Skip to main content

கவனியுங்கள்....புரிந்துகொள்வீர்கள்...!

















ஒவ்வொரு நாளும் பூங்கொத்துகளோடு காத்திருக்கிறது வாழ்க்கை..பாவம் மனிதன் நல்ல மனோ நிலையில் இருந்தால் அதை வாங்கிக் கொண்டு...சிரிக்கிறான். வேறு ஏதோ தாக்கத்தில் இருந்தால் திரும்பி கூட பார்க்காமால் சென்று விடுகிறான்......ஆனால் வாழ்க்கையோ நித்தம் காத்திருக்கிறது பூங்கொத்துக்களுடன்.

நாளை (21.06.2010) முதல் ஒரு வார காலத்திற்கு வலைச்சரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்கும் வாய்ப்பினை மரியாதைக்குரிய ஐயா சீனா அவர்கள் எனக்கு அளித்துள்ளார்கள். வலைச்சரத்தில் தொகுக்கும் நேரங்களில் என்னுடைய வலைப்பூவிலும் இடுகைகள் இட முயற்சிக்கிறேன்.


இரண்டு நாளாய்..புத்தரின் தம்மபதத்தை புரட்டிக்கொண்டு இருக்கிறேன். ஒரே ஓட்டமாக ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கைக்கு நடுவே...இப்படி புத்தகம் படிக்கும் நேரங்களில் மெல்ல நமக்க்குள்ளேயே தொலைந்து போவது தவிர்க்க முடியாத ஒன்று. இந்த ருசியினை அனுபவித்தவர்களுக்கு நான் சொல்வதின் சாரம் விளங்கும். மற்றவர்களுக்கு வார்த்தை அளவிலேயே நின்று போகும்.

''கருத்துக்களைத்தாண்டிய மனம் கவனிக்கிறது புரிந்து கொள்கிறது "

இரண்டு நாட்களாய் திரும்ப திரும்ப என் நினைவுக்கு வரும் வாக்கியமாக மேலே சொன்ன வாக்கியம் இருக்கிறது. ஆமாம் கருத்துக்களும் சிந்தந்தங்களும் நிறைந்த ஒரு மனதுக்கு உண்மையை அறிய வாய்ப்பு கிடைப்பதே இல்லை. இந்த கருத்தோடு ஒத்த ஒரு கதையை உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன்.

கடைக்கு சென்று...ஒரு நாள் சிக்கன் லெக் பீஸ் ஆர்டர் செய்தான் ஒருவன். பெரிய பெரிய லெக் பீஸாக கொண்டு வந்து வைத்தான் அந்த சர்வர். ஒரு லெக் பீஸை எடுத்துக் கடித்தார் நமது நண்பர்....அந்த லெக் பீஸ் பழையது மேலும் ஏற்கெனவே கெட்டுப்போனது இதை உணராத நமது நண்பர் அதன் வித்தியாசமான சுவையைக் கண்டு சிக்கன் லெக் பீஸில் பெரியதாக இருக்கும் எல்லாம் இப்படித்தான் சுவையற்றதாக இருக்கும் என்ற கருத்தினை உறுதியாக கொண்டுவிட்டார். அவர் சர்வரிடம் கூட கேட்கவில்லை ஏன் இப்படி சுவையின்றி இருக்கிறது என்று....ஆனால் அவர் மனதில் கற்பிதம் கொண்டு விட்டார் இனி சிக்கன் பெரிய லெக் பீஸ் உண்ணக்கூடாது அது சுவையற்றது என்று...


அதன் பின் எப்போது அவர் உணவருந்த்தச் சென்றாலும் அவர் கேட்பது...சிக்கன் லெக் பீஸ் சிறியது என்று கவனமாய் கேட்பார். பெரிதான சிக்கன் லெக் பீஸ் கொண்டு வந்தால் சண்டை போடுவார்..எனக்கு தெரியாததா? என்னுடைய அனுபவம் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது என்று வாதிடுவார். காரணம் அவர் எடுத்துக் கொண்ட கருத்து அவரின் முன் அனுபவம் சார்ந்தது. அதை அவர் திடமாக நம்பினார்.

