Skip to main content

பணம் தேவையில்லை மனம் போதும்.....!



காட்சி 1

இடம்: துபாய் International Airport

நேரம்: இரவு 20:30

நிகழ்வு 1

கொழும்பு வழியாக திருச்சி செல்லும் ஏர் லங்கா.. விமானத்துக்காக லக்கேஜ் ஸ்கேனிங் வரிசையில் நான் குடும்பத்துடன்... ஹேண்ட் பேக் தோளிலும் கையிலும் என்னிடம் என் மனைவியிடம் ஒரு கையில் பேக் மறு கையில் குழந்தை... ஓடோடி வருகிறார் அந்த பிலிப்பினோ....பணியாளர்....வெயித் மேதம் ..ஐ கெல்ப் யூ.... (wait madam, i help you) என்று சொல்லிக் கொண்டே...என்னிடம் இருந்தும் என் மனைவியிடம் இருந்தும் பேக்கை வாங்கி ஸ்கேன் மெஷினுள் வைத்து மீதியுள்ள லக்கேஜ் எல்லாம் எடுத்து வைக்க உதவி செய்கிறார்... நான் நன்றி சொல்ல முயல்வதற்குள்....அவர் சொல்கிறார்...தேக்யூ சார்...தேக்யூ மேடம்!

நிகழ்வு 2

போர்டிங் போடுவதற்காக நிற்கிறோம்....வெயிட் எல்லாம் சரியாக இருக்கிறது....ஒரு லக்கேஜ் மட்டும் 30 கிலோவிற்கு அதிகமாக இருக்கிறது...விமான விதிமுறைகள் படி.... நான் கொண்டு செல்ல முடியாது.... அதனால் அந்த பேக்கிங் செய்யப்பட்ட லக்கேஜை பிரித்து வேறு ஒரு சிறிய பேக்கில் மாற்றிக் கொள்ள வேண்டும் அப்போது நேரம் 21:20 எனது விமான நேரம் 23:00....கைக்குழந்தையோடு மனைவி....ஒரு ஓரமாய் என்ன செய்வதென்றறியாமல் விழிக்கிறார்....எங்கிருந்தோ ஓடி வருகிறார் ஒரு பாகிஸ்தானி பட்டான்...க்யா... முஸ்கீலே சாப்... என்று கேட்கிறார் எனக்குத் தெரிந்த அரை குறை இந்தியில் விளக்கியதை விளங்கிக் கொண்டு... என்னை போய் அருகில் இருக்கும் ஒரு டூட்டி ஃப்ரீ கடையில் சிறிய பேக் ஒன்று வாங்கிவரச் சொல்லி....விட்டு எனது பதிலுக்கு காத்திராமல் என்னுடைய லக்கேஜை... பிரிக்க ஆரம்பிக்கிறார்...! பிறகு... நான் கொண்டு வந்த பேக்கிற்கு சில பொருட்களை மாற்றிவிட்டு.... பழை பேக்கிங்கை சரியாக கட்ட எனக்கு உதவி செய்து விட்டு... அபி.. அச்சா ஹே சாப்..ன்னு சொல்றார்... நான் அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிய போது .....அல்லா...கரீம் சாப் ந்னு சொல்லிட்டு... சிரித்துக் கொண்டே ஓடிவிட்டார் அந்த கூலித் தொழிலாளி!


நிகழ்வு 3

சுமார் 22:30 பாஸ்போர்ட் கண்ட்ரோலில் மிகப்பெரிய வரிசையில் நேரம் அதிகமாகிவிட்ட டென்சனில் நானும் என் மனைவியும் குழந்தையும்...அந்த வரிசையில்....எப்படியும் நேரம் ஆகிவிடுமே என்ற கவலை வேறு.....அப்போது அங்கே மேற்பார்வையில் ஈடு பட்டிருந்த அதிகாரி (அரபி) ஒருவர்.... நாங்கள் கைக்குழந்தையோடு இருப்பதை பார்த்து விட்டு....வரிசையை விட்டு விட்டு நேரே கவுண்டருக்கு அழைத்தார்.... நேரே செல்லுங்கள் என்று கூறி சைகையில் சொன்னார்... நன்றியோடு அவரது முகத்தை நோக்கிவிட்டு.அந்தப் பகுதியையும் கடந்து சென்றோம்

காட்சி 2

திருச்சி விமான நிலையம்
நேரம்: காலை 7 மணி


நிகழ்வு 1


தாய் நாட்டை வானத்திலிருந்து பார்த்த உடனேயே...இரவு முழுதும் பயணம் செய்த அயர்ச்சி எல்லாம் போக...விமான நிலைய ஓடுதளத்தில் இருந்து இறங்கி.....திருச்சி விமான நிலையத்தின் உள்ளே நுழைகிறோம்....தொடர்ச்சியான பயணமும் சீதோஷ்ண மாற்றமும் என் குழந்தைக்கு காய்ச்சலை ஏற்படுத்தி விட்டது, அழுது கொண்டிருந்த அவளை தோளில் தூக்கிய படி ஒரு கையில் ஹேண்ட் லக்கேஜ் எடுத்த படி குடியேற்றப் பகுதியினுள் நுழைகிறோம்...

