Skip to main content

சில்லுன்னு ஒரு.....காதல்.....!















அர்த்தம் இல்லாத கவிதைதான் இது.....காதலுக்கு அர்த்தம் தேடினால்.... நமக்கு சிக்குவது எல்லாம்....குழந்தைத்தனமாகத்தான்....இருக்கும்! அப்படித்தான் இந்த கவிதையும்.....

காதலியை பார்த்து விட்டு....தன் வீடு நோக்கி திரும்பும் ஒரு கிராமத்து இளைஞன்...அவள் காதலிக்கிறாளா இல்லையா என்று கூட இவனுக்குத் தெரியாது....ஆனால் அவளைப் பற்றிய நினைவுகள் அழுந்தப் பதிந்துவிட்டன இவனது மனதில்....அதனால் தான் சில் வண்டு சப்தம் கூட இவனை கேலி செய்வது போல தோன்றுகிறது.....

சாராலாய் அவனைச் சுற்றி ஏற்பட்ட சூழ் நிலையும் அவனது காதலை ஊக்குவிக்கும் வினையூக்கி ஆகிப் போனதுதான் அழகு.....! சூழலுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்... வசதியாய்....பிறகு படியுங்கள் கவிதையை.....அர்த்தங்கள் பிடிபடலாம்.....அழகாக.....!

அது ஒரு மழை நேரத்து...
மாலை நேரம்-என்
ஒற்றையடிப்பாதை....
நடையோடு துணைக்கு வந்த ...
நிலாவையும்...தாண்டி...
பின் தொடர்ந்தன...உன் நினைவுகள்...

வழி நெடுகிலும்.. நடை பயின்று..
ஒயிலாய்...வந்த...
ஒரு ஊதக் காற்று...
காதோரம் வந்து....
உன் பெயரை...கிசு கிசுத்து விட்டு...
ஓடி மறைந்தது.....!

தூரத்திலிருந்து...
ஒரு நட்சத்திரம்....
உன்னைப் போலவே...
கண்டும் காணாமல்....கண் சிமிட்டி
எந்த நேரமும்....போய்விடுவேன்
என்று பயமுறுத்தியது!

என் சிந்தனைகள்.....
உன்னிடமே சிக்கி இருப்பதால்
பக்கத்தில் நகர்ந்து செல்லும்....
ஆட்டு மந்தை...போல...
வெறுமனே... நானும் நகர்கிறேன்...
மந்தையில் ஒருவனாய்....

சில் வண்டுகள்... எல்லாம்....கூடி
தூறிக் கொண்டிருக்கும்...மழையையும்...
காதல் சாரல் வீசிக் கொண்டிருக்கும்...
என் மனதையும் கிண்டல் செய்து....
தொடங்கி விட்டன ..சப்தத்தை!
எத்தனை முறை....
மாற்றிப் பார்த்தாலும்...
கட்டவிழ்ந்த கன்று போல...
உன்னை நோக்கிப் பாய்கிறது...
என் மனது!

யாரின் சப்தமோ...
நிசப்தத்தை கிழித்து
யாரையோ தேடுகிறது...
காற்றில்!
இருட்டான வானமும்..
என் மனமும்...
போட்டிப் போட்டு....
கனத்து கிடந்தன...
நான் வெறுமனே நடக்கிறேன்...
காதல்...பெய்விக்கிறது....
மழையை எனக்குள்ளேயும்!


தேவா. S

Comments

Chitra said…
சாராலாய் அவனைச் சுற்றி ஏற்பட்ட சூழ் நிலையும் அவனது காதலை ஊக்குவிக்கும் வினையூக்கி ஆகிப் போனதுதான் அழகு.....! சூழலுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்... வசதியாய்...


.....Get comfortable - relax - taste the goodness of love. :-)

(P.S.: Dheva, Again it took a very long....... time to load the page this time. )
dheva said…
Sorry Chitra....

again i put music....by mistake! I removed it now....n for sure will not repeat it! Thanks for ur info.!
//எத்தனை முறை....
மாற்றிப் பார்த்தாலும்...
கட்டவிழ்ந்த கன்று போல...
உன்னை நோக்கிப் பாய்கிறது...
என் மனது! //

ஹ்ம்ம் ஹ்ம்ம்.. அழகான உணர்வு..
படித்த வேளையில் உணர்ந்தேன்..
சூழலுடன் இணைந்த கவிதை அருமை.. :-)

(Hii. I had the same problem Dheva.. i refreshed the page so many times.. to put this comment..
irunthalum comment podaama vidratha illa :-) )
prince said…
//காதல்...பெய்விக்கிறது....
மழையை எனக்குள்ளேயும்!//

எனக்குள்ளேயும்
dheva said…
Thanks Ananthi....

I think prob occured the due to the music file i added......! I removed it already.....hope now its working fin!

Thank you somuch for ur concern.....appreciated!
Anna... 3 aandugal kadanthu oru pathivukkana pinnoottam..

Kadanthu vanthathu verum vartthaigalaiyo, neengal sonnathupol arthamatra kavithaiyaiyo alla..

aanantha peruveliyai, iyalbaai kathalai uthirkkum pasumaratthai, oru amaithiyaana kaathalaal samaitthu vaikkappatta soozhnilaiyai..

soolnilaiyodu inainthu naanum kaathalagipponen..

Love You Bro :)

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த