Skip to main content

ஹாய்...12.05.2011!






















எக்காலமும் நிலைத்து நிற்கும் எழுத்துக்களுக்கு சமகால நிகழ்வுகளின் சாரம் மட்டுமே போதும். சமகால நிகழ்வுகளோடு பந்தப்பட்ட எழுத்துக்கள் ஒரு 20 வருடங்கள் கழித்து எடுத்து வாசிக்கும் போது கண்டிப்பாய் சுவாரஸ்யம் கொடுக்கும் என்று சொல்ல முடியாது. விஜயகாந்த் வேட்பாளாரை தாக்கி அடித்தது அந்த சமயத்தில் பரபரப்பு இருபது வருடம் கழித்து அது ஒரு செய்தியளவிலேயே நிற்கும் காலங்கள் கடந்தும் நிலைத்து நிற்காது. இப்படித்தான் அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகள் ஒரு நாள் அல்லது இரு நாள் கழித்து அல்லது ஒரிரு மாதம் அல்லது வருடங்களில் செத்துப் போகும்.

முக்காலமும் படிப்பினை கொடுக்கும் விசயங்கள் எல்லாம் ஆத்மார்த்தமாக வெளிப்பட்டவை. இந்த வகையிலேதான் தமிழ் நாட்டின் பெரும்பாலான கோவில்கள் உருவாக்கப்பட்டன. இந்திய தேசத்தில் தமிழக கோவில்கள் எல்லாம் கலைப் பொக்கிஷங்கள். அவை எல்லாம் மனிதனின் உள்ளுணர்வு தெளிவாக ஏதேதோ உணர்த்த, உணர்த்த அவற்றை எண்ணங்களால் உற்றுப் பார்த்து மனதினால் களிமண் பிசைவது போல பிசைந்து சக மனிதர்களிடம் கூறி அவற்றை விவாதித்து அவற்றை வரைபடங்களாக்கி, சாதக, பாதகங்களின் கூறுகளை திட்டமிட்டு பெரும் மனித உழைப்புக்குப் பின்னால் செய்து முடிக்கப்பட்டது.

மனித உள்ளுணர்வில் ஏராளமான விசயங்கள் ஸ்பூரித்துக் கொண்டே இருக்கின்றன. ஆழமான தெளிவான மனம் கொண்டவனுக்கு, புலன்களின் ஆட்டத்தில் மயக்கம் கொள்ளாமல் இருப்பவனுக்கு புறத்தின் செயல்கள் தனது மூளையை கற்பழித்து விடாமல் கற்போடு இருப்பவனுக்கு... தெளிவான நீரினடியில் கிடக்கும் எல்லாம் தெரிவது போல முன்னும், பின்னும், மேலும், கீழும் என்று சூழல்களும், மனிதர்களும், மனிதர்களின் எண்ணங்களும் நோக்கங்களும் அத்துபடியாகின்றன.

மனித வகைகளை இதுவரை ஓரளவிற்கு நான் கணித்து இருக்கிறேன். இது நாடு, மொழி, மதம், இனம் தாண்டிய எனது கவனிப்பு. இரு மனிதர்கள் அச்சில் வார்த்தது போல ஒன்றாயிருப்பது இரட்டைப் பிறவிகளில் சாத்தியம் என்று அனைவருக்குமே தெரியும் ஆனால் நிறைய ஒத்த மனிதர்களை நான் கவனித்திருக்கிறேன். இவர்கள் எல்லாம் அச்சு அசலாக ஒரே மாதிரி இருப்பதில்லை ஆனால் ஒரே சூத்திரத்தை அடிப்படையாக கொண்டவர்கள்.....

இவர்களின் கண்களின் தீட்சண்யம் ஒத்தது

விசயங்களை உ ள்வாங்கிக்க் கொள்ளும் போது முகத்தில் ஏற்படும் சுருக்கங்களின் எண்ணிக்கை ஒத்தது.

இவர்களின் பற்கள் ஒத்தது.

இவர்களின் நாசியின் நீளங்கள் ஒத்தது.

சுவாசிக்கும் தன்மை ஒத்தது.

தலை முடியின் அமைப்பு ஒத்தது.

விசயங்களை அணுகும் போக்கு ஒத்தது.

இதை நான் சட்டென்று நேற்றோ, இன்றோ கணித்து எழுதவில்லை. கடுமையான பலவித பரீட்சைகளை வைத்து இங்கொன்றும் அங்கொன்றுமாய் மனிதர்களின் சுபாவங்களை பிடித்து அவற்றை முன்பு கண்ட இதே போன்றவருடன் ஒப்பிட்டு அதன் இறுதியில் எட்டிய முடிவு.

