Skip to main content

கதை திரைக்கதை வசனம் இயக்கம்!


விஜய் அஜீத்துக்கு எல்லாம் பிடிச்ச லூசு சூர்யாவுக்கும் பிடிச்ச கதைதான் அஞ்சானோட சோகக்கதை. ராஜு பாய் வாய்ல குச்சியோட சுத்துறாரே வாய்க்குள்ள இருக்க குச்சி வாய்ல குத்திடாதேன்னு தான் பதற முடியுதே தவிர அதைப் போய் எப்டிங்க ஸ்டைல்னு எடுத்துக்குறது? கருமம் பிடிச்ச அதை எல்லாம் எப்டிங்க ஸ்டைல்னு சொல்லி படமா எடுத்திங்க லிங்குசாமி. தலைவால விஜய் என்ன கொடுமை பண்ணினாரோ அதே கொடுமைல கொஞ்சம் ஆனியன் கேரட் எல்லாம் தூவி அஞ்சான்ல சூர்யா பண்ணி இருக்காரு....

வில்லன் யாருன்னு தெரிஞ்சு போச்சு, ப்ரண்ட கொன்னவன ராஜு பாய் திரும்ப வந்து கொல்லுவாப்ளன்றது ஒண்ணுந் தெரியாத பாப்பா சமந்தாவுக்கே தெரியும் போது நமக்கெல்லாம் தெரியாதா? என்ன துப்புக் கெட்ட படத்தை எடுக்க இம்புட்டு துட்டு செலவு பண்ணி இருக்காய்ங்களேன்னு நினைக்கிறப்பதான் கப்புன்னு தொண்டைய அடைக்குதுங்க...

இவங்களுக்கு எல்லாம் சூப்பர் ஸ்டார் மாதிரி மாஸ் ஹீரோவா ஆகணும்ன்ற ஆசை இருக்கே தவிர கதைய கேட்டு நடிக்கணும்ன்ற அறிவு இல்லாமலேயே போய்டுது. ராஜு பாய்... ராஜு பாய்னு... ஸ்கீரீன் புல்லா கூவுறானுங்கோ, எனக்கு என்னமோ பாஷா பாய் பாஷா பாய்னு தான் கேட்டுகினே இருந்துச்சு. தன்ன ராஜு பாய் கிடையாது ராஜு பாயோட ப்ப்பிரதர்ன்னு காட்டிக்கிட புருவத்துல ஒரு மெகா மேஜிக் மேக்கப் போட்ருக்கானுங்கோ பாருங்க சூர்யாவுக்கு.... ங்கொய்யால ஒங்களுக்கெல்லாம் ஆஸ்கார்தாண்டா கொடுக்கணும்...

தேவையில்லாம அதிகமா பேசி நம்ம எனர்ஜிய வேஸ்ட் பண்ணமா அஞ்சான விட்டுட்டு அப்டியே கதை திரைக்கதை வசனம் இயக்கத்துக்குள்ள போலாம் வாங்க...

அஞ்சானைத்தான் கடிச்சு துப்பி சூப்பு வச்சு சாப்டாச்சு. படம் நல்லா இல்லை விமர்சிச்சோம் அது எல்லாம் சரி. நல்லா இருக்க பார்த்திபன் சார் படத்தை இன்னாத்துக்கு வளிச்சுக்கினு வேணும்னே நல்லா இல்லேன்னு எழுதணும்னு கேக்குறேன்? இணையத்துல இருக்க அஞ்சான்கள் படுத்துற பாட்டுக்கு அஞ்சான் படமே தேவலாம் போல... ஆமாம் பின்ன படத்துல எல்லா கேரக்டரும் பார்த்திபன் சாரு மாதிரியே பேசுறாங்களாம்... பின்ன அவரு டைரக்ட் பண்ணின படத்துல அவரு மாதிரி இல்லாம மணிரத்னம் சார் படத்துல வர்ற மாதிரியா பேசுவாங்க...? வண்டி வண்டியா டர்னிங் பாயிண்ட்ஸ்கள ஏத்தினு, ட்விஸ்ட்டு ட்விஸ்ட்டுன்னு சொல்லி ட்விஸ்ட் பொங்கல் வச்சி, கொஞ்சம் சோகம் கொஞ்சம் காதல், இப்டி அப்டின்னு ஆத்து ஆத்துனு ஆத்தி கதை சொல்றேன் பேர்வழின்னு உலக சினிமாப்படங்கள பாத்துட்டு இங்க வந்து வாந்தியெடுக்குற லோ கிரெடிட் கிரியேட்டர்ஸ்ங்களுக்கு எல்லாம் சுளுக்கு எடுத்து வுட்டுருக்கிற பார்த்திபன் சார பாத்தா கொஞ்சம் பொறாமையாய்தான்பா இருக்கு......

