Skip to main content

கத்திக் கப்பல்...!

















ஒரு மழைக்காய் செய்த...
காகித கத்திக் கப்பல் காத்துகிடக்கிறது
பள்ளிக்கூட புத்தகத்துக்கு இடையே...!
ஒவ்வொரு நாளும் வானம் பார்த்து
ஏக்கமாய் புத்தகம் பிரிக்கும்
பொழுதுகளில் கண்ணீரோடு
சாய்ந்து கிடக்கும் கத்திக் கப்பல்
ஏனோ இதயத்தை ரணமாக்கி
சோகமாய் முடங்கியே கிடக்கிறது...!

இன்றாவது மழை வருமா?
ஏக்கமாய் வானம் பார்த்து பார்த்து
சுட்டெரிக்கு சூரியனிடம் ஏனோ
ஒரு கோபத்தோடு எப்போதும்
நடக்கிறேன் நிலத்தில் தெரியும்
என் நிழலை எரித்தபடி!

பெய்யாத மழைக்கு வானமா பொறுப்பேற்கும்?
ஒட்டு மொத்தமாய் பூமிக்கு சவரம் ..
செய்து மொட்டையாக்கி நிறுத்தி வைத்தால்
எங்கே இருந்து ஜனிக்கும் மழை?
யார் கொடுப்பார் அதற்கு விலை?

மரங்களில்லா பூமியில்
மழை ஒரு கனவுதான்....
கரங்கள் இல்லா மனிதனைப் போல
தட்டுத் தடுமாறி சுற்றும் பூமியில்
எல்லா தப்புகளையும் இழைத்து விட்டு
இயற்கையை குறை சொல்லும்
மனிதனை சுயநலவாதி என்பதா?
இல்லை எப்போதும் பொய்க்கும்..
இயற்கையின் பெயரால் இதை...
இறைவனின் பிழை என்பதா?

காற்றோடு கூடி எப்போது...
மேகமாய் சூல் கொண்டு
மழைக் குழந்தைகளை பிரசவித்து
மண்ணுக்கு அனுப்பும் அந்த வானம்?
கனவுகளோடு வழக்கம் போல...
ஒரு கருவினைப் போல சுமக்கிறேன்
என் பள்ளிக்கூட புத்தங்களையும்...
அதனுள் கண்ணீரோடு ...
தண்ணீரில் தத்தித் தாவ...காத்திருக்கும்
என் கத்திக் கப்பலையும்..!

இன்றாவது பெய்யுமா மழை?


தேவா. S

Comments

வார்த்தைகளை வரிகளில்
வடிப்பது ஒரு கலை...
அக்கலையை அணுவளவும்
குறையாமல் செய்வதில்
நீங்கள் ஒரு காளை...!

...கத்திக் கப்பல் எனக்கும் பழைய நினைவுகளை தூண்டி விட்டதுங்க.. தேங்க்ஸ்.. :-))
Chitra said…
காற்றோடு கூடி எப்போது...
மேகமாய் சூல் கொண்டு
மழைக் குழந்தைகளை பிரசவித்து
மண்ணுக்கு அனுப்பும் அந்த வானம்?


...nicely written!
//பெய்யாத மழைக்கு வானமா பொறுப்பேற்கும்?
ஒட்டு மொத்தமாய் பூமிக்கு சவரம் ..
செய்து மொட்டையாக்கி நிறுத்தி வைத்தால்
எங்கே இருந்து ஜனிக்கும் மழை?
யார் கொடுப்பார் அதற்கு விலை?//

ஒரு ஒரு வினைக்கும் அதற்கு சமமான எதிர் வினையும் இருக்கும்ன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க தேவா ?

இன்றைக்கு மரங்களை வெட்டி மொட்டையடிக்கும் மனிதர்கள் காதுகுத்து வைத்து விழா கொண்டாடாத வரையிலும் விட்டார்களே !!

அருமையான சமூக வெளிப்பாடு..!
முதல் வரியே ஒரு தனிக்கவிதை தோழரே..

ரொம்ப நல்லா இருக்கு...
ரொம்ப நல்லா இருக்கு...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த