...துபாய் ஏர்போட்டில் உயர்தர நவ நாகரீகமாக நடந்து கொண்ட நமது குடிமக்கள்..தாய் நாடு வந்த வுடன் மிருகங்கள் ஆகி விட்டார்களா என்று திடுக்கிடலோடு பார்த்தேன்....ஆமாம்....யாரும் லைன் ஃபார்ம் பண்ணவும் இல்லை...சீர் படுத்தவும் யாரும் இல்லை...சினிமா தியேட்டர் கவுண்டர் போல வலிவுள்ள ஆட்கள் எல்லாம் முண்டி அடித்துக் கொண்டு குடியேற்ற அதிகாரியை சூழ்ந்து கொண்டிருந்தார்கள் அவரும் எந்த அக்கறையுமின்றி கையில் கிடைத்த பாஸ்போர்டை வாங்கி அதட்டோடு ஏதோ கேட்டு கேட்டு ஸ்டாம்ப் செய்து கொண்டிருந்தார்.

நான் துபாய் குடியேற்ற அதிகாரி வழிவிட்டு அனுப்பினாரே என்ற எண்ணத்தில்....குழந்தையோடு அவரிடம் சென்று....சார்...குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை....கொஞ்சம் எங்களை அனுமதிக்கிறீர்களா என்று கெஞ்சும் தோரணையில் கேட்டவுடன்....என்னை முறைத்துப் பார்த்து....போங்க சார்...போங்க...போய் லைன்ல நில்லுங்க...கொஞ்ச நேரம் காத்திருக்க மாட்டீர்களா? என்று அதட்டினார்.....லைன் எங்க சார் இருக்குன்னு கேட்க நினைத்த நான்....பேசாமல் சென்று ஒரு மூலையில் நின்று விட்டேன்.....கூட்டம் போகட்டும் என்று......

நிகழ்வு 2

குடியுரிமைப் பகுதியில் கேட்கப்பட்ட எல்லா கடுமையான கேள்விகளையும் (கடைசியா எப்போ போனீங்க....? இந்தியாவில் உங்கள் வீட்டு முகவரி என்ன போன்ற....கஷ்டமான) கடந்து சுங்கம் எனப்படும் கஸ்டம்ஸ் பகுதிக்கு வந்தோம்...மீசை முறுக்கிய படி இருந்த அதிகாரி.....என்ன வேல்யூ ஆன பொருள் ஏதும் இருக்கா....(என் மனைவி நகையை மறந்து போய்ட்டேன்..) என்று கேட்டார் நான் அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல சார்ன்னு சொன்னேன் சரி நீங்க போகலாம்னு சீல் குத்தி அனுப்பினார்.

ஸ்கேன் செய்யும் போது அவர்களுக்கு பெட்டியில் இருக்குன் நகை கண்ணில் பட்டு விட்டது... என்ன சார் நகை கொண்டு போறீங்க...இந்த பக்கம் வாங்கன்னு கூப்பிட்டவர்....என் மனைவியை பார்த்துட்டு..உங்க பேமிலியா...ன்னு கேட்டார்... ஆமாங்கன்னு சொன்னேன்....இங்க இருந்து அவுங்க போட்டுடு வந்ததுங்கன்னு சொன்னேன்...! சரி சரி போங்கன்னு சொன்னார்...அப்பாடா இவராச்சும் விட்டாரேன்னு வந்தா... பின்னால தனியா வந்து.... வழக்கமான கடமையை ஆற்ற ஆரம்பித்தார்...என்ன கேட்டார்னு எழுத விரும்பலை (சென்ஸார்)


