Skip to main content

பதிப்பு...!

















மறத்தலுக்கு சாத்தியமற்ற
முதலாய் அழுந்தப் பெற்ற
ஈரமேறிய அந்த
முத்த பதிப்பின் கிளர்ச்சி
நிமிடங்களை வடிக்க
ஏதேனும் மொழியிருக்கிறதா?

மெத்தென பற்றி
உயிர் பறித்த அந்த
கலப்பு நிமிடங்களில்
உந்தப் பட்ட காமத்தின்
வெம்மையில் ஜென்மங்களாய்
கற்க மறந்த பாடத்தின்
பக்கங்கள் மீண்டும் திறக்க...
பற்றுதலுக்காய் துவளும்...
கொடி போல.. கிறங்கிக்
கிடந்த நிமிடங்களின்
சாயலில்தான் சொர்க்கம்
என்ற சூத்திரத்தின்
மூலம் பிறந்திருக்குமோ...!

வசீகர பரிமாற்றத்தின்
அழுத்தமான பற்றியிழுப்பு
முன் பின்னாய்...கலைத்துப் போட்ட
அந்த முதல் நாளின்...
தனித்த இரவில்
பிறழ்ந்து போன உறக்கத்தில்
ஏக்கமாய் என்னுள் நிறைந்த
சூட்சும காதல் இட்ட முடிச்சுகள்
கடத்திசெல்கின்றன ..
மீண்டும் மீண்டும்
அந்த முத்த நிமிடங்களுக்கு...!


தேவா. S

Comments

THOPPITHOPPI said…
கலப்பு நிமிடங்களில்
உந்தப் பட்ட காமத்தின்
வெம்மையில் ஜென்மங்களாய்.

****************************
அருமையான வரிகள்
//சாயலில்தான் சொர்க்கம்
என்ற சூத்திரத்தின்
மூலம் பிறந்திருக்குமோ.//

nono (a+b)^2=a^2+b^2+2ab

இந்த சூத்திரம்தான். சூத்திரம்னா பார்முலா தான?
//சூட்சும காதல் இட்ட முடிச்சுகள்
கடத்திசெல்கின்றன ..//

கடத்திட்டு போய் எவ்ளோ டிமாண்ட் பண்ணுச்சு
ரொம்ப நல்லாயிருக்கு அண்ணா..
//முன் பின்னாய்...கலைத்துப் போட்ட
அந்த முதல் நாளின்...//


அது என்ன சீட்டு கட்டுங்கலானா...
சூட்சும காதல் இட்ட முடிச்சுகள்
கடத்திசெல்கின்றன/////

எதுக்கு கடத்தி சென்றாகள் என்ன வேண்டும் கேக்குறாங்க சிரிப்பு போலீஸ் சீக்கிரம் கண்டு பிடியுங்க
ஒருவேளை ரமேஷ் என் பதிவில் போட்ட புஸ்வானம் மாதிரியோ ..............
dheva said…
செளந்தர்..@ தம்பி உன் ஆதங்கம் புரியுது... அதுக்காக போய் சிரிப்பு போலிச போய் கூப்டுறியே....

அவன் தொலஞ்சே ஆறு மாசம் ஆச்சு.. அவனாலயே கண்டுபிடிக்க முடியல எங்க இருக்கான்னு....!
dheva said…
ராஜா கோபால்..@ வாங்க.. வாங்க...வாங்க... ஏற்கனெவே ஆளுக கம்மியா இருக்காங்க.. வந்து சிரிப்பு போலிஸ் கிட்ட அப்ளிகேசன் வாங்கி ஜாயின் பண்ணிக்கோங்க...!
dheva said…
இம்சை....@ அந்த டைம் பாம் என்னாச்சு..?????
///மறத்தலுக்கு சாத்தியமற்ற
முதலாய் அழுந்தப் பெற்ற
ஈரமேறிய அந்த
முத்த பதிப்பின் கிளர்ச்சி
நிமிடங்களை வடிக்க
ஏதேனும் மொழியிருக்கிறதா?///

ஹ்ம்ம் கும்ம்... ஏற்கனவே இவரு எழுதுறதுல பாதிக்கு மேல, புரியறதுக்கு அவர் தான் கோனார் உரை அனுப்பனும்... அதுலயும் புரியாம, ஸ்பெஷல் கிளாஸ் போகோணும்......!! :-)))
இதுல வேற மொழி ஏதும் இருக்காவா??? அது சரி...!!! :D :D :D

சரி விடுங்க... மொழி தானே??? இவ்ளோ பழகிட்டு நீங்க கேட்டு சொல்லலன்னா நல்லா இருக்காது...!

ஹ்ம்ம்ம்... அதுல பாருங்க.. தேவா...அது இருக்கு 1008 மொழி... (நம்ம நாட்டுல மொழிக்கா பஞ்சம்?? )
ஆனா.. உங்களுக்கு எது, வசதின்னு தான் இப்ப பாக்கணும்...
சரி ரைட்ட்டு... ஒண்ணு பண்ணுங்க.. முதல்ல டெஸ்டிங் உங்க தாய் மொழியாம் தமிழில்....
பின்னே குறைச்சு மலையாளத்துல..... பிர் ஹிந்தி மேங்.... தர்வாதா தெலுகுலோ..... இதுல எது வசதி???? :-)))))

மேல கமெண்ட் போட்டது நா இல்லிங்கோ.......!!! :-)))
அப்போ நா வர்ர்ட்டாங்க ....!! :D

(பி.கு.: தேவா.. படம் வரலங்க..... நைஸ் சாங்....)
ரொம்ப நல்லாயிருக்கு அண்ணா.
//சூட்சும காதல் இட்ட முடிச்சுகள்
கடத்திசெல்கின்றன ..
மீண்டும் மீண்டும்
அந்த முத்த நிமிடங்களுக்கு...!//

நல்ல வரிங்க.
Chitra said…
ரொம்ப அருமையாய் எழுதி இருக்கீங்க, தேவா!
Unknown said…
வெகு நேரம் உங்கள் கவிதையில் நிறைக்கிறது மனது ..

அற்புதம் தேவா.. பாராட்டுக்கள் ...
கவிதையைப் போலவே ஒலிக்கும் பாடலும் ரொம்பவே ரசித்தேன்.
தேவா... உங்கள் கவிதையும், படமும், பாடலும்....அருமை..!!
சின்னப்புள்ளைங்க உலவுகிற இடமாத் தெரியிது. கெடுத்துடாதீங்க தேவா! :-))
எனக்கு எதுக்கு இந்த வீண் முயற்சி எல்லாம் ..
இரண்டு தடவ படிச்சேன் .. ஆனா கொஞ்சம் புரியாம இருக்கு ..
அதனால கிளம்புறேன் ..இதெல்லாம் புரியரக்கு நான் இன்னும் வளரணும்னு நினைக்கிறேன் ..

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த