்
நீ மறைவதும் என்ற கண்ணாமூச்சியில்
வழிந்தோடிக் கொண்டிருந்த இரவில்
பரவிக்கிடந்த கருமையை
விரிந்து கிடக்கும் உன் கூந்தலென்று
நினைத்து முடித்த மாத்திரத்தில்
பரிகாசமாய் விடிந்தே போனது பொழுது....!
//
அவளின் (அவர்களின்) நினைவுகளால் உறக்கம் தொலைத்ததொடு மட்டுமல்லாமல் உங்களையும் தொலைத்திருக்கிரீர்கள்..
//
Nice lines
//
Nice lines
வெறும் பய தம்பிய பாருங்க..காதல்னா துள்ளி குதிகிறான்..வேற கட்டுரைனா...பம்முறான்....ஆமா எங்க ஏமியோட காதலனை காணோம்....?
//
நமக்கு இந்த காதல் மட்டும் தான் ஈசியா மண்டையில ஏறுது.. மத்ததெல்லாம் பம்முது..... இப்போ கூட பாருங்க மத்ததெல்லாம் பத்து தடவை படிச்சா கூட புரியமாட்டேங்குது.. இது ஒரு தடவை தான் பாத்தேன் பக்குன்னு ஒட்டிகிச்சு..
நீ வருவதும்....கண் திறந்தால்
நீ மறைவதும் என்ற கண்ணாமூச்சியில்
வழிந்தோடிக் கொண்டிருந்த இரவில்
பரவிக்கிடந்த கருமையை
விரிந்து கிடக்கும் உன் கூந்தலென்று
நினைத்து முடித்த மாத்திரத்தில்
பரிகாசமாய் விடிந்தே போனது பொழுது....!// எனக்கு மட்டும் இந்த மாதிரி கனவு வரவே மாட்டேங்குதே. காதலும் கண்ணாமூச்சியாட்டம் ஒன்னுதாண்ணே.
உன்னோடு பயணிக்க ஊரார் ஆசைபட
ஒத்தையாக என்னோடு வந்தாய்
தண்டவாளத் தனிமையில்
தவழ்ந்தோடலாம்
தாக்குப் பிடிக்க நான் தயார்
தெறத்தோட நீ தயாரா ?
என்னடா ஜில்லு கவிதலாம் எழுதுற ???
சரி எதோ பீலிங்க்சுல கிறுக்கிட்டனோ :)
ஃபீலிங்கசை வர வழைத்த தேவா அண்ணனுக்கு நன்றி :)
உண்மையான வார்த்தைகள்! அப்படியே ஓஷோவை நினைவு படுத்துகிறது உங்க வார்த்தை தேவா!
நண்பா! நீங்க நம்ப பக்கம் வந்து ரொம்ப நாள் ஆச்சுதே! எப்போ வர்றீங்க?
http://uravukaaran.blogspot.com/
புது பதிவுகளை போட்டிருக்கேன். வந்து பாருங்க!
மறைந்து நின்று கண் சிமிட்டுவது...
நீயென்று கணித்து முடித்த கணங்களில்
கை கொட்டி சிரித்தது .... நட்சத்திரம்...!
தேவா நல்ல வரிகள்
கோர்த்திருக்கும் விதம் அருமை
jey@@@ பொய் சொன்னாலும் அளவோடு சொல்லணும்
ஐயோ அத ஏன்னா கேக்குறீங்க .. அது ரொம்ப ரவுசு பண்ணுது .. ஆனா நல்லாத்தான் இருக்கு ..
இருக்கிறேன், இது வரை கருத்துரை இட்ட்து இல்லை...வாழ்த்த வயதில்லை...வணங்குகிறேன்....
லைவ்வா இல்ல நெகட்டிவ் மட்டுமா...ஹி..ஹி..
சின்னதா ஒரு விசயத்த எடுத்துகிட்டு எப்படி எல்லாம் எழுதுறீங்க ...
//கிறக்கத்தில் கண்மூடினால்...
நீ வருவதும்....கண் திறந்தால்
நீ மறைவதும் என்ற கண்ணாமூச்சியில்
வழிந்தோடிக் கொண்டிருந்த இரவில்
பரவிக்கிடந்த கருமையை
விரிந்து கிடக்கும் உன் கூந்தலென்று
நினைத்து முடித்த மாத்திரத்தில்
பரிகாசமாய் விடிந்தே போனது பொழுது....!//
ஐயோ என்ன வரிகள்....அண்ணா பின்னீட்டீங்க..சிலவற்றை கத்தி பாராட்டியே தீரனும், அந்த மாதிரி அருமையான பதிவு
நீ வருவதும்....கண் திறந்தால்
நீ மறைவதும் என்ற கண்ணாமூச்சியில்
வழிந்தோடிக் கொண்டிருந்த இரவில்
பரவிக்கிடந்த கருமையை
விரிந்து கிடக்கும் உன் கூந்தலென்று
நினைத்து முடித்த மாத்திரத்தில்
பரிகாசமாய் விடிந்தே போனது பொழுது....!//
இந்த காதல் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுலன்னா காலைப் பொழுது பிரகாசமாய் விடிந்திருக்கும். உண்மைதான் காதல் அகத்தில் பிரகாசம், புறத்தில் பரிகாசம்.