Skip to main content

நாங்கள் இந்தியர்கள்! நீங்கள்....டோன்டு ....?













அன்புள்ள டோன்டு சார்.....!

எதுவுமே எழுதாம அப்படியே விட்டு விடலாம் என்று இன்று மதியம் வரை நினைத்தேன்...இருந்தாலும் சக பதிவர் என்ற வரைக்கு ஒரு சிறிய கடிதமாவது எழுதாவிட்டால் எனக்குள் இருக்கும் எனது விழிப்புணர்வு நிலை என்னை சும்மா விடாது.....!

பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியதற்காக... அரசாங்கத்தின் மீதுதான் நமது கோபம் திரும்ப வேண்டும் அறிவு கெட்ட அரசாங்கம் அந்த மூதாட்டியை உள்ளே விடாததற்கு அதற்கு ஓராயிரம் சுய நல கேவலமான ஏகாத்திபத்திய காரணங்கள் இருந்தது....அது அதிகாரத்தில் இருப்பவர்களை மக்கள் தோலை உரித்து அரியாசனத்தில் இருந்து இறக்கும் வரை அவர்களின் ஏகாத்திபத்திய செயல்பாடுகள் மாறாது. இது ஒரு சமுதாய கோபாமாக மாறி....அரசாங்கக்துக்கு சூடு கொடுக்கும் வையில் இருக்க வேண்டும்...

சாதாரணமாய் வாழும் மனிதன் தனது கோபத்தை டீக்கடை வாசலிலோ அல்லது....அலுவலக கேண்டினிலோ....அல்லது ஒரு பேருந்து நிறுத்தத்தில் விவாதித்தோ தனது கோபத்தைப் போக்கிக் கொள்வான்...ஆனால் உங்களைப் போன்றவர்கள் எழுதும் ஆற்றல் கொண்ட மனிதர்கள் ...ஒரு முற்போக்கான விரிந்த பார்வை உங்களுக்கு இருக்க வேண்டாமா? இல்லை என்றால் வன்முறையாளன் கையில் கொடுக்கப்பட்ட சுதந்திரமாய் அது ஆகி விடாதா?

படைக்கும் திறன் கொண்ட ஒரு படைப்பாளி.....தப்பும் தவறுமாக தனது....சிந்தனைகளை ஓடவிட்டு...அதனை தன் எழுத்தாற்றல் மூலம் வாசகனுக்கு சமைக்கும் போது வலுவற்ற எண்ணங்களும்...சமகால நிகழ்வுகளின் விரிவாக்கமும் இல்லாத மனிதர்களின் மனதில் நஞ்சை விதைப்பது போல ஆகாதா? உங்கள் கையில் கிடைத்திருப்பது பலதரப்பட்ட மக்கள் படிக்கும் ஊடகம்...அதில் ஒரு கண்ணியம் இருக்க வேண்டாமா....! எழுதுவதில் ஒரு தனி ஒழுக்கம் இருக்கவேண்டாமா?

எழுத்தாளன் என்பவன் சமூக பொறுப்புகள் நிறைந்தவன்....சராசரி மனிதர்களுக்கும் உருவாக்கும் படைப்பாளிகளுக்கும் வித்தியாசங்கள் இருக்கிறது. எனக்கு தனிப்பட்ட முறையில் பிடித்த அல்லது பிடிக்காத விசங்களை நான் பொதுப்படுத்தக்கூடாது....அப்படி செய்தால் அதற்கு பெயர் பதிவு அல்ல...அது உங்களின் பெர்சனல் டைரி...! நமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு... சமச்சீரான பார்வைக்கு ....உட்பட்டு நாம் செய்திகளை நோக்கவேண்டும்....! உங்களுக்கு கண்டனங்களைத் தெரிவித்த அதே கதிர் சார்...உங்களின் சாதிப் பெயர் சொல்லி விமர்சித்தவர்களை கடுமையாக கண்டித்தார்.....இதில்தானே ஒரு சுய ஒழுக்கமும் நேர்மையும் இருக்கிறது!

