Skip to main content

பொன்னாத்தாவின் ...புலம்பல்!












கழனியில வேல பாக்க
கலங்கி நின்னதில்ல...
கட்டுக் கதிரு சுமந்தும் ....
நடக்க சிரமப்பட்டதில்ல...
கையில் இரண்டு இடுப்பில் ஒண்ணு...
வயித்தில் ஒண்ணு....
இருந்த போதும் கவலையில்ல...
பத்துவீடு...சுத்திவந்து...
பத்துபாத்திரம் தேய்ப்பதில....
கூட... குறையுமில்ல...
மூலையில கிடந்தாலும்...
மூணுவேளை கஞ்சி ஊத்த...கஷ்டமில்ல....!
இரவு பகல் பாராம...
மிருகமா என்னை வேட்டையாடி...
கொன்னாலும்...பரவாயில்லை...
மொட்டையா போற...மகன்...
குடிச்சு...குடிச்சு.....சீரழிஞ்சு...
அவன் குடல கருக்கி...எங்க உசிர....
எடுக்காம இருந்தா சரிதேன்...!
கவுர்மெண்டே...கட துறந்து...
கருமாதி நடத்துதே....!
காந்தி போட்டோவ.....
காகிதத்தில் போட்டு வச்சு....
கல்லாவுல சமாதியாக்கி....
கல்லுக்கடை (டாஸ்மாக்) நடத்துதே!
கேக்க ஒரு நாதி இல்ல....
என் சுமைய எறக்கி வைக்க யாருமில்ல...
எல்லா சாமிய கும்பிட்டும்....
ஒரு சாமிக்கு கூட காதும் இல்ல...!

என்னதான் நவீனமயமாக்கல்...புதிய தொழில்களின் முதலீடு....தொழில் நுட்ப வளர்ச்சி, மகளிர் இட ஒதுக்கீடு என்று நாம் பேசி வந்தாலும்....மது அரக்கன் தமிழகத்தின் கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்க்கையினை பதம் பார்க்கமல் இல்லை. குடி குடியைக் கெடுக்கும் என்று எழுதி வைத்து விட்டு...தேசப்பிதாவாய்...மகாத்மவை ஏற்றுக் கொண்ட ஒரு ஜன நாயக நாட்டில் ஏன் ஒரு பூரண மதுவிலக்க்கினை நம்மால் ஏற்படுத்த முடியவில்லை? என்பது... இன்று பிறக்கும் குழந்தை கூட கேட்கும் ஞானக் கேள்வி.


நமது மக்களுக்கு மதுவின் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு தேவை...! மேல் தட்டு மக்கள் இதனை பற்றிய விழிப்புணர்வு கொஞ்சமேனும் கொண்டிருப்பதால் அவர்களின் வாழ்வியல் முறையில் அதிக பிரச்சினைகள் ஏற்படுவதில்லை ஆனால்.....வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மிகைப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்கள் தான் பாதிக்கப்படுகின்றன. கல்வியின்மையும்....மதுவினை பற்றிய விழிப்புணர்வும் இல்லாததுதான் இதற்கு காரணம்....!


அரசியல்வாதிகளும் , தன்னார்வதொண்டு நிறுவனங்களும்...மிக முக்கியமாக ஊடகங்கள் மது பற்றிய விழுப்புணர்வு பிரச்சாரத்தை மீண்டும் மீண்டும் விளம்பரப்படுத்த வேண்டும்! அறியாமையின் காரணமாக மதுக்கடைகளில் வீழ்ந்து கிடக்கும் எம்மக்களை காப்பாற்ற அரசு மிக முக்கிய முடிவுகளை உடனடியாக எடுத்தால் அது வறுமையில் வாடி மது அரக்கனால் சீரழிந்து கொண்டிருக்கும் லட்சக் கணக்கான மக்களை காப்பற்றி...சீரான, தெளிவான அடுத்த தலைமுறையை சர்வ நிச்சயமாய் உண்டாக்கும்!


தேவா. S

Comments

Chitra said…
ஜன நாயக நாட்டில் ஏன் ஒரு பூரண மதுவிலக்க்கினை நம்மால் ஏற்படுத்த முடியவில்லை? என்பது... இன்று பிறக்கும் குழந்தை கூட கேட்கும் ஞானக் கேள்வி.


நமது மக்களுக்கு மதுவின் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு தேவை...!

...... தேவா, மதுவை ஒழித்தால் - கள்ள சாராய கோட்டையில் மாட்டி விடுகிறார்கள். நீங்கள் சொல்லியபடி, மக்களிடம் ஒரு விழிப்புணர்வு தான் தேவை. அரசாங்கத்துக்கும் இதில் பங்கு உண்டு. கல்லாவை கட்டி கொண்டிருக்கிறவர்கள், கண்ணீரை பற்றி கவலைப்படுவார்களா?
Chitra said…
Dheva, I think the song makes the blog page to open slowly. So, some people may not have the patience to wait for the page to load completely to read your valuable thoughts and articles.
வாவ் ரொம்ப அருமையான கவிதை..

மது அரக்கனின் அராஜகத்தில் மக்கள் வெளிவரவேண்டும் எனபதை அழகான கவிதையில் வடித்திருக்கிறீர்கள்.
dheva said…
மிக்க நன்றி சித்ரா....! பாடலை தூக்கிவிட்டேன்....இப்போது வேகமாக பதிவுகளை படிக்க முடியும். ஆமாம் சித்ரா....மதுவை பூரணமாக ஒழிப்பது என்பது வேறு விதமன கள்ளத்தனமான வேலைகளுக்கு காரணமாகிவிடும்....ஒழிப்பை விட...விழிப்புணர்வுதான் அவசியம்!

உங்களின் கருத்துக்களுக்கு நன்றி....!
dheva said…
நன்றி திரு. ஸ்டார் ராஜன்....உங்களின் முதல் வருகைக்கு நன்றி....! தொடர்ந்து பின்னூட்டமிடுங்கள்!
அன்பின் தேவா

மதுவின் பிடியில் இருந்து வெளியேற மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும். அது மெதுவாகத்தான் வரும். விளைவுகளை நன்கு அறிந்தும் பல காரணக்களுக்காக மதுவைனி நாடுகிறார்கள். என்ன செய்வது ......

நல்ல சிந்தனை தேவா
நல்வாழ்த்துகள் தேவா
நட்புடன் சீனா

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...