Skip to main content

கேள்விகளில்...வாழ்கிறேனோ?



















வெள்ளைப் பேப்பரில்...பாலைவனத்து ஒட்டகம் போல...
எப்போதும் ஊறும் என் பேனா....
உனக்காக கடிதம் எழுத திறக்கும் போது...
நயகராவாய்...வார்த்தைகளை இறைப்பது எப்படி?

கூட்டத்தில் இருந்தாலும் தனித்து கிடக்கும் மனது...
உன் நினைவுகளோடு இருக்கும் போது....
திருவிழாவாய் குதுகலிப்பது எப்படி?

ஏதோரு ஒரு உணர்வு....இருக்கும் ஒன்றை...
இல்லாமல் வெளியே... காட்டிக் கொண்டு....
மெளனமாய் மனதுக்குள்...
பூக்களை இறைத்து...விளையாடுவது எப்படி?

வந்து விழும் வார்த்தைகள் எல்லாம்...
உன் நினைவுகளுக்குள்...மூழ்கி வருவதால்...
கவிதையாய் உருமாறி...
காவியமாய் ஜொலிக்கிறதே...எப்படி?

சாரலாய் நீ சிரிக்கும் போது....
சிதறி விழும் முத்துக்களாய்.....
வெளிவரும் சப்தங்கள்...
வேத மந்திரமாய்..என்னை மூர்ச்சையாக்கி...
சமாதி நிலையில் தள்ளுகிறதே...எப்படி?

சூட்சுமமாய் எனைத் தீண்டி...உடலற்ற....
வெட்டவெளியில்...எனைத்தள்ளிவிட்டு..
நினைவுகளால் எனை நிறைத்து....
என் நினைவுகளை நீ அறுத்து....
ஏகாந்த வெளியில் நிரந்தர...மோகத்தில் தள்ளிவிட்டு.....
தூர நின்று சிரிக்கிறாயே....எப்படி?

கேள்விகளால்..மனம் அறுந்து...
உன் குரல் கேட்டு மீண்டும் நான் பிறந்து...
இன்னுமொரு பிறப்பெடுத்து...உன்னைத்தேடி அலைவேனோ....?
ஏதோ ஒரு காலத்தில்...ஒரு..தடிமனான ஜென்மத்தில்...
உன்னை விட்டு வந்த பாவத்தில்...
இப்போது கேள்விகளில்...வாழ்கிறேனோ?


ஒரு பெண் தன்னை நேசிக்கிறாள் என்ற விசயம் ஒருவனுக்குள் ஏகப்பட்ட மாற்றங்களை உருவாக்கும்...அந்த காதலை தியானம் செய்ய செய்ய... கண்டெடுத்த வார்த்தைகளை கோர்த்த போதுதான் இந்த கவிதை கிடைத்தது.

காதலுக்கும், காமத்துக்கும், கடவுளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று காலம் காலமாக எம்மக்களுக்கு தவறாக போதிக்கப்பட்டுள்ளது...! காதலும்...காமமும் தான் இந்த பிரபஞ்சத்தை இழுத்துப் பிடித்து வைத்திருக்கிறது...பூமியும் இன்ன பிற .... கோள்களின் மீது சூரியன் வைத்திருக்கும் காதாலால்தான்... நாம் இருக்கிறோம். இது ஒரு சிறிய உதாராணம்... சுகமான காதல் கொள்ளுங்கள் நேர்மையான காமம் கொள்ளுங்கள்...உங்களோடு இறைவன் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்....!


- தேவா.

Comments

Chitra said…
ஏதோ ஒரு காலத்தில்...ஒரு..தடிமனான ஜென்மத்தில்...
உன்னை விட்டு வந்த பாவத்தில்...
இப்போது கேள்விகளில்...வாழ்கிறேனோ?

............ கவிதை நீர்வீழ்ச்சியில், உங்கள் உணர்வுகளும் கருத்துக்களும் விழும் விதம், அருமை. பாராட்டுக்கள்!
ஆர்வா said…
வித்தியாசமான கோணம்.. அருமை
DREAMER said…
வித்தியாசமான கவிதை வரிகள்..!
Dr. Srjith. said…
அருமை அருமை நண்பரே
dheva said…
வருகை தந்த எல்லா நண்பர்களுக்கும்....அடியேனின் ... நன்றிகள்!
Anonymous said…
// சுகமான காதல் கொள்ளுங்கள் நேர்மையான காமம் கொள்ளுங்கள்...உங்களோடு இறைவன் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்....!//

இப்படியான உங்களின் புரிதல்கள் எல்லோருக்கும் வருவது கடினம். ஆழமான கவிதையும் அதன் பின்னான வரிகளும் பாடம் சொல்லி கொடுக்கிறது.

நன்றி

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல