Skip to main content

மறதி...!

















என் மரித்தலுக்குப் பின்னான
உங்களின் வருகையில்
என்னிடமிருந்து உதிரப் போகும்
ஆழ்ந்த மெளனத்தில்...
இதுவரை நான்...
சொன்னது எல்லாம்...
பொருளிழந்து போகும்...!

உறவுகளின் ஒப்பாரிகளுக்கு
மத்தியில் கிடத்தப்பட்டிருக்கும்
நானென்று கருதியதின்...
மீதிருந்து வீசும் தாய்ப்பாலின்
வீச்சத்தில் நினைவுக்கு வருகிறது
இப்பிறப்பின் துவக்கம்...!

கனவுகளாய் எழுதி வைத்த...
எழுத்துக்கள் ஊர்வலமாய்
என்னைச் சுற்றி வந்து..
என்னின் உயிருதெழுதலுக்கான
பேச்சுவார்த்தைகளின் தோல்வியில்
வாசிப்பாளனின் மனதிலேயே..
போய் முடங்குகின்றன மீண்டும்...!

மீண்டும் என் தாயின் கருவறை
தேடிய பயணம் கொடுக்கப் போகும்
மண்ணறையில் நானில்லா நான்
தனித்திருந்து மட்கும் நேரத்தில்
நானாகிய நான் பயணிக்கும்
உருவமில்லா பயணித்தில்...
உமது கண்ணீர்கள் குறுக்கிட்டு
வெளிப்படுத்தும் காதலுக்காய்...
அன்புக்காய் மீண்டுமொருமுறை..
பிறப்பெய்ய எத்தனிக்கும் வினாடியில்
வந்து விழும் வெளிச்சம்..
மரித்தலே சிறத்தல் என்று
சொல்லாமல் சொல்லி.......
பால் வீதிகளுக்குள் பறக்கவைத்த
பரவசத்தில்....மறந்துவிட்டது....
எனக்கு எல்லாமே...!


தேவா. S

Comments

Unknown said…
நானில்லா நான் மட்கும் நேரத்தில் நானாகிய நான் பயணிக்கும் உருவமில்லா பயணம்....அருமை. அருமை.
Unknown said…
மரித்தலுக்குப் பின் இருக்கும் ஒரே வசனம் ...

"பாடிய எப்ப எடுப்பீங்க ..."
dheva said…
கலா நேசன்.. @ நன்றி நண்பரே....!
dheva said…
கே.ஆர்.பி. செந்தில்..@ ஹா.. ஹா... ஹா.. வாஸ்தவம்தான் செந்தில்!
//மீண்டும் என் தாயின் கருவறை
தேடிய பயணம் கொடுக்கப் போகும்//

பிறப்பு இறப்பு சக்கரத்தை அழகாக சொல்லி இருக்கிறீர்கள். கவிதை நல்லா இருக்கு!

அப்புறம் என் ஆன்மீக பதிவை படிச்சீங்களா? இல்லையா? சொல்லவே இல்லையே! தேவா! ஏதும் கோபம் இல்லையே என் மேல?
பிறப்பு... இருப்பு... இறப்பு... மிக அழகாக வந்துள்ளது கவிதை
ஏன் திடீர் என்று இப்படி நல்லா தானே இருந்தீங்க நேத்து ஒரு மணி வரை முழித்து இருந்தால் இப்படி தான் கவிதை வரும்
//பிறப்பெய்ய எத்தனிக்கும் வினாடியில்
வந்து விழும் வெளிச்சம்..///

அருமை.. நல்லா இருக்கு தேவா
கணேஷ் said…
எப்படி அண்ணா இப்படி வார்த்தையை உபோயோகிககின்றிர்கள்??....ரெம்ப நல்லா இருக்கு..
//கனவுகளாய் எழுதி வைத்த...
எழுத்துக்கள் ஊர்வலமாய்
என்னைச் சுற்றி வந்து..
என்னின் உயிருதெழுதலுக்கான
பேச்சுவார்த்தைகளின் தோல்வியில்
வாசிப்பாளனின் மனதிலேயே..
போய் முடங்குகின்றன மீண்டும்...!//

