இனி....
ஹலோ...எக்ஸ் க்யூஸ் மீ....ஹலோ சார்....
எனக்கு வெகு பக்கத்தில் மூச்சிறைக்க அழைத்த அந்தப் பெண்ணை திரும்பிப் பார்த்த நொடியில் ஸ்தம்பித்தேன்....!
யார் வரைந்து வைத்த ஓவியம் இது...
கால் முளைத்து நடந்து வருகிறது...?
கவிதையொன்று காற்றில்
ஒரு பட்டாம் பூச்சியென பறந்து வருகிறது...
என்று யோசித்த படியே அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்
நான்.....பூர்ணா...பிரண்ட்ஸ் கூட வந்தேன் வழி மாறிட்டேன்....தனியா வந்தேனா கொஞ்சம் பயந்துட்டேன்...அதான் உங்களை டக்குனு கூப்ட்டேன்.....
மனம் மயக்கும் ஒரு இசையொன்று
புத்திக்குள் பரவி
எண்ணத்தை கிளர்ச்சியூட்டி
ஒரு ஏகாந்த உலக்குக்கு கூட்டிச் செல்லுமே...
அப்படியான உணர்வு நிலைக்கு பயணித்துக் கொண்டிருக்கையில்...ஹலோ...சார்....அவள் என் கனவு கலைத்தாள்...! சொல்லுங்க பூர்ணா...நோ..இஸ்யூஸ்...நான் உங்களை பக்கத்துல மெயின் ரோட்ல கொண்டு விடுறேன். நான் சும்மாதான் நடந்துட்டு இருக்கேன்....
தேங்க் யூ சார்...? என்ன தனியா வந்து இருக்கீங்களா இல்லை பேமிலி கூடயா...? இல்லை ப்ரண்ஸ் கூடயா... என் முகம் பார்த்து பேசினாள். எனக்கு ஏனோ பேசவே பிடிக்கவில்லை. அந்த சூழலும் அவள் தலையில் வைத்திருந்த மல்லிகையின் வாசமும் என்னைத் தொந்தரவு செய்ய...எனக்குள் இருந்த உணர்வு நிலை மனமாக திடப்பட்டுக் கொண்டிருந்தது.
இல்ல நான் மட்டும்தான் தனியா வந்தேங்க...எனக்கு எனக்கு...இன்னும் கல்யாணம் ஆகலை...சொல்லிவிட்டு நீங்க உங்க பேமிலி கூட வந்தீங்களா...? ப்ரண்ட்ஸ் கூட வந்திருக்கிறேன் என்று அவள் சொன்னது தெரிந்திருந்தும்...வேண்டுமென்றே கேட்டேன். இல்லை சார் நாங்க ஸ்டே பண்ணி இருக்க ஸ்பின்ஸ்டர் ஹாஸ்ட்டல்ல இருந்து பிரண்ட்ஸ் கூட வந்து இருக்கேன். நான் சென்னை டி.சி. எஸ்...ல வொர்க் பண்றேன்..நேட்டிவ்....
அவளை பற்றி சொல்லி முடித்ததும் என்னுடைய தொழில் பற்றி கேட்டுக் கொண்டாள். ப்ராப்பர் ரோடு வந்தவுடன் தூரத்தில் அவளின் தோழிகள் வாகனத்தோடு நின்று கொண்டிருந்தார்கள்.
ஏன் சார் தனியா வந்தீங்க...? கண்களால் என்னை அளந்தவளை சார்னு ஏன் பூர்ணா கூப்டுறீங்க....முகில்னு கூப்பிடுங்க...
ஓ.. சாரி முகில்...தனியா எதுக்கு வந்தீங்க.. மறுபடி பூர்ணா கேள்வியைக் கேட்டு விட்டு கண்களால் ஆவலாய் பார்த்தாள்...
தனியா இருக்கணும்னு இப்டி அடிக்கடி வருவேன் பூர்ணா...என் முப்பதாறு வயது அவளின் இருபத்தேழுக்கு புரியுமா என்று நான் யோசிக்கவில்லை...! ஓ... தனிமை விரும்பியா நீங்க நான் கூடத்தான் என்று அவள் சொல்லி முடித்ததை நான் கேலியாக பார்த்தேன்.....அவளுக்கு பின்னால் வெகு தூரத்தில் நின்று கொண்டிருந்த பட்டாளத்தைப் பார்த்தபடி.....
