Skip to main content

மொழியற்றவனின் பாடல்....!














கலவிக்கென்று யாதொரு வரைமுறையும் இல்லை. இது இப்படித்தான் என்றொரு படிப்பு வாசனையோடு எந்த ஒரு பெண்ணையும் அணுகுமிடம் ரொம்பவே செயற்கையானது. மழை பெய்து கொண்டிருந்த அந்த இரவு வேளையில் என் கண்ணாடி ஜன்னலின் வழியே வழிந்து கொண்டிருந்த மழை கவிதையாய்த் தெரிவதும் வாழ்க்கையின் கண்ணீராய் தெரிவதும் எந்த மனோநிலையில் நாம் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தது. விடியலில் எழும் பறவைக்கென்று என்ன இலக்கு இருக்க முடியும்..? திரும்பிய திசைகள் எல்லாம் அதற்கான வழிகள் திறந்து கிடக்கின்றன. அமர்ந்த இடமெல்லாம் அவற்றுக்கு வசிப்பிடமாய் ஆகிப்போக்கும்...

இடுப்பில் கை கொடுத்து அணைத்து அவளை கால்களால் இறுக்கியபடியே நான் அந்த மழை பெய்யும் இரவினைக் கொண்டாடிக் கொண்டிருந்தேன். பின்னிரவு வரை சல்லாபித்துக் கிடந்து, இடவலம், மேல் கீழ் என்று உடல் முறுக்கி, மூச்சிறைக்க ஏதோ ஒன்றைத் தேடி அடையும் பிரயாசையுடன் உடல்கள் உரசிக்கொள்ளும் கலவி ஒன்றை நீட்டித்து நீட்டித்து....உடலும் மனமும் போதும், போதும் என்று கெஞ்ச முழுதுமாய் உச்சம் தொடச்செய்து பின் மலைமுகட்டில் சரியும் ஒரு முரட்டுக் குதிரையாய், கழுத்து மடங்கி, வாய் கோணி, கால்கள் இழுக்க, அடுத்த கணம் இறக்கப்போகும் ஒரு மனிதனாய் துடி துடித்து காமத்தை முடித்து வைக்கும் கணத்தில்தான்...கடவுளென்று  போதிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம் இதுதானென்று நமக்குப் பிடிபடும்.

அதிகாலை அரைத்தூக்கத்தில் புரண்டு படுத்து மீண்டும் கயலை மனதுக்குள் கொண்டு வந்து கலைந்து போயிருந்த கனவை தொடங்க முயன்று கொண்டிருந்தேன்.....

ஏதோ சப்தம் கேட்டு மெல்ல கண் விழித்து படுக்கையிலிருந்து புரண்டேன். கயல் வந்திருந்தாள். அவளிடம் எப்போதும் என் வீட்டின் இன்னொரு சாவி இருக்கும்.

நான் போர்வைக்குள் இருந்து நெளிந்து கொண்டிருந்தேன். நான் வந்து அரை மணி நேரம் ஆச்சு...இன்னும் தூக்கம்.. மணி 9 ஆச்சு...எழுந்திரிடா ஸ்டுப்பிட்........!!!!  என் முன் இரண்டு கப் காபியோடு வந்து அமர்ந்தாள். இரண்டு நாள் இங்க இருக்க மாட்டேன்டா...மறுபடி புதன்கிழமைதான் வருவேன்...! சண்டேதானேன்னு ஒரு நாள் முழுசும் படுத்து புரண்டுக்கிட்டே இருக்காத....என்ன சரியா...முதல்ல இந்த காபிய குடி.......

இப்போது எனக்கு முதுகு காட்டி அவள் கண்ணாடி பார்த்துக் கொண்டிருந்தாள். ஹம்ம்ம்ம் சரிடி....போய்ட்டு வா... என்ன இப்போ இரண்டு நாள் அவசரம்...ஊருக்கு...?

என் பக்கம் திரும்பினாள்..

ஹ்ம்ம்ம்க்கும் இப்போவாவது கேட்டியே...சைட் ஒண்ணு வாங்கினேன்னு சொன்னேன்ல.....அதை விக்கணும் வித்துட்டு...ஏற்கெனவே கிராமத்துல இருக்க வீட்ட இடிச்சுட்டு புது வீடு கட்டலாம்னு ...அம்மா சொன்னாங்க...அதான்...

விக்கப் போறியாக்கும்...? நான் கேட்டதை அவள் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

டேய்....எப்போ நம்ம கல்யாணம்டா...அம்மா கிட்ட எல்லாத்தையும் ஏற்கெனவே சொல்லிட்டேன். இப்போ போனா மறுபடி கேப்பாங்களே...என்ன சொல்ல...

நான் குப்புறப்படுத்துக் கொண்டேன்.

ஏதாச்சும் சொல்லுடி.....எனக்கு கல்யாணம் பண்ணிக்குறதுல ஒரு பிரச்சினையும் இல்லை.....உனக்குதான் என்னால பிரச்சினை....நான் சொல்லிக் கொண்டிருந்த போதே...அலைபேசி சிணுங்கியது...

கயல் போனை எடுத்து ஹலோ என்றது...ஹ்ம்.....யாரு கீர்த்தனாவா..? உதடு சுளித்தது கயல்...அவர் படுத்து இருக்காரே......ம்ம்ம்...நான் யாரா...? இந்தாங்க அவர்கிட்டயே கேளுங்க...

போன் படுக்கையில் எனக்கருகே பரிதாபமாய் வந்து விழுந்தது....ஹாய் கீர்த்த்த்...யா...யா.. கயல்தான்...ம்ம்ம்ம் ஒரு ரெண்டுநாள் டைம் கொடுடி எழுதிக் கொடுத்துடுறேன்.....ஓ...யெஸ் வாயேன்...ஐயம் ஃப்ரி.... சுர்..போலாம்...போலாம்...லவ்  யூ டூ...பாய்...

போனைத் துண்டித்தேன். நான் கிளம்பறேண்டா...கயல் கோபமாய் என்னிடம் வந்தாள்.... ஏன்டா இந்த கீர்த்தனா கிட்ட இப்படி வழியுற....தொப் என்று படுக்கையில் அமர்ந்தாள். 

வழிஞ்ச்சேனா...நான் ஏன் அவகிட்ட வழியணும்...?

நான் ஒரு பையன் கிட்ட இப்டி பேசினா நீ ஒத்துக்குவியா..? என்னை பழி தீர்ப்பதாய் நினைத்துக் கொண்டு காலம் காலமாய் இந்த சமூகம் பயன்படுத்தும் ஒரு துருப்பிடித்த தலைமுறைகள் கடந்த ஆயுதத்தை கையிலெடுத்தாள்....நான் என்ன பதில் சொல்லப் போகிறேன் என்பது அவளின் மில்லியன் டாலர் கேள்வி...!

எனக்கு உன்னைப் பிடிக்கும் கயல். அத்தோடு விடு...இரவு முழுதும் கயலோடு கனவில் போட்ட ஆட்டம் ஏனோ தேவையில்லாமல் நினைவுக்கு வந்தது...

உனக்கு எது பிடிக்குதோ அதை நீ செய் கயல். நான் ஒண்ணும் சொல்லமாட்டேன்...கீர்த்தனா என்னோட கொலிக்,  ஒண்ணா குப்பைக் கொட்றோம். அவளுக்கு என்னை பிடிக்கிறதுக்கு ஏதோ காரணம் இருக்கலாம். எனக்கும் கூட அவளைப் பிடிக்கலாம். அதையும் நம்ம ரிலேஷன்சிப்பையும் கம்பேர் பண்ணாத கயல்...ப்ளீஸ்!

