Skip to main content

ஹாய்...25.04.2011!




















ஹாய்...! எப்டி இருக்கீங்க? நலமாக இருக்கீங்களா? கட்டுரைகளுக்கும், கவிதைகளுக்கும் இடையே நின்று பேசும் போது வரைமுறைகள் இருப்பதாலேயே ஹாய் என்ற தனி தொகுப்பினை வெளியிட நேர்ந்தது என்று ஏற்கனவே கூறியிருக்கிறேன். இதில் என்ன வசதி என்றால் நாம் ஒரு சில நிர்ப்பந்தங்களை தவிர்த்து விட்டு .. மேடைப்பேச்சு போன்று...."நான் என்ன கூறுகிறேன் என்றால் " என்ற ரீதியில் வசனப்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது.

இப்படியே போய்க் கொண்டிருக்கும் ஹாய் பகுதியின் அடுத்த பரிமாணமாக ஹாய் பகுதில் எழுதுவதோடு மட்டுமில்லாமல் அதை ஆடியோ போட்காஸ்ட்டாக (Podcast) போடலாமே என்று நிறைய நண்பர்கள் வலியுறுத்தினார்கள். சோ.. சீக்கிரமே ஹாய் ஆடியோ வடிவத்தில் வருவதற்கான ஏற்பாடுகளை நண்பர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

சரி...சரி..எவ்வளவோ பண்றோம் இதைப் பண்ணமாட்டமா? அப்டீன்னு ஒரு தைரியம்தான்.. ஏன் கேக்க ஆளு இல்லானு நினைச்சிட்டியா அப்டீன்னு தானே கேக்குறீங்க? அதான் நீங்க இருக்கீங்களே...ஹா ஹா ஹா....

சரி இப்போ ஸ்ட்ரெய்ட்டா.....மேட்டருக்கு வருவோம்...

கண்ணால் காண்பது, காதால் கேட்பது, உடலால் உணர்வது என்று முழுக்க முழுக்க புலன் வயப்பட்ட வாழ்க்கைதானே எல்லோருக்கும் பரிச்சயமாகியிருக்கிறது. புலன்கள் வெளியே ஓடி எதையோ பார்த்து எதையோ கேட்டு எதையோ நுகர்ந்து, எதையோ ஸ்பரிசித்து அதை மூளைக்கு செய்திகளாய் அனுப்பும் அதன் பொருட்டு நமது வாழ்க்கை நகரும் என்பது இயல்பான ஒன்று. ஒவ்வொரு மனிதனின் அறிவும் அவனது புலன்களின் எல்லையிலேயே மண்டியிட்டு விடுகிறது.

சிலருக்கு அதிக எல்லைகள் கொண்ட அறிவு இருக்கிறது. சிலருக்கு குறுகிய எல்லைகள் கொண்ட அறிவு இருக்கிறது. நானும் நீங்களும் கண்டிருப்பது நமது புலன்களின் எல்லையே ஆனால் அதனை தாண்டியும் வாழ்க்கையிருக்கிறது விசயங்கள் இருக்கிறது. இங்கே அறுதியிட்டு பேசும் பேச்சுக்கள் எல்லாம் மடைமை என்று ஏன் நமக்கு பிடிபடுவதில்லை?

தான் வாசித்த புத்தகங்களும் அதன் கருத்துக்கள் மட்டுமே தமது அறிவு என்று சிலர் இயம்பித் திரிவதை பார்த்தால் பாவமாக இருக்கிறது. நமது இருப்பும், சுற்றங்களின் இருப்பும் பற்றி உணர்ந்து கொள்ளும் பக்குவம் இருக்கிறதா முதலில் என்று யோசிக்க வேண்டும். காலங்கள் தோறும் கருத்துக்களை சொன்ன தத்துவவாதிகளும், ஆன்ம கருத்துக்களை சொன்ன ஆன்மீகவாதிகளும் தம்மின் சூழல், மற்றும் தாம் அனுபவித்து உணர்ந்த வாழ்க்கை இதன் பொருட்டுதானே தமது கருத்துக்களை பகிர்ந்து சென்றிருப்பர்.....

எவர் எது கூறியிருப்பினும் அதை சமகாலத்தோடு சேர்த்து ஒப்பிட்டு பார்த்து அறிவுக்கும் நாம் வாழும் சூழலுக்கு எது ஒத்து வருகிறதோ அதை பின்பற்றி எது ஒவ்வவில்லையோ அதை நிராகரித்துப் போவதில் என்ன சிரமமிருக்கிறது. எவரிடமும் வாய் திறக்க் முடியவில்லை...ஓராயிரம் உதரணங்களும், அவர் கூறிவிட்டார் இவர் கூறிவிட்டார் என்று அத்தாரிட்டி எடுத்து அதை நமக்கு தேவையில்லாதா கருத்தாய் இருந்தாலும் சுமந்து கொண்டு அறிவு அடிமைகளாய் நகர்ந்து கொண்டிருக்கிறது சம காலச்சமுதாயம்....!