நோ..நோ..இப்போ வேற வழி இல்ல அதான் எல்லோர் கூடயும் வந்தேன்.. அதோட இல்லாம கல்யாணம் ஆகாத பொண்ணு தனியா வர்ற மாதிரியா இருக்கு முகில் நம்ம நாடு...? சமூகம் பற்றி பேசினாள்....
ஹ்ம்ம்ம் நிறைய பேசணும் உங்க கிட்ட அப்டீன்னு தோணுது...பட் டக்குன்னு ஒரு ஆம்பளைய எப்டி நம்புறதுன்னு ஒரு பொதுபுத்தி கேள்வி கேட்கவும் சொல்லுது....?
ஏன் தனியா என் கூட அந்த மண் ரோட்ல வரும் போது அந்த பயம் வரலையாக்கும் உங்களுக்கு...? பயம் மட்டும் இல்லை பூர்ணா இந்த உலகத்துல மனித உறவுகளே மனித வசதிதான். பிடிச்ச ஆணா இருந்தாலோ இல்லை பெண்ணா இருந்தாலோ எல்லாமே ஓ.கே தானே....? பிடிக்காத போது எல்லாமே தப்புதான்..! என்னைப் பொறுத்த வரைக்கும் உறவுகள் எல்லாமே..கொஞ்சம் இப்டி அப்டின்னு இருக்கதாலதான் கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணவே இல்லை...
அட...முகில்..ரொம்ப அழகா பேசுறீங்க...
வழக்கமாய் பெண்களுக்கு ஒரு ஆணைப் பிடிக்க ஆரம்பிப்பதற்கான அறிகுறிகள் அவளிடம் தென்பட்டன. நானும் உங்களை மாதிரிதான் முகில்...எனக்கும் இப்டி, அப்டி நிறைய எதிர்ப்பார்ப்புகள் இருக்கு... கட்டுக்குள் வாழுற வாழ்க்கை எனக்கும் பிடிக்காது. என்னை ஒரு பட்டாம் பூச்சியா சிறகடிச்சு பறக்க விட்டு ரசிக்கிற ஒரு இடியட்டை தேடித் தேடி இதுவரைக்கும் கிடைக்கவே இல்லை...
வீட்ல பொண்ணு பாக்குறேன்னு சொல்லிட்டு வந்துட்டுப் போற தடியன்கள் எல்லாம் ....வந்து காபி, டீய குடிச்சுட்டு...மூக்கு நல்லா இருக்கா..., மார்பு எடுப்பா பெருசா இருக்கா...இடுப்பு கைக்கு அடக்கமா இருக்கா, பிருஷ்டம் பெருசா இருக்கா, மொத்தத்துல அழகான முகத்தோட வக்கனையா செக்ஸ் வச்சுக்க சரியான ஆளான்னு முதல்ல பாக்குறாங்க...
அப்புறம் எவ்ளோ பணம் தேரும், ஆளுங்க கூட்டம் எப்டின்னு கணக்குப் போட்டுப் பாத்துட்டு அப்புறமா பிடிக்குது பிடிக்கலேன்னு அவுங்க வீட்டு ஆளுங்கள விட்டு சொல்லச் சொல்லுவானுங்க...இதுதான் கலாச்சாரம்னு வெக்கம் இல்லாம சொல்ற சமூகம்தான் இங்க எல்லாருக்குமே பெருசு...
அதையும் தான்டி கல்யாணம் நடந்து அன்னிக்கு ராத்திரியே வேட்டியையும் சேலையும் அவுத்து எறிஞ்சுட்டு அது வரைக்கும் கட்டிக் காப்பாத்தி வச்சிருந்த காமத்தை தீத்துக்கிட்டுதான் இங்க எல்லோருடைய வாழ்க்கையும் ஆரம்பிக்குது...
3 மாசத்துக்கு முன்னாடி நிச்சயம் பண்ணி மூணு மாசம் போன் பேசி அப்புறம் கல்யாணம் பண்ணி...உடம்பை மையமா வச்சு இவுங்க எல்லோரும் காதலிக்க ஆரம்பிக்கிறாங்க...., போன் கூட சில பேர் பேசுறது கிடையாது அவுங்க எல்லாம் பொண்டாட்டிய ஸ்ட்ரெய்ட்டா பாக்குற இடம் பெட்ரூம்தான்....