தேவர் பிலிம்ஸ் காலத்துல இருந்து அரைச்ச தேங்காயை அரைக்கிறத பார்த்து புளிச்சுப் போய் கிடந்த மனுசங்களுக்கு அடச்ச்சே கதையும் வேணாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேணாம் ஜாலியான திரைக்கதை இருந்தாப் போதும்பான்னு எதிர்பாத்தவங்களுக்கு எல்லாம்.. கதை திரைக்கதை வசனம் இயக்கம் நிஜமாவே ஒரு திருவிழா பாஸ்...! பார்த்திபன் சார்கிட்ட பிடிச்ச விசயமே மனுசன் ரவுண்ட் த க்ளாக் காதலோடேயே இருக்கறதுதான்...

காதலோடு இருக்கவங்களால மட்டும்தான் தீரத் தீர வாழ்க்கையை அனுபவிச்சு வாழ முடியும்ன்றப்ப... காதலிச்சு கட்டிக்கிட்ட மனைவிய என்ன என்ன பண்ணுவாங்கன்னு யோசிச்சு எல்லாம் நாம பாக்க வேணாம். சாதாரணமா பார்த்திபன் சாரோட படங்கள பார்த்தாலே போதும். இந்தப் படத்துலயும் அப்டித்தான் அட்டகாசமான ஒரு கணவன் மனைவிய நமக்கு அறிமுகம் செஞ்சு வக்கிறாரு. தாலிய எடுத்து கண்ல ஒத்திக்கிட்டு நெத்தி நிறைய குங்குமம் வச்சுக்கிட்டு, தலை நிறைய பூ வச்சிகிட்டு, ரெடிமேடான சினிமா மனைவிகளை பார்த்து பார்த்து போராடிச்சுப் போச்சுப்பா...ன்னு புலம்பிட்டு இருக்க அடுத்த ஜெனரேசன் மக்கள்ஸ்......

உங்களுக்காகவே  புத்தம் புது கலர்புல்லான கணவன் மனைவி இந்த படத்துல கலக்கோ கலக்குன்னு கலக்குறாங்க. மனைவிக்கு கால் பிடிச்சு விடுறதை பெருசா பேசி அதை எல்லாம் ரொம்ப பெரிய விசயமா தியாகமா காட்டிக்கிற கணவன்மார்களே.... உங்களுக்கு எல்லாம் டாட்டா பை..பை....சி யூ....


படுக்கை அறையை ஒரு கவிதைப் புத்தகமாக்கிக் கொள்ளுங்கள்...
எழுத விரும்பும் கவிதைகளை........
உங்களுக்குப் பிடித்த வர்ணங்களில் வானவில்லாய் வரைந்து பாருங்கள்...
உங்கள் மனைவியின் காதருகே சென்று....
ஐ லவ் யூ என்று சொல்லி, சொல்லி அலுப்பு கொடுக்காதீர்கள்...
அவள் காலருகே சென்றமர்ந்து ஒரு முறையேனும் 
அவள் பாதத்தில் முத்தமிட்டு அவள் கொலுசொலிக்குள் 
தொலைந்து போக முயற்சி செய்யுங்கள்....
அன்பாய் இருப்பதாய் சொல்லி அடுத்த கட்டத்திற்கு
பாய முயலும் இயந்திர உலகத்தில்...
நீங்கள் விடிய விடிய அவள் உறங்குவதைப் பார்த்து ரசியுங்கள்....
காதலென்பது கூடல் மட்டுமல்ல...
காதலென்பது ஊடல்...
காதலென்பது விவாதித்தல்
காதலென்பது கட்டியணைத்தல்
காதலென்பது விலகி நிற்றல்...
காதலென்பது....காத்திருத்தல்...
காதலென்பது விழுந்து விழுந்து பேசுதல்.....
காதலென்பது பேசிக் கொள்ளாமல் தினமும் முறைத்தல்...
பிடிக்கும் என்று  சொல்லி சொல்லி
வார்த்தைகளால் நாம் செய்த அலங்காரங்கள் போதும்...
அவளுக்குத் தேவை...
விடியலில் ஒரு பெட் காஃபி...
முடியுமா உங்களால்...????!

படத்தைப் பத்தி பேசிட்டு இருக்கும் போதே அது எங்கேயோ நம்மள கூட்டிட்டுப் போய் ஏதேதோ யோசிக்க வைக்குது பாத்தீங்களா.. அதான் ஒரு படைப்பாளியோட வெற்றி. தமிழ் சினிமா இதுவரைக்கும் தனக்குன்னு காப்பாத்தி வச்சிருந்த மரபுகள எல்லாம்  தூக்கிப் போட்டு உடைச்சுட்டு... ரிலாக்ஸ்டான அடுத்த தலைமுறைக்குள்ள மெதுவா தன் முதல் அடியை எடுத்து வச்சிருக்குன்னு தான் சொல்லணும்...

பார்த்திபன் சாரோட கதையை அதாவது தனக்கு கதை கிடைக்கலையே அப்டீன்ற கதையை, அப்டி கதை கிடைக்காம பட்டுட்டு இருந்த அவஸ்தையை ஒரு படமா எடுத்தா என்னன்னு அவர் யோசிச்ச இடம்தான் அவர் அடிச்சு இருக்க இந்த சிக்ஸர்....! எல்லா கேரக்டர்ஸ்மே நச்சு நச்சுன்னு அவர் தேர்ந்தெடுத்து இருக்க விதம் அட்டகாசம். அதுவும் ரெண்டு கண்லயும் ததும்பி வழியுற போதையோட ஒரு அட்டகாசமான கதாநாயகி தமிழ் நாட்டுக்குள்ள என்ட்ரி ஆகி இருக்காங்க...வாழ்த்துகள் அகிலா கிஷோர்...!


தம்பி ராமையா சமீபமா வந்த எல்லா படத்துலயும் செம ஸ்கோரர்தான். மனுசன் இந்த படத்துல வசனத்தோட சேர்த்து அப்பாவியான முகபாவத்தை அப்பப்போ காட்டி அடிச்சு தூள் கிளப்பி இருக்கார். அதுவும் தேவர் பிலிம்ஸ்ல படங்கள்ள எல்லாம் யானை ஓடுனாலும் ஒரே மியூசிக், குரங்கு ஓடுனாலும் ஒரே மியூசிக்ன்னு அவர் கமெண்ட் அடிக்கிறதும் அதுக்கு அப்புறம் பேக்ரவுண்டல.. அதே மியூசிக்க தம்பி ராமையா வரும்போது எல்லாம் டடண் டண்.... டடண் டண்ன்னு போட்டு கலாய்க்கிறதயும் செம்ம ஜாலியா சில்லுன்னு ஒரு மிராண்டா குடிச்சுக்கிட்டே ரசிக்கலாம் பாஸ். படத்தோட க்ளைமாக்ஸ் அக்மார்க் பார்த்திபன் ரகம்....!

திரைக்கதை, வசனம் இயக்கம் (கதைதான் இல்லையே பாஸ்...! ) அடுத்த தலைமுறையினருக்கான சிம்ப்பிள் மூவி....

மொத்தத்துல ....அடி தூள்...!!!!!!!!




தேவா சுப்பையா...





Comments

r.v.saravanan said…
படத்தை போலவே உங்களின் விமர்சனமும் அடி தூள் ரசித்தேன்
Sathis said…
பார்த்திபன் ரசிகன் என்பதற்காக அஞ்சானை அசிங்கமாக எழுத அவசியம் என்ன ?
படம் பார்க்கணும்.
இன்னும் க.தி.வ.இ. பார்க்கவில்லை...

பார்க்க வேண்டும்....

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த