அறிவு விசாலமாவது எப்போது தெரியுமா? கற்றதை நமக்கு ஏற்றார் போல விளங்கி நடக்கும் போதும் மற்றும் நாம் விரும்பும் சூழலை புறத்தில் நாம் மற்றவருக்கு படைக்கும் போதும் தான். இவ்விரண்டும் இல்லாத எல்லாமே மூளைகளல்ல பாழும் கிணறுகள் என்று தைரியமாக பகிரலாம். எழுத்தாளர் பாலகுமாரனை பற்றி ஒருவர் என்னிடம் கேட்டார்? ஏன் அவருக்கு இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள்? இவரெல்லாம் ஒரு எழுத்தாளரா இவர் சொல்வதை எல்லாம் நாம் கேட்க வேண்டுமா என்று....

ஒரு வாதத்திற்கு சண்டை போடவேண்டுமெனில் நானும் திருப்பி கேட்டிருப்பேன்.. 3 அல்லது 4 பேரை திருமணம் செய்து கொண்டவர்களை எல்லாம் அரசாள விட்டு விட்டு வாழ்க, ஒழிக கோசம் போட்டு நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு சமுதாய ஓட்டத்தில் பாலகுமாரன் இரண்டு மனைவிகள் கொண்டதை ஏன் பெரும்பிழையாக பார்க்கிறீர்கள் என்று....

ஆனால் நான் அப்படி கேட்கவில்லை மாறாக அவரின் இரண்டி மனைவியரும் உங்களிடம் வந்து ஏதாவது பாலாவைப் பற்றி குறை கூறினார்களா? இல்லை பாலகுமாரன் உங்களிடம் குடும்பம் நடத்த சிரமமாக இருக்கிறது என்று எதுவும் கூறினாரா? அவர்கள் வாழ்க்கையை அவர்கள் சுகமாக வாழும் போது உங்களுக்கு ஏன் தேவையில்லாத கேள்விகள்...என்று சொல்லி விட்டு வந்தேன்...

தத்தம் கை கால்களில் நீண்டிருக்கும் நகங்களை சீராக வெட்டி சுத்தமாயிருக்கத் தெரியாது ஆனால் உலகத்தில் இருக்கும் எல்லோருடைய வாழ்க்கைக்கும் தீர்ப்பு சொல்ல சரவணா ஸ்டோர்க்கு சென்று கொண்டிருப்பார்கள். அட...சரவணா ஸ்டோருக்கு எதுக்கு என்று கேட்கிறீர்களா...? சொம்பு வாங்கத்தான்...!

தீர்வுகளை எப்படி சொல்லவேண்டும் அல்லது எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்ற தெளிவில்லாதவர்கள் எல்லாம் உலகத்திற்கு பாடம் சொல்லும் நாட்டாமைகள் ஆகிவிடுகிறார்கள். முரணிலிருந்து எப்படி தெளிவை ஆரம்பிக்க முடியும்? தெளிவைச் சொல்ல தெளிவிலிருந்துதானெ செயல்கள் தொடங்கப்பட வேண்டும்.

சூழலும் வாழ்க்கையும் வசதியாய் ஒரு இடத்தில் உட்கார வைத்து விட அந்த அதிகாரத்தில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று முடிவு கட்டிவிடுகிறார்கள். உலகில் இருக்கும் எல்லோரும் என்னைப் போலவே இருக்க வேண்டும் அல்லது எனது சித்தாந்தத்தோடு ஒத்துப் போகவேண்டும் என்று நினைக்கும் மூளைகள்தான் முட்டாள்களுக்குச் சொந்தமானவை....

நாம் கொண்டிருக்கும் கருத்துக்களின் மூலம் ஏதோ ஒரு படிப்பினையை நமது மூளை கிரகித்து வைத்திருப்பதால்தான் அதையே பிடித்து கொண்டு தொங்குகிறது. அது மட்டுமன்றி ஒவ்வொரு மனிதனின் மூளையும் தான் செய்வது சரி என்றுதான் சிந்திக்குமாம்....! இப்படி சிந்திப்பதாலேயே ஒட்டு மொத்த உலகமும் ஒழுங்கின்றி இயங்குவதாய்த் தோன்றுமாம்....

