Skip to main content

தமிழா இதை எப்படி மன்னிக்கப் போகிறாய்....?


சிங்கத்தை பெற்ற....
தங்கம் வந்ததா...?
கரிகாலனை பெற்ற...
கடவுள் வந்ததா....?
வல்லரசு இந்தியாவே...
தொடை நடுங்கி.....
அனுமதி மறுத்தாயோ?
பிணி தீர்க்க வந்த...
மூதாட்டியிடமே...
நடு நடுங்கிய நச்சுப் பாம்புகளே...
சிங்கதலைவன் வந்தால்...
தூக்கிலிட்டு மரிப்பீரோ?
அனுமதி மறுத்து...
அவமானப்பட்டது....
காந்திதேசத்தில்...
கறை படியச் செய்தது.....
எல்லாம்...வீரமென்றா சொல்வீர்கள்!
விருந்தோம்பலை...உலகுக்கெல்லாம்...
விளக்கிச் சொல்லும்...தமிழ் நாடே...!
தமிழனுக்காய்...போராடிய...
சிங்க நிகர் தலைவனின்...
தாயையா நீ நிராகரித்தாய்....!
மருத்துவ உதவி தேடிய...ஒரு உயிரை...
மதிக்காமல் திருப்பிவிட்ட...
பாவம் உமை சும்மா விட்டிடுமா?
ஒட்டு பொறுக்கும்....பிச்சைக்காரர்கள்....
தேர்தல் நேரத்தில்அம் மட்டுமே வருவார்கள்....
தமிழினம் என்ற...திருவோடு ஏந்தி....!
என் தமிழனமே....கவனமாயிரு....!
காசு கொடுத்து அவன் வாங்கப் போவது....
உன் ஒற்றை ஒட்டு அல்ல....தமிழனின் தன்மானம்.....!

என் தாய் தமிழினமே.....தமிழினமே....மீண்டும் ஒரு முறை ஜோராக கைதட்டுங்கள்... மீண்டும் ஒரு கேவலமான காரியத்தை அரங்கேற்றி இருக்கும் இந்திய அரசாங்க கோமாளிகளைப் பார்த்து....! சாமியார்களின் காதல் காட்சிகளை காட்டுவதற்கு தமிழ் நாட்டில் ஊடகங்கள் இருக்கிறது.

திரைப்பட டிரெய்லர்கள் காட்டுவதற்கு... போட்டா போட்டி..ஏம்பா....உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா...ஒரு வயாதான மூதாட்டிக்கு....விசாவை கொடுத்து மலேசியாவில் இருந்து சென்னை வரை வரச்செய்து....அனுமதி மறுத்து திருப்பி அனுப்பினார்களே....எத்தனை தொலைக்காட்சிகள்...இதை மீண்டும் மீண்டும் போட்டுக் காட்டின? போட்டு கொண்டிருந்தால்... நமது நாட்டு ஊடங்கள் நடு நிலையோடு இருக்கின்றன என்று ஒத்துக்கொள்ளலாம்....இப்போது தெரிகிறாதா...என் மக்களே.....ஊடகங்கள் தங்களின் சுய லாபத்துக்காத்தான் செயல் படுகின்றன என்பதை உணர முடிகிறதா?

மேற்கொண்டு விவரித்து இந்த பதிவை எழுத மனம் வரவில்லை....ஏனென்றால்...மருத்துவ உதவி கேட்டு வந்தா தாயை திருப்பி அனுப்பிய தரங்கெட்ட செயல் செய்தவர்களை....எல்லாம் வல்ல இறை...பார்த்துக்கொள்ளும்...ஒரே ஒரு கேள்விதான்....என்னிடம் எஞ்சி இருக்கிறது....

"தள்ளாத வயதில் வந்த...தாயார் பார்வதி அம்மாளைக் கண்டே...இவ்வளவு பயப்படும்....இந்தியாவே(காங்கிரஸ்)....அவர் பெற்ற பிள்ளை வந்தால்..எவ்வளவு பயம் கொள்வீர்கள்? "

தேவா. S

Comments

where is her son? :) noaddress????? :) :) :)
Chitra said…
என்னத்த சொல்ல முடியும்?
dheva said…
வெத்து வேட்டு......

பதிவின் நோக்கை தவறாக விளங்கியுள்ளீர்கள் சகோதாரரே.....விசாவை வழங்கி விட்டு...மூதாட்டிக்கு அனுமதி மறுத்தது தவறு என்பது தான் என்பதிவின் நோக்கம்...விமான நிலையத்துக்குள் கூட வர விடாமல் தடுத்து திருப்பி அனுப்ப வேண்டிய அளவிற்கு அவர் என்ன குற்றம் செய்தார்....

சிந்தித்து பாருங்கள் சகோதரரே....! உங்களின் முதல் வருகைக்கு வாழ்த்துக்கள்!
நம் அண்ணனின் தாயை அவமரித்த மத்திய ,மாநில அரசுக்கு தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சரியான பாடம் புகட்ட வேண்டும் . ஓட்டு பொருக்கி நாய்களே உங்களை பெற்றதும் ஒரு தாய் தானே.
திமிர் பிடித்து அலையும் சிங்கள ,இந்திய அரசே என் தலைவர் வருவார் உங்களுக்கு சரியான பதில் தருவார் . அதுவரை ஆடுங்கள்..நண்பரே தொடர்ந்து எழுதுங்கள் . நன்றி
வெத்து வேட்டு. ஒரு வலைப்பூ வைத்து இருந்தால் தொடர்பு கொள்ள மெயில் ஐடி வைக்க வேண்டும்.சில கை கூலிகள் இது போல போலித்தனமான வலைப்பூ வைத்து கொண்டு தவறான விமர்சனம் செய்வார்கள்.உனக்கு தைரியம் இருந்தால் நேரடியாக பேசி பார்.கோழைத்தனமாக பேசாதே...
Li. said…
This comment has been removed by the author.
Li. said…
உணர்சிகள் ஒன்றே .
@விடுதலை வீரா, உணர்சிவசப்ப் படவேண்டாம் நாம். தூற்றுவோர் தூற்றட்டும். விடுதலை வேட்கை வேண்டாம், இனப் பற்றுதல் வேண்டாம் குறைந்த பட்சம் மனிதாபிமானம் இருந்தால் இவாறு செய்திருக்க மாட்டார்கள். நேரம் வரும்.
கீழே என் பதிவு . நம் உணர்வை ஒலிக்கும்.

