Skip to main content

விலக்கப்பட்ட கனி...!






















விலக்கப்பட்ட கனியை
புசித்து முடித்திருக்கையில்
வக்கிர புன்னகையை
மெலிதாய் துடைத்துக் கொண்டான்
சாத்தானுக்குள் இருந்த கடவுள்..!

மறுக்கப்பட்டதின் விதிகளை
படைப்புகள் எப்போதும்
அத்துமீறும் என்பதாலேயே
மீறலுக்காய் மறுத்து வைத்த
பாவ பரிமாற்றமாய் மாறிப் போனது
பிரபஞ்சத்தின் மைய முடிச்சு...!

எட்டாவது படிக்கையில்
எதிர் வீட்டு ஜெயஷ்ஸ்ரீ அக்காவுக்கு
முத்தம் கொடுத்த
பக்கத்து வீட்டு அண்ணனுக்குள்
ஒளிந்திருந்து...
அது எட்டிப் பார்த்தது;

கீதா டீச்சரிடம் சேட்டைகள்
செய்த முருகேசன் வாத்தியாரின்
மூளைக்குள் பிடிவாதமாய்
சம்மணக் காலிட்டு..
அமர்ந்திருந்தது;

நெரிசலான பேருந்தில்
ஒரு பெரியம்மாவை
இடித்துப் பார்த்த தடியனுக்குள்
கம்பீரமாய் நின்று கொண்டும்;
நாடார் கடையில் சாமான் வாங்கையில்
செல்வி அத்தையின் இடுப்பை
முறைத்துப் பார்த்த
பொட்டணம் போடும் கணேசனின்
விழிகளில் கள்ளத்தனமாய்...
எட்டிப் பார்த்தும்...

ஆதியில் விலக்கப்பட்டதாய்
கற்பிதம் கொண்ட ஒன்று
எப்போதும் பல் இளித்து
இருப்பினைக்காட்டி விட்டு ....
இல்லை....இல்லை...இல்லை
என்று பொய்யாய் கை விரித்து
கட்டுப்பாட்டு விதிகளுக்குள்
கபடமாய் ஒளிந்தே கொள்கிறது!

திருமண பந்தமென்ற
ஒப்பந்தங்களின் போது
கடவுள் முகமூடியை...
சைத்தான்கள் அணிந்து கொண்டு
விலக்கப்பட்டதை விழுங்குவதற்கு
நியாய பதாகைகளையும்
தூக்குவதுமுண்டு...!..!

என்னதான்...
ஒழுக்கத் துணிகளை
இறுக்க இறுக்க கட்டிக் கொண்டாலும்
புத்திக்குள் வந்து
ஆடை விலக்கிப் பார்க்கும்
ஆதி உணர்வினை காதலென்று
மார்க்கெட்டிங்க் செய்து விட்டான்
இல்லாத ஒரு கடவுள்...!

நிஜ உணர்வுகளை மடக்கிப் போட்டு
வண்ண வண்ண வர்ணம் தீட்டி
புனிதம் என்ற போர்வை போர்த்தி
நாளும் நடக்கும்
நல்லொழுக்க நாடகங்களின்
ஓரங்களில் ஒட்டிக் கிடக்கும்
காமமே பிரதானாமாய்...
சுற்றிக் கொண்டிருக்கிறது
எப்போதோ இல்லாமல் இருந்த
இந்த முரட்டு பூமி....!

தேவா. S




Comments

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...