Skip to main content

த்புக்....த்புக்...த்புக்....!





















பிரிட்ஜ்ஜை திறந்து வாட்டர் பாட்டிலை எடுத்தேன், தொண்டைக்குள் சிலீரென்று ஊடுருவி இதயத்தை வேகமாக துடைத்துக் கொண்டு வயிற்றுக்குள் பரவி கொடுத்த சுகத்தை கண் மூடி அனுபவித்தேன்..மூளையின் செல்கள் எல்லாம் அபர்ணா.. அபர்ணா....அபர்ணா என்று துடித்துக் கொண்டிருந்தது....

இரத்த ஓட்டம் அதிகமாகி கண்கள் சிவக்க வாட்டர் பாட்டிலை பிரிட்ஜுக்குள் வைத்து விட்டு கதவை ஓங்கி சாத்தினேன்...! சென்ட்ரலைஸ்ட் ஏசியை துச்சமாக மதித்தப்படி வியர்வை முன் நெற்றியில் துளிர்த்தது. டேவிட் நேற்று கொண்டு வந்து கொடுத்த சைலன்ஸர் பொருத்தப்பட்ட பிஸ்டல் டைனிங் டேபிளில் அப்பாவியாய் படுத்துக் கிடந்தது. வெளிநாட்டுப் பொருள் மட்டுமில்லாமல் எல்லா விதமான விசயங்களையும் சப்ளை செய்வதில் டேவிட் நம்பர் ஒன் மட்டுமில்லை கழுத்தை அறுத்தாலும் உண்மையை வெளியே துப்பாத கற்புக்கரசன்.

வாட்ச்சை திருப்பி மணி பார்த்தேன் இரவு 8 மணிக்கு இன்னும் ஐந்து நிமிடமாகும் என்று எனது டைட்டன் வாட்ச் துல்லியமாக காட்டிக் கொண்டிருந்தது. அவள் ஜிம்மில் இருப்பாள் வீட்டுக்கு வர 9 மணி ஆகும். நான் 8:30க்கு கிளம்ப நேரத்தை மூளையில் குறித்துக் கொண்டேன்...

ஆமாம் எதுக்கு போறேன்னு கேக்குறீங்களா....! நான் அபர்ணாவை கொல்லப் போகிறேன்....! யெஸ்... ஐம் கோன்ன கில் தட்....ச்ச்சீட்....ப்ளாக் ஷீப்....!!!!

காதலிக்கிறேன்னு சொல்லிட்டு ஒரு வருசமா என் கூட சுத்திகிட்டு இருந்தவ ஒரு மாசமா என்கிட்ட பேசுறது இல்லை. என் கண்ணு முன்னாடியே ஆபிஸ்ல இருக்குற கண்ட கண்ட கம்மனாட்டிங்க கூட எல்லாம் ஈன்னு இளிக்கிறதும், குழைஞ்சு குழைஞ்சு பேசுறதும்....ஓ மை காட்.. என்னால முடியல

நான் கோபப்படுவேன் ஆனா அவளத்தான் சுத்தி சுத்தி வருவேன் பட் இப்போ என்னோட பொறுமை எல்லாம் போய்டுச்சு, ஒண்ணு அவ என் கூட இருக்கணும் இல்ல சாகணும்.....! இப்போ அந்த சாவ கொடுக்குற பொறுப்ப கடவுள் என்கிட்ட கொடுத்து இருக்கான். இந்த பதினைஞ்சு நாள்ல ஒரு ஆயிரம் தடவையாச்சும் அவளோட செல் நம்பர் ட்ரை பண்ணி பாத்துருப்பேன்..ஹவ் மணி டைம்ஸ் ஷி டிஸ்கனெக்ட் த லைன் தெரியுமா உங்களுக்கு....?

