Skip to main content

பதிப்பு...!

















மறத்தலுக்கு சாத்தியமற்ற
முதலாய் அழுந்தப் பெற்ற
ஈரமேறிய அந்த
முத்த பதிப்பின் கிளர்ச்சி
நிமிடங்களை வடிக்க
ஏதேனும் மொழியிருக்கிறதா?

மெத்தென பற்றி
உயிர் பறித்த அந்த
கலப்பு நிமிடங்களில்
உந்தப் பட்ட காமத்தின்
வெம்மையில் ஜென்மங்களாய்
கற்க மறந்த பாடத்தின்
பக்கங்கள் மீண்டும் திறக்க...
பற்றுதலுக்காய் துவளும்...
கொடி போல.. கிறங்கிக்
கிடந்த நிமிடங்களின்
சாயலில்தான் சொர்க்கம்
என்ற சூத்திரத்தின்
மூலம் பிறந்திருக்குமோ...!

வசீகர பரிமாற்றத்தின்
அழுத்தமான பற்றியிழுப்பு
முன் பின்னாய்...கலைத்துப் போட்ட
அந்த முதல் நாளின்...
தனித்த இரவில்
பிறழ்ந்து போன உறக்கத்தில்
ஏக்கமாய் என்னுள் நிறைந்த
சூட்சும காதல் இட்ட முடிச்சுகள்
கடத்திசெல்கின்றன ..
மீண்டும் மீண்டும்
அந்த முத்த நிமிடங்களுக்கு...!


தேவா. S

Comments

THOPPITHOPPI said…
கலப்பு நிமிடங்களில்
உந்தப் பட்ட காமத்தின்
வெம்மையில் ஜென்மங்களாய்.

****************************
அருமையான வரிகள்
//சாயலில்தான் சொர்க்கம்
என்ற சூத்திரத்தின்
மூலம் பிறந்திருக்குமோ.//

nono (a+b)^2=a^2+b^2+2ab

இந்த சூத்திரம்தான். சூத்திரம்னா பார்முலா தான?
//சூட்சும காதல் இட்ட முடிச்சுகள்
கடத்திசெல்கின்றன ..//

கடத்திட்டு போய் எவ்ளோ டிமாண்ட் பண்ணுச்சு
ரொம்ப நல்லாயிருக்கு அண்ணா..
//முன் பின்னாய்...கலைத்துப் போட்ட
அந்த முதல் நாளின்...//


அது என்ன சீட்டு கட்டுங்கலானா...
சூட்சும காதல் இட்ட முடிச்சுகள்
கடத்திசெல்கின்றன/////

எதுக்கு கடத்தி சென்றாகள் என்ன வேண்டும் கேக்குறாங்க சிரிப்பு போலீஸ் சீக்கிரம் கண்டு பிடியுங்க
ஒருவேளை ரமேஷ் என் பதிவில் போட்ட புஸ்வானம் மாதிரியோ ..............
dheva said…
செளந்தர்..@ தம்பி உன் ஆதங்கம் புரியுது... அதுக்காக போய் சிரிப்பு போலிச போய் கூப்டுறியே....

அவன் தொலஞ்சே ஆறு மாசம் ஆச்சு.. அவனாலயே கண்டுபிடிக்க முடியல எங்க இருக்கான்னு....!
dheva said…
ராஜா கோபால்..@ வாங்க.. வாங்க...வாங்க... ஏற்கனெவே ஆளுக கம்மியா இருக்காங்க.. வந்து சிரிப்பு போலிஸ் கிட்ட அப்ளிகேசன் வாங்கி ஜாயின் பண்ணிக்கோங்க...!
dheva said…
இம்சை....@ அந்த டைம் பாம் என்னாச்சு..?????
///மறத்தலுக்கு சாத்தியமற்ற
முதலாய் அழுந்தப் பெற்ற
ஈரமேறிய அந்த
முத்த பதிப்பின் கிளர்ச்சி
நிமிடங்களை வடிக்க
ஏதேனும் மொழியிருக்கிறதா?///

ஹ்ம்ம் கும்ம்... ஏற்கனவே இவரு எழுதுறதுல பாதிக்கு மேல, புரியறதுக்கு அவர் தான் கோனார் உரை அனுப்பனும்... அதுலயும் புரியாம, ஸ்பெஷல் கிளாஸ் போகோணும்......!! :-)))
இதுல வேற மொழி ஏதும் இருக்காவா??? அது சரி...!!! :D :D :D

சரி விடுங்க... மொழி தானே??? இவ்ளோ பழகிட்டு நீங்க கேட்டு சொல்லலன்னா நல்லா இருக்காது...!

ஹ்ம்ம்ம்... அதுல பாருங்க.. தேவா...அது இருக்கு 1008 மொழி... (நம்ம நாட்டுல மொழிக்கா பஞ்சம்?? )
ஆனா.. உங்களுக்கு எது, வசதின்னு தான் இப்ப பாக்கணும்...
சரி ரைட்ட்டு... ஒண்ணு பண்ணுங்க.. முதல்ல டெஸ்டிங் உங்க தாய் மொழியாம் தமிழில்....
பின்னே குறைச்சு மலையாளத்துல..... பிர் ஹிந்தி மேங்.... தர்வாதா தெலுகுலோ..... இதுல எது வசதி???? :-)))))

மேல கமெண்ட் போட்டது நா இல்லிங்கோ.......!!! :-)))
அப்போ நா வர்ர்ட்டாங்க ....!! :D

(பி.கு.: தேவா.. படம் வரலங்க..... நைஸ் சாங்....)
ரொம்ப நல்லாயிருக்கு அண்ணா.
//சூட்சும காதல் இட்ட முடிச்சுகள்
கடத்திசெல்கின்றன ..
மீண்டும் மீண்டும்
அந்த முத்த நிமிடங்களுக்கு...!//

நல்ல வரிங்க.
Chitra said…
ரொம்ப அருமையாய் எழுதி இருக்கீங்க, தேவா!
Unknown said…
வெகு நேரம் உங்கள் கவிதையில் நிறைக்கிறது மனது ..

அற்புதம் தேவா.. பாராட்டுக்கள் ...
கவிதையைப் போலவே ஒலிக்கும் பாடலும் ரொம்பவே ரசித்தேன்.
தேவா... உங்கள் கவிதையும், படமும், பாடலும்....அருமை..!!
சின்னப்புள்ளைங்க உலவுகிற இடமாத் தெரியிது. கெடுத்துடாதீங்க தேவா! :-))
எனக்கு எதுக்கு இந்த வீண் முயற்சி எல்லாம் ..
இரண்டு தடவ படிச்சேன் .. ஆனா கொஞ்சம் புரியாம இருக்கு ..
அதனால கிளம்புறேன் ..இதெல்லாம் புரியரக்கு நான் இன்னும் வளரணும்னு நினைக்கிறேன் ..

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...