அவள் எழுதிக் கொடுத்த காகிதத்திலிருந்து
ஒவ்வொரு சொல்லாய்
பெயர்த்தெடுத்து உடைத்துப் பார்க்கிறேன்
அது கண்ணீராலும் வலியாலும்
நிரம்பிக் கிடக்கிறது..
காதல் கவிதையென்று சொன்னாயே...
என்றவளிடம் கேட்டதற்கு
கண்ணீரும் வலியும் இல்லாமல்
காதல் என்ன வேண்டிக்கிடக்கிறது
உனக்கு காதல்...என்று
கோபமாய் முகம் திருப்பிக் கொண்ட
அந்தக் கணதில்
காகிதத்திலிருந்து எழுந்து...
நர்த்தனமாடத் தொடங்கி இருந்தது
காதல்..!
தேவா சுப்பையா...
Comments
இரசிக்கவைக்கும் வரிகள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அதைச் சொல்லிச் சென்றவிதம் மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்