ஐடி ல இருக்குற காய்ஸ் எல்லாம் மோசம்னு அடிக்கடி சொல்லுவா,அவ என்னோட டீம்ல இல்ல வேற டீம் அப்டி இருந்தும், நான் ஒரு டீம் லீடர்ன்னு கொஞ்சம் கூட ஒரு ஈகோ இல்லாம அவ கூட பழகி இருக்கேன். ஒரு நாள் பைக்ல மாயாஜால் போய்கிட்டு இருக்கும் போது பைக்ல போறது..இட்ஸ் போரிங் டார்லிங் மோர் ஓவர் பெயின் புல்னு அவ சொன்ன வார்த்தைய கேட்டு பேங்க்ல கார் லோன் போட்டு இந்த ஸ்கார்ப்பியோ தடியன கொண்டு வந்து நிறுத்தினேன். வாடகை வீட்ல தங்கினா சரியா வராதுன்னு இதோ இந்த க்ரீன் பார்க் அப்பார்ட்மென்ட்ஸ்ல மறுபடியும் லோன் போட்டு வீடு வாங்கினேன்....

வீட்ட பாத்து, பாத்து நாளைக்கு அவ வரப்போற வீடாச்சேன்னு இன்ட்ரியர் எல்லாம் பண்ணி வச்சேன்...! ஏன்டி அபர்ணா தனியா நீ மட்டும் வாடகை கொடுத்து தங்கி இருக்க?உனக்கு மட்டும் எதுக்கு தனி ப்ளாட்ட்னு சண்டை போட்டேன், பேசாமா என் கூடவே வந்து தங்கிடுன்னு சொன்னப்ப....அவ..நோ....நோ...டார்லிங் அது எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்னு சொன்னது ரொம்ப புடிச்சு இருந்துச்சு....

உதடு தாண்டி அவளை நான் ஸ்பரிச்சது கிடையாது. ஒரு நாள் நைட் அவ வீட்ல தங்குற ஒரு சிச்சுவேசன் வந்தப்ப கூட இந்த இடியட் இவ்ளோ பெர்பக்ட்டா நடந்துக்குவன்னு எக்ஸ்பெக்ட் பண்ணலன்னு அவளே சொல்லி இருக்கா...

அப்டி எல்லாம் இருந்த என்னை டாமிட்....நோ எக்ஸ்க்யூஸ்!!!!! அவ என்ன விட்டு போறத என்னால அலோ பண்ண முடியாது.. நெவர்....! 8:15ல் நின்று கொண்டிருந்தது கடிகாரம். டைனிங் டேபிள் அருகில் வந்தேன். அப்பாவியாய் என்னைப் பார்த்து சிரித்தது குட்டிப் பிசாசு... மெல்ல பிஸ்ட்டலை கையிலெடுத்தேன்....! செல்ல பொம்ரேனியன் நாய்க்குட்டியாய் கைக்குள் படுத்து கொண்டது. மெல்ல வருடிக் கொடுத்தேன்.... ட்ரிக்கர் நுனி என்னைப் பார்த்து சிரித்தது..எப்போது இழுப்பாயடா என் செல்லக் காதலா என்று முத்ததுக்கு ஏங்கும் காதலியின் உதடுகளாய் சிணுங்கிக் கொண்டிருந்தது

வெயிட்...வெயிட்..இன்னும் கொஞ்ச நேரம்தான்....அந்த கள்ளியின் உயிர் குடிக்கும் வேலையை உங்களிடம் விட்டு விடுகிறேன். மெல்ல பிஸ்டலை திறந்து புல்லட்ஸை செக் பண்ணிக் கொண்டேன். சைலன்ஸ்சர் சரியாக பொறுந்தியிருக்கிறதா என்று பார்த்தேன்...ஒரு நடிகையின் லோ ஹிப்பில் உட்கார்ந்திருக்கும் ஜீன்ஸ்பேன்டின் பெல்ட் போல கன கச்சிதமாய் சைலன்ஸர் உட்கார்ந்திருந்தது. உயிரே போனாலும் உன்னைக் காட்டிக் கொடுக்கமாட்டேன் என்று எஜமான விசுவாசம் காட்டியது....

யெஸ்.. ஐ நீட் தட்....!

