Skip to main content

தெரு முனை




எதிர் பாரமல் உன்னை
சந்தித்த தெரு முனை...
சரித்திர புகழ் வாய்ந்த...இடமானது!

உன் கண்களால் என்
உயிர் உறிஞ்சிய ...
அந்த நிமிடத்தை
இது வரை நான் நகர விடவே இல்லை!
***
தாவணியை இடுப்பில்
சொருகிய அந்த நேரத்தில்...
சமாதி என்றால் என்ன...?
என்று கண நேரம் காட்டினாய்!
***
ஆக்ஸிஜன் கூட நீ...
உன் சுவாசகுழாய்களுக்குள்...
செல்ல விரும்பி மொத்தமாய்..
உன்னிடம் வந்ததால்...
நான் சுவாசத் திணறலால் ஸ்தம்பித்தேன்!
***
உன் கோபம் என்னை...
எரிச்சலூட்ட மறந்து...
மீண்டும் மீண்டும் காதலை அல்லவா..வளர்க்கிறது!
காதலோ....
அன்னம் புசிக்கும் பால் போல..
காமம் களைந்து
உன் நேசத்தை மட்டுமே..ரசிக்கிறது!
***
வழியோராம் உனைப் பார்த்து..
என் விழியோரம் உனைத் தேக்கி...
மீண்டும் மீண்டும் செல்கிறேன்...
உனை சந்தித்த தெரு முனைக்கு...
நீ இல்லாமல் போனாலும்...
காதாலால் எனை நிரப்ப...
***
உன்னை சந்தித்த அந்த நொடி போதும்!
அந்த அனுபவத்தின் சாயங்களை...
என் வார்த்தைகளில் நனைத்தெடுக்க..
வந்ததெல்லாம்..கவிதைதான்!
கவிதை எல்லாம் காதல்தான்!

***

காதல் என்பது எல்லா காலத்திலும் உணர்வாய்த்தான் இருந்திருக்கிறது. பிரபஞ்ச சுழற்சியின் மிகப்பெரிய ஒரு உந்து சக்தியாய் பெண் இருக்கிறாள்....அதுவே... நித்தம் சுகமான அலைகளை எப்போதும் வீசிக் கொண்டிருக்கிறது. எந்த கருத்தையும் தேடாமல்...எந்த கருத்தையும் கொள்லாமல்...காதலை...அனுபவியுங்கள்..இந்த கவிதை மூலமாக.....!


தேவா. S

Comments

///அன்னம் புசிக்கும் பால் போல..
காமம் களைந்து
உன் நேசத்தை மட்டுமே..ரசிக்கிறது!//

அருமை ..!
dheva said…
thanks jeevan (amuthan)
Hi Dheva,
Very Nice and Excellent da. Keep it up.
priyamudanprabu said…
தாவணியை இடுப்பில்
சொருகிய அந்த நேரத்தில்...
சமாதி என்றால் என்ன...?
என்று கண நேரம் காட்டினாய்!
////

அண்ணே கலக்கல்

சில கவிதைகள் படிச்சா நமக்கும் கவிதை எழுததோனும்
அப்படி யிருந்தது உங்கள் கவிதை
Chitra said…
அழகாய் காதலித்து, அழகாய் ரசித்து, அழகாய் உணர்ந்து - அழகாய் ஒரு கவிதை. :-)
dheva said…
ரொம்ப நன்றி....சித்ரா....!
ISR Selvakumar said…
பிரியமுடன் பிரபு மற்றும் தங்கை சித்ரா ஆகியோர் கூறியவற்றை ஒன்றிணைத்து என் கருத்தாக ஏற்றுக் கொள்ளவும்.
Anonymous said…
//Very Nice and Excellent da. Keep it up.//

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த