நிகழ்வு 3

ஒவ்வொரு லக்கேஜ் ஆக எடுத்து வைத்துக் கொண்டிருதேன்....தானாகவே வந்த ஒரு விமான நிலைய உதவிப் பணியாளர்.....விடுங்க...சார்.... நான் எடுத்து வைக்கிறேன்.... நவுருங்க சார்ன்னு சொல்ல சொல்ல கேட்காம....எடுத்து வைத்து வலுக்கட்டாயமாக வண்டியையும் தள்ளிக் கொண்டு.... வெளியே வந்தார்....ச்சே....எவ்வளவு நல்ல மனிதர்கள் நம்ம ஊரிலும் இருக்கிறார்கள் என்ற எண்ணம் நிற்பதற்கு முன்னல்...வாசல் வருவதற்கு முன்னாலேயே (வெளியே நம்ம ஆளுங்க எல்லாம் நிப்பாங்கள்ள!) காசு கொடு(!!!) சார் என்றார்...சரி உதவி செய்திருக்கிறார் என்ற எண்ணத்தில்.....20 ரூபாய் எடுத்துக் கொடுத்தேன்....அதைக் கேவலமாக பார்த்த படி... என்ன இது....? என்று அலட்சியமாய் கேட்டார்....150ரூபாய் வாங்குறது எப்பவும்.... நீ (!!!) 100 கொடு போதும் என்று கட்டளையிடுவது போல வாக்குவாதத்தில் இறங்கினார்.....100ரூபாய் கொடுத்து விட்டு மேற்கொண்டு வண்டி தள்ள முற்பட்டவரை தடுத்து விட்டு நானே வண்டி தள்ளிக் கொண்டு என் மனைவியின் முகத்தைப் பார்த்தேன்....அவள் பாவமாய் என்னைப் பார்த்தாள்.....எங்களுக்குள் ஏதேதோ கேள்விகள் இருந்தாலும்......விடை தெரியாமல் ஏர்போட்டை விட்டு வெளியே வந்தோம்.......மெளனமாய்....

உறவுகளைப் பார்த்தவுடன் இவை எல்லாம் மறந்து போனாலும்....1 வருடமாக தொடர்ச்சியாய் என்னுள் கேள்விகள் சில மட்டும் இருந்தன....அதை உங்கள் முன் இன்று இறக்கி வைக்கிறேன்....

1) யாரோ ஒரு பிலிப்பினோவும்......பாகிஸ்தானியும் பாசத்தொடு உதவும் போது எம்மக்கள் பொருளுக்காய் மனிதாபிமானம் காட்டுவது அவன் தவறா இல்லை....இப்படி அவனை அலைய விட்ட அரசாங்கத்தின் தவறா?

2) கரிசனத்தோடு....ஃபேமிலியா சார் என்று கேட்டு மேற்கொண்டு செல்ல அனுமதித்த சுங்க அதிகாரி..இனாம் வாங்க அனுமதித்தது அவரது குடும்ப சூழ் நிலையா? இல்லை என்னைப் போல் வெளி நாட்டிலிருந்து வந்த மக்கள் தங்கள் சுய நலத்துகாக கொடுத்து கொடுத்து பழக்கியதன் காரணமா?

3) அதிகாரி என்றாலே நமது நாட்டில் ஏன் அதட்டுகிறார்கள்? இது பள்ளியில் இருந்தே ஆசிரியரிடம் கற்று வந்த பழக்கமா? இல்லை.....தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற ஆணவமா? உங்கள் துறையின் அதிகாரிதானே நீங்கள் ....வேறு துறையில் உங்களுக்கு எல்லாம் என்ன தெரியும்?

4) பொருளாதர ரீதியாக துபாய் போன்ற நாடுகள் முன்னேறி இருக்கின்றன.....ஆனால் இங்கே நான் குறிப்பிட்ட எந்த விசயத்திலும் பொருள் இல்லை மனிதவளமும்... நேயமும் பற்றிய விசயங்கள்தானே....அப்படியானால் பொருளாதரத்தை பொறுத்துதான் மனித நேயம் கூடவா?

5) வெளி நாட்டில் இருக்கும் வரை அந்த அந்த நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்கும் நமது மக்கள் நம்ம ஊருக்கு வந்தவுடன்....ஏன் அதிக ஆடம்பரம் காட்டுவதும்.....மேலும் நமது சட்டதிட்டங்களை கேவலமாக பேசுவதுமாக ஒரு அதிக பிரங்கித்தனம் காட்டுகிறார்கள். சர்வதேச சமுதாயம் கற்றுக்கொடுத்த நல்ல விசயங்களை ஏன் நீங்கள் நமது ஊரில் பின் பற்றுவதில்லை?

என்னைப் பொறுத்த அளவில் அன்பு காட்டவும் , அரவணைக்கவும்....ஆறுதலாய் பேசவும்.... இருக்கையில் இருந்து எழுந்து பெரியவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும், குழந்தை வைத்துள்ளவர்களை அமரச் செய்யவும்......பணம் தேவையில்லை.....மனம் போதும்!



தேவா. S

Comments

Chitra said…
/////அதிகாரி என்றாலே நமது நாட்டில் ஏன் அதட்டுகிறார்கள்? இது பள்ளியில் இருந்தே ஆசிரியரிடம் கற்று வந்த பழக்கமா? இல்லை.....தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற ஆணவமா? உங்கள் துறையின் அதிகாரிதானே நீங்கள் ....வேறு துறையில் உங்களுக்கு எல்லாம் என்ன தெரியும்?////

/////வெளி நாட்டில் இருக்கும் வரை அந்த அந்த நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்கும் நமது மக்கள் நம்ம ஊருக்கு வந்தவுடன்....ஏன் அதிக ஆடம்பரம் காட்டுவதும்.....மேலும் நமது சட்டதிட்டங்களை கேவலமாக பேசுவதுமாக ஒரு அதிக பிரங்கித்தனம் காட்டுகிறார்கள். சர்வதேச சமுதாயம் கற்றுக்கொடுத்த நல்ல விசயங்களை ஏன் நீங்கள் நமது ஊரில் பின் பற்றுவதில்லை?///


......நாங்களும் ஒவ்வொரு முறை இந்தியா வரும் போதும், கேட்டுக் கொள்ளும் அதே இரண்டு கேள்விகள்...... இதற்கே பல பதிவுகள் போடலாம். அவ்வளவு "பீலிங்க்ஸ்' இருக்கு. அப்புறம், நீங்க இன்னொரு kerchief container தான் அனுப்ப வேண்டும். ஹா,ஹா,ஹா,ஹா.....
ஆமாம்... எங்கே தொலைத்தோம் அந்த மனதை
Sketch Sahul said…
எனக்கும் இது போல் அனுபவங்கள் ஏற்பட்டதுண்டு..துபையில் இருந்து வரும் போது என் நண்பர் கொடுத்தார் என்று ஒரு பார்சல் வாங்கி கொண்டு வந்தேன் .அதில் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் இருந்திருக்கிறது.எனக்கு தெரிய வில்லை.இதில் என்ன இருக்கிறது என்று கஸ்டம்ஸ் இல் கேட்டார்கள் ..நன் தெரிய வில்லை என்று சொன்னேன்..உடனே அங்கு உள்ள உயர் அதிகாரி (அரபி) வந்து அவரே பிரித்து பார்த்தார் ...ஹார்ட் டிஸ்க்கை பார்த்து விட்டு ..என்னிடம் முறை மன்னித்து கொள்ளுங்கள் சார் என்று சொல்லி விட்டு அவரே பிரித்த பேக்கேஜை கட்டி கொடுத்தார் ..
சென்னையில் ஒரு முறை பேக்கஜை பிரித்து பார்த்து விட்டு ,,அப்படியே அதை காலால் உதைத்து தள்ளி விட்டு போய்விட்டார்..அதை நான் கட்டி கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து ..யோவ் ஓரமா போய் க்கட்டுயா என்றார் ..
இவனுங்கல்லாம் அதிகாரியா? பொறம்போக்கு நா......க ........செருப்ப கழட்டி அடிக்கணும்
Raji said…
Its true...people these days could not afford to be hospitable..enna panam, panam, panam. Somewhere, deep inside the hearts Indians dont have respect for their own land and their own people. Its sad...anaal nalla manushanga namma ooril irukaanga annachi...very simple village and small town people are still like that..thedipaarunga...kidaikkum :)
வெளி நாட்டுல, வேலைய..வேலையா பார்க்கிறாங்க..
இங்க ..நாட்டையே அவனுகளுதா பார்க்கிறானுக..
அதுதான் சார் பிரச்சனை..

அதுக்கு ஒரே மருந்து.. நம்ம பேர்ல கடைசியா “நிதி”.. இல்ல “மாறன்”னு சேர்த்துக்க வேண்டும்..
உங்கள் பழைய பதிவுகளைப் படித்தேன்.. சூப்பரா எழுதியிருக்கீங்க..

நிறைய எழுதுங்க தேவா..

வாழ்த்துக்கள்...
S Maharajan said…
//என்னைப் பொறுத்த அளவில் அன்பு காட்டவும் , அரவணைக்கவும்....ஆறுதலாய் பேசவும்.... இருக்கையில் இருந்து எழுந்து பெரியவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும், குழந்தை வைத்துள்ளவர்களை அமரச் செய்யவும்......பணம் தேவையில்லை.....மனம் போதும்!//

மெய்யான வார்த்தைகள்
நீங்க கேட்ட அத்தனை கேள்விகளுக்கு
பதில் நிச்சயம் கிடைக்காது.
//யாரோ ஒரு பிலிப்பினோவும்......பாகிஸ்தானியும் பாசத்தொடு உதவும் போது எம்மக்கள் பொருளுக்காய் மனிதாபிமானம் காட்டுவது அவன் தவறா இல்லை....இப்படி அவனை அலைய விட்ட அரசாங்கத்தின் தவறா?//

என்ன தேசமோ? இது என்ன தேசமோ?
விலைமாதர்களிடம் வேதாந்தம் பேசுவது போல் இருக்கிறது உங்கள் பதிவு. மன்னிக்கவும்....இந்த காட்டுமிராண்டிகளை விலைமாதர்களுக்கு ஒப்பிட்டு அவர்களை அவமானப்படுத்தி விட்டேன். கல்தோன்றி முன் தோன்றாக் காலத்து மூத்த இனமாம் நமது இனம். நம்மிடம் இல்லாததையெல்லாம்... செய்ய முடியாததை எல்லாம் எழுதி வைத்து பேசி மகிழும் ஈனத்தனமான இனத்துக்கு சொந்தக்காரர்கள் நாம். செல்லரித்து போன ஒழுக்கத்தை செப்பனிட முடியாது. விடுங்கள் சார்...
மிகவும் அருமையான, உண்மையான பதிவு... அனேகமாக வெளிநாடுகளில் வாழும் ஒவ்வொரு இந்தியருக்கும் இதுபோன்ற அனுபவங்கள் இருக்கும்... எனக்கே பல அனுபவங்கள் உண்டு. சாதாரணமாக நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வதோடு சரி.