டிஸ்யூ பேப்பர் எடுத்து பிஸ்டலை ரேகை படிமாணமில்லாமல் கன கச்சிதமாய் துடைத்தேன். கையில் லெதர் க்ளவுஸ் எடுத்து அணிந்தேன். பிரிட்ஜ் மீது இருந்த நைக் கேப் எடுத்து தலையிலணிந்தேன். ரெடி....மூவ்.... மணி இரவு 8:20

வீட்டைப் பூட்டினேன்...!

மீண்டும் ஒரு முறை பூட்டை இழுத்துப் பார்த்தேன்...லிப்டை தவிர்த்து விட்டு ஸ்டெப்ஸில் இறங்கினேன். இரண்டு மாடி இறங்கத் தெரியாத சோம்பேறி தடியனா நான்... இல்லை இல்லை ஒரு கொலை செய்யப் போகும் தில்லான இளைஞன்...! ஜீன்ஸ் பேண்டின் முன் பாக்கெட்டில் ஐ போனை திணித்துக் கொண்டேன்....! இறங்கி எனது அப்பார்மெண்ட் கீழ் வந்தேன் காருக்கு அருகில் செல்வதற்கு முன்னால் டேவிட்டிடம் மதியம் வாங்கியிருந்த இம்போர்ட்டட் டன் ஹில் பாக்கெட்டில் இருந்து ஒன்றை உருவினேன்...உதட்டில் பொருத்தினேன்....க்ளப் என்ற ஒரு தட்டுதலில் சிகரட்டுக்கு நெருப்பை மாற்றி விட்டு அணைந்து கொண்டது லைட்டர்.....

ஆழமாய் இழுத்து புகைத்தேன்.............யு சுட் நாட் பிஹேவ் லை திஸ் ......மை டியர் அபர்ணா...!!!!! எனக்கு கல்தா கொடுத்து விட்டு வேறு ஒருவனோடு உன்னை வாழ விடுவேனா.....இதோ.. இதோ ஐம் ஆன் மை வே டு பிரசண்ட் யூ த டெத்......நிக்கோடின் பரவிய புத்தி பரபரத்தது.....! சிகரெட்டை முழுதாய் அனுபவித்து விட்டு தாவி ஏறினேன்.. வண்டிக்குள்...

ஆசையாய் சிணுங்கும் மனைவி போல வண்டி சிணுங்கிக் கொண்டே உறுமி கிளம்ப சூடு பரவத் தொடங்கியது வண்டியின் என்ஜினுக்குள்ளும், எனக்குள்ளும், முன் பாக்கெட்டில் துருத்திய செல் போனை எடுத்து பக்கத்து சீட்டில் போட்டேன்...

மதானந்தபுரம் தாண்டி ஐந்தாவது நிமிடத்தில் போரூர் ஜங்சன் வந்தது சந்தடிகளைக் கடந்து வண்டியை பறக்க விட்டேன்...இராமவரம் தாண்டும் போது மணி 8:50.....எல்லோரும் வீடுகளுக்குள் அடையத் தொடங்கியிருந்த நேரத்தில் நான் பறந்து கொண்டிருந்தேன் கொலை செய்ய...

நந்தனம் சிக்னலில் நின்று கொண்டிருந்த போது வியர்க்கத் தொடங்கியிருந்தது. வண்டியின் ஏசியை கூட்டி வைத்தேன்...அதை சட்டை செய்யாமல் முன் நெற்றியில் முத்து முத்தாய்....வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டேன்....சிக்னல் பச்சைக்கு மாற லெப்ட் திரும்பி வெங்கட் நாராயணா ரோட்டினுள் நுழைந்தேன். இதோ...இதோ வரப்போகிறது அந்த துரோகியின் வீடு....! வண்டி திரும்பிய மூன்றாவது நிமிடத்தில் வலது பக்கத்தில் பெட்ரோல் பாங்க் தாண்டி திருப்பதி தேவஸ்தானம் கோவிலுக்கு எதிராக இருந்த குண்டூர் சுப்பையா ஸ்கூல் ஓரமா வண்டியை நிறுத்தி அணத்தேன்....!