புதன்கிழமை நீ வரலேன்னா நான் உன்னை தேடுவேன். என்ன ஆச்சோன்னு பதறுவேன்....? உன்னை தொடர்பு கொள்ள முயற்சி செய்வேன்...கீர்த்தனாவோ, ப்ரியாவோ, வாணியோ வரலேன்னா தேடமாட்டேன்...

ஒ...உன் லிஸ்ட் இவ்ளோ பெரிசா....?அப்புறம் என்ன டேஷ்க்குடா என்னை லவ் பண்ற..? யூ கேன் என்ஜாய் யுவர் லைஃப் வித் ஆல் தீஸ் கேர்ல்ஸ் ரைட்....? கயல் என் தலையை பிடித்து திருப்பியது...

உன்ன நான் லவ் பண்றேன்...வீ ஆர் கோயிங் டூ மேரி சூன்...உன்ன துரோகிச்சுட்டு இந்த லிஸ்ட்ல இருக்க யார் கூடவும்...ஓடிப் போய்டமாட்டேன்...ட்ரைட்டு அன்டர்ஸ்டேண்ட் தட்....

நான் கொஞ்சம் சப்தமாகவே பேசினேன் ....

தென்.. தென்... வொய் சுட் யூ சே....லவ் யூ டூ...டு சம் ஒன்...? இந்திய தேசத்தின் தொன்மைகள் படித்துக் கொடுத்திருக்கும் ஒரு ஆதாரக் கேள்வி என் கழுத்துக்கு வந்தது.

இஃப் சம் ஒன் சேய்ஸ் லவ் யூ டு மீ....வாட் ஐயம் சப்போஸ்ட் டூ சே பேக்...? சுட் ஐ சே ... ஐ ..ஹேட் யூ....? கோபமாய் வந்து விழுந்த இங்கிலீஷை உள்ளுக்குள் இருந்த செந்ததமிழ்...கோபமாய் முறைத்து கேவலமாய் என்னைப் பார்த்தது

நானும் இப்டி யார்கிட்டயாச்சும் சொல்வேண்டா அப்போ நீ என்ன செய்றேனு பாக்குறேன்....கயல் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்...

கயல்...ஐ..லவ் யூ...உன்ன எனக்குப் பிடிக்கும்...இட் டஸின் மீன் தட் என்னை யாருக்குமே பிடிக்க கூடாதுன்னு நீ எதிர்ப்பாக்குறது.... 

இட்ஸ் ஓ.கே...டா....யூ லிவ் த வே வாட் எவர் யூ லைக்....

ஐயம் லீவிங் ப்ரம் யூ...! எனக்குப் பிடிச்ச மாதிரி நான் வாழ்ந்துட்டுப் போறேன்..உனக்குப் பிடிச்ச மாதிரி நீ வாழ்ந்துட்டுப் போ.......உன்கிட்ட பேசி ஒண்ணும் ஆகப் போறது இல்லை...யூ நெவர் கோயிங் டி லிசன் மீ...ஏன்னா யூ ஆர் ரியலி கிரேசி....பைத்தியக்காரன்...!

கயல் ஏன் இப்போ கத்துற...? நான் என்ன தப்பு பண்ணிட்டேன்னு என் மேல இவ்ளோ கோபம் உனக்கு.....

யூ சேட் யூ ஆர் லவ்விங் சம் படி....சோ.. யூ கேன் லிவ் யுவர் லைப்.. அவுங்க கூடயே வாழ்ந்துக்க..., என் முன்னாடியே இன்னொருத்தருக்கு லவ் யூ டூன்னு சொல்ற நீ... என்ன வேண செய்வ....ஐ டோண்ட் ட்ரஸ்ட் யூ...

லூசு மாதிரி பேசாத கயல்....லவ் யூன்றது சாதரண வார்த்தை...

சாதரண வார்த்தையை நானும் என்னை சுத்தி இருக்க ஆம்பிளைங்க கிட்ட சொன்னா..ஹவ் டூ யூ ஃபீல்..?