இதனை இதுபோன்ற பதிவில் கொண்டுவந்ததற்காகவே உங்களுக்கு ஒரு சபாஷ்!!! (கைகளைத் தட்டிக்கொண்டேன் மாப்ள..)
Anonymous said…
But if you compare with saudi arabia India is 100% better. In Saudi Arabia you have wait for Immigration Minimum 3 hours for the first time and 1 hour for re-entry.
Anonymous said…
Govt need to educate the officials in the Trichy airport..Most of then dont have service metality..
Need to educate them to undrestand how to behave ..
Paleo God said…
இடுகையும், பின்னூட்டங்களும் அருமை!

தொடருங்கள்!
Good citizen said…
இந்த அனுபவம் ஒவ்வொரு வெளிநாட்டுவாழ் இந்தியனுக்கும் உண்டு,,பணத்துக்காக இவனுங்க பொண்டாடிய கூட கூட்டிக் கொடுப்பானுங்க, இவனுங்ககிட்ட மனிதாபிமானமொ உதவியொ கண்டிப்பா எதிர்ப்பாக்காதிங்க,,இதனாலேயே நான் இந்தியாவுக்கு அடிக்கடி வருவதை நிறுத்திவிட்டேன்,
இந்தியக் கஷ்டம்ஸ் அதிகாரிகளைப்போல மட்டமானவகளை நான் எந்த நாட்டிலும் பார்க்கவில்லை ,,பொறம்போக்குகள்
dheva said…
சித்ரா @ ....ஒரு கர்ஃசீப் பேக்டரியே நான் ஆரம்பிக்கணும் போல இருக்கே......உங்கள அடுத்த பதிவுல சிரிக்க வைக்கிறேன்....ஆமாம்...தலைவர் பத்தி எழுதினா உங்களுக்கு தனி சந்தோசம் வருமே....!
dheva said…
கதிர்@ பின்னூட்டத்திற்கு நன்றி...கதிர் சார்...! உங்க கவிதையில சொன்ன மாதிரி..மறதிதான் சார் எல்லாருக்கும்....மனித நேயத்தை மறந்ததால இந்த பிரச்சினை எல்லாம்!
dheva said…
ராஜா @ நீங்கள் சொல்வதில் கண்டிப்பாய் உண்மையிருக்கிறது..... நான் பல தடவை பார்த்துள்ளேன்....கட்டிட வேலை செய்யும் நமது தோழர்கள் நாட்டுக்கு திரும்பும் போது அவர்களை பயமுறுத்தி...சிகரெட் பாக்கெட்...மது என பறிப்பதும்... மேலும் இவர்கள் டீல் செய்யும் விதமும் கொடுமையாய் இருக்கும்...மேலும் மிகைப்பட்ட சகோதரர்கள் பயந்து போய் பணம் கொடுக்கும் சம்பவங்களும் நடந்தேறி இருக்கிறது...! நேர்மையாக நாம் உள்ளபோது பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை தோழர்களே!
dheva said…
ராஜி @ நீங்க சொல்வது கரெக்ட்.... நல்ல ஆட்கள் இல்லை என்று நான் சொல்லவரவில்லை....மிகைப்பட்ட வெள்ளை உள்ளங்கள் இருக்கும் அதே நேரத்தில் இது போன்ற புல்லுருவிகளுகு உள்ளார்களே... ராஜி....! இந்தியன் தாத்தா பாணியில் களை எடுக்கணும்...ஹா...ஹா...ஹா!
dheva said…
இந்திரத் தேவன் @ உங்களின் ஆதங்கத்தில் அர்த்தம் உள்ளது.... நாம் நம்மால் முடிந்த அளவிற்கு மக்களுக்கு விழிப்புணர்வூட்டலாம் அல்லவா....! உங்களின் வருகைக்கும் வலுவான பின்னூட்டத்திற்கும் நன்றிகள்!
dheva said…
பட்டா பட்டி @அண்ணாச்சி...வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிட போறங்க...! ஹா ஹா....ஹா....உங்களி வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றிகள்...தொடர்ந்து வாருங்கள்!
dheva said…
மகராஜன்....@ நன்றிகள்
dheva said…
சிறுகுடி மாப்பு @ கை தட்டல் இங்கே கேக்குதுடா....
dheva said…
moulefrite @ நன்றி...
Anonymous said…
well said.i had the same experiance.once when i was returning to u.s one officer even charged tax for my 10 mth old baby.eeven though she wasnt born in india.this happened in 2001.
also our peoples mentality should change .last year at meenambakkam airport one familly didnt bother to wait in queue seeing them others followed it.disgusting.indha makkalai thirutha mudiyadhuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu
Bala said…
வழி காட்டும் தலைவன் எல்லாம் வழி தவறியதால் வந்த வினை
malar said…
உங்கள் பதிவில் எழுதிய அனைதும் எனகும் பழக்க பட்டவை...

