Skip to main content

எரிமலைகள் வெடிக்கட்டும்...! பதிவுத் தொடர் முடிவு























இதுவரை

பாகம் I

பாகம் II

இனி...


ஈழப்போரட்டம்.....என்பது ஒரு தனி நாடு கோரும் மக்களின் போராட்டம் என்பதைக் காட்டிலும் அது அண்டை நாடுகளின் உதவியுடன் முறியடிக்க முயன்ற நயவஞ்சக செயல் என்பதுதான் இப்போது உள்ள பிரச்சனை...

நீ என்னை அடி... ஆனால் நேர்மையாக அடி.....ஆனால் முதுகில் குத்தாதே....100 பேர் சேர்ந்து ஒருவனை அடிப்பது எமக்கு தர்மம் இல்லை....!! எல்லாவற்றிலும் ஒரு மரபை கொண்டது தான் தமிழ்ச் சமுதாயம்....எங்களுக்கு எல்லாம் யுத்த மரபு என்று ஒன்று தெரியும்...அது வெள்ளை கொடி பிடித்து வந்தவனை சுட்டுக் கொல்லாது....அது எதிரியாய் இருந்தாலும் அவனுக்கும் பசிக்குமே என்று கவலைப்படும்.... நாகரீகத்தை உலகிற்கு சொல்லிக் கொடுத்த ஒரு இனத்தை இன்று அடக்குமுறையால் நசுக்கி இருக்கிறது இந்த சர்வதேச சமுதாயம்.

ஆயுதங்கள் தூக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமையினை உருவாக்கிய மிருகங்கள் இன்று அஹிம்சை பற்றி எல்லாம் போதனை செய்கின்றன்.....! புத்தரை வழி படும் இந்த மேதாவிகள் எங்கு பார்த்தாலும் பெளத்த கோவில்களாய் எழுப்பி வருகிறார்களாம் ...எதற்கு...வன்முறையை புத்தருக்கும் போதிக்கவா....? தயவு செய்து புத்தனை தொடர்வதாய் இனியும் சொல்லாதிருங்கள் அது புத்தருக்கு நீங்கள் செய்யும் அவமானம்....!


மெளனமாய் அறவழியில் போராடி உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தானே...தீலீபன் அப்போது தெரியவில்லையா....காந்தீய வழியையும் இவர்கள் காலில் இட்டு மிதித்துக் கொன்றது....! வன்முறை எந்த விசயத்துக்கும் தீர்வாகாது என்பது சொல்ல வேண்டுமானால் நல்ல வாக்கியமாக இருக்கலாம்...ஒரு மிகப் பெரிய வன்முறையை அழிக்க....கண்டிப்பாய்.... நாமும் வன்முறை செய்தே ஆக வேண்டும்...இதையே....பரமாத்மா...கீதையில் சொன்னால் வேத வாக்கியமாய்... எடுத்து கண்ணில் ஒற்றிக் கொள்வீர்கள்...பிரபாகரன் ஆயுதமேந்தினால்...அது வன்முறை....? எத்தனை கயமைத்தனம்....?

வன்முறை உலகெங்கும் உள்ளது நண்பர்களே.... அது அரசாங்கங்களின் கீழ்.... இராணுவமாக..காவல்துறையாக எப்போது எல்லாம் அந்த அந்த நாடுகளின் பாதுகாப்புக்கும், இறையண்மைக்கும் ஊறு ஏற்படும் போது எல்லாம்....இந்த வலிய சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட வன்முறைகளை ஏவி விட்டு அடக்குமுறையை கையாளுகிறார்கள்...! அதே போலத்தான்....தமிழர்களின், தன்னோடு வாழும் சக மனிதர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு அவர்களின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் ஊறு வந்த போது, கண்ணெதிரே...தனது சகோதரிகளின் கற்பு சூறையாடப் பட்ட போது ....வேகத்தில் ...ஆத்திரத்தில்.....போராட ஆரம்பித்தவன் தான் ஈழத்தமிழன்.

நீங்கள் யாரும் அவனுக்கு உதவாவிட்டால் கூட பரவாயில்லை....., போரில் நசுக்கப்பட்டு....மனிர்களாய் வாழ்வதற்கேயுரிய மனோ நிலையில் இருக்கும் மக்களைப் பார்த்து உங்களுக்கு பச்சாதாபம் கூட வரத்தேவையில்லை...., இனத்துக்காக போராடிப் போராடி நசுங்கி ஒடுங்கிப் போன ஒரு வயதான மூதாட்டியை நாட்டினுள் நுழைய அனுமதிக்காத உங்களின் இறையாண்மைப் பற்றி கூட கவலை இல்லை....ஆனால்....

தயவு செய்து.......


" அவன் போராட்டத்தின் நோக்கு தவறென்று சொல்லாதீர்கள் "

சூழ்ந்த கடல் என் கடல் - அதைச்
சூழ்ந்த நிலம் என் நிலம் - இதைச்
சேர்ந்த புலம் என் குலம் - நினைச்
சார்ந்த ஈழம் தமிழ் ஈழம் - என
விண்ணைக் கவர்ந்த குரல்வளை நெரிக்கப்பட
மயானமாகிக் கிடக்கிறது என் தேசம்.!
( நன்றி: மயோ மனோ)

கதறிக் கொண்டு இருக்கிறது...தமிழினம்....உலகெங்கும்....! தெரியாமல்....தலை அரிக்கிறது என்று...கொள்ளிக்கட்டையை எடுத்து தலை சொறிந்து விட்டார்..திருவாளர் ராஜ பக்ஸே.....! இது ஒரு இனத்துரோகம்....முள்ளிவாய்காலில் மறித்த உயிர்களை எத்தனை எத்தனை அதை வேன்டுமானால்....வல்லரசுகளின் உதவியோடு மறைக்கலாம்....

ஆனால் எரிமலைகள் தொடர்ந்து வெடிக்கும்...அதில் அநீதிகள் எல்லாம் பொசுங்கும்..வல்லரசுகள் மெல்லரசுககளாகும்.....தமிழனின் கொடி...அகிலம் எல்லாம் பறக்கும்....வரலாறே...உனது செங்கோலை உயர்த்திப் பிடித்து காத்திரு...எமது வெற்றிச் செய்தியை உலகிற்கு அறிவிக்க...!

" தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் ......தர்மம் மறுபடியும் வெல்லும்....!"

(அத்தியாங்கள் ....முற்றும்.....ஆனால்...வரலாறு தொடரும்...)



தேவா. S

Comments

உண்மை என்றும் வாழும்... நீதி சாகாது...
Chitra said…
" தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் ......தர்மம் மறுபடியும் வெல்லும்....!"


.... well-said! பாராட்டுக்கள்!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த