சரியாய் கத்தியை நெஞ்சில் இறக்கினாள்...

நான் ஸ்தம்பித்தேன்....எனக்குள் சம்மணமிட்டு அமர்ந்திருந்த ஆணாதிக்கப் பொதுபுத்தி நான் லவ் யூ டு என்று சொன்னதை தவறு எனக்குச் சுட்டிக்காட்டி.....அப்படி சொல்லி இருக்கக் கூடாது என்று சொன்னது...

கீர்த்தனா போன் அடிச்சா...என் கிட்ட பேசினா...லவ் யூன்னு சொன்னா..நான் லவ் யூ டூன்னு சொன்னேன்........ஆக்சுவலா கீர்த்தனா போன் அடிச்சா....என்கிட்ட பேசினா...லவ் யூன்னு சொன்னா...நானும் லவ் யூ டூன்னு சொன்னேன்...நடுவுல நிஜமாவே கொஞ்சம் பக்கம் காணாமல் போயிருந்தது...

கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொண்டேன்....ஆமா.. நான் அப்டி சொல்லி இருக்கக்கூடாதுன்னு சொன்னா நான் ஒரு அடைபட்ட பறவை ஆயிடுறேன்....இல்லே நான் சொன்னது சரின்னு சொன்னா நான் அயோக்கியன் ஆகிப் போயிடுறேன்...

இப்போ என்ன பண்ணலாம்...கயலைப் பார்த்தேன்....!!!!ஐ லவ் யூடா செல்லம்..இது வேற லவ் யூ...அது வேற லவ் யூ....கெஞ்சலாய் தோளில் கை போட்டேன்....

கையைத் தூக்கி தூரப் போட்டாள்...!

இட்ஸ் நாட் ஃபர்ஸ்ட் டைம்....பாலா....யூ ரிப்பீட் த சேம் மிஸ்டேக்..

மிஸ்டேக்.....?  எனக்கு இப்போது கோபம் வந்திருந்தது.

கனவுகளை எல்லாம்
மொத்தமாய் எழுதி வைத்தனிடம்
உனக்கு  கையெழுத்துப் போடத்
தெரியுமா என்று கேட்கிறாய்..?

கற்பனைகளில் கூட
உன்னையே தழுவிக் கொள்பவனிடம்
கற்பென்ற ஒன்று 
உனக்கு இருக்கிறதா என்கிறாய்..?

லுக்....கயல்...என் கூட இருக்கறது உனக்கு கஷ்டம்னு நான் எப்பவும் சொல்லி இருக்கேன். இப்பவும் சொல்றேன்......என் கூட இருக்கறது என்னப் புரிஞ்சுக்கறது கஷ்டம்தான்...! மெல்லிய நூலிழை போன்ற என் உணர்வுகளை என்னால மொழிப்படுத்த முடியல....மொழிப்படுத்தவும் முடியாது....

மேலோட்டமா பார்த்தா நீ சொல்றது சரி. சரின்னுதான்..இந்த சமூகம் சொல்லும். ஏன்னா...எனக்கு உன்னை மட்டும் பிடிக்கும்னு படுக்கையறைல காதோரமா கிசு கிசுத்துட்டு..தெருவுல போகையில  செமயா இருக்காலடா மச்சி இவன்னு  இந்த சமூகம் பேசுறதையோ, சந்தர்ப்பம்  கிடைச்சா எல்லை தாண்டலாம்ங்கற...நியாயத்தையோ யாரும் இங்க பேசப் போறது இல்லை...

யாரும் பாக்கலை...எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை...அப்டின்ற ஒரு வசதிக்குள்ளதான்...இங்க கண்ணியம் கருப்பு கண்ணாடிப் போட்டுக்கிட்டு கால் மேல கால் போட்டு உக்காந்து இருக்கு.

உன் மேல எனக்கு இருக்க காதல்.....உன் மேல இருக்க வசீகரம் அது எதோடவும் ஒப்பிட்டு என்னால பேச முடியலை. என்கிட்ட லவ் யூ பாலான்னு சொல்லும் போது லவ் யூ டூன்னு நான் சொல்ற பதில் என்னோட மறுநேசம். அதுக்கும் என் வீட்டுப் படுக்கைக்கும் ஒரு தொடர்பும் இல்லை. யாரையும் என்னால வெறுக்க முடியாது...யாரையும் என்னால் நிரகாரிக்க முடியாது....

ஆனா...என் காதலி யாருன்னு இந்த உலகம் கேட்டுச்சுன்னா யோசிக்காம உன் இடையில கைபோட்டு அவுங்க முன்னாடி நடந்து காட்டுவேன்....

என் வானத்தில்
ஆயிரம் நட்சத்திரங்கள்
ஜொலிக்கலாம்...
அவை ஒரு போதும்
ஒற்றை நிலவாக முடியாது....!

ஆமாம்...பூமி இல்லாத வேறு கிரகங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நிலாக்களாம்...அப்போ என்ன செய்வ....டேய்.....இனஃப்டா...! நான் ஏன் உன் மூட ஸ்பாயில் பண்ணனும்... யூ கேன் கோ ஆன் அட் யுவர் பாத்....நான் என் வழில போறேன்...

கயல்விழி.... என்னும் கயல்...விழி தாண்டிய கண்ணீர் எனக்கு சங்கடத்தைக் கொடுத்தது.

அப்போ நம்ம காதல்....? நிதானமாய் அவளைப் பார்த்தேன்.

மண்ணாங்கட்டி............அதான்...இருக்காங்களே...கீர்த்தனா....மாலதி...வாணின்னு...கெட் லாஸ்ட் மேன்....!!!! நான் எங்க  இருந்தாலும் உன்னை நினைச்சுட்டுதான் இருப்பேன்....பட் உன் கூட இருக்க மாட்டேன்....நீ உன் ஏகாந்த உலகத்துல சிறகடிச்சுப் பறந்துக்க....நான் தொந்தரவு பண்ணல...

கயல்...ஒன் செகண்ட்...

கதவைப் படார் என்று அடித்து மூடிவிட்டு....கயல் சென்று விட்டாள்.

பக்கத்தில்  பாவமாய் கிடந்த என் அலைபேசியை எடுத்து கயலை டயலினேன்...நான்கு முறையும் போனை கட் பண்ணினாள்.....

வெளியே மழை விட்டிருந்தது...

கூடு விட்டு பறவைகள் வெளியேறத் தொடங்கி இருந்தன. கயல்  எனக்கு போட்டு வைத்திருந்த காபி ஆறிப் போயிருந்தது....தூக்கி ஊற்றி விட்டு கப்பை கழுவி வைத்தேன்.

பிரிட்ஜை திறந்து பியரை எடுத்து கோப்பையில் ஊற்றினேன். நுரைத்துப் பொங்கும் பியரைப் பார்த்த பொழுது ஏனோ ஒரு சந்தோசம்  பிறந்தது. வெறும் வயிற்றில் பியர் பரவி குளுமையாக்கியது. மணியைப் பார்த்தேன் 11:45 ஆகி இருந்தது. கயல் போய்விட்டாள். என் வார்த்தைகளின் அர்த்தம் புரியாமல்...என் வாழ்க்கையின் இலக்கு அறியாமல்...சராசரி சண்டையிட்டு விட்டு...காதல் என்னும் அற்புத உணர்வை சிதைத்து விட்டு....

அவளைச் சொல்லிக் குற்றமில்லை. தனது காதலன் இன்னொரு பெண்ணிடம் லவ் யூ டூ என்று சொன்னால் கோபம் வராமால் யார்தான் இருப்பார்கள். கோபம் வரட்டும் நான் கூறும் விளக்கத்தை செவியுற பகுத்தறிவுமா இல்லாமல் போகும்..? எது எப்படியோ...ஆரம்பிக்கும் எதுவும் முடியத்தான் செய்யும் இது வாழ்வியல் நியதி.