இப்படி நான் ஒரு மனிதர்களை ஆராய்வது யாருக்கும் தெரிய வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. இவற்றை எல்லாம் என் சொந்த ஆர்வத்தில் நானே ஒப்பிட்டு மனம் போடும் கணக்குகளை அபாரமான கற்பனைகளை ஒதுக்கி தள்ளி விட்டு மேலே நான் சொன்ன உள்ளுணர்வின் ஸ்பூரிப்பில் கண்ட உண்மைகள்.

இப்படி நான் இருப்பதற்கு எனது 4 நட்சத்திர ஹோட்டலின் ப்ரண்ட் ஆஃபிஸ் உத்தியோகம் ஒரு கருவியாக இருந்தது. பல நாட்டு மக்கள், பல மாநில மக்கள், பல மாவட்டத்து மக்கள் என்று ஒவ்வொரு மனிதரையும் அடிப்படையில் ஆராய்ந்து என்னுள் உள்வாங்கிக் கொள்வதை எனது பொழுது போக்காகவே செய்து வந்தேன். நாளடைவில் முத்து பேட்டை ரகீம் பாயைப் போல கிட்டத்தட்ட பற்கள் அமைப்பும், முக மேவாய் அமைப்பும் கொண்ட ஒரு ஆஸ்திரேலிய தேசத்து மனிதரின் குரல் கூட ஒத்து இருந்தது எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது.

உணவு, உடை, மற்றும் பழக்க வழக்கங்கள் எல்லாம் புறச்சூழல்தான் நியமிக்கிறது என்றாலும் அடிப்படை முடிவெடுக்கும் திறன், ஒரு பிரச்சினையை எதிர் கொள்ளும் விதம், பேசும் வார்த்தைகளின் கட்டமைப்பு, ஆச்சர்யம் கொள்ளும் போது ஏற்படும் முக மாற்றம், கோபம் ஏற்படும் போது செய்யும் ஒரு பாவம் என்று எல்லாமே ஒத்துதானிருக்கிறது.

மனித மூலத்தின் கிளைகள் வெவ்வேறாய் இருந்தாலும் மூலம் ஒன்றுதான் என்பதை தெளிவாக உணர முடிந்தது. ஆமாம் சேம் தியரி... சூரிய குடும்பத்தின் மூலம் சூரியன், சூரியனின் மூலம் இன்னொரு சூரியன் என்று பின்னோக்கி சென்று கொண்டே இருந்தால் மூல அமைப்பில் எல்லாம் ஒரு பூர்வாங்க நிலையிலே போய் அடங்குவதை உணர முடியும்....!

இப்போது சொல்லுங்கள் நீங்களும் நானும் யார்? வெவ்வேறா? அல்ல...ஒன்றா?

சூழலும் மனம் கற்பித்த பாடங்களும் வெவ்வேறாய் காட்டினாலும் அடிப்படையில் என்னை நீங்கள் அடித்தால் எனக்கு எப்படி வலிக்குமோ அப்படித்தான் உங்களை நான் அடித்தால் உங்களுக்கும் வலிக்கும். உங்களுக்கு ஏதோ ஒன்று கிடைக்க கூடாதது கிடைத்து அதற்கு நீங்கள் எவ்வளவு சந்தோசம் அடைகிறீர்களோ அவ்வளவே நானும் அடைவேன்...!

அடிப்படயில் ஏற்றத் தாழ்வுகள் சமூக அமைப்பினால் ஏற்பட்டவை. மனித உடலில் இருக்கும் வலுவின் அளவு, மேலும் அனுபவங்களை நிதானித்து அதன் மூலம் வரவிருக்கும் செயல்களை அனுமானித்து எடுக்கும் முடிவு இவையாவும் மனித வாழ்வை தீர்மானிக்கும் காரணிகள் என்றாலும்...

அடிப்படையில் கோபம், மகிழ்ச்சி, பயம், மரணத்தை கண்டால் அலறும் மனம், காமம், முரண்பாடு இவை எல்லாமே மனிதர்களுக்கு ஒரே மாதிரி உணர்வைத்தான் உண்டு பண்ணுகின்றன. சமூக சூழலுக்கு ஏற்ப தேவைகளும் ஏற்பட தேவைகள் ஆசைகளாக மாற, ஆசைகள் பேராசைகளாக மாற மொத்த சமுதாயமும் தெளிவான மன ஓட்டமும் தமது மூலமும் அறியாமல் குழம்பிக் கிடக்கிறது.

