Skip to main content

நினைவுகள்...!






















தனிமையில் எழுதிக் கொண்டிருக்கிறேன்
உன்னோடான நாட்களின் நினைவுகளை...
பக்கங்கள் எல்லாம் வார்த்தைகளை
நான் எழுத எழுத அவை ..
வார்த்தைகளை விழுங்கிவிட்டு கனவுகளை
நிரப்பிப் போட்டு சிரிக்கின்றன?

நான் நிமிர்ந்து வானம் நோக்குகிறேன்..
இருளுக்கு முந்திய அந்தி நேரத்து
ஒப்பனையில் மின்னும் ஒரு ஓற்றை நட்சத்திரம்
உன்னோடு ஒரு நாள் பேசி சிரித்ததை
பளீச் சென்று என் புத்திக்குள் பாய்ச்சி விட்டு...
எதுவுமறியாதது போலவே ஒளிர்கிறது...!

நான் மீண்டும் பேனாவினை விரட்டுகிறேன்
பளீச் சென்ற காகிதச் சாலைக்குள்
என் வார்த்தைகளை தேடி..
மீண்டும் என் மூளைக்குள் பயணிக்கிறேன்..
மூளையின் திசுக்களுக்குள்ளிருந்து...
வரும் சப்தமான விசும்பல்களில்
உன் குரலோசையே கேட்கிறது...!
வார்த்தைகளை தேடி வந்தவன்
வழி தடுமாறி நிற்கிறேன்.. என்னுள்ளேயே!!!

கவிதையை காலத்திடம் தொலைத்து விட்டு...
வார்த்தைகளுக்கு வர்ணம் அடிக்கும்
என் மடைமையின் விளிம்புகளில் எல்லாம்
உன்னோடன நாட்களை தொலைத்த
சோகங்கள் எல்லாம் ஒன்று கூடி
என்னை எள்ளி நகைக்கின்றன!

உன்னோடான வாழ்க்கையை...
மெல்ல மெல்ல நினைவுகளிலிருந்து
உருவி என்னுள் நிறைத்து
ஒற்றையாய் வாழ நினைக்கும்
ஏக்கங்கள் எல்லாம் ஒன்று கூடி...
மீண்டும் என்னை தூண்டுகின்றன...
ஏதாவது ஒரு கவிதை எழுதேன் என்று....

இதோ..

தனிமையில் எழுதிக் கொண்டிருக்கிறேன்
உன்னோடான நாட்களின் நினைவுகளை...


தேவா. S


Comments

Mahan.Thamesh said…
அஹா அருமை
இதோ..

தனிமையில் எழுதிக் கொண்டிருக்கிறேன்
உன்னோடான நாட்களின் நினைவுகளை...
Anonymous said…
super & fantastic
தனிமையிலே இனிமை காண முடியுமா... முடியும் உன் நினைவுகளால்... அருமையார எழுதி இருக்கிறிர்கள்.
நல்ல கவிதை தேவா.
வாழ்த்துக்கள்.
ஹேமா said…
தனிமை நிறையக் கவிதைகளைத் தரும் !
Anonymous said…
//மூளையின் திசுக்களுக்குள்ளிருந்து...
வரும் சப்தமான விசும்பல்களில்
உன் குரலோசையே கேட்கிறது...!
வார்த்தைகளை தேடி வந்தவன்
வழி தடுமாறி நிற்கிறேன்.. என்னுள்ளேயே!!!
//


அருமை..
VELU.G said…
நல்ல கவிதை தேவா
Anonymous said…
//இதோ..

தனிமையில் எழுதிக் கொண்டிருக்கிறேன்
உன்னோடான நாட்களின் நினைவுகளை...//


ரசிகை

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த