http://myheartmymind.blogspot.com/2009/05/blog-post.html
இது தான் தம்பி உலகம் நம்மால் என்ன செய்யமுடியும்.
//ஊடகங்கள் தங்களின் சுய லாபத்துக்காத்தான் செயல் படுகின்றன என்பதை உணர முடிகிறதா?//

ஊடக தர்மமே இல்லை இங்கு
uma said…
இந்த வந்தேறி பார்ப்பணீயம் தமிழர்களுக்கு செய்த கொடுமை அளவில்லாதது .பிராமணியம் மனித தன்மைக்கு ,சமத்துவத்துக்கு ,சுய மரியாதை க்கு எதிரானது என்று காலம் காலமாய் நிருபிக்க பட்டிருக்கிறது .இந்த டோண்டு ராகவன் என்கிற முட்டாளுடன் நான் விவாதம் செய்ய வரவில்லை. பார்ப்பனீயம் தங்களுடைய சித்தாந்தங்களுக்கு தொண்டு செய்கிறவர்களை தான் உயர்த்தி பிடிக்கும் . தந்திரம்,சூழ்ச்சி ,நயவஞ்சகம்,பசப்பு, ஆசை காட்டல் முதலிய பஞ்சமா பாதகங்களை பயன்படுத்தி தன்னுடைய நலன்களை காத்துக்கொள்ளும் .இங்கே ஒன்று கவனிக்க வேண்டும் டோண்டு என்கிற மட பாப்பான் என்ன சொல்ல வருகிறார் "புலிகளின் ஆதரவாளர்கள்? பிரஸ் மீட்கள் வைத்திருப்பார்கள். தனது பாசமிக்க மகனை நினைவில் இருத்தி அந்த பெண்மணி அழுவாச்சி பேட்டிகள் தந்திருப்பார். பிறகு அவரது பாதுகாப்புக்கென ஒரு கணிசமான தொகையை நமது அரசுகள் செலவழிக்க வேண்டியிருக்கும்."
இதில் எவளவு வஞ்சம் கலந்திருக்கிறது. இங்கே அந்த வயதான தாய் வந்தது தன்னுடைய பக்கவாத நோய்க்கு மருத்துவம் பார்க்க .அரசியல் செய்ய அல்ல.அவர் இதற்க்கு முன்பு திருச்சியில் வாழ்ந்திருக்கிறார் . அவரை வைத்து எப்போது யார் அரசியல் செய்தார்கள் .அவரை கவனிக்க இங்கே ஆள் தேவை .இங்கே அவரை கவனித்து அவருக்கு வேண்டியவை செய்ய மனித நேயம் உள்ள நல்லவர்கள் இருகிறார்கள்.அதனால் தான் அவர் இங்கே வந்தார்.அந்த தாய் எப்போதுமே அரசியல் யாரிடமும் பேசியது இல்லை.இங்கே வந்தேறி பார்ப்புகளும் ,சேட்டு களும் ,பணியாகக்களும் ,மலையாளிகளும் வசதியாக வாழும் போது ஒரு தாய்க்கு தன்னுடைய ரத்த சொந்தங்கள்
இருக்கும் நாட்டிற்கு வர உரிமைகள் மறுக்க படுவதும் அதை டோண்டு ராகவன் போன்ற வந்தேறி பார்ப்புகள் ஆதரித்து பேசுவதும் தமிழர்களுக்கு ஒரு கிழிந்து போன இத்தாலிய சேலையை தன்னுடைய துண்டாக ,கோவணமாக அணிந்து கொண்டிருக்கும் மற்றும் பணத்தால் உணர்விழந்து போன மட தலைவனால்தான். இங்கே காவி அணிந்து கொலை மற்றும் பல பஞ்சமா பாதகங்கள் செய்த காஞ்சிபுரம் சங்கராச்சாரி என்கிற ஒரு அய்யோக்கிய பார்ப்பான்கள் எல்லாம் நடமாடுகிற போது ஏன் என்னுடைய தாய் இங்கே வரகூடாது .
இப்போது சசி தரூர் என்கிற ஒரு மலையாள பாப்பான் செய்த காரியம் என்ன . ஒரு நாட்டின் அமைச்சு பதவியில் இருந்து கொண்டு அவன் செய்த காரியம் தன்னுடைய தாயை கூட்டி கொடுபதற்க்கு சமமானது .அதை இந்த வந்தேறி பார்ப்புகள் தான் செய்ய முடியும் .தாயே எங்களை மன்னித்து விடு .மீண்டும் ஒரு புத்தநும் ,ஒரு பெரியாரும் ,ஒரு நாராயண குருவும் ,ஒரு வேம்மன்நநாவும் ,ஒரு பிரபாகரனும் ஒரு அய்யா வைகுண்டரும் இந்த புனித பூமியில் பிறந்து பார்பனியத்தை வேரோடு கருவறுக்க ஆசி கூறு .

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த