இந்த லெளகீக வாழ்க்கையில் பணம் சேர்த்தவன், அதிகாரம் செய்பவன், அத்துமீறல் செய்பவன், மதத்தை சொல்லி மனிதர்களை ஏமாற்றுபவன் என்று இவர்கள் எல்லாம் கடவுள்....

ஆனால்....

ஆன்ம விழிப்பு கொண்டவன், அகங்காரம் அற்றவன், தெளிவான சமுதாயம் படைக்க தன்னை உற்று நோக்கி நியாயமாய் நடக்கச் சொல்பவன், கடவுளென்ற ஒன்று வார்த்தை விளையாட்டுதான், நீங்கள் கற்பிதம் மூலம் கொண்டிருப்பது எல்லாம் பொய்கள், உண்மையாய் இருக்கும் எல்லாம் வல்ல சக்திகளை தன்னிடம் கொண்டு உங்களையும் என்னையும், இன்னும் கண்ணில் காணும், காணா விசயங்களோடு சேர்ந்து ஒரு ஒட்டு மொத்த இயக்கமும் தான் நிஜம்...என்று கூறுபவர்கள் எல்லாம்...

முட்டாள்கள் ..ஏமாளிகள், பரதேசிகள்....வாழத் தெரியாதவர்கள்..! .இப்படித்தான் மிகைப்பட்டவரின் பார்வைகள் சொல்கின்றன. இவையெல்லாம் கண்டு எரிச்சலடைய வேண்டிய அவசியம்ற்று இவையும் பிரபஞ்ச இயக்கத்திற்கு தேவை என்ற அளவில்தான் தெளிந்தவனின் பார்வைகள் இருக்கின்றன.

முக்காலமும் வாசிக்கும் கட்டுரைகளை மிகையாக செய்ய ஆசிவர்தித்திருக்கும் பிரபஞ்ச பேரியக்கத்திற்கு நமஸ்காரங்களையும், அர்ப்பணிப்புக்களையும் நான் காணிக்கையாக்கத்தான் வேண்டும் என்ற அளவில் இத்தோடு நிறுத்துவதை நான் தீர்மானிக்கிறேன்...இல்லையேல் நீண்டு கொண்டே இருக்கும் செய்திகள்.

அடுத்தடுத்து பேசுவோம்....

நலமான செழிப்பான உங்களின் எல்லா செளகரியங்களுக்கும் எனது பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள்!


தேவா. S

Comments

தஞ்சை பெரிய கோவில் போன்ற புகழ்பெற்ற கற்கோயில்கள் மட்டுமல்ல, கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற சரித்திர நாவல்கள்கூட அவற்றில் அடங்கியிருக்கும் உயர்ந்த பல விஷயங்களாலேயே காலங்கள் பல‌ தாண்டியும் அழியாப் புகழுடன் நிலைத்திருக்கின்றன!
மிக அருமை தேவா ..வழக்கம்போல்.:)
Chitra said…
அடிப்படயில் ஏற்றத் தாழ்வுகள் சமூக அமைப்பினால் ஏற்பட்டவை. மனித உடலில் இருக்கும் வலுவின் அளவு, மேலும் அனுபவங்களை நிதானித்து அதன் மூலம் வரவிருக்கும் செயல்களை அனுமானித்து எடுக்கும் முடிவு இவையாவும் மனித வாழ்வை தீர்மானிக்கும் காரணிகள் என்றாலும்...

அடிப்படையில் கோபம், மகிழ்ச்சி, பயம், மரணத்தை கண்டால் அலறும் மனம், காமம், முரண்பாடு இவை எல்லாமே மனிதர்களுக்கு ஒரே மாதிரி உணர்வைத்தான் உண்டு பண்ணுகின்றன. சமூக சூழலுக்கு ஏற்ப தேவைகளும் ஏற்பட தேவைகள் ஆசைகளாக மாற, ஆசைகள் பேராசைகளாக மாற மொத்த சமுதாயமும் தெளிவான மன ஓட்டமும் தமது மூலமும் அறியாமல் குழம்பிக் கிடக்கிறது.


...wow! தெள்ளத் தெளிவான அலசல். பக்குவப்பட்ட மனதில் தோன்றிய ஆழ்ந்த சிந்தனைகள் என்று தெரிகிறது.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த