Skip to main content

அதிர வைக்கும் நித்தியானந்தனின் ஆன்மீக அரசியல்...!




















" ஆசை அறுமின்...ஆசை அறுமின்....
ஈசனோடாயினும் ஆசை அறுமின்..."

அப்டீன்னு சித்தர்கள் எல்லாம் சொல்லிட்டு இருந்த இடம் தெரியாம வாழ்ந்துட்டு மக்களுக்கு அறிவை கொடுத்துட்டு போய்ட்டாங்க...! இப்ப நித்தியானந்தரு, சத்தியானந்தரு, மதுரை ஆதினம், மன்னார்குடி சாதினம்னு உசுர வாங்குறானுங்க! துறவின்னு சொன்னா என்ன அர்த்தம்னு முதல்ல சொல்லுங்க..... மொதல்ல..? அதுக்கப்புறம் எதை எதை நீங்க தொறந்தீங்கன்னு கொஞ்சம் வாயைத் தொறந்து சொல்லுங்க....

அயோக்கியத்தனம்ங்க......சுத்த அயோக்கியத்தனம். ஊர்ல நாட்ல மனுசன் கஞ்சிக்கும் தண்ணிக்கும் அல்லாடிகிட்டு இருக்கான். வெயில்லயும் வேர்வையிலயும் கை வண்டி இழுத்தும் கட்ட வண்டி ஓட்டியும் ஒரு வேள  சோத்த திங்க நாயா பாடு படவேண்டி இருக்கு. இந்த நாதாரிங்க எல்லாம் தங்கத்துல கிரீடமும், கழுத்து ஜொலிக்க தங்கத்துல ருத்ராட்சங்களையு போட்டுகிட்டு....சிவன் கனவுல வந்தாரு, பார்வதி அம்மா சொன்னிச்சு.. நித்தியானந்தம் தம்பிதான் சரியா வருவாப்ல அதனால ஆதின மடத்துப் பொறுப்ப அவரு கையில கொடுத்துடுங்கன்னு...அதனாலதான்  கொடுத்தோம்னு....

திண்ணாந் திட்டமா போஸ் கொடுத்துக்கிடு பத்திரிக்கைகளுக்கு பேட்டி வேற கொடுக்குறாய்ங்க..! சாமியார்னு சொல்றீங்க....எல்லாத்தையும் தொறந்துட்டு மக்கள் சேவையே மகேசன் சேவைன்னு செய்ய வந்திருக்கேன்னு சொல்றீங்க.. ங்கொய்யால மொதல்ல பொய் சொல்லாம இருக்கணுமேன்ற அறிவு இருக்கா ஒங்களுக்கு எல்லாம்...?

ராஜிவ் காந்தி கொலை வழக்குல தடவியல் விசாரணை செஞ்சு நிறைய துப்புக்களை கொடுத்த ஐயா சந்திரசேகர் நித்தியானந்தர்.....ச்சே....ச்சே...எதுக்கு ர்ர்ர்ர் போடணும்.. நித்தியானந்தன் ரஞ்சிதாவோட இருந்த சி.டிய செக் பண்ணி இது ஒரிஜினல்தான்...ஒரிஜினல்தான்... ஒரிஜனலேதான்னு சொல்லிட்டாரு....

நித்தி அதை எல்லாம் கேக்கமாட்டாராம, அவுரு அமெரிக்காவுல இருந்து ஆளுகள காசு கொடுத்து கூட்டியாந்து பேட்டி கொடுக்குறாப்ல. அந்த டேப்பு போலின்னு..அமெரிக்கவுல இருந்த வந்த ஸ்பெஸல்லிஸ்ட்டே சொல்லிடாருன்னு....! .ஏய்யா...டேப்பு போலியா இல்லையான்னு என்னாத்துக்கு செக் பண்ணி பாத்து சொல்லணும்..ஒன் மொகரக் கட்டைய பாத்தாலே வெளக்கமா தெரியுதே...எது போலி, எது உண்மைன்னு...?

வுட்டா ஊர்ல நாட்ல இருக்க அம்புட்டு பேரையும் அசிங்கப்படுத்துவாய்ங்க போல இருக்கு? எந்த ஆம்பளை பொம்பளை நாட்ல சேராம இருக்காங்க..? நித்தி என்ன தப்பா செஞ்சுட்டாருன்னு நாக்கு மேல பல்லு போட்டு தில்லா கேள்வி  வேற கேக்குறாய்ங்க...

