Skip to main content

இசையோடு இசையாக..தொகுப்பு I !



' எல்லாம் தான் பெண்ணே செய்தேன்..! எதார்த்த உலகத்தில் உன்னிடம் ஏகாந்தக் கனவுகளைப் பரப்பினேன்..! சராசரி சாலை என்று நடக்கவே பயந்தாய், உனக்கு என் கவிதைச் சிறகுகளைப் பூட்டி பறந்து வா என்றேன். ஒரு நாள் உன் கண்ணில் தூசு விழுந்த பொழுதில் கண் கலங்கி நின்றாய் அதை கண்களில் இருந்து எடுத்து அந்த சிறு தூசியை ஒரு அரக்கனை எரிப்பது போல எரித்துப் போட்டேன்...!!!

அன்றாட தினசரி காலண்டரை கிழித்து அதை தூக்கியெறியாமல் நித்தம் உனக்கொரு கவிதை எழுதி கொடுத்தேன். என் சுட்டு விரல் உன் மேல் பட்டால் கூட எதன் பொருட்டோ என் காதல் வந்ததென்று நீ எண்ணி விடக் கூடாது என்று எப்போதும் என் காமத்தை தூரங்களில் விலக்கியே வைத்துதான் உன்னோடு நடப்பேன்.

ஒரு சந்தோசமென்றால் கூட நீ நன்றாக சிரித்த பின்புதான் நான் சிரித்தேன். நீ சிரித்து முடிக்கும் முன்னால் நான் சிரிப்பை நிறுத்தி விடுவேன். நீ அழைக்கும் போதெல்லாம் வந்திருக்கிறேன், நீ விலக்கும் போதெல்லாம் தூரமாய் போயிருக்கிறேன். உன் அனுமதிகளோடேதானே பெண்ணே எல்லாம் நகர்ந்து கொண்டிருந்தது.. இன்று எட்ட முடியா தூரமாய் நீ நகர்ந்து போனது ஏனோ?

நீர் வேண்டாம் என்று...
பூமி சொன்னால்...
எங்கேதான் பெய்யும் மழை?

நீ அழைக்காத என் அலைபேசி இறந்து போய் கிடக்கிறது.....என் கவிதைகள் எல்லாம் உன் வாசித்தலின்றி சுவாசம் தப்பிய மீனாய் துடி துடித்துக் கொண்டிருக்கிறது. என்னைச் சுற்றி இருந்த எல்லாம் தான் பெண்ணே ரசித்தாய் ஆனால்...........என்னை மட்டும் நீ ரசிக்கவேயில்லையே ஏன்...? ' 

இப்படியாக நீண்டு கொண்டிருக்கும் வரிகளில் காதல் ஒன்று தொலைந்து போனதை ஒரு கவிதையாய் சொல்லும் இந்தப் பாடலின் தாக்கம் கொள்ளை கொள்ளையாய் இருக்கிறது. எப்பவுமே எனக்கு விஜய் பிடிக்கும் ஐ யூஸ்ட் டு சே நெக்ஸ்ட் தமிழ் சினிமாவ ரூல் பண்ணப் போறது விஜய்தான்னு....! இப்போ வேணா டைமிங்க் ஒரு மாதிரி இருக்கலாம்....பட் ஒழுங்கா கதை ச்சூஸ் பண்ணி நடிச்சா....கண்டிப்பா இன்னொரு ரஜினி.. !!!அப்டி ஒரு பக்கா பக்கத்து வீட்டுப் பையன் முகம்.

சரி.. விஜய் பிடிக்கதவங்க இங்க வந்து ஒழிக கோசம் போட்டுடாதீங்க..!!! இந்த பதிவு பாட்டுக்கு... மேலே இருக்கும் சூழலுக்கு அட்டகாசமாய் விஜய் ரிஆக்ட் பண்ணியிருப்பாங்க....மணி சர்மாவோட சாரோட இசை இனிமைக்கு வைரமுத்து சார் வரிகள்...சரியா பொருந்தியிருக்கும். பாடலின் ஜீவன் ஹரிஸ் ராகவேந்திரர்.

" காதல் என்ற ஒன்று அது கடவுள் போல
உணர தானே முடியும் அதில் உருவம் இல்லை
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே சொல்ல வார்த்தை இல்லை "

இனிய இசை அனுபவத்துக்கு வாழ்த்துக்கள்....!



அப்போ.........வர்ர்ர்ட்ட்டா...!!!!

தேவா. S

பின் குறிப்பு: அப்போ அப்போ இது மாதிரி பாடல்களை கேட்டுட்டு...அப்போ தோணுறத டக்கு டக்குனு எழுதிடலாம்னு இருக்கேன். பாடல் விமர்சனம் கிடையாது...விமர்சனம் பண்ற அளவுக்கு எல்லாம் நமக்கு புத்தி பத்தாது....! இது ச்ச்சும்மா....அட..ச்ச்சுமன்னா என்னவா? ச்ச்சுமான்னா சும்மாதான்...!


Comments

மெலடியான பாட்டு.. நல்லாருக்கு.
This comment has been removed by the author.
Kousalya Raj said…
//சராசரி சாலை என்று நடக்கவே பயந்தாய், உனக்கு என் கவிதைச் சிறகுகளைப் பூட்டி பறந்து வா என்றேன்.//

//நீ அழைக்கும் போதெல்லாம் வந்திருக்கிறேன், நீ விலக்கும் போதெல்லாம் தூரமாய் போயிருக்கிறேன்.//

//என் கவிதைகள் எல்லாம் உன் வாசித்தலின்றி சுவாசம் தப்பிய மீனாய் துடி துடித்துக் கொண்டிருக்கிறது. //

பிடித்த பாடல் இது... உங்களின் வரிகளுடன் பாடலை கேட்கும் போது பாடல் இன்னும் அழகாகி விட்டது.

இது போன்று இசையோடு இசையாக நிறைய வரவேண்டும் உங்களின் கவி வரிகள் தாங்கி...!!

உண்மைதான். இது முற்றிலும் இனிய இசை அனுபவம்.

வாழ்த்துக்கள்

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...