Skip to main content

வாழ்வே மாயம்.... தொடர் பதிவு I I


இது வரை

http://maruthupaandi.blogspot.com/2010/04/i.html
இனி....

நிறைய உடல்களை பார்த்த பின் ஒரு உடன் ஒரு உடலின் கையில் தழும்பு இருப்பதை கண்டு என்னை அவசரமாய் அழைத்தர்...அந்த தழும்பை பார்த்த உடனேயே.. என் கண்களில் கண்ணீர் அனிச்சையாய் வந்தது....

என் தாயிருந்த...இடத்திலே...
நீ இருந்தாய்...
இன்று நீ இருக்கும் இடம்..
எது மாமா?

என்ன கவலை தீருமுன்னு...
நீ மரிச்சே...
உடல ஒழிச்ச நீ...
உடனே பிறப்பாயோ...
மனச அலைய விட்டு...
மறு ஜென்மம் எடுப்பாயோ...?

என் அம்மாமனே...
உனை.. எந்த பிறப்பில்...
காண்பேனோ....
இல்லை இனி காணமலேயே போவேனோ...?


மாமவின் முகம் தெளிவாய்....முன் தினம் செய்யப்பட்ட சவரம்.. நன்றாகதெரிய.....சாந்தமாய்...எனைப்பார்த்து சிரிப்பது போல தெரிந்தது.....
! என்னிடம் விவரிக்க எந்த ஒரு வார்த்தையோ பயமோ இல்லை....மனம் ஒரு நிலைப்பட்டு தனித்து கிடந்தது....! எந்த ஒரு சலனமும் இல்லாமல்.. தனிமைப்பட்டு கிடந்தது....! ஏதோ ஒரு விசயம் மெலிதாய் புலப்பட்டு ஆத்மா அதை உணர்ந்ததை... மனமும் மூளையும் கிரகிக்க முடியாததால்.. அந்த அனுபவத்தை சொல்ல முடியவில்லை.

மாமா இல்லை.....இது மாமாவின் உடல்...சரி....மாமா எங்கே? அல்லது எது மாமா என்று என்னால் அழைக்கப்பட்டது? ரமண மகரிசியின் நான் யார் என்பதின் தத்துவ விளக்கம்...என் மர மண்டையில் எதார்த்த கேள்விகளாய் வெளியே வந்தது. ஏதோ ஒரு விசயம் புரிந்தும் புரியாமலும்....இருந்தது....

" தம்பி போகலாம்பா.... என்று வாட்ச் மேன் உலுக்கிய போது மீண்டும் நிதானத்துக்கு வந்தேன்......"

கண்ணீரோடு வாட்ச்மேனின் கரம் பற்றி... நன்றியை என் கண்களில் இருந்து அவரது கண்களுக்கு மாற்றியபடி...சலமின்றி மார்ச்சுவரி....கதவை அடைந்த போது.....திரும்ப ஒருதடவை.....மாமாவின் உடலை திரும்பி பார்த்தேன்....

சண்முகம்......ஆமாம் அது தான் அவர் பெயர்.....சிவகங்கை மாவட்டம்....காளையார் கோவிலை அடுத்த மறவ மங்கலம்....பேருந்து நிறுத்ததில் இறங்கி...."செல்லச்சாமி பிள்ளை...." வீடு எதுன்னு கேட்டா.....வீட்டு வாசல்ல கொண்டு போய் விடுவாங்க....ஜமீன் தாருடைய பேரன் தான் இவரு...100 ஏக்கர் நிலம் வீடு வாசல்னு எல்லாம்...சூதாட்டம் மாதிரி சூறாவளியா சுத்தி...சென்னையில் காய்கறி வியாபரத்துல வந்து விட்டுருச்சு....

எல்லா கனவுகளும் வாழ்க்கை.....சூழ் நிலை இந்த இரண்டுகும் நடுவே பந்தாடப்பட்டு....மனிதனின் சுய அடையாளத்தை தொலைத்து விடுகிறது.....

கதவை திறந்து வெளியில் வந்தேன்....உறவுகளின் ஒப்பாரி என்னை ஒன்றும் செய்ய வில்லை...ஒரு ஓராமாய் நான் அமர்ந்து இருந்தேன்....இரவு நேர சென்னையின் வானம் மட்டும் என் தொடர்பில் இருந்தது.....!


தேவா. S



(தொடரும்)

Comments

நமது மரணம் அடுத்தவருக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாது ..! அப்படி நிகழும் மரணமானது ஒரு விடுதலை...! அல்லது அது ஒரு பரிசு...!
லெட்டர்ஸ் எல்லாம் ரொம்ப சின்னதா இருக்கு , டிம் மாவும் இருக்கு சரிபண்ணுங்க
உடம்பு என்பது உண்மையில் என்ன ....கனவுகள் வாங்கும் பை தானே.......கதையும் பின்னணி பாடலும் அருமை. உங்கள் கதை சொல்லும் பாங்கு
ரொம்ப பிடித்திருகிறது ...சகோதரி நிலாமதி
dheva said…
thanks nilamathi.....!
dheva said…
Thanks manguni Amaichar....for ur suggestions and i changed it immediately!
//என் தாயிருந்த...இடத்திலே...
நீ இருந்தாய்...
இன்று நீ இருக்கும் இடம்..
எது மாமா? //

உங்க மாமாவின் மீது நீங்க கொண்ட அன்பின் வெளிப்பாடு, இந்த வரிகளில் வலியாய் தெரிகிறது..

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த