Skip to main content

விலக்கப்பட்ட கனி...!






















விலக்கப்பட்ட கனியை
புசித்து முடித்திருக்கையில்
வக்கிர புன்னகையை
மெலிதாய் துடைத்துக் கொண்டான்
சாத்தானுக்குள் இருந்த கடவுள்..!

மறுக்கப்பட்டதின் விதிகளை
படைப்புகள் எப்போதும்
அத்துமீறும் என்பதாலேயே
மீறலுக்காய் மறுத்து வைத்த
பாவ பரிமாற்றமாய் மாறிப் போனது
பிரபஞ்சத்தின் மைய முடிச்சு...!

எட்டாவது படிக்கையில்
எதிர் வீட்டு ஜெயஷ்ஸ்ரீ அக்காவுக்கு
முத்தம் கொடுத்த
பக்கத்து வீட்டு அண்ணனுக்குள்
ஒளிந்திருந்து...
அது எட்டிப் பார்த்தது;

கீதா டீச்சரிடம் சேட்டைகள்
செய்த முருகேசன் வாத்தியாரின்
மூளைக்குள் பிடிவாதமாய்
சம்மணக் காலிட்டு..
அமர்ந்திருந்தது;

நெரிசலான பேருந்தில்
ஒரு பெரியம்மாவை
இடித்துப் பார்த்த தடியனுக்குள்
கம்பீரமாய் நின்று கொண்டும்;
நாடார் கடையில் சாமான் வாங்கையில்
செல்வி அத்தையின் இடுப்பை
முறைத்துப் பார்த்த
பொட்டணம் போடும் கணேசனின்
விழிகளில் கள்ளத்தனமாய்...
எட்டிப் பார்த்தும்...

ஆதியில் விலக்கப்பட்டதாய்
கற்பிதம் கொண்ட ஒன்று
எப்போதும் பல் இளித்து
இருப்பினைக்காட்டி விட்டு ....
இல்லை....இல்லை...இல்லை
என்று பொய்யாய் கை விரித்து
கட்டுப்பாட்டு விதிகளுக்குள்
கபடமாய் ஒளிந்தே கொள்கிறது!

திருமண பந்தமென்ற
ஒப்பந்தங்களின் போது
கடவுள் முகமூடியை...
சைத்தான்கள் அணிந்து கொண்டு
விலக்கப்பட்டதை விழுங்குவதற்கு
நியாய பதாகைகளையும்
தூக்குவதுமுண்டு...!..!

என்னதான்...
ஒழுக்கத் துணிகளை
இறுக்க இறுக்க கட்டிக் கொண்டாலும்
புத்திக்குள் வந்து
ஆடை விலக்கிப் பார்க்கும்
ஆதி உணர்வினை காதலென்று
மார்க்கெட்டிங்க் செய்து விட்டான்
இல்லாத ஒரு கடவுள்...!

நிஜ உணர்வுகளை மடக்கிப் போட்டு
வண்ண வண்ண வர்ணம் தீட்டி
புனிதம் என்ற போர்வை போர்த்தி
நாளும் நடக்கும்
நல்லொழுக்க நாடகங்களின்
ஓரங்களில் ஒட்டிக் கிடக்கும்
காமமே பிரதானாமாய்...
சுற்றிக் கொண்டிருக்கிறது
எப்போதோ இல்லாமல் இருந்த
இந்த முரட்டு பூமி....!

தேவா. S




Comments

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த