Skip to main content

கோணல் மாணலாய் ஒரு கதை - 2




இனி...


ரமேஷுக்கு என்னைத் தெரியாது. நீ மட்டும் வந்தேன்னு சொல்லி சமாளிச்சுடு சுமதி. ஏற்கெனவே அவனுக்கும் உனக்கும் நிறைய மிஸ் அண்டர் ஸ்டாண்டிங்.. .. .அண்ட்... யூ கேன் கோ வித் ஹிம் .....

ஹெல்மெட்டை எடுத்துக் கொண்டு கிளம்ப முற்பட்டேன்.... சுமதி... எழுந்து நின்று அவசரமாய் என் பின்னந்தலைக்குள் கை கொடுத்து கலைத்து....கண் கலங்கியபடியே...சாரிடாமா.... ஐயம் வெரி சாரி.... ஐ டோண்ட் வாண்ட் யூ டூ லீவ் லைக் திஸ்....பட்ட்ட்ட்ட்.....இழுத்தாள்....

இட்ஸ் ஓ.கே சுமதி....நான் கிளம்புறேன்.. டேக் கேர்...... சொல்லி விட்டு வேகமாய் வெளியே வந்தேன்...நான் வெளில வர்றப்ப...ரமேஷ் ஹோட்டல் உள்ளே போனான். ரமேஷ் யார்னு எனக்குத் தெரியும். சுமதி போட்டோவுல காட்டி இருக்கா... ஆனா நான் யார்னு ரமேஷ்க்கு தெரியாது. தெரியாமல் இருந்தது பெரிய பிரச்சினையை இப்போது சரிக்கட்டி இருக்கறதா எனக்குத் தோணுச்சு....

ரூமிற்கு சென்று கொண்டிருந்தேன்.

என்ன மாதிரியான லைஃப் இது...? என்னோட கேரக்டர்தான் என்ன...? அவள் பொண்டாட்டி, அவன் புருசன்....இடையில நான் யாரு...? நான் ஏன் சுமதிய கூட்டிட்டு வரணும்...? உதவி பண்ண வந்தேனா...? இல்லை அவளோட சூழல்ல அவ என் மேல காட்டுற பாசத்தை, அவளுக்கும் அவ ஹஸ்பண்ட்டுக்கும் இருக்குற பிரச்சினையை நான் அட்வாண்டேஜா எடுத்துக்கப் பார்க்கிறேனா?

எனக்கு சுமதியை பிடிக்குதா? பிடிச்சா நான் அவளை காதலிக்கணுமா? நான் எப்படி அவளைக் காதலிக்கிறது அவளுக்குதான் ஏற்கெனவே கல்யாணம் ஆகிடுச்சே... அதுவும் காதல் கல்யாணம்...? மாஞ்சு மாஞ்சு காதலிச்சவங்க ஏன் இப்போ எலியும் பூனையுமா ஆகணும்...? ரமேஷ்க்கு ரொம்ப பிடிக்குகோ சுமதிய? அப்டி ரொம்ப பிடிச்சா தீரத் தீரக் காதலிக்கக்தானே வேணும்..? ஒரு வேளை ரொம்பப் பிடிச்சா டவுட்டும் கூடவே வருமோ...? அந்த டவுட்டதான் பொசஸிவ்னெஸ்னு சொல்லிக்கிறாங்களோ...? அவ புருஷன் கூட அவ போகப் போறா...இங்க எனக்கு ஏன் பொசஸிவ்னெஸ் லேசா தலை தூக்கிப் பார்க்கணும்...?

சுமதிக்கு என்னை பிடிக்கிறதால...? அவ அவ எல்லாத்தையும் விட்டுட்டு என் கூட வரணும்னு  ஆசைப்படுறேனோ...? அந்த ஆசைக்கு பெயர் காதலா? இல்லை உடல் கவர்ச்சியா....? உடல் கவர்ச்சின்னா.... நேரடியா வீட்டுக்கு வான்னு சொன்ன நிறைய பேர நான் புறக்கணிச்சேன்.... நான் புறக்கணிக்க காரணம் பயமா...? பயத்துக்கு காரணம் என் குடும்பம்.., என் அம்மா, என் அப்பா....அவுங்க மரியாதை....

