Skip to main content

கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும்...!


தமிழ் இணைய வெளிக்குள் உலாவும் அத்தனை பேருக்கும் கேபிள் சங்கரைத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை அதுவும் வலைப்பதிவர்களுக்கு எல்லாம் கிட்டத்தட்ட அவர் பீஷ்மர் மாதிரி. எவ்வளவு வேலைகள் இருந்தாலும் தொடர்ச்சியாய் தனது உணர்வுகளை சமூகம் பற்றிய பார்வைகளை அவர் பதிவு செய்யாமல் இருந்ததே இல்லை. ஒரு திரைப்படத்தை இயக்குவது என்பது சாதாரணமான வேலை இல்லை என்றாலும் அதற்கு இடையிலும் அவர் வலைப்பக்கத்தில் எழுதிக் கொண்டுதான் இருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்...!

கே.ஆர்.பி செந்தில் மூலம்தான் கேபிள் அண்ணா எனக்கு அறிமுகமானார். கேபிளின் கடுமையான உழைப்பையும், திட்டமிடலையும், சினிமா பற்றிய அறிவையும் பற்றி அடிக்கடி அவர் சிலாகித்துப் பேசுவார். இணைய உலகில் கேபிளின்  சினிமா விமர்சனங்கள் வெகு பிரலபமானது. ஒரு திரைப்படம் சரியாய் இல்லை என்றால் தயவு தாட்சண்யம் பார்க்காமல் கிழித்து தொங்க விட்டு விடுவார். சினிமா விமர்சனம் எழுதியவர், கதைகள் கவிதைகள், கட்டுரைகள், என்று எழுதியவர் திரைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறாரே.... அதெல்லாம் அவருக்கு சரியாய் வருமா என்ற நிறைய பேர்களின் நினைப்பை... புட்பாலாக்கி ஸ்ட்ரெய்ட்டாக கோல் அடித்து பரபரப்பை உண்டாக்கியது தொட்டால் தொடரும் படத்தின் முதல் டீசர் பாடல்.

சமகால இளையர்களுக்கு என்ன வேண்டும்? அவர்கள் எதை ரசிப்பார்கள் என்பதை இளைஞர்களுக்கு மத்தியில் இருந்து கொண்டு சமூகப் பிரச்சினைகளை பார்க்கும் ஒருவரை விட வேறு யாரால் தெளிவாய்ச் சொல்லி விட முடியும்.....?

கேபிள் சங்கர் 100 படங்களுக்கு உதவி இயக்குனராய் பணியாற்றி சினிமா மரபுகளையும் இன்ன பிற தயவு தாட்சண்யங்களையும் பின்பற்றி தன்னை அதற்கு ஏற்றார் போல மாற்றிக் கொண்டு இயக்குனர் ஆனவர் அல்ல....


அவர் 1000க்கும் மேற்பட்ட படங்களை ரசிகர்களோடு ரசிகர்களாக அமர்ந்து பார்த்து  ரசிகனுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்பதை தெளிவாய் அறிந்து வைத்திருப்பவர். என்னைப் போன்ற வலைப்பதிவர்களுக்கு எல்லாம் வலைப்பதிவர்களின் முன்னோடியான கேபிள் சங்கர் படம் இயக்கப் போகிறார்  என்ற செய்தியைக் கேட்டதில் இருந்து ரஜினி புதுப்படம் அறிவித்ததைப் போலத்தான் இருந்தது. தொட்டால் தொடரும் படத்தின் செய்திகள் இணையத்தில் வரும்போதெல்லாம் வெகு ஆவலாய் அதைப் பார்ப்பதும் படிப்பதுமாய் இருந்த எங்களுக்கு வெகு சீக்கிரமே படம் வெளியாகப் போகிறது என்ற செய்தி வெகு இனிப்பானதுதான்.

தொட்டால் தொடரும் படத்தின் பாடல்கள் வெளியாகி இருக்கும் இந்த நேரத்தில் அந்தப் படத்தின் முதல் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. பட்டாசு வெடிப்பதற்கு முன்பு திரி பற்றிக் கொள்ளுமே சர...சரவென்று....அதே வேகத்தில் படத்தின் ஷாட்களும், பின்னணி இசையும், வசனங்களும் ஸ்க்ரீனில் பரபரக்க....பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்குள்ளும் பற்றிக் கொள்கிறது அந்தப் பொறி....!

ஒரு வெற்றிப்படத்திற்குரிய சகல குணாதிசயங்களுடன் வெளியாகி இருக்கும் தொட்டால் தொடரும் பாடல்களும், ட்ரைலரும்  இணையத்தில் இப்போது பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன...! 


தொட்டால் தொடரும் படம் மிகப்பெரிய வெற்றியடைந்து அண்ணன் கேபிள் சங்கர் எட்ட முடியாத உயரங்களை எல்லாம் எட்டிப் பிடிக்க  எனது அன்பான வாழ்த்துகள்...!


தேவா சுப்பையா...




Comments

அண்ணன் கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும் படம் வெற்றிபெற்று தொடர்ந்து பல வெற்றி படங்கள் குவிக்க வாழ்த்துக்கள்!
Unknown said…
நன்றி தேவா :))
kowsy said…
தொடர் வெற்றிக்கு நிறைவான வாழ்த்துக்கள்
Anonymous said…
Songs are Very GOOD.

waiting for big show.

Seshan/Dubai
கேபிள் அண்ணா தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...