ஏண்டா நீங்க எல்லாம் அறிவோடதான் பேசுறீங்களா...? இல்லை அறிவு கெட்டுப் போய் பைத்தியமே உங்களுக்கு எல்லாம் பிடிச்சு போச்சா...? ஊர் ஒலகத்துல இருக்கவன் எல்லாம் நான் சாமியாரு.. நான் தொறவி...அம்புட்டையும் தொறந்துட்டேன்....நான் பெரம்மச்சாரின்னு சொல்லிட்டா இருகாய்ங்க....?

நித்தி எதுக்கு அவர பெரம்மசாரின்னு சொல்லணும்...? இந்து மதம் இந்து மதம்னு மூச்சுக்கு முன்னூறு வாட்டி சொல்றாரே இந்த தொறவி...இந்து மதத்துல தொறவறம் போய்த்தான் ஆகணும்னு கண்டிப்பாய் எங்க சொல்லி இருக்கு...? எத்தனயோ முனிகளும் ரிஷிகளும் கல்யாணம் கட்டிக்கிட்டு இல்லறத்தானவே வாழ்ந்து இருக்காங்க...

இராமகிருஷ்ண பரமஹம்சர் மாதிரி மகான் எல்லாம் ஒங்கள மாதிரிதான் பிரம்மசாரிகள்னு சொல்லிகிட்டு ஒலகம் புல்லா கிளைகள தொறந்து கிட்டு, குடுமி வளர்த்துக்கிட்டு பரத நாட்டியக் கச்சேரி வச்சாங்களா? நீ போட்டது பிரம்மசாரி வேசம்...நித்தி!!! அதுதான் இயற்கைக்கே பொறுக்காமதானே ஒன்ன இழுத்து நடுத் தெருவுல விட்டு நாக்க புடுங்கிக்கிற மாதிரி அசிங்கப்படுத்துனிச்சு....

அதோட நின்னியா நித்தி நீய்யு...? ஒரு பொய்யை மறைக்க எம்புட்டு பிரஸ்மீட்டு....இந்து மதத்தோட பிரதிநிதி இவரு பரப்பி தான் இந்து மதம் தழைக்கப் போவுது...நீ ஏதோ கத்துக்கிட்டியா ஒரமா ஒதுங்கிப் போவியா....பப்பரப்பான்னு விரிக்கிறான்யா கடைய.....ஒலகம் பூரா....

நித்தியானந்தனும் சரி.. இன்னும் ஆன்மீகம்ன்ற பேர்ல காசு சம்பாரிக்கிர அம்புட்டு பேரும் சரி..இவனுக எல்லம் துறவிகளோ அல்லது ஆன்மீகப் பெரியவர்களோ அல்ல....

ஆன்மீகத்தை கார்பரேட் கம்பெனியாக்கிய அயோக்கியர்கள் இவர்கள்...!

இவர்களின் பின்னால் போய் நின்று கையெடுத்து கும்பிட்டு சாமி என்று  ஆசிர்வாதம் வாங்குறதுக்கு பதிலா 48 தடவை தூக்கு போட்டு சாகலாம்...! கெட்டுப் போன பேர ரிப்பேர் பாக்க மதுரை ஆதினத்துக்கு ரூட் போட்டு பல கோடி ரூபாய கிட்ட தட்ட லஞ்சம் கொடுக்குற மாதிரி கொடுத்து ஆதினமா என்னா ஆக்கிபுடுங்கன்னு மிரட்டாம மெரட்டி போஸ்டிங் வாங்கிப்புட்டு....

சிவன் சொன்னார் கனவுலன்னு மொத்தமா ஒரு பொய்ய சொல்லி ஒண்ணும் தெரியாத பொது மக்கள ஏமாத்துற மொள்ள மாறித்தனத்துக்கு பதிலா வேறா ஏதுனாச்சும் பொழப்பு செஞ்சி  பொழச்சுக்குங்களேன் ...ஆசாமிகளா?