ஆமாம்.. நான் பயந்தாங்கொள்ளிதான். என் பயந்தான் என்னைய எப்பவும் காப்பாத்தி இருக்கு. இப்போ கூட பயந்துகிட்டுதான் வேகமா அந்த இடத்தை விட்டு நகர்ந்து வந்துட்டேன்.....

இரண்டு பாட்டில் பியர் உள்ளே  போனதும், சுமதியும், அவளது காதலும் ரமேஷும், உத்தியோகமும் இந்த உலகமும் மெல்ல மெல்ல மறையத் தொடங்க....தூங்கிப் போனேன் நான்...!

ஒரு அஃபயர் ஏற்படுறதுக்கான எல்லா சாத்தியக்கூறுகளும் எனக்கும் சுமதிக்கும் இருந்தது என்னவோ உண்மைதான்....ஆனால்...ஏதோ ஒரு விசயம் கடுமையா என்னை மேலதிகமா போக விடாம தடுத்துடுச்சு. ஒரு நாள் உடம்பு சரி இல்லேன்னு சொன்னாலும் என்னைத் தேடி ரூமுக்கு வர்ற அளவுக்கு  பாசம் வச்சிருந்த சுமதியோட அந்த பாசத்தை ரசிக்க முடிஞ்ச எனக்கு அதுக்கு மேல ஒண்ணுமே தோணலன்றதுதான் உண்மை.....

.....
....
.....

ரமேஷ் மறுமுனையில் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான்....

ரமேஷ் ... நிஜமா என்னோட போட்டோ சுமதி கிட்ட எப்டி போச்சுண்ணு தெரியலை...பட்....கண்டிப்பா நத்திங் டு வொர்ரி...காலையில எனக்கு 7 மணிக்கு டூட்டு முடியும் நான் உங்களை எங்க வந்து சந்திக்கட்டும் சொல்லுங்க.....?அப்டீன்னு ரமேஷ்கிட்ட சொன்னேன்...! இல்ல சார்  நான் உங்களை சந்திக்க வரலை...ஐ யம் சாரின்னு ரமேஷ் அதை நிராகரிச்சப்ப எனக்கு இன்னும் கில்ட்டி கான்ஸியஸ் அதிகமாயிடுச்சு....

ரமேஷ் ப்ளீஸ் ட்ரை டூ அண்டர் ஸ்டேண்ட்.....நான் பேசிக் கொண்டிருந்த போதே என்னை இடை மறித்தான் ரமேஷ்..

இனிமே சுமதி டூட்டிக்கு வரமாட்டா சார்.... அவ்ளோதான்....சொல்லிவிட்டு சடாரென்று போனை  கட் செய்திருந்தான்.

ரமேஷின் இடத்திலிருந்து யோசித்துப் பார்த்தேன்...அது இரணமாயிருந்தது...! சுமதி இனிமேல் டூட்டிக்கு வரமாட்டாள்ன்னு அவன்  சொன்னது எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருந்தாலும் கஷ்டமாவும் இருந்துச்சு...

சம்பந்தம் இல்லாம ஒரு வாழ்க்கைக்குள்ள ஏற்பட்ட பிரச்சினைக்கு காரணமாயிட்டமேன்னு வருத்தமும் பட்டேன். ஆக்சுவலா நெக்ஸ்ட் டே என்னை டூட்டி ரிலிவ் பண்ண சுமதிதான் வரணும்.... ஆனா வரமாட்டான்னு ரமேஷ் சொல்லிட்டான்......

மார்னிங் ஷிப்ட்டும் கண்டினியூ பண்ணித் தொலைக்கணுமேன்னு புதுக்கவலை ஒண்ணு ஏற்கெனவே இருந்த கடுப்புக்கு பெப்பர் தூவி இன்னும் எரிச்சலூட்டியது. பிடித்தல் எப்போதும் ஒரு இடத்தில் மட்டும் குவிந்து கிடக்க முடியாது என்பதுதான் நிதர்சனம் ஆனாலும் இங்கே சமூகம் போட்டு வைத்திருக்கும் செயல் திட்டம் அதற்கு நேர் மாறானது. 