சமுதாயத்தில் அக்கறை உள்ள உண்மையான மனிதன் இப்படி எழுதி விட்டு...மிகைப்பட்ட மனிதர்களிடம் இருந்து எதிரிடையான விளக்கங்களும்...கண்டங்களும் வரும் மாத்திரத்தில் உணர வேண்டாமா.....? தான் எழுதியது...தவறு என்று?...அதை மனதோடு வைத்திருந்தால்.அப்போது அது உங்களின் சொந்த கருத்து...!

உங்களின் எண்ணங்களை பதிவாக்கிவிட்டு... நான் அப்படித்தான் நினைக்கிறேன்!...அனுமாக்கிறேன்.....என்று....வாசிப்பவர்களை...அனுமானத்தின் நேசர்களாக....கற்பனையில் ஏதேதோ எண்ணச் சொல்லி....ஒரு தீவிரவாதத்தை உங்களின் எழுத்துக்குள் கொண்டு வராதீர்கள்...!

பார்வதி அம்மாளை உள்ளே வரவிடாமல் அனுப்பியது சரி என்று நீங்கள் சொல்வதனால்.... என்னவோ... நீங்கள்தான் ஏதோ இந்திய தேசத்தின் பக்தர் போலவும்...நாங்கள் ...தேசத்துக்கு எதிரானவர்கள் என்றும் உங்களுக்குள்...மாயையினை ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள். தேசப்பற்றோடு கூடியதுதான் மனிதாபிமானமும்....இந்திய தேசத்தை உங்களை விட அதிகம் நேசிக்கிறோம்...அந்த நேசிப்பு கூடிப்போனாதால்தான் எங்களிடம் மனிதாபிமானம் கூடிபோய் இருக்கிறது. மனிதாபிமானம் உள்ளவன் தான் ஒரு உண்மையான இந்தியனாக இருக்க முடியும்......

எங்களுக்கு மனிதாபிமானம் இருக்கிறது...... நாங்கள் இந்தியர்கள்.......! நீங்கள்....டோன்டூ ....சார்?


தேவா. S

Comments

Anonymous said…
This comment has been removed by a blog administrator.
Unknown said…
This comment has been removed by a blog administrator.
uma said…
இந்த வந்தேறி பார்ப்பணீயம் தமிழர்களுக்கு செய்த கொடுமை அளவில்லாதது .பிராமணியம் மனித தன்மைக்கு ,சமத்துவத்துக்கு ,சுய மரியாதை க்கு எதிரானது என்று காலம் காலமாய் நிருபிக்க பட்டிருக்கிறது .இந்த டோண்டு ராகவன் என்கிற முட்டாளுடன் நான் விவாதம் செய்ய வரவில்லை. பார்ப்பனீயம் தங்களுடைய சித்தாந்தங்களுக்கு தொண்டு செய்கிறவர்களை தான் உயர்த்தி பிடிக்கும் . தந்திரம்,சூழ்ச்சி ,நயவஞ்சகம்,பசப்பு, ஆசை காட்டல் முதலிய பஞ்சமா பாதகங்களை பயன்படுத்தி தன்னுடைய நலன்களை காத்துக்கொள்ளும் .இங்கே ஒன்று கவனிக்க வேண்டும் டோண்டு என்கிற மட பாப்பான் என்ன சொல்ல வருகிறார் "புலிகளின் ஆதரவாளர்கள்? பிரஸ் மீட்கள் வைத்திருப்பார்கள். தனது பாசமிக்க மகனை நினைவில் இருத்தி அந்த பெண்மணி அழுவாச்சி பேட்டிகள் தந்திருப்பார். பிறகு அவரது பாதுகாப்புக்கென ஒரு கணிசமான தொகையை நமது அரசுகள் செலவழிக்க வேண்டியிருக்கும்."