டேஸ்போர்டில் இருந்த பிஸ்டல் இப்போது என் இடுப்புக்கு இடம் மாறி இருந்தது. மெல்ல வண்டியிலிருந்து இறங்கி..பின்னோக்கி நடந்தேன். மறுபடி பெட்ரோல் பம்ப்...பெட்ரோல் பம்ப் ஒட்டி இடது புறம் திரும்பி, வலது புறம் இரண்டாவது காம்பவுண்ட்" பிரார்த்தனா அப்பார்ட்மெண்ட்ஸ்...."

செக்கியுரிட்டி கவனிக்காத நேரத்தில் பூனையாய் உள்ளே நுழைந்தேன். படியேறினேன் மூன்றாவது மாடியில் 310ம் எண் டோரின் அருகே வந்தேன்.....மெல்ல கதவினை தள்ளிப்பார்த்தேன்...உள் தாழ்ப்பாள் போட்டிருந்தாள்..!வேறு எவன் உள்ளே இருக்கானோ...திருட்டு த்த்தே....ஒரு கெட்டவார்த்தையை தேவையில்லாமல் உதிர்த்தெறிந்தேன். எவன் இருந்தாலும் சரி கூட ரெண்டு புல்லட்ஸ் தட்ஸ் ஆல்...

எப்போதோ எனக்கு கொடுத்த ஒரு ஸ்பேர் கீயை பத்திரமாக வைத்திருந்தேன்..மெல்ல கதவு திறந்தேன்...உள்ளே நுழைந்து பெட்ரூம் கதவோரம் இருந்த பீரோவுக்கு பின்னால் ஒளிந்து கொண்டேன்....! பாத்ரூமில் ஷவரோடு சேர்ந்து அவள் பாடிக் கொண்டிருந்தாள்...

நான் காத்திருந்தேன்..!

இதோ வந்து விட்டாள்....பெட் ரூம் உள்ளே வந்தவள் அணிந்திருந்த ஒற்றை டவல் இப்போதோ எப்போதோ விழுந்து விடும் போல இருந்தது ஆமாம் அப்படித்தான் பிடித்திருந்தாள்...டவலைத் தாண்டிய பாகங்களுக்குள் அனிச்சையாய் புத்தி எட்டிப்பார்க்க...ச்ச்ச்சே என்ன மானங்கெட்ட புத்தி....புத்தியை உலுப்பி நேராய் நிறுத்தினேன்..யெஸ் அவளைக் கொன்று போட்டே ஆகவேண்டும்.......சீ இஸ் ஏன் ஈவிள்........டாக்....

துண்டை அணைத்தபடி பெட்டில் எனக்கு முதுகாட்டி அமர்ந்தபடி அவளது செல் பேசியை கையில் வைத்துக் கொண்டு நிமிண்டிக் கொண்டிருந்தாள்...ஏதோ டைப் செய்கிறாள்...ம்ம்ம்ம் யாருக்கு உன் புதிய காதலனுக்கா....முடிக்கட்டும் முடித்து விட்டு திரும்பட்டும்....முகத்துக்கு நேரே துரோகி......யூ ப்ளடி சீட் கத்திட்டு சுட்டுத் தள்றேன்...

அபர்ணா திரும்பவில்லை...அவளின் முதுகில் முத்து முத்தாய் கோர்த்திருந்த துடைக்கப்படாத தண்ணீர் வழிந்து கொண்டிருந்தது, உயரத் தூக்கிக் கட்டிய பின் தலை முடியின் பிசிறுகள் ஈரத்தில்பட்டு நனைந்து என்னவோ மனதைச் செய்ய...நோ....நோ...நான் புத்தி மாறக் கூடாது.....என்று உள்ளுக்குள் என்னை வார்ன் செய்து கொண்டேன்....

