தேநீரைப் பருகும்
இடைவெளிகளில்
முதல் மிடறுக்கும்
அடுத்த மிடறுக்குமிடையில்
காதுக்குள் ஏதேதோ கிசு கிசுக்கிறார்...
நீங்கள் எப்போதும்
தேடும் கடவுள்...!
***
எப்போதும்...
தேநீர் தீர்ந்தவுடன்
கோப்பைக்குள் வந்து
படுத்துக் கொள்கிறது
எங்கும் நிறைந்த
ஏகாந்தப் பெருவெளி...!
***
தேநீர் கோப்பை
காலியாகி விட்டது...
எனக்குள்
மெளனமாய் நிறைந்திருக்கிறது
தேநீர்....!
***
என் கவனமெல்லாம்
தேநீரில் இல்லை
ஆனால்..
கோப்பையை எப்படி ஏந்துவது
ஒவ்வொரு பருகுதலின்
இடைவெளிகளில்...
எங்கே லயித்துக் கிடப்பது
என்பதில்தான்...!
***
தேநீர் அருந்திக்
கொண்டிருக்கிறேன்...
நானுமில்லை...
தேநீருமில்லை...!
***
கோப்பையில்
தேநீரை எடுத்து
தேநீரை மட்டும்
பருகிக் கொண்டிருக்கிறேன்...
வெளியே போய்விட்ட
எண்ணங்களுக்கு
எப்படித் தெரியும்
எனது ஏகாந்தம்...!
தேவா. S
Comments
படிக்கும்போது
யோசிக்க தோன்றுகிறது
நன்றி தேவா அண்ணா