மாப்ஸ் இந்த பத்தி புரியல.... விளக்குங்க....
dheva said…
என்னது நானு யாரா @ பங்காளி உங்க மேல கோபமா? என்ன பங்காள் இப்படி கேக்குறீங்கா. நாம கருத்துக்களை தானே விவாதிச்சுகிட்டு இருக்கோம்.. உங்க போஸ்ட் பார்த்தாச்சு பங்ஸ்... கமெண்ட் பண்றேன்...!
dheva said…
தமிழ் உதயம்..@ நன்றி சார்.... ! உணர்வுகளின் வெளிப்பாடவே பெரும்பாலும் கவிதைகல் இருக்கு அதில் ஆன்மீகம் சார் கருத்துக்களை முடிந்த அளவு புகுத்தி பார்த்தேன். பெரும்பாலும் இறப்புனாலே எல்லோருக்கும் பயம்...ஆனா. ஒரு நாள் இல்லை ஒரு நாள் அதுதானே சர்வ நிச்சயம்...!
dheva said…
செளந்தர்...@ திடிர்னு இப்படி இல்லப்பா..ஒரு ஏழெட்டு ஜென்மமா இப்படித்தான்.. ( இன்னும் நல்லா குழம்புனியா.. ஹா...ஹா...ஹாஅ..)
dheva said…
எல். கே....@ மோட்சம் (ஹா..ஹா..ஹா..)
dheva said…
கணேஷ்...@ அறிவியல் இருக்குப்பா கவிதையில... அதுக்கு பயன் படுத்தியிருக்கும் வார்த்தைகள் ..கீழை நாட்டு தத்துவவியலில் பொறுக்கியது... ஆனல் சொல்லியிருப்பது.. மேலை நாட்டு விஞ்ஞானமன்றி வேறு ஒன்றுமில்லை...!
dheva said…
//கனவுகளாய் எழுதி வைத்த...
எழுத்துக்கள் ஊர்வலமாய்
என்னைச் சுற்றி வந்து..
என்னின் உயிருதெழுதலுக்கான
பேச்சுவார்த்தைகளின் தோல்வியில்
வாசிப்பாளனின் மனதிலேயே..
போய் முடங்குகின்றன மீண்டும்...!//

டெரர்..@ மாப்ஸ்..

இப்போ நான் எழுதியிருக்கிற கட்டுரை கவிதை எல்லாம் உன் மனசுல இருக்கும்தானே...? நாளைக்கு நான் செத்துப் போய்ட்டா என்னைப் பார்த்த உடனே.. உனக்கு நான் எழுதி உனக்கு டச் ஆன வார்த்தைகள் உடனே நினைவுக்கு வருமா? அந்த எழுத்துக்களின் மூலமா என்னை நேசித்த நீ.. மீண்டும் நான் உயிரோட வர மாட்டேனா என்று நினைக்கிற... அப்படி நினைக்கிறதுக்கு என்னோட எழுத்துக்கள் உனக்கு உதவுது... சரியா...

ஆனா அது நடக்குமா நடக்காது.. நீ அப்படி ஆசைப்பட்டு ஆசைப்பட்டு கடைசியில் அப்படி நடக்காமல் மீண்டும் வார்த்தைகள் எல்லாம் உனக்குள்ளே போய் உன் நினைவுகளுக்குள்ளேயே தங்கிடுது.... அதுதான் மாப்ஸ்!


ரொம்ப நன்றி மாப்ஸ். .. சும்மா புரியல புரியலன்னு சொல்றத விட இப்படி கேள்வி கேட்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு மாப்ஸ்!
@தேவா
//ரொம்ப நன்றி மாப்ஸ். .. சும்மா புரியல புரியலன்னு சொல்றத விட இப்படி கேள்வி கேட்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு மாப்ஸ்!//

