Skip to main content

காசி.....!














வீடுகளுக்கு தண்ணீர் எடுத்துக் கொடுப்பது...வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கடையில் சாமான் வாங்கிக் கொடுப்பது என்பது தொடங்கி ஒவ்வொருவரின் அன்றாடத் தேவைகளுக்கு எல்லோரும் கூப்பிடும் பெயர் காசி. எப்பவும் மொட்டை அடித்து விடுவார் அதானல் பாதி வளர்ந்த நிலையிலேயே இருக்கும் அவரது தலை முடி பல சமயத்தில் அதுவே பெயராயும் போனதுண்டு. அரைக்கை வெள்ளை பனியனும் ஒரு மாதிரி பெண்கள் நொண்டி விளையாடும் போது அள்ளி சொருகிக் கொள்வது போல் கட்டப்பட ஒரு லுங்கியும் நெற்றி நிறைய பூசிய திரு நீரும் காசி அண்ணனின் அடையாளங்கள்....!

டேய்.. காசி...! ஏய்....லூசு....! காசிண்ணே....! எலேய்..கிறுக்கு..மொட்டண்ணே.....இது அவ்வப்போது மக்கள் தங்களின் வசதிக்கேற்ப கூப்பிடும் பெயர்கள். வேலை செய்யாமல் காசு வாங்க மாட்டார். அதிகம் பேசுவதுமில்லை... ரோட்டில் போகும் காசி அண்னனை அலுவலகத்தில் பணி செய்பவர்கள் முதல் தெருவில் குப்பைக் கூட்டும் தொழிலாளி வரை எல்லோரும் கிண்டல் செய்யும் போது அப்படி...அவரின் சீற்றமும் கோபமும் கடுமையாய் இருக்கும்...யாரையும் திரும்பிக் கூட பார்க்காத காசி அண்ணனை ஏன் இவர்கள் வம்பிக்கிழுக்க வேண்டும் என்று எனக்கு புரிவதில்லை ஆனால் வெறுமனே அவரின் சீற்றத்தை ரசிக்கவே ஒரு கூட்டமிருந்தது என்னவோ உணமை

எதேச்சையாய் அம்மாவிடம் கேட்டேன்...ஏம்மா காசி அண்ணன எல்லோரும் இப்படி பண்றாங்க...அவருக்கு எத்தனை வயசு ஆகுது ஏன் இப்படி எல்லோரும் அவரை கிண்டல் பண்றாங்க.. என்று கேட்டேன். " தம்பி அவனுக்கு 35 வயது ஆகுது என்று அம்மா சொல்லத் தொடங்கி நான் கேட்க ஆரம்பிக்கும் போது எனக்கு வயது 17.

காசி அண்ணன் நல்லாதான் இருந்துச்சாம் ஒரு ஆறு ஏழு வருசமாத்தான் இப்படி ஆயிடுச்சாம். அம்மா அப்பா தம்பி என்று எல்லோரும் இருந்தாலும் காசி அண்ணன் படுப்பது பிள்ளையார் கோவில் மரத்தடியில், வேலை செய்யும் வீட்டில் சாப்பிடுவார் ஆனால் பெரும்பாலும் அவர் சாப்பிடுவதை யாரும் பார்த்ததில்லை. உறவுகள் எல்லாம் பைத்தியம் என்று சொல்லி இவரிடம் பேசுவது இல்லையாம்..அதனாலேயே இவர் வீடு விட்டு வெளியே வந்து விட்டதாக அம்மா சொன்னதை விட மேற்கொண்டு தொடர்ந்து சொன்னதுதான் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது....

"அவன் அதிகமா படிச்சுட்டாண்டா....அதான் பைத்தியம் ஆகிட்டான்"

ஏறத்தாழ அந்த சொற்றொடர் என்னை குழப்பியது. அதிகம் படித்தால் அவன் அறிவாளி அல்லவா? அவன் எப்படி பைத்தியம் ