Skip to main content

புகை...!



ஒரு மழை நாளில்
உதட்டில் பொருத்திய
முதல் சிகரெட்டோடு
உள்ளே பரவிய நிக்கோடின்
துகள்கள் மூளையின் செல்களை
கலைத்துப் போட்டிருந்தன...!

பற்றியிழுக்கையில்
பரவசமாய் உள்ளே சென்ற
புகையினூடே உண்டான
முதல் பரவசத்தில்...
முரண்கள் பட்டுப் போயிருந்தன!

உள்ளே பரவி சூடான
நினைவுகளை தெளித்து விட்டு
வெளியே பெய்த மழையை
வேடிக்கையாய் பார்த்து
சிரித்தது வெள்ளை சிகரெட்...!

அழுந்த புகைத்தேனா
இல்லை ஆழமாய் சுகித்தேனா
என்றறியாமல் தடுமாறிய...
வேளையில் எங்கிருந்து...
எட்டிப் பார்த்தது உன் நினைவுகள்..?

உள்ளிழுத்து வெளிவிட்டு
வெளிவிட்டு உள்ளிழுத்து
மொத்தாமாய் செத்துப் போயிருந்த
நிக்கோடின் குச்சியின்....
மிச்சத்தில் புகைத்தலின்றி
மிகைத்து கிடந்த உன் நினைவுகளுடன்
தனித்து கிடந்த என்னை
வேடிக்கையாய் கேலி செய்து
சிரித்தது.. வெளியே பெய்த மழை...!


தேவா. S

Comments

மழை நாளும்.. சிகரெட்டும் அவளின் நினைவுகளும்... அருமை ...
ஒரு மழை நாளில்
உதட்டில் பொருத்திய
முதல் சிகரெட்டோடு
உள்ளே பரவிய நிக்கோடின்
துகள்கள் மூளையின் செல்களை
கலைத்துப் போட்டிருந்தன...!///

ச்சே ச்சே கெட்ட பையன்
தனித்து கிடந்த என்னை
வேடிக்கையாய் கேலி செய்து
சிரித்தது.. வெளியே பெய்த மழை...!////

எல்லா காதலர்களையும் ஏளனம் செய்கிறதே.....!இந்த ............
//மிச்சத்தில் புகைத்தலின்றி
மிகைத்து கிடந்த உன் நினைவுகளுடன்
தனித்து கிடந்த என்னை
வேடிக்கையாய் கேலி செய்து
சிரித்தது.. வெளியே பெய்த மழை...!//

அந்தச் சூழலைக் கண்முன்னால் கொண்டுவந்துவிட்டது இந்த வரிகள்......நிஜமாவே தம் அடிச்ச மாதிரி ஒரு ஃபீல்....ஹி ஹி ஹி :))
சிகரெட்டும் நினைவும்...
அருமை ...
//உள்ளிழுத்து வெளிவிட்டு
வெளிவிட்டு உள்ளிழுத்து
மொத்தாமாய் செத்துப் போயிருந்த
நிக்கோடின் குச்சியின்....//

அடடா ..! கவிதை நல்லா இருக்கு அண்ணா .. ஆனா என்ன சொல்ல வரீங்க அப்படின்னு வழக்கம் போல புரியல .!! ஹி ஹி ..
Arun Prasath said…
இதெல்லாம் அனுபவிச்சா தான் தெரியும் :)
வைகை said…
மிகைத்து கிடந்த உன் நினைவுகளுடன்
தனித்து கிடந்த என்னை
வேடிக்கையாய் கேலி செய்து
சிரித்தது.. வெளியே பெய்த மழை...!////////////

எல்லாம் காதல் பாஸ்!!
வைகை said…
மனுசபயகதான் சிரிக்கிராங்கன்னா மழை கூடவா!!
Unknown said…
//வேளையில் எங்கிருந்து...
எட்டிப் பார்த்தது உன் நினைவுகள்..?//
//தனித்து கிடந்த என்னை
வேடிக்கையாய் கேலி செய்து
சிரித்தது.. வெளியே பெய்த மழை...!//
karthikkumar said…
மிகைத்து கிடந்த உன் நினைவுகளுடன்
தனித்து கிடந்த என்னை
வேடிக்கையாய் கேலி செய்து
சிரித்தது.. வெளியே பெய்த மழை...!//
நல்லா இருக்குங்க. ரொம்பவே ரசித்தேன்.
sakthi said…
மிகைத்து கிடந்த உன் நினைவுகளுடன்
புதிய சொல்லாடல் தேவா!!!!
புகை,காதல் இரண்டும் ஆபத்தானது
மழைக்கு தம்மு, டீ காம்பினேஷன் சூப்பர்
க ரா said…
புண் பட்டை நெஞ்சை புகை விட்டு ஆத்துன்னு சொல்லுவாங்கல்ல் அது மாதிரியா இது :)
புகை நமக்கு பகை!
Ciggarate is Injurious to Health.
புண் பட்டை நெஞ்சை புகை விட்டு ஆத்து
நமக்கு இந்த சிகரட் புகை வடையே புடிகாதுப்ப ..........
Chitra said…
200 + followers - Congratulations!!!!
ஹேமா said…
நானும் ஒரு கவிதை வச்சிருக்கேன் மழையும் புகைத்தலுமாய் !
dheva said…
அப்படியா ஹேமா... !!!!!!!
வினோ said…
மழையின் துளிகளில் நினைவுகளின் துளிகள்...
Present...என்னுடைய indirank மதிப்பெண் கூட 77 தான்...
மாஸ்டர் பீஸ் மச்சி............!