Skip to main content

காதலா...?


















உன் நினைவுகள்
விழுங்கிக் கொள்கின்றன..
என் இரவு உறக்கங்களை...
எப்போதாவது கண்ணயரும்..
சில நிமிடங்களிலும்...
கனவுகளில் ஆக்கிரமிக்கும்..
உன்னை என்னடி செய்வது?

***

மழைபெய்யும் பின்னிரவு..
உறக்கம் கொடுக்க முடியா..
தோல்வியில் கிளைத்த..
வெட்கத்தில் என் படுக்கை....!
இறுமாப்புடன்...எக்காளமாய் சிரிக்கிறது...
அடாவடியாய் என்னை ஆக்கிரமித்திருக்கும்...
உன் நினைவுகள்!!!

***

எங்கிருந்தோ காற்றில்....
தவழ்ந்து வந்த புல்லாங்குழலின் இசை...
கூடவே கூட்டிச் சென்று விட்டது...
என் மனதையும்....!

***

பாலையின் மழையாய்
நீ இல்லாத பொழுதுகளில்
எனக்குள் காதலை...பெய்விக்கின்றன
உன் நினைவு மேகங்கள்....!

***














கண்களால் கேள்வி கேட்கிறாய்..
மெளனத்தால் பதில் சொல்கிறாய்
மெலிதான புன்னகை வீசி
என் உயிர் கவர்ந்து செல்கிறாய்
உன்னையே என்னை சுற்ற வைத்து
ஓரக்கண்ணால் பார்த்து
ஒய்யாரமாய் நடக்கிறாய்.....
கையெழுத்தே போடத்தெரியாதவன்
இப்போது கவிதை எழுதுகிறேன்...
மொத்தமாய் சொல்லடி....
என்னை என்ன செய்வதாய் உத்தேசம்?


தேவா. S

Comments

க ரா said…
மொத்ததுல சொல்றேன்.. அண்ணி ரொம்ப கொடுத்து வெச்சவங்கண்னா !
ஹம்ம்ம்ம்...

இல்லாத நேரங்களில் உங்களை
இயக்கும் நினைவுகள் அழகு....

என்ன செய்யப் போகிறாய்?? ன்னு கேட்டு முடிச்சிட்டீங்க..

Lovelyyyy :-))
க ரா said…
டெய்லி மிளகா பஜ்ஜில்லாம் செஞசு கொடுத்து உங்கள எப்படி எல்லாம் கவிதை எழுத வைகிறாங்க :)
Chitra said…
பாலையின் மழையாய்
நீ இல்லாத பொழுதுகளில்
எனக்குள் காதலை...பெய்விக்கின்றன
உன் நினைவு மேகங்கள்....!


..... Cho chweet! உங்கள் கவிதைகளில் எப்பொழுதும் மென்மையும் அழகும் நிறைந்து இருக்கும். இதிலும் அபாரம்!
ஏதேதோ உணர்வுகள்....
அழகு..
ஹேமா said…
காதலை எப்படிச் சொன்னாலும் அழகுதான்.ஒவ்வொரு வரிகளிலும் ரசனை !
கண்களால் கேள்வி கேட்கிறாய்..
மெளனத்தால் பதில் சொல்கிறாய்
மெலிதான புன்னகை வீசி
என் உயிர் கவர்ந்து செல்கிறாய்
உன்னையே என்னை சுற்ற வைத்து
ஓரக்கண்ணால் பார்த்து
ஒய்யாரமாய் நடக்கிறாய்.....
கையெழுத்தே போடத்தெரியாதவன்
இப்போது கவிதை எழுதுகிறேன்...
மொத்தமாய் சொல்லடி....
என்னை என்ன செய்வதாய் உத்தேசம்?///

இந்த வரிகள் எல்லாம் சூப்பரோ சூப்பர் அண்ணா. என்ன கேள்வி கேட்குறாங்க.....


என்னை என்ன செய்வதாய் உத்தேசம்?/

என்ன செய்வது னா சாப்பாடு தானே
Unknown said…
கையெழுத்தே போடத்தெரியாதவன்
இப்போது கவிதை எழுதுகிறேன்.//
அருமையான வரிகள்.
Anonymous said…
//பாலையின் மழையாய்
நீ இல்லாத பொழுதுகளில்
எனக்குள் காதலை...பெய்விக்கின்றன
உன் நினைவு மேகங்கள்....! //
ரொம்பப் பிடித்தது இக்கவிதை அண்ணா!

உண்மையின் அரவணைப்பைப் போல உருவகங்களின் நிழலும் கூட குளுமை கொடுக்குமே! :)
ஏதேதோ உணர்வுகள்....
VELU.G said…
மிக மென்மையாக நகரும் வரிகள் காதலை உணர்ச்சிப்பூர்வமாய் இயல்பாகவே ஆக்கிவிடுகிறது


ஆமா....இந்த விஷயம் என்னோட சகோதரிக்கும், மருமகளுக்கும் தெரியுமா?. இல்ல நானே போன் பண்ணிடவா?
Anonymous said…
//உன்னையே என்னை சுற்ற வைத்து
ஓரக்கண்ணால் பார்த்து
ஒய்யாரமாய் நடக்கிறாய்.....//


அட.. அட..
பயபுள்ள என்னமா யோசிக்கிது.
எங்கயோ மாட்டிக்கிட்டீங்க போல..
ம்ம்ம் வாழ்த்துக்கள்.

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...