மிகவும் அருமையாக எழுதி இருக்கேங்க...
dheva said…
//Thanks Bala//


//மிக்க நன்றி மலர்!//
Anonymous said…
naama inga parthavatrai namma oor kaaranga parkaliye nanba.
OK neengal solrathu unma than.
yena nnangalum anubavichomla.

by
patttasu.blogspot.com
Anonymous said…
Deva, same its happen to me. true. but one thing you have to remember. its our country (india). culture is different. if you travel via chennai airport. you wont feel anything. One more thing,,if you are in gulf country try to read gulf news second page.you will find what the situation.

Proud to be indian.

ashik
Anonymous said…
well said.you have expressed most of our feelings. But intha mathiri porumaratha thavira vera enna seyya mudiyuthu?.
அருமையான பதிவு தேவா.

நாட்டை நேசிக்கிற எல்லோருக்கும், இதுமாதிரி கூசிப் போகவும் நேர்ந்து விடுகிறது.
Riyas said…
உங்களின் ஆதங்கம் பலருக்கு உண்டு... என்ன செய்வது மனித நேயம் என்ன விலை என்று கேட்கவேண்டியதாயிற்று...

Riyas
மனிதம் தின்று மனம் தொலைத்து பணம் பின்னால் அலைந்து திரியும் அதிகாரிகள் மாறுவார்கள். எப்போது? தங்கள் குடும்பம் நிர்கதியாய் அலையும் போது?
Anonymous said…
well said .this is the experience and feeling of all who are returning from abroad.
we must remember the tamil saying " ethirparthal yemanthu povai " and nammal mudintha nanmaikallai namm seivom".also remember telling is easy than following.
the main reason is the envy developed by our makkal towards person living abroad.
VR said…
Dear Friend,

Though I fully agree with your views and respect your thoughts, I am apprehended with few things.

1. Why do you opt for the Air Lanka when there are plenty of services available? Do you recollect the campaign so many blogers have raised to boycott the racist Srilankan government’s Air Lanka? If you stress the humanity and human value in one side (through your articles in your blog) and start supporting the inhumanity in other side (by using the Air Lanka’s service), I fear that you may be one among the “Indian Hypocrites”.

2. When the Customs officer asked about the jewels in your baggage and let you go after asking whether that is your wife’s, then why do you bribe him? You would have explained him that they are used. Despite the fact that he has let you go, and followed you for bribe, you still would have very much avoided him or explained him that you can not pay the bribe. Well… this might have consumed some of your time. But by refusing bribe, you would have taught him a lesion or at least discouraged his lust for bribe. But giving him the bribe, you have encouraged his sleazy intention of greediness and bread the bribe fanatism.

Don’t you think that you are also a part of this crime? As per the legal law giving bribe is also a wrong doing. No need to stress this ethically.

If you are resentful against the points that were mentioned in your post, please be understand that people like you are fully responsible for such situation as you people want quick fixes wherever you go without bothering others and leaving such scenario behind.

What moral rights you have then to curse this or express your indignation, when you are a party of it?

Swamy.
VR said…
dheva said...

ராஜா @ நீங்கள் சொல்வதில் கண்டிப்பாய் உண்மையிருக்கிறது..... நான் பல தடவை பார்த்துள்ளேன்....கட்டிட வேலை செய்யும் நமது தோழர்கள் நாட்டுக்கு திரும்பும் போது அவர்களை பயமுறுத்தி...சிகரெட் பாக்கெட்...மது என பறிப்பதும்... மேலும் இவர்கள் டீல் செய்யும் விதமும் கொடுமையாய் இருக்கும்...மேலும் மிகைப்பட்ட சகோதரர்கள் பயந்து போய் பணம் கொடுக்கும் சம்பவங்களும் நடந்தேறி இருக்கிறது...! // --------- நேர்மையாக நாம் உள்ளபோது பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை தோழர்களே! --------//

Then why have you bribed?
//தானாகவே வந்த ஒரு விமான நிலைய உதவிப் பணியாளர்.....விடுங்க...சார்.... நான் எடுத்து வைக்கிறேன்.... நவுருங்க சார்ன்னு சொல்ல சொல்ல கேட்காம....எடுத்து வைத்து வலுக்கட்டாயமாக வண்டியையும் தள்ளிக் கொண்டு.... வெளியே வந்தார்....//

எனக்கும் இதே அனுபவம் நடந்தது தேவா.. நானும் இப்படி தான் பூரித்து போனேன்.. பிறகு வெளியில் வந்ததும்,,,, இந்திய ரூபாய் வேணாம்.. டாலர்-ஆ குடுங்கன்னு கேக்கறாங்க.. ஹ்ம்ம்.. ஹ்ம்ம்..ரொம்ப கஷ்டம்..