நன்றி நான் சொல்லனூம் மாப்ஸ்.... :)
வினோ said…
அருமையான கவிதை.. நிறைய யோசிக்கவைத்து...
வாழ்வுக்கும் மரணத்திற்குமிடையே தேர்ந்தெடுக்கும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் மனதில் இருந்து வழியும் வார்த்தைகள் போன்றிருக்கிறது இக்கவிதையின் போக்கு. நல்ல படைப்பு தேவா.
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
க ரா said…
மரணம் என்ற ஒன்று நிதர்சனம் அதை பற்றி யோசிப்பதே பலருக்கும் பிடிக்காத ஒன்று.. இந்த் கவிதைய படித்து முடிக்கும் போது வார்த்தைகளின்றி ஊமையாகி போனது என் மனசு...
vinthaimanithan said…
ம்ம்ம்... "முன்ன பின்ன செத்தாதான சுடுகாடு தெரியும்?" னு நம்மூருல சொல்லுவாங்க... நீங்க செத்தப்புறம் என்ன நடக்கும்னு எழுதிட்டு இருக்கீங்க... செரி செரி... புத்தர் சொன்னாரே... ஆத்மாவுக்கு அழிவில்லைன்னு! அந்த கான்செப்ட் போல! நல்லாவே இருக்கு!
/எல். கே....@ மோட்சம் (ஹா..ஹா..ஹா..) ///

சரிதான்
///அன்புக்காய் மீண்டுமொருமுறை..
பிறப்பெய்ய எத்தனிக்கும் வினாடியில்
வந்து விழும் வெளிச்சம்..
மரித்தலே சிறத்தல் என்று
சொல்லாமல் சொல்லி.......
பால் வீதிகளுக்குள் பறக்கவைத்த
பரவசத்தில்....மறந்துவிட்டது....
எனக்கு எல்லாமே...!////

ரொம்ப அழகா இருக்கு இந்த வரிகள்..
அன்பிற்காய் மீண்டும் ஒரு முறை பிறக்க நினைக்கும் எண்ணமே.... அருமை....!
Chitra said…
மரணத்தை குறித்து இருக்கும் இந்த கவிதை, பல சிந்தனைகளை கொண்டு வருகிறது. உங்களின் பக்குவ மனதின் முதிர்ச்சியும் தெரிகிறது.
Chitra said…
125th post..... Congrats!

Popular posts from this blog

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

முரட்டுக் காளை....!

தலைவரை பத்தி எழுத சொல்லிட்டு தம்பி அருண் பாட்டுக்கு போய்ட்டான்....! நாம ஏற்கனவே ரஜினினு சொன்னாலே பத்திகிட்டு எரிவோம்....இதுல பெட்ரோல வேற ஊத்துன எப்டி? ....சும்மா பத்திகிட்டு எரியும்ல..எரிமலை மாதிரி..ஹா...ஹா..ஹா...! தலிவர் படத்த லிஸ்ட் எல்லாம் பண்ண முடியாது.. என்ன பொறுத்த வரைக்கும்....எல்லாமே... நம்பர் 1 தான்...!!! இது எப்டி இருக்கு....ஸ்ட்ரெய்ட்டா மேட்ருக்குள்ள போவமா....இப்டிச் சூடு..... முரட்டுக்காளை (1980) படம் போட்ட கொஞ்ச நேரத்துல நான் பயந்தே போய்ட்டேன்....! ஒரு காளை மாடு முரட்டுத்தனமா நிக்கும் போது.. அத அடக்க சிங்கம் மாதிரி நம்ம சூப்பர் ஸ்டார்.....! என்னோட கவலை எல்லாம் தலிவருக்கு ஒண்ணும் ஆகக்கூடாதுன்னுதான்....அது எப்டி ஆகும் தலைவர் சும்மா பிரிச்சு மேஞ்சு காளைய அடக்குற வரைக்கும் பக்கத்து சீட்ல இருந்த ஆள டேமேஜ் ஆக்கிட்டேன்...ஜு ஜு பி....!எப்பவுமே தலிவர் படம்னா...அப்டிதான்...இஹ் ஹா...ஹா ஹா..! அதுக்கு அப்புறம் வர்ற பாட்டு...நான் சொல்ல தேவயில்ல..உங்க ஹிட் இல்ல எங்க ஹிட் இல்ல.. உலக ஹிட்.... தமிழ் சினிமாவுக்கே பஞ்சர் பாத்த படம்.... ! எங்க ஊர்..(எந்த ஊர்னு கேட்டா ரூட்டு மாறிடும்...ட்ராக்க ...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...