Skip to main content

இசையோடு இசையாக..தொகுப்பு 3 !





















புத்துணர்ச்சி வீசும் புதிய நாளை சூரியனின் வருகைக்கு முன்னாலேயே எழுந்து ஆழ சுவாசித்து ஆரத்தழுவி அந்த அற்புத பொழுதின் குளுமையை உடலுக்குள் வாங்கி...புத்தியின் சூடு தணிய இரவு உறக்கத்தில் அயர்ச்சியில் கிடந்த மூளை தன்னை உலுக்கிக் கொண்டு அன்று பிறந்த குழந்தையைப் போல அதிகாலையை ஆச்சரியாமாய் நோக்கும் தருணம் சுகமானது....

நகரத்து வாழ்க்கையில் மறுக்கப்பட்டுப் போய்விடும் பல அற்புதங்களை கிராமத்துக் காலைக்கு பிரபஞ்சம் ஆசிர்வாதம் செய்து கொடுத்திருக்கும்.... ஆடு, மாடு, நாய் போன்ற் மனித வாழ்க்கையோடு ஒன்றிப் போன விலங்குகளும், சேவல், கோழி, காகம், கிளி,குருவி, காடை,கவுதாரி, கொக்கு, மடையான், நாரை, சிட்டுக்குருவி, மரங்கொத்தி, குயில் போன்ற பறவைகளும் பிரபஞ்ச ஓட்டத்தில் விடியலை ருசிக்க எழுந்து கடவுளின் சாயலை தரிசித்துதான் விடுகின்றன.

மெல்ல நகர்ந்து வயல் வெளிக்குள் நுழையும் பொழுதில் இரவு முழுதும் புற்களோடு சல்லாபித்த பனித்துளிகள் இன்னும் சற்று நேரத்தில் சூரியனின் வருகைக்குப் பின் கிளம்ப இருக்கிறோம் என்ற தகவலை சிரித்துக் கொண்டே சொல்ல... குளிர்வான இரு ஊதக்காற்று உடல் தடவி நாடி நரம்புகளின் அயற்சிகளை எல்லாம் சுகமாய் நீவி விட்டு எனக்கு வேலை நிறைய இருக்கிறது என்று சொல்லாமல் சொல்லி விட்டு போய்க்கொண்டே இருக்கும்...

ரோசா, ஆவாரம்பூ, அரளிப்பூ, காட்டு ஆமணக்குப் பூ, பூவரசம் பூ, காட்டு மல்லி, பட்டு ரோசா, டிசம்பர் பூ, கனகாம்பரம், கொடி மல்லி, கொடியிலே கிடக்கும் பூசணிப் பூ.. சூரியனை விட நாங்க ரொமப் கலராக்கும் என்று சிரிக்கும் செவ்வந்திப் பூ.....என்று எல்லாமே புது மணப் பெண்ணாய் மெல்லிய காற்றில் ஆடிக் கொண்டு காதலை இந்த பிரபஞ்சமெங்கும் பரப்பிக் கொண்டிருக்கும்....

இப்படியாக எனக்குள் விரியும் காட்சிகளை புத்திக்குள் நிறைத்துப் போட்ட ஒரு அற்புதமான இசையையும் பாடலையும் நீங்களும் கேட்டுப் பாருங்கள். இளையராஜாவோடு கூட்டு சேர்ந்து மனதை கொள்ளையடிக்கும் வேலையைச் சரியாக செய்திருக்கிறார்கள் வைரமுத்துவும், ஜானகி அம்மாவும்.....

" வானில் தோன்றும் கோலம்
அது யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றின்
சுகம் யார் தந்ததோ
வயதில் தோன்றிடும்
நினைவில் ஆனந்தம்
வளர்ந்தாடுது இசைபாடுது
வழிந்தோடுது சுவைகூடுது "


மயக்கும் காலையைப் பற்றிய அற்புதமான நினைவுகளோடு இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாய் அமையட்டும்...!

தேவா. S



Comments

அருமையான...பகிர்வு...நன்றி தேவா...
இப்போது வரும் பாடல்களை நான் கேட்பதேயில்லை சகோ. அறுவெறுப்பும் ஆபாசமும் சத்தக்காடாகவும் தான் இருக்கின்றன. நான் பழைய பாடல்களின் ரசிகன்.

இந்தப் பாடல் அருமை. வைரமுத்து கலக்குகிறார். இசையும் அருமை. பகிர்வுக்கு நன்றி!.



தமஓ 4.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த