செல் போனுக்கு அவள் முத்தம் கொடுத்து விட்டு.. பெட்டில் வீசியெறிந்தாள்....தட்ஸ் இட்...........என்னால் முடியவில்லை..யாரோ ஒரு பரதேசிக்கு என் முன்னாலேயே மெசேஜ் அனுப்பிட்டு....முத்தம் வேறு..........ஐ கான்ட் டாலரேட்....பிஸ்டலை அவள் கழுத்துக்கு குறி வைத்தேன்....ட்ரிக்கரை இழுத்தேன்..... மூன்று முறை...

த்புக்.....

த்புக்....

த்புக்....


சப்தமில்லாமல் அவள் உயிர் குடித்த தோட்டாக்கள் அவளது கழுத்திலிருந்து இரத்தத்தை வழிய விட்டன.....மேலே நிலை குத்திய பார்வையோடு கையால் பிடித்திருந்த டவல் அவிழ்ந்து போக அழகாய் செத்துப் போயிருந்தாள் அபர்ணா....

டன்......!

புயலாய் வெளியே வந்தேன். எனது சூ தடங்கள் இல்லாமல் பார்த்துக் கொண்டேன்....! கதவைப் மீண்டும் பூட்டினேன்....! மீண்டும் பூனை போல வெளியே வந்தேன்..மறுபடியும் மெயின் ரோட்டை தொட்டேன்....மீண்டும் ஒரு டன் ஹில் என் உதட்டில்.....நிக்கோடின் மூளைக்குள் பரவியது...நாளை போலிஸ் என்கொயரி வரலாம்..! அப்பாவியாய் அழுது நடித்து விடலாம் ஒரு மாதமாய் எனக்கு தொடர்பே இல்லை சார்னு......இது உண்மைன்னு ஒட்டு மொத்த ஆபிசும் சாட்சி சொல்லப் போகுது...! போன கையோட பிஸ்டலை எரிச்சுடணும்.....புத்தி வேகமாய் கணக்குப் போட்டது...

மீண்டும் ஸ்கார்ப்பியோ தடியனை உசுப்பி ரிவர்ஸ் எடுத்து க்ளட்ஸ் மிதித்து கியர் போட்டு ஆக்ஸிலேட்டர் கொடுக்கையில்.....ஓ......என் செல் போன் எங்கே என்று முன் பாக்கெட்டை தொட்டுப் பார்த்தேன். ஒரு வேளை அபர்ணா வீட்டிலேயே......ஓ மை காட்....என்று புத்தி பதறிய போது பக்கத்து சீட்டில் செல் போன் சிரித்துக் கொண்டிருந்தது......! ஓ.. தேங்க் காட்...வண்டியை ஜி. என் செட்டி ரோட்டில் நான் பாய விட்டுக் கொண்டிருந்த போது மணி சரியாய் பத்து....ஒரு கையால் ஸ்டேரிங் பிடித்த படி செல்லை எடுத்துப் பார்த்தேன் எதுவும் கால்ஸ் மிஸ்ட் ஆகி இருக்கிறதா என்று.....

வாட்.............?????????? டென் மெசெஜஸ்............தட் டூ ஃப்ரம் அபர்ணா???????????

பர்ஸ்ட் மெசேஜ்:

என் செல்ல தீபக்......!!!!ஐ மிஸ் யூ டா.. அடிக்கடி கோபப்படுற அதனால உன்னை விட்டு விலகி இருக்குற மாதிரி இருந்தா ஸ்டில் இன்னும் லவ் அதிகமாகும்னுதான்...நான் அப்டி நடந்துகிட்டேன்.....பட் இட்ஸ் வெரி ஹார்ட் டியர்.....என்னால முடியலை...! உன்னோட கால்ஸ் எல்லாம் நான் அவாய்ட் பண்ணினது நினைச்சு நினைச்சு...ஐ ஃபீல் வெரி பேட்..நாளைக்கு ஆபிஸ்ல உன்ன கட்டிப் பிடிச்சு முத்த கொடுத்து கால தொட்டு சாரி சொல்லப் போறேன் கண்ணா...