நாம் உதராணமாய் கொள்ளும் சீர்திருத்தவாதிகளும் புரட்சியாளர்களும் தங்களை தமது கருத்துக்களுக்கு முதற் பலியாக்கிவிட்டுத்தானே வீதிக்கு வந்தார்கள் கருத்து தெரிவிக்க...! சமகாலத்தில் அப்படியா நடக்கிறது....? நாம் நாலு பேரை திட்டினால் அவன் சரியில்லை, இவன் சரியில்லை என்றால் குறைந்த பட்சம் என் முதுகை நீங்கள் பார்க்க மாட்டீர்கள் அல்லவா? மேலும் நான் என்னை நல்லவனாக காட்டிக்கொள்ள இது ஒரு வாய்ப்பு அல்லவா....?

நேற்று சத்ய சாயி பாபா மரணமடைந்து விட்டார். சரி...ஒரு மனிதர் மரணித்து விட்டார் என்றளவில் மட்டுமே பார்க்கப்பட வேண்டிய விடயம் அது.....அவரின் மரணத்தை வைத்து அவரைக் கடவுளாக கொண்டிருந்தவர்களை சாடும் தருணமாக மாற்றிக் கொண்டு கருத்துக்களை தெரிவித்திருப்பது அறிவின் சொச்சமா இல்லை அறியாமையின் உச்சமா?

அவர் தன்னை கடவுளாக சொன்னதும், அவரை பின்பற்றி மூடத்தனமாக அவரைக் கடவுள் என்று வழிபட்டவர்களுக்கு அவர் கடவுள் இல்லை என்று நிறுவ மரணம் மட்டும்தான் உங்களுக்கு கிடைத்த வலுவான ஆதாரமா? சத்தியத்தில் தன்னை கடவுளின் தன்மையாக...பிரபஞ்ச சக்தியின் பகுதியாக கருதியவர்கள் தன்னை வணங்குவதை எப்போதும் ஆதரிக்க மாட்டார்கள், அவர்களுக்கு கூட்டமும் பேரும் புகழும் தேவையில்லை.....காலங்கள் தாண்டிய ஒரு இயக்கத்தின் மூலத்தை உணர்ந்தவர்கள்....இங்கே உண்டக்கட்டிக்கும்....உருளைக்கிழங்கிற்கும் வந்து நிற்கப்போவதில்லை...!

வாசித்த புத்தகங்களும், கருத்துக்களை ஆயிரக்கணக்கானவர்கள் முன் வசியப்படுத்தும் வகையில் கூறி மோடி மஸ்தான் வேலை செய்பவர்கள் தன்னை கடவுளாக சொல்லிக் கொள்வதும் தவறு....அவர்களை கடவுளர் என்று பின்பற்றுவதும் தவறு....! அதே போல ஒருவர் கடவுள் தன்மை உடையவர் அல்லர் ஏனென்றால் அவர் சுவாசம் முட்டி சாதரணமாகத் தானே இறக்கிறார், அவருக்கும் பசிக்கிறது, அவரும் அழுகிறார் என்று கூறுவதும் தவறு என்று நான் அத்தாரிட்டி எடுத்து சொல்லலிங்க பாஸ்...இது என்னோட கருத்து.

சத்திய சாயிக்கள் வேண்டுமானால் பகட்டாய் வாழ்க்கை நடத்தி மக்களுக்கு தம்மை கடவுளர் என்று சொல்லி மாய்ந்து போயிருக்கலாம். அப்போதும் கூட அவரின் கொள்கைகளுக்கு முரண்பட்டு இன்று அனுதாபங்களைத் தெரிவிப்பவர்கள் அவர் உயிரோடு இருக்கும் போது போர்ப்பரணி பாடி மக்களை திருத்த ஏதேனும் முயற்சி எடுத்திருப்பார்களா என்றால் கிடையாது....!

மரணம் எல்லோருக்கும் வரும்...! தோன்றின மறையும் ...மறைந்தன தோன்றும் இது விதி....! பட்டினத்தாரும், அருணகிரி நாதரும், வள்ளலாரும், மறைந்துதான் போனார்கள்.புத்தனும், 18 சித்தனும் மரணித்துதான் போனார்கள். அவர்களுக்கும் இதே ரீதியிலான பஞ்சாயத்தைதான் கூட்டுவார்கள் போலும்..! இப்போது கூட பாருங்கள் சொல்லும் கருத்தின் உட்பொருள் அறியாது நீ என்ன சத்திய சாயிபாபவின் ஃபாலோயர்தானே.. முட்டாளே.. மூடநம்பிக்கையி கொண்டோனே..........என்று பொரிந்துதான் தள்ளப்போகிறார்கள் அறிவு ஜீவிகள்...!

