Skip to main content

எரிமலைகள் வெடிக்கட்டும்...! பதிவுத் தொடர் முடிவு























இதுவரை

பாகம் I

பாகம் II

இனி...


ஈழப்போரட்டம்.....என்பது ஒரு தனி நாடு கோரும் மக்களின் போராட்டம் என்பதைக் காட்டிலும் அது அண்டை நாடுகளின் உதவியுடன் முறியடிக்க முயன்ற நயவஞ்சக செயல் என்பதுதான் இப்போது உள்ள பிரச்சனை...

நீ என்னை அடி... ஆனால் நேர்மையாக அடி.....ஆனால் முதுகில் குத்தாதே....100 பேர் சேர்ந்து ஒருவனை அடிப்பது எமக்கு தர்மம் இல்லை....!! எல்லாவற்றிலும் ஒரு மரபை கொண்டது தான் தமிழ்ச் சமுதாயம்....எங்களுக்கு எல்லாம் யுத்த மரபு என்று ஒன்று தெரியும்...அது வெள்ளை கொடி பிடித்து வந்தவனை சுட்டுக் கொல்லாது....அது எதிரியாய் இருந்தாலும் அவனுக்கும் பசிக்குமே என்று கவலைப்படும்.... நாகரீகத்தை உலகிற்கு சொல்லிக் கொடுத்த ஒரு இனத்தை இன்று அடக்குமுறையால் நசுக்கி இருக்கிறது இந்த சர்வதேச சமுதாயம்.

ஆயுதங்கள் தூக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமையினை உருவாக்கிய மிருகங்கள் இன்று அஹிம்சை பற்றி எல்லாம் போதனை செய்கின்றன்.....! புத்தரை வழி படும் இந்த மேதாவிகள் எங்கு பார்த்தாலும் பெளத்த கோவில்களாய் எழுப்பி வருகிறார்களாம் ...எதற்கு...வன்முறையை புத்தருக்கும் போதிக்கவா....? தயவு செய்து புத்தனை தொடர்வதாய் இனியும் சொல்லாதிருங்கள் அது புத்தருக்கு நீங்கள் செய்யும் அவமானம்....!


மெளனமாய் அறவழியில் போராடி உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தானே...தீலீபன் அப்போது தெரியவில்லையா....காந்தீய வழியையும் இவர்கள் காலில் இட்டு மிதித்துக் கொன்றது....! வன்முறை எந்த விசயத்துக்கும் தீர்வாகாது என்பது சொல்ல வேண்டுமானால் நல்ல வாக்கியமாக இருக்கலாம்...ஒரு மிகப் பெரிய வன்முறையை அழிக்க....கண்டிப்பாய்.... நாமும் வன்முறை செய்தே ஆக வேண்டும்...இதையே....பரமாத்மா...கீதையில் சொன்னால் வேத வாக்கியமாய்... எடுத்து கண்ணில் ஒற்றிக் கொள்வீர்கள்...பிரபாகரன் ஆயுதமேந்தினால்...அது வன்முறை....? எத்தனை கயமைத்தனம்....?

வன்முறை உலகெங்கும் உள்ளது நண்பர்களே.... அது அரசாங்கங்களின் கீழ்.... இராணுவமாக..காவல்துறையாக எப்போது எல்லாம் அந்த அந்த நாடுகளின் பாதுகாப்புக்கும், இறையண்மைக்கும் ஊறு ஏற்படும் போது எல்லாம்....இந்த வலிய சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட வன்முறைகளை ஏவி விட்டு அடக்குமுறையை கையாளுகிறார்கள்...! அதே போலத்தான்....தமிழர்களின், தன்னோடு வாழும் சக மனிதர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு அவர்களின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் ஊறு வந்த போது, கண்ணெதிரே...தனது சகோதரிகளின் கற்பு சூறையாடப் பட்ட போது ....வேகத்தில் ...ஆத்திரத்தில்.....போராட ஆரம்பித்தவன் தான் ஈழத்தமிழன்.

நீங்கள் யாரும் அவனுக்கு உதவாவிட்டால் கூட பரவாயில்லை....., போரில் நசுக்கப்பட்டு....மனிர்களாய் வாழ்வதற்கேயுரிய மனோ நிலையில் இருக்கும் மக்களைப் பார்த்து உங்களுக்கு பச்சாதாபம் கூட வரத்தேவையில்லை...., இனத்துக்காக போராடிப் போராடி நசுங்கி ஒடுங்கிப் போன ஒரு வயதான மூதாட்டியை நாட்டினுள் நுழைய அனுமதிக்காத உங்களின் இறையாண்மைப் பற்றி கூட கவலை இல்லை....ஆனால்....

தயவு செய்து.......


" அவன் போராட்டத்தின் நோக்கு தவறென்று சொல்லாதீர்கள் "

சூழ்ந்த கடல் என் கடல் - அதைச்
சூழ்ந்த நிலம் என் நிலம் - இதைச்
சேர்ந்த புலம் என் குலம் - நினைச்
சார்ந்த ஈழம் தமிழ் ஈழம் - என
விண்ணைக் கவர்ந்த குரல்வளை நெரிக்கப்பட
மயானமாகிக் கிடக்கிறது என் தேசம்.!
( நன்றி: மயோ மனோ)

கதறிக் கொண்டு இருக்கிறது...தமிழினம்....உலகெங்கும்....! தெரியாமல்....தலை அரிக்கிறது என்று...கொள்ளிக்கட்டையை எடுத்து தலை சொறிந்து விட்டார்..திருவாளர் ராஜ பக்ஸே.....! இது ஒரு இனத்துரோகம்....முள்ளிவாய்காலில் மறித்த உயிர்களை எத்தனை எத்தனை அதை வேன்டுமானால்....வல்லரசுகளின் உதவியோடு மறைக்கலாம்....

ஆனால் எரிமலைகள் தொடர்ந்து வெடிக்கும்...அதில் அநீதிகள் எல்லாம் பொசுங்கும்..வல்லரசுகள் மெல்லரசுககளாகும்.....தமிழனின் கொடி...அகிலம் எல்லாம் பறக்கும்....வரலாறே...உனது செங்கோலை உயர்த்திப் பிடித்து காத்திரு...எமது வெற்றிச் செய்தியை உலகிற்கு அறிவிக்க...!

" தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் ......தர்மம் மறுபடியும் வெல்லும்....!"

(அத்தியாங்கள் ....முற்றும்.....ஆனால்...வரலாறு தொடரும்...)



தேவா. S

Comments

உண்மை என்றும் வாழும்... நீதி சாகாது...
Chitra said…
" தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் ......தர்மம் மறுபடியும் வெல்லும்....!"


.... well-said! பாராட்டுக்கள்!

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...