இதில் எவளவு வஞ்சம் கலந்திருக்கிறது. இங்கே அந்த வயதான தாய் வந்தது தன்னுடைய பக்கவாத நோய்க்கு மருத்துவம் பார்க்க .அரசியல் செய்ய அல்ல.அவர் இதற்க்கு முன்பு திருச்சியில் வாழ்ந்திருக்கிறார் . அவரை வைத்து எப்போது யார் அரசியல் செய்தார்கள் .அவரை கவனிக்க இங்கே ஆள் தேவை .இங்கே அவரை கவனித்து அவருக்கு வேண்டியவை செய்ய மனித நேயம் உள்ள நல்லவர்கள் இருகிறார்கள்.அதனால் தான் அவர் இங்கே வந்தார்.அந்த தாய் எப்போதுமே தான் இங்கே தங்கி இருந்த காலத்தில் அரசியல் யாரிடமும் பேசியது இல்லை.இங்கே வந்தேறி பார்ப்புகளும் ,சேட்டு களும் ,பணியாக்களும் ,மலையாளிகளும் வசதியாக வாழும் போது ஒரு தாய்க்கு தன்னுடைய ரத்த சொந்தங்கள் இருக்கும் நாட்டிற்கு வர உரிமைகள் மறுக்க படுவதும் அதை டோண்டு ராகவன் போன்ற வந்தேறி பார்ப்புகள் ஆதரித்து பேசுவதும் தமிழர்களுக்கு ஒரு கிழிந்து போன இத்தாலிய சேலையை தன்னுடைய துண்டாக ,கோவணமாக அணிந்து கொண்டிருக்கும் மற்றும் பணத்தால் உணர்விழந்து போன மட தலைவனால்தான். இங்கே காவி அணிந்து கொலை மற்றும் பல பஞ்சமா பாதகங்கள் செய்த காஞ்சிபுரம் சங்கராச்சாரி என்கிற அய்யோக்கிய பார்பான்கள் எல்லாம் நடமாடுகிற போது ஏன் என்னுடைய தாய் இங்கே வரகூடாது? .

இப்போது சசி தரூர் என்கிற ஒரு மலையாள பாப்பான் செய்த காரியம் என்ன . ஒரு நாட்டின் அமைச்சு பதவியில் இருந்து கொண்டு அவன் செய்த காரியம் தன்னுடைய தாயை கூட்டி கொடுபதற்க்கு சமமானது .அதை இந்த வந்தேறி பார்ப்புகள் தான் செய்ய முடியும் .

தாயே எங்களை மன்னித்து விடு .மீண்டும் ஒரு புத்தநும் ,ஒரு பெரியாரும் ,ஒரு நாராயண குருவும் ,ஒரு வேம்மன்நாவும் ,ஒரு பிரபாகரனும் ,ஒரு அய்யா வைகுண்டரும் இந்த புனித பூமியில் மீண்டும் பிறக்க ஆசி கூறு அவர்கள் பிறந்து பார்பனீயத்தை வேரோடு கருவருகட்டும் .

உமா.கா ,திருவனந்தபுரம்
dheva said…
பின்னூட்டமிடுபவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.....

தயவு செய்து எந்த தரக் குறைவான வார்தைகளையும் பயன்படுத்த வேண்டாம், மேலும் எந்த காரணம் கொண்டும் சாதியையும் மதத்தையும் கொண்டு வசவுகள் செய்ய வேண்டாம்..ஒரு நிகழ்வினைப் பற்றி ஒருவர் தெரிவித்த கண்ணோட்டத்திற்கான....ஒரு மறுதலிப்புதான் இந்தப் பதிவு....! நாம் அனைவரும் நமது நாகரீகத்தை காப்பதில்....மிகக் கவனமாக இருக்க வேண்டும்!
காந்தி தாத்தா படத்தை எங்க புடிச்சீங்க?
dheva said…
அது காந்தி தேசத்தின் புதல்வர்கள்தான் நாங்களும் என்ற அர்த்தத்தில் தான் காந்தி படம்.....! வருகைக்கு நன்றி!
Chitra said…
எல்லை மீறாமல், விரிவாக எழுதி இருக்கிறீர்கள்.
Chitra said…
How about moderating your comments before they are published? Also, you will not miss the comments for your older posts , if any, that comes later - if you have comments moderation.
தம்பி அருமையான விளக்கம்

வாழ்த்துக்கள்
மேலும் உங்கள் எழுத்து தொடர.. வாழ்த்துக்கள்..

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த