ஒரு நாள் உணவருந்த சென்ற போது அந்த உணவக பேரர் நமது நண்பருக்கு பாடம் புகட்ட விரும்பினார். வழக்கம் போல சிறிய லெக் பீஸ் கேட்ட நமது நண்பருக்கு வழக்கத்திற்கு மாறாக பெரிய லெக் பீஸையே கொடுத்தார்....! கோபத்தில் நமது நண்பரின் முகம் சிவக்க...காச் மூச் என்று கத்தத்தொடங்கினார். பேரர் அமைதியாக சொன்னார்....எங்களிடம் உள்ள லெக் பீஸிலேயே..இது மிகச் சிரியது என்று சிரிக்காமல் சொன்னார். நமது நண்பர்...அப்படியா...!!! இதுதான் சிறியதா என்று சந்தேகத்தோடு கேட்டு...ஒரு பீஸை எடுத்துக் கடித்தார். அது சுவையாயிருந்தவுடன்..அசடு வழிந்தபடி...ஹி....ஹி...ஹி... நல்ல டேஸ்ட்டா இருக்கு. இது சின்ன பீஸ்தான் என்று சொல்லிக் கொண்டே சாப்பிட்டுப் போனார்.

மேற்சொன்ன கதையில் வரும் நண்பர் போல நம்மைச் சுற்றி நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைப் பிடித்து தொங்கி கொண்டு புதிதாய் விசயங்கள் கற்பிக்கும்...பூச்செண்டு கொடுக்குm வாழ்க்கையை மறுத்து விடுகிறார்கள் (அப்பாடா...ஆரம்பிச்ச இடத்துக்கு மறுபடியும் கூட்டிகொண்டு வந்து விட்டேன்...)

'' கருத்துக்களைத்தாண்டிய மனம் கவனிக்கிறது புரிந்து கொள்கிறது "

எல்லா விஷயத்தையும் விருப்பு வெறுப்பின்றி பாருங்கள் அதன் அழகையும் அதில் உள்ள உயிர்ப்புத்தன்மையையும் காண்பீர்கள்....!

இந்தக்கட்டுரை கூட....கருத்துக்களோடு இருப்பவர்களுக்கு வேறு ஏதோ தான் சொல்லப்போகிறது.....!

'' கருத்துக்களைத்தாண்டிய மனம் கவனிக்கிறது புரிந்து கொள்கிறது "


உங்கள் அனைவருக்குள்ளும் ஆழ்ந்த அமைதி பரவட்டும்!


தேவா. S

Comments

" கருத்துக்களைத்தாண்டிய மனம் கவனிக்கிறது புரிந்து கொள்கிறது "

உண்மைதான் ஒன்றை நாம் கற்பிதம் செய்து விட்டால் அதோடு அது தொடர்பான் தேடல் முற்றுபெற்றுவிடுகின்றது. அதனை மெய்யாக்க நாம் தயாராகிவிடுகிறோம்.
வாழ்த்துகள் தேவா ...! வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள் அசத்துங்க ...!
vasu balaji said…
வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்:)
http://a21.idata.over-blog.com/0/59/51/46/titi-super.gif
Unknown said…
புரிகிறது..

வலைச்சர ஆசிரியர் பொறுப்பு... வாழ்த்துக்கள்
வலைச்சர வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்
\\'' கருத்துக்களைத்தாண்டிய மனம் கவனிக்கிறது புரிந்து கொள்கிறது "\\
அருமை.
வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துக்கள்.
வலைச்சரத்திற்கு வாழ்த்துகள் தேவா!
வலைச்சரத்திற்கு வாழ்த்துகள் தேவா!
வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்
வாழ்க்கைய எப்படி எடுத்துக்கணும்னு அழகா சொல்லியிருக்கீங்க. நம்ம ஒவ்வொருவரும் ஒரு பிரச்சனை என்றால் எதிரில் இருப்பவரின் நிலையில் இருந்து யோசித்தால் பிரச்சனையின் தன்மையை நம்மால் உணர முடியும்.

