Skip to main content

தோற்கவிடு காலமே...!


























அடிக்கடி என்னை தோற்கவிடு காலமே
அப்போதுதான் துரோகிகளின் கோரமுகங்களையும்....
நட்புகளின் ஆதரவுக்கரங்களையும்
என்னால் சரியாக பற்றிக் கொள்ள முடிகிறது...
எனக்கு வலிக்கும் இரணங்களைக் கொடு.....
அப்போதாவது என்னை நேசிக்கிறவர்களை
நான் நேசிக்கிறேனா என்று பார்க்கிறேன்...?

என்னை முகத்தில் அறைந்து காயப்படுத்து காலமே...
எனக்காக எத்தனை கண்கள் கண்ணீரை சுமந்திருக்கின்றன
என்று பார்த்தாவது அறிவு வரட்டும் எனக்கு...
என்னை அடித்து துவம்சம் செய்; தோல்விகளால் குளிப்பாட்டு;
அப்போதாவது வெற்றிகளின் போது...
என்ன செய்யவேண்டும் என்று எனக்கு புரியட்டும்!

நெருப்பில் எரிந்து கொள்கிறேன்
இரணத்தில் வெந்து கொள்கிறேன்
எரிச்சலில் நொந்து கொள்கிறேன்
எனக்கு தோல்விகளைப் புகட்டு காலமே....
அப்போதாவது என் வெற்றிகளில்...
நான் மனிதர்களை சரியாய் கணிக்கிறேனா என்று பார்க்கிறேன்...!

வலிகளை வலிமையாக்கும் வித்தையோடுதான்
என்னை நீ படைத்தளித்தாய் என்று
சில சூழல்களுக்கும் மனிதர்களும் நான் பாடம் புகட்ட வேண்டும்
என் வெற்றியின் உச்சத்தில் முகஸ்துதி மனிதர்களை
என் காலுக்கு செருப்பாக்குகிறேன்...;
முன் பேசி பின் இகழ்ந்தவர்களின்
நரம்புகளை அறுத்து உனக்கு ஒரு மாலை செய்து தருகிறேன்
இடுப்பெலும்புகளை உடைத்து
முதுகெலும்புகளில் கோர்த்து உன் கால்களில் சமர்ப்பிக்கிறேன்
அதனால் என்னை தோற்கவிடு காலமே...
ஏனெனில்...
இந்த உலகமே பெருமூச்செறியும்...
பிரமாண்டமான அசுர வெற்றி கொள்ளவேண்டும் நான்..!


தேவா. சு



Comments

y this கொலைவெறி...???
////என்னை முகத்தில் அறைந்து காயப்படுத்து காலமே... ////

அப்போ இயேசு மாதிரி அறை வாங்கி பேர் வாங்கலாமுனு ரெடி ஆகிட்டே...அப்படி தானே தம்பி :)


////முன் பேசி பின் இகழ்ந்தவர்களின்
நரம்புகளை அறுத்து உனக்கு ஒரு மாலை செய்து தருகிறேன்
இடுப்பெலும்புகளை உடைத்து
முதுகெலும்புகளில் கோர்த்து உன் கால்களில் சமர்ப்பிக்கிறேன்/////

அப்படி எல்லாம் செய்தா ஜெயிலுக்கு போய் ரேசன் அரிசி சாப்பாடு தான் சாப்பிடனும் ...தம்பி Be careful :)
எதை செஞ்சாலும் அண்ணன் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு பண்ணு..... :)
Marc said…
தணல் தெரிக்கும் கவிதை அருமை.
rAm said…
Pudhu Bharathi....
Ungal Tholvikku En Valthukal...
ஹேமா said…
உண்மையான தமிழர்களின் எதிர்பார்ப்பின் எதிரொலி உங்கள் வடிவத்தில்.நம்பிக்கை இழந்தே வாழ்க்கை கடந்துகொண்டிருக்கிறது.ஏதாவது அதிசயம் நடந்தால் பார்ப்போம் !
ஹேமா said…
http://lulurathi.blogspot.com/2012/03/17.html
dheva said…
ஹேமா @ இணைப்புக்கு நன்றி ஹேமா!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...