Skip to main content

நான் உனக்கு யாருமில்லை...!



நீ எழுதி வைத்த
பழைய கவிதைகளை
மீண்டும் எடுத்து வாசிக்கிறேன்
கடந்து போன வாழ்க்கையை
மீண்டுமொரு முறை பார்க்கும்
ஒரு புகைப்படத் தொகுப்பை போல
ப்ரியங்களை நாம் சுமந்து திரிந்த
அந்தக் தருணங்களை மீண்டும்
மீட்டெத்துக் கொடுக்கும் வரிகளை
வாசித்துக் கொண்டிருக்கையில்
என்னை மீறி வரும் கண்ணீரில்
ஒளிந்திருப்பது உன் மீதான காதலா
இல்லை
உன்னை பிரிந்த ஏக்கமா
என்ற கேள்வியொன்று எட்டிப்பார்த்தது....
நான் அதன் முனை ஒடித்து எறிந்து விட்டு
மீண்டும் உன் வரிகளுக்குள் மூழ்குகிறேன்...

உன்  வார்த்தைகளுக்குள் முதல் முதலாய்
நான் உன்னைத் தேடாமல்
என்னைத் தேட ஆரம்பித்திருந்தேன்
நீ விட்டுச் சென்றிருக்கும் இந்த நீண்ட நெடிய
மெளனத்தில் என்னையே நான் பார்க்க
நீ....கற்றுக் கொடுத்திருப்பதாய் எனக்கு தோன்றுகிறது;
ஒரு பெருமூச்சுடன்.....
என் வீட்டுச் ஜன்னலைத் திறக்கிறேன்....
அப்போதுதான் பெய்து முடித்திருந்த
மழையை சேகரித்து வைத்திருந்த
மல்லிகைச் செடியொன்று....
ஒவ்வொரு துளியாய் சொட்டிக் கொண்டிருக்கிறது...,

ஜன்னல் கம்பிகளில் முகம் புதைக்கிறேன்
வேகமாய் உன் ஞாபகங்கள் ஓடி வந்து
என்னை சூழ்ந்து கொள்கின்றன....
மிட்டாய் விற்பவனைச் சூழும்
சிறுபிள்ளைகளைப் போல....;
யாரோ ஒரு பெண்ணொருத்தி
கையில் காய்கறிக் கூடையுடன்
பிள்ளையை இடுப்பில் சுமந்து
என் ஜன்னலைக் கடந்து செல்கிறாள்
அவள் உன்னைப் போலவே இருக்கிறாள்..
நீயாகவும் இருக்கக் கூடும்...,

என் நினைவுகளைக் கலைத்துப் போட்டு
அதிரடியாய் என் அறைக்குள் நுழைந்த காற்றொன்று
உன் கவிதைப் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கிறது...
எதேச்சையாய் ஏதோ ஒரு பக்கத்தில்
நான் உனக்கு யாருமில்லை என்று
தலைப்பிட்டு நீ எழுதியிருக்கும் கவிதை ஒன்று
நீ எனக்கு யாருமில்லை என்று சொல்கிறது....
என் வீட்டு மல்லிகைச் செடி இன்னமும்
சொட்டிக் கொண்டிருக்கிறது...
சேமித்து வைத்திருந்த பெரு மழையின்
சிறு துளிகளை....!


தேவா. S



Comments

நல்ல கவிதை ......


நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Shankar M said…
நான் உனக்கு யாருமில்லை என்று என்றோ எழுதிய கவிதையை வாசித்தாலும், எனக்கு நீ யாதுமாகிவிட்டாய் என்றும் சொல்கிறாயோ ?? கண்ணீரில் எட்டிப் பார்ப்பது பிரிந்த ஏக்கம்... அந்த ஏக்கமே காதல். ஏதோ ஒன்றில்லை ; இரெண்டுமே!! வார்த்தையே நீ ஆனதால், வார்த்தைக்குள் 'என்னை' தேடுகிறாயோ ? பார்க்கும் இடங்களிலெல்லாம் என்று பாரதியையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறாய்.... அதிரடியாய் களவாடுப்பட்டாய் என்பதை கடைசியில் சொல்லி, அதை எதிர்ப்பார்த்தோ என்னவோ, 'நான் உனக்கு யாருமில்லை' என்று கவிதையில் சொன்ன விதம் அற்புதம்...
ஆத்மா said…
சில நொடிகளில் வாசித்து முடிக்கும் கவிதை தான் ஆனால் உள்வாங்கிய விடயங்கள்.. வார்த்தைக் கோர்ப்புக்கு பயன்படுத்திய வரிகள் அத்தனையும் யுகங்கள் பலதின் அனுபவமும் ஏக்கமுமாககத் தெரிகிறது...

அழகான கவிதை
//என் வீட்டுச் ஜன்னலைத் திறக்கிறேன்....
அப்போதுதான் பெய்து முடித்திருந்த
மழையை சேகரித்து வைத்திருந்த
மல்லிகைச் செடியொன்று....
ஒவ்வொரு துளியாய் சொட்டிக் கொண்டிருக்கிறது...,//

அதுவோ என்று நினைக்க வை
த்தது

//என் வீட்டு மல்லிகைச் செடி இன்னமும்
சொட்டிக் கொண்டிருக்கிறது...
சேமித்து வைத்திருந்த பெரு மழையின்
சிறு துளிகளை....!//

அதுவே என்று உணர்த்தியது....

மல்லிகையின் வாசனையை மழை அதிகப்படுத்துகிறது.

சோகங்களால் இழையோடிய காதல்க் கவிதை வரிகள் மிகவும் சிறாப்பாக உள்ளது .வாழ்த்துக்கள் சகோதரரே .
உங்கள் கவிதையினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம்
செய்துள்ளனர் .மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது .மிக்க நன்றி பகிர்வுக்கு .

http://www.kousalyaraj.com/2012/10/2.html
மனதில் அடைத்து வைக்கப்பட்ட காதல் மடை திறந்து வெளிபடுகிறது
தனிமை பெரு வெளியில் அற்புதமான படைப்பு சூழலுக்கு அழைத்து செல்கிறது படிப்பவர்களை .........உங்கள் தளம் தோழி கௌசல்யா மூலம் அறிமுகம் .....தொடருகிறேன்

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...