வலைச்சரத்திற்கு வாழ்த்துக்கள்!
Bavan said…
ம்ம்ம்... முதற் கோணல் முற்றிலும் கோணல் என்பது சரியாகத்தான் இருக்கிறது..
ஆனால் ஒருவரைப் பார்க்கிறோம் ஆனால் அவரைப் பார்த்த மாத்திரத்திலே சிலவேளை பிடித்துப் போய்விடும்.. ஆனால் ஆவர் உண்மையிலேயே கெட்டவராக இருக்கலாம். ஆனால் அவரது கெட்ட விடயங்களையும் நியாயப்படுத்த மனம் பார்க்குமே தவிர கெட்டது என்னதை உணராது.

மனதில் பதிந்த விடயங்களை மாற்றுவது மிகவும் கடினம்.. அப்படி மாறிவிட்டால் அது புதிய விடயம் மனதில் பதிந்து விட்டது எனலாம்..:)

நல்ல பதிவு...:)
ஹேமா said…
நல்ல சிந்தனை தந்தீர்கள் தேவா.வாழ்த்துக்களும் கூட உங்களுக்கு.
அன்பின் தேவா

நல்ல சிந்தனை - தம்மபதத்தில் ஒரு வரியினை எடுத்து - ஆழ சிந்தித்து - ஒரு இடுகை நன்று நன்று
நல்வாழ்த்துகள் தேவா
நட்புடன் சீனா
வலைச்சர ஆசிரியர் பொறுப்பு... வாழ்த்துக்கள் அண்ணா
Ahamed irshad said…
வலைச்சரத்திற்கு வாழ்த்துகள் தேவா!
//இப்படி புத்தகம் படிக்கும் நேரங்களில் மெல்ல நமக்க்குள்ளேயே தொலைந்து போவது தவிர்க்க முடியாத ஒன்று.//

தற்போதைய காலகட்டத்தில் புத்தகம் படிப்பவர்கள் பாக்கியவான்கள்.வாழ்த்துக்கள்!
அருமையான சிந்தனை, முயற்சிக்கிறேன்.
நன்றி.
வாழ்த்துக்கள்... இந்த பதிவுகூட மிக சின்னதா சுவையாயிருக்கு.
சுவையா இருப்பதெல்லாம்... சின்னததான் இருக்கும்.
வாழ்த்துக்கள் மாம்ஸ்...அப்புறம் சொன்னதுல்லாம் ஞபாகம் இருக்குல்ல...


கதை நல்லாருக்கே... எங்க சுட்டது???
இடுகை நன்றாக இருக்கிறது..ஒரு பெரிய லெக் பீஸ் போல.......
அனு said…
ஹெவி-யான விஷயத்த ரொம்ப ஈசியா விளக்கிட்டீங்க.. நல்லா இருக்கு..

வலைச்சரம் ஆசிரியர் பதவிக்கு வாழ்த்துக்கள்..
வலைச்சர ஆசிரியர் பணிக்கு பூங்கொத்துடன் வாழ்த்துகள்!
Chitra said…
'' கருத்துக்களைத்தாண்டிய மனம் கவனிக்கிறது புரிந்து கொள்கிறது "


..... Very nice post!

Dheva, Best wishes! அடிச்சி தூள் கிளப்புங்க.... !!!
Nalla karuthu pathivu anna...
vijay said…
valthukkal nanba
\\எல்லா விஷயத்தையும் விருப்பு வெறுப்பின்றி பாருங்கள் அதன் அழகையும் அதில் உள்ள உயிர்ப்புத்தன்மையையும் காண்பீர்கள்....!\\

உண்மைதான் நண்பரே, வாழ்வில் நாம் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான தன்மை இது...


வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்
dheva said…
ஜீவன் பென்னி
தமிழ் அமுதன்
வானம்பாடிகள் அண்ணன்
ப்ரியமுட்ன் வசந்த்
கே.ஆர்.பி.செந்தில்
ஜெய்லானி
ஈரோடு கதிர்
ஜெரால்ட் வில்சன்
தம்பி பவன்
ஜெயந்தி
ஹேமா.....
சீனா ஐயா...
தம்பி செளந்தர்
அகமது இர்ஷாத்
ராஜ நடராஜன்
அமைதி அப்பா
சி. கருணாகரசு
மாப்ஸ் நாஞ்சில் பிரதாப்
ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி
அன்புடன் அருணா
தோழி சித்ரா
தங்கை ரீனா
விஜய்
தம்பி உடந்தை வாலிபன்
நிகழ்காலத்தில்


அனைவரின் அன்பான வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி....உங்களின் ஆதரவு...மேலும் என்னை வலுவூட்டியுள்ளது என்பது சர்வ நிச்சயமான உண்மை...!

மிக்க நன்றி....!
kottaithaya said…
Hi Deva,
Realy good think you teach with us
அருமையனா பகிர்வு, பார்வை.

வலைச்சர ஆசிரியர் வாழ்த்துகள் தேவா!
க ரா said…
அருமையான் பகிர்வுன்னா. வலைச்ச்ர ஆசிரியராக கலக்குங்க.
உங்களின் வலைச்சர ஆசிரியர் பணி சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள் !
விஜய் said…
//ஒவ்வொரு நாளும் பூங்கொத்துகளோடு காத்திருக்கிறது வாழ்க்கை..பாவம் மனிதன் நல்ல மனோ நிலையில் இருந்தால் அதை வாங்கிக் கொண்டு...சிரிக்கிறான். வேறு ஏதோ தாக்கத்தில் இருந்தால் திரும்பி கூட பார்க்காமால் சென்று விடுகிறான்......ஆனால் வாழ்க்கையோ நித்தம் காத்திருக்கிறது பூங்கொத்துக்களுடன்.//

ரொம்ப யதார்த்தமான உண்மைங்க அண்ணா... சொல்லவேண்டியதை கணக்கா சொல்லி முடிச்சு இருக்கீங்க .... :) ... வாழ்த்துக்கள் அண்ணா...
VELU.G said…
வாழ்த்துக்கள் தேவா

அருமையான கருத்துப்பதிவு
வலைச்சர வாழ்த்துக்கள்...

நமக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் அவர் செய்யும் எதுவுமே பிடிப்பதில்லை...இது போன்ற முன்முடிவுகளால் இழப்பு நமக்குத்தான்...நல்ல பதிவு...
பயனுள்ள பதிவு. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்.
SASIKUMAR said…
//ஒவ்வொரு நாளும் பூங்கொத்துகளோடு காத்திருக்கிறது வாழ்க்கை..பாவம் மனிதன் நல்ல மனோ நிலையில் இருந்தால் அதை வாங்கிக் கொண்டு...சிரிக்கிறான். வேறு ஏதோ தாக்கத்தில் இருந்தால் திரும்பி கூட பார்க்காமால் சென்று விடுகிறான்......ஆனால் வாழ்க்கையோ நித்தம் காத்திருக்கிறது பூங்கொத்துக்களுடன்.//
வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள். பூங்கொத்துக்களுடன்........
hi dheva i requested many times to keep your blog link in status. thanks--shysian
SASIKUMAR said…
வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்.பூங்கொத்துக்களுடன்......
hi dheva i requested you to keep your blog link
in status.many times many time many times.
தம்ம பதம் 65 சூப்பர்!
''கருத்துக்களைத்தாண்டிய மனம் கவனிக்கிறது புரிந்து கொள்கிறது "
சொல்வதை போல அவ்வளவு எளிதாயில்லை நிகழ் ...
தொலைந்ததை தேடாத பொது ஒரு வேளை கண்டுணரக்கூடும் நான் !
//எல்லா விஷயத்தையும் விருப்பு வெறுப்பின்றி பாருங்கள் அதன் அழகையும் அதில் உள்ள உயிர்ப்புத்தன்மையையும் காண்பீர்கள்....!//

ரொம்ப நல்ல பதிவு தேவா.. அழகா ஒரு கதையோட விளக்கிய விதம் சூப்பர்.. :-))

வலைச்சரத்தில் வலம் வர...
வாழ்த்துக்கள்.. :-)))
கலக்குங்க..!
dheva said…
பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றிகள்....!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த