தேவையான பதிவு.. மனமார்ந்த வாழ்த்துக்கள்..

(பி.கு: லேட்டா வந்ததுக்கு.. மன்னிக்கவும்)
ithepol, chennaiyil irunthu singaikku thanathu annanai kaan sendra oru padiparivu athigam illatha oru thambiyai nee angu sendru tirumbi varamattai endru solli namathu atigarigal anupavillai. ithu etho oru pathivil padithathu
dheva said…
மிக ஆழமாக எனது பதிவினை வாசித்து...பின்னூட்டத்தின் மூலம் தனது கருத்தை வலுவாக பதிவு செய்துள்ள திரு. ஸ்வாமி அவர்களுக்கு...வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்! முதலாவதாக தமிழிலேயே....பின்னூட்டம் எழுதிவிடுகிறேன்....அப்போது தான் என் எண்ணம் தெளிவாக வெளிப்படும்!

1) நீங்கள் எந்த நாட்டில் வசிக்கிறீர்கள் என்று தெரியவில்லை, நான் பணி புரிவது துபாயில்...எமக்கு வருடம் ஒரு முறை பணி புரியும் நிறுவனம் தான் விமான டிக்கெட் கொடுக்கிறது, அப்போது எந்த விமான டிக்கெட் மிக குறைந்த விலையில் கிடைக்கிறதோ அதில்தான் எடுத்து கொடுப்பர்கள். என்னுடைய சொந்த ஊர் திருச்சிக்கு பக்கம் என்பதானால் நான் அங்குதான் செல்ல வேண்டும் ...அந்த நேரத்தில் லங்கா பிளைட்டில் சலுகை விலையிலி மிக மலிவாக அறிவித்திருந்தார்கள் என்பதால் அலுவலக நிர்வாகம் அதில் டிக்கெட் புக் செய்து விட்டார்கள்....அவர்களிடம் சென்று எனது தமிழுணர்வை காட்டி எனக்கு வேறு விமானத்தில் டிக்கெட் எடுங்கள் என்றூ சண்டையிட வேண்டும் என்பது பகுத்தறிவான செயலா? நீங்கள் சொல்லுங்கள்?

இலங்கைத் தமிழனுக்கு உதவ வேண்டும் என்றால் அவனுக்கு இந்த நிலையை ஏற்படுத்திய அரசியல் கட்சிகள் மீது தான் நமது மக்கள் கோபம் காட்ட வேண்டும்...அதற்கான சிறிய பங்களிப்புதான் இந்த வலைப்பூ...மற்றும் பதிவுகள்.... நான் என்னவோ ராஜ பக்ஸேக்கு பொருளாதர உதவி அழித்த ரேஞ்சுக்கு சொல்லியிருக்கிறீர்கள் (ஹா...ஹா....ஹா.... ) நல்ல கதை சார்....உங்கள் கோபத்தை வரும் தேர்தலில் காட்டுங்கள்! நான் ஹிப்போகிரட் இல்ல சார்....சராசரி சமுதாய கோபங்கள் கொண்ட ஒரு தமிழன்!

2) என்னுடைய பதிவை இன்னுமொரு தடவை படிங்க....சார்! நான் லஞ்சம் கொடுத்தேன் என்று எந்த இடத்திலும் கூறவே இல்லை....அவர் என்னிடம் கேட்டார் என்பதை நாகரீகம் கருதி மென்மையாய் இலை மறைவு காயாய் கூறியுள்ளேன்.... இவ்ளோ எழுதுற நான் லஞ்ச்ம் கொடுத்திருப்பேன் என்றா நினைக்கிறீர்கள்..... நெவர்...ஒவ்வொரு துளி ரத்தமும் சிந்தி ...உற்றார் உறவுகளை விட்டு ...குடும்ப சுமையை குறைப்பதற்காக வெளி நாடு வந்தவர்கள் நாங்கள்.....! அவரிடம் நான் கொடுக்க முடியாது என்ற என் நிலையை விளக்கி விட்டுத்தான் வந்தேன்! லக்கேஜ் கொண்டு வந்த பையன் எனக்காக வேலை செய்து விட்டான்....ஆனால் அவன் விலைதான் கூடுதல் ....அதில் என் தவறு இருக்கிறது....அவன் உதவி செய்கிறான் என்று நான் நினைத்த இடம் தான் தவறு....(அதற்கு ரூபாய் 100 அபராதம்)!