கயல் எங்கே வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். எனக்குள் இருக்கும் கயலை யார் எடுத்துச் செல்ல முடியும்...? ஒரு கணத்தில் அவள் தூக்கி எறிந்த காதல்தான்...இத்தனை நாள் அவள் கொண்டிருந்தது. எனக்கு இனி துணை தேவை இல்லை என்று  தோன்றியது. நானே எனக்குத் துணை. யாருக்கும் யாரும் துணையாகவும் இருக்க முடியாது. எல்லாமே புத்தியில் இருக்கிறது. எதற்காக இன்னொருவர் நமது கூடவே இருக்க வேண்டும்....?

இருக்கும் வரை வாழ்க்கை, இறந்த பின் மரணம்.

ஜன்னலுக்கு வெளியே  பறவைகள் மழை விட்ட வானத்தில் திசைக்கொன்றாய் பறந்து கொண்டிருந்தன. 

அழைத்த அலைபேசியில் கீர்த்தனா வந்தாள்...ஹாய்டா....ஐ வில் பி தேர் இன் 30மினிட்ஸ்...வீ கோ அவுட் ஃபார் த லஞ்ச் " பேசி முடித்திருந்தாள்.

கீர்த்தனா கேட்ட  ஆர்ட்டிக்கிளை அவளது பத்திரிக்கைக்காக எழுதத் தொடங்கி இருந்தேன்....

" அவனுக்கு துணை ஒன்றும் அவசியமில்லை. அவன் எப்போதும் ப்ரியங்களைப் போர்த்திக் கொண்டிருப்பது தன்னை யாரென்று அறிவித்துக் கொள்ள அல்ல...அவனின்  உடலில் வாழ்க்கை கொடுத்த  வடுக்களை மறைத்துக் கொள்ள; அவன் தனித்தவன். அவனுக்கான பெரும் பாடலை எப்போதும் இசைத்துக் கொண்டிருக்கிறது காலம். வாழ்க்கை சக்கரத்துக்குள் நின்று கொண்டு கடமைகளைப் பேசி இச்சைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டிய அவசியமற்று...நகரும் அவன் பொழுதுகளை யாருமே வரையறுக்க முடியாது.

காணாமல் போய்விட்ட ஒருவனை யாரும் இனி தேடியடைய முடியாது. மனிதக் கூட்டுக்களை எல்லாம் கழற்றி  எறிந்த பறவையாய்.....

சிறகடித்துக் கொண்டே இருக்கிறான் அவன்...விரிந்து கொண்டே இருக்கிறது அவனது வானம்......"

....எழுதிக் கொண்டிருந்தேன்....
உயிர் இருக்கும் வரை
இருக்கப் போகும்
என் எழுத்துகளை ஒரு நாள்
நான் எழுத முடியாமல்
போகலாம்...
அப்போதும் நினைவுகளில்
எழுதிக் கொண்டிருப்பேன்
எனக்கான ஒரு
.........சந்தோஷப் பாடலை........


தேவா சுப்பையா...



Comments

கதை ரொம்ப அருமை....
உங்க எழுத்தில் கயல், கீர்த்தனா எல்லாம் மின்னிச் செல்கிறார்கள்...
சூப்பர்...!

//யாரும் பாக்கலை...எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை...அப்டின்ற ஒரு வசதிக்குள்ளதான்...இங்க கண்ணியம் கருப்பு கண்ணாடிப் போட்டுக்கிட்டு கால் மேல கால் போட்டு உக்காந்து இருக்கு.//

எதார்த்த உண்மை ...!

அண்ணா ! ஆங்கில வார்த்தைகள ஆங்கிலத்திலேயே எழுதுனா படிப்பவர்களுக்கு எளிதில் புரியும்னு தோணுது ...!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த