ஆக்சுவலா எனக்கு இது எல்லாம் பிடிக்கல...! காமம்ங்கிறது திட்டம் போட்டு வரக்கூடாது, அது ஒரு பூ பூக்குற மாதிரி இயல்பா நிகழணும். கல்யாணம் பண்ணியாச்சு அதனால இன்னிக்கு நைட் அது வேணும் அப்டீன்றது என் அறிவுக்கு எட்டல....! வீட்ல கடைக்குட்டி நானு அப்பா ரிட்டையர்ட் ஆன தாசில்தார்...நாலு அக்காவுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு ஒரு அண்ணா ஒரு சிட்பண்ட் கம்பெனில குப்பைக் கொட்றான். நான் என் இஷ்டம் எப்டிவேணா இருந்துப்பேன் கொஞ்சம் பொறுங்கடான்னு சொல்லிட்டேன்...
அப்பா செல்லம் ஜாஸ்தி அதனால யாரும் ஒண்ணும் சொல்லமுடியாது....! பாக்கலாம் சார்....சாரி சாரி முகில்....
காதல் என்பது கொடுப்பதுமல்ல...
பெறுவதுமல்ல...
அது நிகழ்வது....
அப்டீன்னு படிச்சிருக்கேன் முகில்....!
அவள் பேசி முடித்தவுடன் ..பெருமூச்சு விட்டேன்....ஓ. மை.. காட்...பூர்ணா யூ ஆர் சான்ஸ் லெஸ்....வைரமுத்து கவிதை எல்லாம் சொல்றீங்க...நீங்க புத்தகம் எல்லாம் படிப்பீங்களா....
என்ன கொடுமை சார் இது...ஏன் நாங்க படிக்க மாட்டோமா? ரொம்பத்தான்...நீங்க எப்டி...?
ரசனையுடன் நேசிப்பாய்
தொடங்கிய அந்த நாள்...
சரியாக நினைவிலில்லை....
அது முழுதாய் என்னை...
உள்வாங்கிக் கொண்ட..
அந்த கணத்தில் தான்...
என் உயிர் நகரும்...
ஓசையினை உணர்ந்தேன்.....
புத்தகத்துக்குள் ஊடுருவி...
என் விழிகள் உறவாடிய
பின் தான்...இமைகள்...
கவிழ்ந்து.....உறக்கம் சூழ்கிறது...!
அப்போதும் கூட...
என் நெஞ்சினில்..தலை சாய்த்து...
அது உறங்கும் அழகினை ...
கலைக்க விரும்பாமல்..
அணைத்துக் கொண்டே.....
கடத்தியிருக்கிறேன்..
என் அநேக இரவுகளை....
நான் சொல்லி முடித்ததும் கை தட்டிச் சிரித்தாள் பூர்ணா...! எக்ஸளண்ட் முகில்...நீங்க பெண்களை பற்றி என்ன நினைக்கிறீங்க....என்று அவள் கேட்க ஆரம்பித்த பொழுது...
" பூர்ணா கெட்டிங் லேட்.....ஹோட்டல் போகலாம் வா...." தூரத்திலிருந்து கேட்ட தோழிகள் கூட்டத்தைக் கடிந்து கொண்டே...அச்ச்சச்சோ நேரம் ஆச்சு முகில்....நாளைக்கு வேணா மீட் பண்ணலாமா.....
பூர்ணா அவசரமாய் கேட்டாள்....
நான் எங்கயும் சுத்திப்பார்க்க வரல பூர்ணா..ஜஸ்ட் டு ஸ்டே அலோன்....ஐ கேம்..., சோ என் கூட வந்தா யூ கேனாட் சீ மோர் ப்ளேசஸ்.....
அது ஒண்ணும் பிரச்சினை இல்லை முகில்...பார்க்கலாம்...நாளைக்கு காலையில வர்றேன்... ஐ வில் நாட் கோ வித் மை ப்ரண்ட்ஸ்...அங்க நான் உங்களை கூப்டப்ப பின்னால் இருந்த்துச்சே அதுதானே உங்க வீடு....நீங்க வீடு விட்டு வெளியில வரும் போதே நான் தூரத்துல பார்த்தேன்....
இப்போ கிளம்புறேன்......
கை அசைத்தபடியே ஓடியவளை பார்த்துக் கொண்டிருந்தேன் அவள் போகும் வரை...!
...பாடல் தொடரும்...
தேவா சுப்பையா....
Comments
பெறுவதுமல்ல...
அது நிகழ்வது....//
முற்றும் உண்மை தேவா! ஆற்றொழுக்காய்
தடையின்றி செல்லும் நடை! அருமை!
தொடருங்க...