Skip to main content

வன்முறை...



கன்று தடுத்து....
காராம் பசுவிடம்..
பால் கறக்கும் பொழுதுகளில்...
வரவில்லையா....
உங்களுக்கு மிருகாபிமானம்?

***

திறந்த வீட்டினுள்...
நுழையும் எதோ...போல...
செடியின் அனுமதியின்றி....
மலர்கொய்யும் போது...
மனம் சொல்லவில்லையா...
இது அத்துமீறல் என்று?

***

மனம் திறந்து ...
பேசிடும் பேச்சாய்....
வானம் மேகமுடைத்து...
பெய்யும் மழை மறுத்து..
கதவடைக்கும் கணங்களில்...
தோன்றவில்லையா...
உங்களின் சுய நலம்!

***
ஒவ்வொரு முறை....
மரம் களையும் போதும்...
புரிந்ததில்லையா.....
உங்களுக்கு....பூமித்தாயின்
கையிலிருக்கு குழந்தையைத்தான்...
கொல்கிறீர்களென்று!

***

நீங்கள் ...
பெளர்ணமியாய்...
ரசிக்காத காரணத்தால்....
தினம் தேய்ந்து..
அமாவாசையாய்..
கோபம் காட்டும்... நிலாவை
புரிந்து இருக்கீறீர்களா
இதுவரையில்....!

***

குருடர்களாய்...
கவனிப்பதில்லை...
நம் அன்றாட அத்துமீறல்களை...
என்றுதான் நிறுத்தப்போகிறோம்...
வசதியாய் நாம் மறந்திருக்கும்..
இந்த வன்முறைகளை......!


பொதுப்புத்தி என்ன கற்பித்திருக்கிறது...வன்முறை என்றால் வெடிகுண்டு வைப்பதும்...உயிர்ச்சேதம் விளைவிப்பதும்...பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதுதான் வன்முறை என்பது...இவை எல்லாம் நாம் உணர்ந்த வன்முறைகள் அறிந்த வன்முறைகள். அறியாமல் இவை எல்லாம் வன்முறை அல்ல என்று நாம் உணராமல் செய்யும் ஏராளமான செயல்களில் வன்முறை இருப்பதை மிகைப்பட்ட மனிதர்கள் உணருவதில்லை.

கொஞ்சம் பைத்தியகாரத்தனமாய்த்தான் சராசரி ஓட்டத்தில் இருக்கும் மனிதர்களுக்கு இந்த கவிதையும், விளக்கங்களும் இருக்கும்...ஏளனம் செய்ய... நிறைய காரணஙக்ள் கூட இருக்கலாம்..... நான் உங்களிடம் வேண்டுவது எல்லாம்....கண்களால் இந்த பதிவை படிக்காமல் மனதால் படித்துப்பாருங்கள்... ஒரு வேளை... நான் சொல்ல வரும் உண்மையை நீங்கள் உணரலாம்!


தேவா. S

Comments

அடடா... அருமை தேவா

மனதால் படிப்பது அவ்வளவு எளிதா என்ன?
Chitra said…
நீங்கள் ...
பெளர்ணமியாய்...
ரசிக்காத காரணத்தால்....
தினம் தேய்ந்து..
அமாவாசையாய்..
கோபம் காட்டும்... நிலாவை
புரிந்து இருக்கீறீர்களா
இதுவரையில்....!


......தேவா ........ கவிதையில் கருத்து அனல் பறக்கிறது. பாராட்டுக்கள்!
//கன்று தடுத்து....
காராம் பசுவிடம்..
பால் கறக்கும் பொழுதுகளில்...
வரவில்லையா....
உங்களுக்கு மிருகாபிமானம்?
//
தேவா.. ஆரம்பமே அமர்க்களம்.. வன்முறை அத்துமீறல்களை... அழகா எடுத்து காத்திருக்கீங்க..
வாழத்துக்கள்.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த