ரொம்ப நெகிழ்ச்சியோடும் மகிழ்ச்சியோடும் உங்களுக்கு பதிலளிக்கிறேன் ஸ்வாமி சார்! உங்களின் கேள்வி சில தெளிவுகளை வாசிக்கும் நண்பர்களுக்கு கொடுத்திருக்கும்...இதற்கான நல்ல வாய்ப்பளித்த உங்களுக்கு அனேக நமஸ்கார்ங்கள்! தொடர்ந்து வந்து எனது பதிவுகளுக்கு உங்களது நேர்மையான கருத்துக்களை அளியுங்கள் சார்!
dheva said…
என்னடா....எல்லோரும் வந்தாச்சு...ஆனந்திய காணோம்னு பார்த்தேன்....லேட்டா வந்தாலும்...லேட்டஸ்ட்டா வர்றீங்க போலிருக்கு...மிக்க நன்றி....!
VR said…
Dear Warrior,

Many thanks for your immediate response. I am sorry to type in English as I am not good in typing in Tamil. Your inputs to my feedback have filled up the gaps in your article. However, without these, the reader may not get the full picture of the episode you have explained. If you feel that my questions were in the tone of reproving you, then my sincere apologies for that. I have no intention to arraign, but as a reader of your blog for a long time, I wanted to sincerely express my apprehensions to you. Perhaps, this is the first time, I gave feedback in your blog.

Once again, I appreciate your insightful thoughts and wish you to keep giving your contributions though your writings.

Swamy.

PS: Well… I have never tried to state anything that you have rendered economical support to the inhuman srilankan president, but reminded the campaign and it’s importance by so many blogers to boycott srilankan product or services.
dheva said…
//ஆசிக் @ நன்றி....//

//பட்டாசு....உங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி//

//ப.ரா சார்.... நீங்கள் கூட பலதடவை அனுபவித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்! நன்றிகள்!//

//ஜோதிஜி & மணி... வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்
Anonymous said…
இது தான் நம்ம இந்தியாக்கும் வெளிநாட்டுக்கும் உள்ள வித்தியாசம் .....நம்ம ஆளுங்க எல்லாரும் பணத்துக்கு பின்னாடி ஓடிட்டு இருக்காங்க மனிதாபிமானம் பற்றி இவர்கள் யோசிக்கறதே இல்லே ..
.என் முதல் ப்ளாக் பார்த்து படிச்சு பதில் எழுதினதுக்கு ரொம்ப நன்றி...நீங்க ரொம்ப நல்லா எழுதிறிங்க...வாழ்த்துக்கள் ...
இதை போல் நிகழ்வுகள் எனக்கும் சில வருடங்களுக்கு முன் நடந்து இருக்குயறது. இப்பொழுதெல்லாம் நிறைய மாற்றத்தை காண முடிகிறது
திருச்சியை போல் இல்லாமல் சென்னையில் கடந்த சில முறை எல்லோரும் அன்போடு தான் வழியனுப்பினர். சில இடங்களுக்கு ஆட்டோவில் பயணிக்கும்போதும் அவர்கள் அதிகம் பெற மறுத்து விட்டனர்.
இவை ஆச்சர்யத்தையும் சந்தோஷத்தையும் தந்தது. சில ஆண்டுகளில் லஞ்சம் ஒழிந்து விடலாம் என்று நினைக்க தோன்றிற்று. ஆனாலும் ஆயிரம் கொடிகளில் ஊழல்களை பார்க்கும் பொது மக்கள் மனம் பிறழ
வாய்பிருகிறது. இப்படி மாற நினைக்கும் மக்கள் கூட வெறுத்து போகக் கூடும். மற்றும், திருச்சியில் விமானங்கள் வரவு கம்மி யாகையால் அவர்கள் சம்பளம் மற்றும் குடும்ப சூழல் கூட காரணமாயிருக்கலாம்.
இருந்தும் நல்ல பதிவு நண்பரே.
அன்பின் தேவா

உண்மை உண்மை - எனக்கும் இது போன்ற அனுபவங்கள் உண்டு - குடியேற்ற அதிகாரிகள் இன்னும் மாறவில்லை. அவர்கள் அப்படி இருக்க நாமும் ஒரு காரணமோ ... நாமும் கொஞ்சம் விதிமுறைகளை மதித்து நடந்து கொண்டால் அவர்களும் நம்மை மதிப்பார்களோ .... முதன் முறை செல்லும் போது விதி முறைகள் அறியாத காரணத்தினால் நாம் படும் பாடு .....

மனிதம் வளரும் - நம்பிக்கையோடு இருப்போம்

நல்வாழ்த்துகள் தேவா
நட்புடன் சீனா

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த