விருப்பங்களை ஒளித்து வைத்துக் கொண்டு வாழும் ஒரு செயற்கை வாழ்க்கை இங்கே இயற்கை என்றாகி விட்டது. நிஜம் அப்படியானது அல்ல. நிஜம் பூ பூப்பதைப் போன்றது. அங்கே எந்த வித அத்து மீறலும் இல்லை. ப்ரியமாய் இருப்பதற்கும் நேசிப்பதற்கும் காமம் என்ற ஒன்று தேவையே இல்லை. அது இல்லாமல் இருக்க முடியாது என்று எண்ணுபவர்களுக்கு ஆண் பெண் உறவு அபத்தமாய்த் தெரிகிறது. ஏனென்றால் காமம் ஒரு வக்கிர மிருகம் அது எப்போது பாயும் என்றே சொல்லவே முடியாது. வசம் இழக்கும் நிமிடங்களில் எந்த வரைமுறையையும் அது கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. 

அந்த மிருகத்தை அடக்காமல் விட்டு விட்டால் அது வால் குலைத்து நாயாய் ஒடுங்கி, கரைந்து காணாமல் போகும். அடக்க அடக்க...எகிறிப் பாய்கிறது. பல்லைக் காட்டி கோரமாய் உறுமுகிறது. வேஷமிட்டுக் கொண்டு வந்து நட்பு என்கிறது, காதல் என்கிறது, கடவுள் என்கிறது, தத்துவம் பேசுகிறது, கவிதைகள் எழுதுகிறது, தியானம் செய்கிறது, அரசியல் பேசுகிறது. மனிதத் தன்முனைப்பின் கடைசி நுனி காமம். காமமே புகழ் வேண்டுமென்று ஓடவைக்கிறது, பணம் வேண்டும் என்று ஆட வைக்கிறது. நியதிகள் அதை அடக்க அடக்க...சீறிப்பாய்ந்து கடை வாயில் எச்சில் ஒழுக அலைந்து கொண்டிருக்கிறது. கட்டுப்பாடுகள் இல்லை என்றால்....கவனிக்க நாதி இல்லை என்றால்....காமம் தன்னாலேயே செத்துப் போகும். கற்பனைதான் காமத்தீக்கு எப்போதும் பெட்ரோல் ஊற்றி எரிய விடுகிறது. இதுதான் இது என்ற புரிதலை சிறுவயதில் இருந்தே இயல்பாக்க....அங்கே கற்பனை மிருகத்திற்கு வேலையில்லாமல் போய் காமம் கைக்குழந்தையாய் ஆகி விடுகிறது.

கோபமாய் அதை உற்று உற்றுப் பார்க்க... அது வெறி கொண்டு ஆடத்தான் செய்கிறது.

விடிய ஆரம்பிச்சு இருந்துச்சு.....சுமதி வரமாட்டாள்.  முந்தைய இரவு ரமேஷ் பேசியது மனசை அறுத்துக் கொண்டே இருந்தது..! ஆப்பரேட்டர் கேபினுள் கதவை ஒருக்களித்து சாத்தி  வைச்சுட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ஞ்சுட்டு இருந்தேன்... 

முதுகில் யாரோ தட்டினார்கள்... 

7 மணி ஷிப்ட்டுக்கு  6:30 க்கே வந்திருந்தாள் சுமதி.

ஏய்....நீ எப்டி....? குழப்பமாய் கேட்டேன்.

என்னைப் பார்த்து அவள் புன்னகைத்தாள்.

இல்லை சுமதி நேத்து நைட் ரமேஷ்......? என்கிட்ட.... சொல்லி என்னை முடிக்கவிடவில்லை அவள்.

அவன் கிடக்கான் லூசு....லாக் மெசேஜ்ல எதுவும் இம்பார்டெண்ட் இருக்கா...? அதை சொல்லு முதல்ல ....கேட்டாள்.

ஓய்ய்.....என்ன நீ...  நான் கேட்டுட்டே இருக்கேன்... பதில் சொல்லாம....இப்டி வேற எதையோ பேசிட்டு இருக்க...? என் போட்டோ எதுக்கு உன் பர்ஸ்ல வச்சு இருக்க...? நீ என்ன லூசா...? ரமேஷ்கிட்ட பேசினதுல இருந்து எனக்கு எவ்ளோ டென்சனா இருந்துச்சு தெரியுமா?

ஆமா உன் போட்டோதான்...ஐடி கார்டுக்காக கொடுத்துட்டுப் போனீல முந்தா நாள்...அதுல ஒண்னு எக்ஸ்ட்ரா இருந்துச்சு....இந்தா பாத்தியா...இந்த வெங்கடாசலபதி போட்டோவுக்கு பின்னால உள்ள உன் போட்டோவ வச்சு இருந்தேன்....

வழக்கப்படி நேத்து சண்டை....ஒரு விசயத்துக்காக சாமி மேல சத்தியம் பண்ணச் சொன்னான்...நான் பர்ஸ எடுத்து வெங்கடாசலாபதி மேல கை வச்சு நான் உயிரா நினைக்கிற சாமி சத்தியமா நான் அதை செய்யலன்னு சொன்னேன்....

ஏண்டி பொய் சொல்றன்னு சொல்லிட்டு உனக்கு எல்லாம் சாமி படம் ஒரு கேடான்னு கேட்டுக்கிட்டே பர்ஸ பிடுங்கி சாமி போட்டோவ தூக்கிப் போட வெளில எடுத்தான்....

அப்போ...நிஜ சாமி போட்டோ வெளில வந்து விழுந்துடுச்சு.....ஹா.. ஹா...

எப்பவும் அவனுக்கு என் மேல  ஒரு டவுட் இருந்துட்டே இருந்ச்சு....நேத்து அது க்ளியர் ஆகிடுச்சு.....அவ்ளோதான்...!

டூட்டிக்கு போகக் கூடாதுன்னு சொன்னான்...சர்தான் போடான்னு சொல்லிட்டு வந்துட்டேன்டா....கண்கள் கலங்கி இருந்தன சுமதிக்கு.

ஏன் இப்டி சுமதி...? கேட்டேன்.

எப்பவும் சந்தேகம் அது உண்மையாவே இருந்துட்டுப் போகட்டுமேடா....

பிடிச்சுதான் எடுத்து வச்சிருந்தேன் உன் போட்டோவ..... இப்போ என்னான்ற அது என் இஷ்டம் உன்னைத் தொந்தரவு பண்ணினா கேளு....டூட்டி முடிஞ்சுதுல ....போய்க்கிட்டே இரு.....

ரிசப்சன் கவுண்ட்டர் விட்டு வெளியே போகும் வழியைக் காட்டினாள்....

சுமதி.....ஆயிரம் இருந்தாலும் ஹி இஸ் யுவர் ஹஸ்பண்ட்....சொல்லி என்னை முடிக்க விடவில்லை அவள்....

தோடா....வந்துட்டாரு வள்ளலாரு......போடா போ போய் தூங்கற வழியப் பாரு....எனக்குத் தெரியும் நான் என்ன பண்றேன்னு....அவள் கண்களைத் துடைத்துக் கொண்டாள்....

வெளியே வந்து டைம் ஆபிசில் கார்ட் பன்ச் அவுட் செய்தேன். ...

வாழ்க்கை எனக்கு புரியவில்லை.....அது ஒரு குழப்பமானதாய் தெரிந்தது.

சரி புரியாததாகவே இருக்கட்டும்......ஏன் இதில் தெளிவைத் தேடவேண்டும் என்றும் தோன்றியது.

தூக்கம் கண்களைச் சுழற்ற....வீடு நோக்கி விரைந்து கொண்டிருந்தேன்...!



தேவா சுப்பையா...






Comments

படிக்கும் போதே வரிகளின் பின்னே வசமிழந்து நம்மையும் இழுத்துச் செல்கிறது கதை...

அருமை அண்ணா....
ezhil said…
நல்ல கதையமைப்பு.. காமம் குறித்த சில புரிதல்கள் நன்றாகவும், சில புரியாததாயும் இருந்தது.. உன்னைத் தொந்தரவு பண்ணா கேளு என்பதிலும் கடவுளின் பின் மறைத்து வைத்ததிலும் ஒரு பெண்ணின் உள்ளம் நட்பைக்கூட தெரிந்து செய்ய முடியலையே.. ஆண்,பெண் என்றாலே அது காதலாகவோ . காமமாகவாகத்தான் இருக்க வேண்டுமா என்ன?.. பிடித்திருப்பது வேறு, சேர்ந்திருப்பது வேறு ..புரிந்து கொள்ளுமா உலகம்...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த