மந்திரத்தையும், ஆன்மீக புத்தகங்களையும், நெட்டுரூ போட்டிகிட்டு, ஆசனங்கள எல்லாம் கத்துக்கிட்டு, பல நாட்டு தத்துவ புத்தகங்களை எல்லாம் படிச்சுக்கிட்டு....உண்மைய வெளங்கியும்.. ஏமாத்துறீங்க பாத்தீங்களா.....ஒங்கள பாத்துதான்யா பாரதி பாடி வச்சுட்டுப் போனான்.....

" படிச்சவன் சூதும் வாதும் பண்ணினா...
போவான் போவான்...ஐயோன்னு போவான்.....! "

நீங்களும் ஐயோன்னு போவீங்க....அதுல எந்த மாத்தமும் கிடையாது. எந்த எந்தக் கருமம் எல்லாம் இந்த நாட்ட விட்டு தீரணும்னு ஐயா பெரியார் மாதிரி ஆளுங்க எல்லாம் போரடினாங்களோ அத்தனை அசிங்கத்தையும் பப்ளிக்கா மைக் போட்டு மேடை போட்டு....டிவி முன்னாடி பகுமானமா பண்றாய்ங்க....

சாதியே இல்லன்னு சொல்லிக்கிட்டு இருக்கோம்...ங்கோயாலா மதுரை ஆதினமா சைவ வேளாளர்தான் வரணும்னு ரூல்ஸ் இருக்குனு எதுக்குறவைய்ங்களும் சொல்றாய்ங்க...? என்ன கொடுமை சார் இது...?

ஆன்மீகத்துல புரிதல் உள்ள பெரியவர்களா வரதுக்கு கூட ஒரு குறிப்பிட்ட சாதியில இருந்துதான் வரணுமா? யார் கேப்பா இதை எல்லாம்....? கேட்டா நம்மள எல்லாருமா சேர்ந்து அடிக்க வருவாய்ங்க...இவிங்களா இந்த சனாதான தர்மம் அப்டீன்ற ஒரு சீரான மனித வாழ்க்கைகாக கோர்க்கப்பட்ட வழிமுறைய அசிங்கப்படுத்தி அழிக்க எல்லா சோலியையும் செஞ்சுபுட்டு.....

நம்மள பாத்து....நாம இந்த வழிமுறைக்கு எதிரானவங்கன்னு ஓங்கி ஒங்கி சொல்வாய்ங்க...? ம்ம்ம்ம்ம் கெட்டது என்னிக்கு நேரா வந்துருக்கு... அது எப்பவும் நல்லவன் வேசம் போட்டுகிட்டு தானே நாடகம் நடத்துது.....

ஏதோ அறிவுக்கு எட்டுனத எழுதிப்புட்டேன்....கேட்டா கேளுங்க.. கேக்காங்காட்டி... ஆதீன மகராசாக்கள பாத்து துன்னூறு வாங்கிப் பூசிக்கிட்டு...........சாமி சாமின்னு கும்புடுங்க...சமூகத்துல வெளங்கி வெள்ளாமை வெளஞ்சுரும்.......!

அப்போ....வர்ர்ர்ட்ட்டா!!!!!!


தேவா. சு


Comments

Anonymous said…
சும்மா நச்சுன்னு எழுதியிருக்கீங்க. கேக்கிறவன் (பார்க்கிறவன்) கேனையன்னா இவனுக அவுத்துப் போட்டு ஆடி சிவ தாண்டவம் என்பானுக. ஆச்சிரமத்தில ஆடுற பொம்மனாட்டிகள பார்த்தாலே தெரியலை. இந்த அக்கிரமம் பொறுக்காமத்தான் தமிழ்நாட்டில கோயில் தேரெல்லாம் கவிழுது. ஏதோ அழிவுக்குத் தான்.
வரிக்கு வரி நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்.

இவனுங்க திருந்த இவனுகளிடம் போகும் மக்கள் முதலில் திருந்த வேண்டும்
சகோதரர் தேவா...

ரொம்ப சரியா சொல்லிருக்கீங்க..எல்லா விசயங்களையும் எல்லாராலையும் பேசிர முடியிரதில்லை...நீங்க பேசுரீங்க...நாங்க கேக்ரோம்...ஆதரிக்கிறோம்..

தொடர்ந்து எழுதுங்கள்..

அன்புடன்
ரஜின்
hii.. Nice Post

Thanks for sharing

For latest stills,videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த