என் புஜ்ஜிப்பா........! ஸ்வீட் ட்ரீம்ஸ்டா..........ஐ மிஸ் யூ டா செல்லம்............! ஐ லவ் யூடா என்று முடிந்திருந்த அந்த மெசேஜ் தாண்டி மிச்சமிருந்த 9 மெசேஜசும் ஐல் லவ் யூ, ஐ லவ் யூ என்று டைப் பண்ணியிருந்தாள்........

ஓ......மை காட்.........அபர்ணாஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ ஸ்டேரிங் கண்ட்ரோமை முழுதாய் விட்டிருந்தேன்...........எதிரில் தண்ணி ஏத்திட்டு வந்த டேங்கர் லாரி அசுர கதியில்...........ஓ........ஓஒ........முழுதுமாய் எனது கண்ட்ரோல் போனது.......

டமால் டாமால்...........டும்............டமால்.........

ஸ்டேரிங்கில் சாய்ந்த படி உயிர் விட்டிருந்தான் தீபக்...
.....
.....
......

ங்கொய்யாலா எல்லா க்ரைம் நாவலும் இப்படித்தான் முடிக்கிறானுக....15 ரூபா வேஸ்ட்டா போச்சே என்று கடிகாரத்தை பார்த்தான் சுரேஷ்... மணி இரவு 11 ஐக் காட்டியது....!

" ஏங்க வந்து படுங்களேங்க....காலையில ஆபிஸ் போக வேணாமா..? "

சுரேஷின் மனைவி சந்திரா அதட்டினாள்...!

க்ரைம் நாவலை தூக்கி விசிறியடித்து விட்டு ..காலை ஆறு மணிக்கு அலாரத்தை வைத்து விட்டு...பெட்ரூமில் போய் படுத்த மூன்றாவது நிமிடத்தில் உறங்கிப் போனான் சுரேஷ்....!


தேவா. S

Comments

Mohamed Faaique said…
சூப்பர்ன்னா... க்ரைம் ஸ்டோரியெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டீங்க....
ஸ்டோரி சூப்பர்... பட், கடைசில பல்பு குடுத்துட்டீங்க...
அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ் ஜேம்ஸ் பான்ட் போட்டோ போட்டு இருக்கு
Prabu Krishna said…
வாவ் சூப்பர்ணா!!! கலக்கிட்டீங்க
எப்போவோ புக் படிக்கும் போது வீட்டுல திட்டு வாங்கிட்டு.. அதையே கதையா எழுதிட்டார் :)))
கிரைம் நாவல் தோத்தது போங்க.. :)

சூப்பர்... என்ன ஒரு த்ரில்... ஆனா.. செல் போன்.. கார் சீட்-ல விட்டதாக சொன்ன இடத்தில்.... அபர்ணா மெசேஜ் பண்ண இடத்தில்.. ஒரு வேளை.. தீபக்-கு மெசேஜ் பண்ணியிருப்பாளோன்னு நினச்சேன்!

Awesome...!!! Keep writing! :)
அப்றம் என்னாச்சு..ரெண்டு பேரும் சொர்க்கத்துக்குப் போனாங்களா?
Anonymous said…
இதுபோன்ற கிரைம் கலந்தும் வித்தியாசமாக எழுத முடியும் என நிரூபிக்கின்றது இந்த கதை! ஆச்சர்யபடுகிறேன்.......

இது போன்ற சுவாரசியங்கள் நடுநடுவே வருவது(எழுதுவது) உங்கள் தளத்தை இன்னும் அழகு படுத்தும்.

வாழ்த்துக்கள் ஆச்சர்யங்கள் தொடரட்டும்.......
Anonymous said…
வாவ்... இந்த கதை நெஜமா ரொம்ப நல்லவே இருந்தது தேவா. அதும் கடைசியில இருக்கும் டுவிஸ்ட் தான் இந்த கதையின் ஹைலைட் :)

Keep going well with your stories :)
Surya Prakash said…
அண்ணா என்ன இது எல்லா ஏரியாவிலையும் பூந்து விளையாடுறீங்க ,,,

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த