Skip to main content

தமிழீழம் வென்றெடுப்போம்....!


என்னமோ...விடுதலைப்புலிகளை கூண்டோடு அழித்து விட்டோம்...வெற்றி கண்டு விட்டோம் என்று கொக்கரிக்கிறாயே...ராஜ பக்ஸே உன் கூட சேர்ந்து உன் ராணுவமும் கொக்கரிக்கிறதே...உங்களுக்கு எல்லாம் வெட்கமாக இல்லையா? உள் நாட்டுக்குள் விடுதலை கேட்டு தார்மீக அடிப்படையில் உங்களின் அராஜகம் தாங்காமல் போராடிய ஒரு இளைஞர் கூட்டதை அழிக்க.....உலக நாடுகள் எல்லாம் வரவேண்டும் என்றால்....மறவர் படையின்...மரத் தமிழனின் வீரம் எத்தகையது என்று நாம் உணர முடியும்.

வல்லரசுக் கனவோடு....இன்னும் ஊழல் நிறைந்த சாக்கடை அரசியல் நடத்தி கொண்டு....மகாத்மாவின் பெயரை சொல்லிக் கொண்டு.......பழிவாங்கும் உணர்வையும் மென்று வெற்றிலை போட்டு தன் மேலேயே...உமிழ்ந்து கொண்ட....பாரதமே.... நீங்கள் எதையும் சாதித்து விட வில்லை....என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்....மேலே...சீனாகாரன் வருவான் உங்களை கேள்வி கேட்க....அப்போது முடிந்தால் பதில் சொல்லுங்கள்...! இலங்கையில் நீங்கள் செய்திருப்பது....முரசு கொட்டிய வெற்றியில்லை....கேவலமான.....அசிங்கம்.....தரும புத்திரர்களே.....ஏன் சகுனியைப் போல் நடந்து கொண்டீர்கள்....வாழ்விழந்த மக்களின் சாபம்..என்னவெல்லாம் உங்களை செய்யுமோ?

இப்படி சீனாகாரனிடமும், பாகிஸ்தான்காரனிடமும்...பிச்சை எடுத்து ஒரு.... இன அழிப்பை நடத்திவிட்டு என்ன கொக்கரிப்பு வேண்டி கிடக்கிறது? வரலாற்றில்...ஒரு முக்கியமான விசயம் நடந்தேறி விட்டது....அதில் தமிழனின் பராக்கிரமம்....பொன்னெழுத்தில் பொறிக்கப்பட்டு விட்டது. அது என்ன தெரியுமா? ஒரு உள் நாட்டிற்குள் உரிமை கேட்டு போராடிய குழுவை ஒழிப்பதற்கு...உலகமே திரண்டு வந்து....சண்டையிட வேண்டிய நிலைமை....என்றால்....தமிழனின் வீரம் எத்தகையது என்று சொல்லத்தேவையில்லை....

தனியே....ராஜ பக்ஸேயும் அவரது....கூட்டணியும் போரிட்டு இருந்தால்.....சிங்களவனின்...சாம்பல் கூட மிஞ்சி இருக்காது...இந்த உண்மை உலகத்துக்கே தெரியும்.......! காலச்சக்கரம்...தன் சுழற்சியை...இன்னும் நிறுத்த்திவிடவில்லை....அந்த சுழற்சியில்...சூழ்ச்சி வேர்கள் கட்டாயம் அறுந்து போகும்.....!

முட்டாள் சிங்களவன் ஒரு பிரபாகரனை..ஒழித்துவிட்டதாய்...கொக்கரிக்கிறான்......ஆனால் ஒவ்வொரு உண்மைத் தமிழனும் இன்று பிரபாகரனாய் மாறி நிற்கிறான்...தமீழீழம் வென்றெடுக்க.....!


தேவா. S

Comments

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தன் சொன்னதாக பாடத்திட்டத்தில் எழுதி வைத்துள்ளனர், இதை சொன்ன புத்தன் மடையனா, இல்லை நம்மையெல்லாம் படிக்க வைத்துள்ளதால் நாம் மடையர்களா, புத்தம் தேசிய மதம் என வைத்துகொண்டு மாரடிக்கும் இலங்கையில் அன்பு உள்ளதா இல்லை அமைதி உள்ளதா மனிதனை மனிதனாக மதித்து அன்பையும் அறிவையும் போதிக்கவேண்டிய ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் படுகொலை நடத்தினால் கண்டிக்கிறது. இலங்கை சம்பவத்தில் ஏன் நடிக்கிறது
இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் இலங்கை எவ்வாறு திகழ்கிறது என்று தமிழன் தமிழனாக வாழவேண்டுமானால் தமிழ் ஈழம் அமைந்தே தீரவேண்டும் ஈழத்தின் விடுதலை நெருப்பு இலங்கையை எரிக்கட்டும் இனமான தமிழினம் எழுச்சியுடன் எழும்பட்டும் , இன்னல்களையே தன்னகத்தே கொண்டு இன்னுயிர் ஈந்த போராளிகளுக்கும் இனிய தமிழ் உறவுகளுக்கும் வீரவணக்கம் செய்வதோடு நின்று விடாமல் வீர சபதம் மேற்கொள்வோம்...
பொட்டில் அடித்தாற்போல் சொல்லிருக்கிறாய் நண்பா...

என்றும் வாழ்க தமிழ்! எங்கும் வெல்க தமிழனின் வீரம்!

வாழ்த்துக்கள்.
அன்பன்,
ராம்
Chitra said…
////வல்லரசுக் கனவோடு....இன்னும் ஊழல் நிறைந்த சாக்கடை அரசியல் நடத்தி கொண்டு....மகாத்மாவின் பெயரை சொல்லிக் கொண்டு.......பழிவாங்கும் உணர்வையும் மென்று வெற்றிலை போட்டு தன் மேலேயே...உமிழ்ந்து கொண்ட....பாரதமே.... நீங்கள் எதையும் சாதித்து விட வில்லை....என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.///


..... ம்ம்ம்ம்....... வேதனையான விஷயம்.
INDIA 2121 said…
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
நிச்சயம் ஒருநாள் தர்மம் வெல்லும்
visit my blog
www.vaalpaiyyan.blogspot.com
//இலங்கையில் நீங்கள் செய்திருப்பது....முரசு கொட்டிய வெற்றியில்லை //

மறுக்க முடியாத உண்மை..
உங்கள் மன வேதனையை உணர முடிகிறது.. சொன்ன விதம் சிறப்பு, தேவா.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த