அவர் கடவுள் இல்லை ..என்றுதான் நானும் சொல்கிறேன். அவர் கடவுள் தன்மை கொண்டிருந்தால் அவர் தன்னை கடவுள் என்றே சொல்லியிருக்க மாட்டார் என்று தான் அறுதியிட்டு சொல்கிறேன்.. ஆனால் மரணத்தை வைத்து ஒரு மனிதரின் புனிதத்தன்மையை நீங்கள் எப்படி கணிக்கிறீர்கள் என்றுதான் கேட்கிறேன்? விவேகானந்தரும் இராமகிருஷ்ண பரம ஹம்சரும் மரணித்துதான் போனார்கள்....இங்கே உங்களின் தியரி வொர்க் அவுட் ஆகுமா?

ஒரு சாய்பாபாவின் மரணத்தை முன்னிறுத்தி ஆன்மீகத்தின் வேரினை பெயர்க்க முடியுமா என்ன? அந்த மறைமுக முயற்சிதான் இப்போது ஆங்காங்கே நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கிறது. மூட நம்பிக்கைகளை வலியுறுத்தாமல் முற்போக்கு சிந்தனை கொண்ட பகுத்தறியும் தன்மைகளையும் தன்னின் பகுதியாக கொண்ட சாதாரணன் தான் ஆன்மீகவாதி.

ஆன்மீகவாதி என்றவுடன் காவி உடையும், வாயிலெடுக்கும் லிங்கமும், விபூதியும், இன்ன பிற மோசடிகளும் நினைவுக்கு வருவதுக்கு காரணம் பார்த்து பழகிப் போன பொது புத்தி.....

எங்கிருந்தோ எங்கோ வந்து விட்டேன்.......ம்ம்ம்ம்ம்ம் சரி, என்னை சரி செய்யவே நான் காத தூரம் செல்ல வேண்டும்..! மற்றவர்களுக்கு என்னுடைய....கருத்துக்களை பரிந்துரைதான் செய்ய முடியுமேயன்றி..அத்தாரிட்டி எடுத்து சொல்ல முடியாது ஏனென்றால்...

இந்த உலகில் எத்தனை கோடிகள் மனிதன் இருக்கிறானோ அத்தனை மனங்களும், நம்பிக்கைகளும் அவரவரின் சூழலுக்கு ஏற்ப ஏற்பட்டிருக்கின்றன்..அதை களைவதற்கு முன் அவர்க்கு தெளிவான என் நிலையை புரியவைகக் முடியுமா என்று யோசிக்க வேண்டும்....அதற்கு நான் தெளிந்திருக்க வேண்டும்....! நீங்களே யோசித்து நீங்களே தீர்மானியுங்கள்

டைம் ஆச்சு பாஸ்.............அடுத்த ஹாய் பகுதியில் சந்திப்போம்...!

அப்போ..........வர்ர்ர்ர்ட்ட்டா!


தேவா. S



Comments

Mohamed Faaique said…
///பிரபஞ்ச சக்தியின் பகுதியாக கருதியவர்கள் தன்னை வணங்குவதை எப்போதும் ஆதரிக்க மாட்டார்கள், அவர்களுக்கு கூட்டமும் பேரும் புகழும் தேவையில்லை.....காலங்கள் தாண்டிய ஒரு இயக்கத்தின் மூலத்தை உணர்ந்தவர்கள்....இங்கே உண்டக்கட்டிக்கும்....உருளைக்கிழங்கிற்கும் வந்து நிற்கப்போவதில்லை...!//

உண்மைதான் அண்ணா..
"ஹாய்" என்ற ஒற்றை வார்த்தைக்குள் பல சிந்துக்கத் தூண்டும் கருத்துக்களை முன்வைத்திருப்பது வியக்க வைக்கிறது தலைவா . நேர்த்தியான எழுத்து நடையில் ஆன்மீக அலசல் என்னை வெகுவாக கவர்ந்திருக்கிறது . நன்றி மீண்டும் காத்திருக்கிறேன் தங்களின் அடுத்த "ஹாய்" தொடருக்காக
எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறீர்கள். எது ஆன்மிகம் என்று தெரியாமல் தான் நாம் எல்லாரும் உழன்று கொண்டிருக்கிறோம் என்று படுகிறது.

அப்புறம் அந்த இருளுக்குள் இருக்கும் புத்தர் புகைப்படம் அருமை.
சிசு said…
// !♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

"ஹாய்" என்ற ஒற்றை வார்த்தைக்குள் பல சிந்துக்கத் தூண்டும் கருத்துக்களை முன்வைத்திருப்பது வியக்க வைக்கிறது. நேர்த்தியான எழுத்து நடையில் ஆன்மீக அலசல் வெகுவாக கவர்கிறது. காத்திருக்கிறேன் தங்களின் அடுத்த "ஹாய்" தொடருக்காக//

me too...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த