Skip to main content

இசையோடு இசையாக..தொகுப்பு I !



' எல்லாம் தான் பெண்ணே செய்தேன்..! எதார்த்த உலகத்தில் உன்னிடம் ஏகாந்தக் கனவுகளைப் பரப்பினேன்..! சராசரி சாலை என்று நடக்கவே பயந்தாய், உனக்கு என் கவிதைச் சிறகுகளைப் பூட்டி பறந்து வா என்றேன். ஒரு நாள் உன் கண்ணில் தூசு விழுந்த பொழுதில் கண் கலங்கி நின்றாய் அதை கண்களில் இருந்து எடுத்து அந்த சிறு தூசியை ஒரு அரக்கனை எரிப்பது போல எரித்துப் போட்டேன்...!!!

அன்றாட தினசரி காலண்டரை கிழித்து அதை தூக்கியெறியாமல் நித்தம் உனக்கொரு கவிதை எழுதி கொடுத்தேன். என் சுட்டு விரல் உன் மேல் பட்டால் கூட எதன் பொருட்டோ என் காதல் வந்ததென்று நீ எண்ணி விடக் கூடாது என்று எப்போதும் என் காமத்தை தூரங்களில் விலக்கியே வைத்துதான் உன்னோடு நடப்பேன்.

ஒரு சந்தோசமென்றால் கூட நீ நன்றாக சிரித்த பின்புதான் நான் சிரித்தேன். நீ சிரித்து முடிக்கும் முன்னால் நான் சிரிப்பை நிறுத்தி விடுவேன். நீ அழைக்கும் போதெல்லாம் வந்திருக்கிறேன், நீ விலக்கும் போதெல்லாம் தூரமாய் போயிருக்கிறேன். உன் அனுமதிகளோடேதானே பெண்ணே எல்லாம் நகர்ந்து கொண்டிருந்தது.. இன்று எட்ட முடியா தூரமாய் நீ நகர்ந்து போனது ஏனோ?

நீர் வேண்டாம் என்று...
பூமி சொன்னால்...
எங்கேதான் பெய்யும் மழை?

நீ அழைக்காத என் அலைபேசி இறந்து போய் கிடக்கிறது.....என் கவிதைகள் எல்லாம் உன் வாசித்தலின்றி சுவாசம் தப்பிய மீனாய் துடி துடித்துக் கொண்டிருக்கிறது. என்னைச் சுற்றி இருந்த எல்லாம் தான் பெண்ணே ரசித்தாய் ஆனால்...........என்னை மட்டும் நீ ரசிக்கவேயில்லையே ஏன்...? ' 

இப்படியாக நீண்டு கொண்டிருக்கும் வரிகளில் காதல் ஒன்று தொலைந்து போனதை ஒரு கவிதையாய் சொல்லும் இந்தப் பாடலின் தாக்கம் கொள்ளை கொள்ளையாய் இருக்கிறது. எப்பவுமே எனக்கு விஜய் பிடிக்கும் ஐ யூஸ்ட் டு சே நெக்ஸ்ட் தமிழ் சினிமாவ ரூல் பண்ணப் போறது விஜய்தான்னு....! இப்போ வேணா டைமிங்க் ஒரு மாதிரி இருக்கலாம்....பட் ஒழுங்கா கதை ச்சூஸ் பண்ணி நடிச்சா....கண்டிப்பா இன்னொரு ரஜினி.. !!!அப்டி ஒரு பக்கா பக்கத்து வீட்டுப் பையன் முகம்.

சரி.. விஜய் பிடிக்கதவங்க இங்க வந்து ஒழிக கோசம் போட்டுடாதீங்க..!!! இந்த பதிவு பாட்டுக்கு... மேலே இருக்கும் சூழலுக்கு அட்டகாசமாய் விஜய் ரிஆக்ட் பண்ணியிருப்பாங்க....மணி சர்மாவோட சாரோட இசை இனிமைக்கு வைரமுத்து சார் வரிகள்...சரியா பொருந்தியிருக்கும். பாடலின் ஜீவன் ஹரிஸ் ராகவேந்திரர்.

" காதல் என்ற ஒன்று அது கடவுள் போல
உணர தானே முடியும் அதில் உருவம் இல்லை
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே சொல்ல வார்த்தை இல்லை "

இனிய இசை அனுபவத்துக்கு வாழ்த்துக்கள்....!



அப்போ.........வர்ர்ர்ட்ட்டா...!!!!

தேவா. S

பின் குறிப்பு: அப்போ அப்போ இது மாதிரி பாடல்களை கேட்டுட்டு...அப்போ தோணுறத டக்கு டக்குனு எழுதிடலாம்னு இருக்கேன். பாடல் விமர்சனம் கிடையாது...விமர்சனம் பண்ற அளவுக்கு எல்லாம் நமக்கு புத்தி பத்தாது....! இது ச்ச்சும்மா....அட..ச்ச்சுமன்னா என்னவா? ச்ச்சுமான்னா சும்மாதான்...!


Comments

மெலடியான பாட்டு.. நல்லாருக்கு.
This comment has been removed by the author.
Kousalya Raj said…
//சராசரி சாலை என்று நடக்கவே பயந்தாய், உனக்கு என் கவிதைச் சிறகுகளைப் பூட்டி பறந்து வா என்றேன்.//

//நீ அழைக்கும் போதெல்லாம் வந்திருக்கிறேன், நீ விலக்கும் போதெல்லாம் தூரமாய் போயிருக்கிறேன்.//

//என் கவிதைகள் எல்லாம் உன் வாசித்தலின்றி சுவாசம் தப்பிய மீனாய் துடி துடித்துக் கொண்டிருக்கிறது. //

பிடித்த பாடல் இது... உங்களின் வரிகளுடன் பாடலை கேட்கும் போது பாடல் இன்னும் அழகாகி விட்டது.

இது போன்று இசையோடு இசையாக நிறைய வரவேண்டும் உங்களின் கவி வரிகள் தாங்கி...!!

உண்மைதான். இது முற்றிலும் இனிய இசை அனுபவம்.

வாழ்த்துக்கள்

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...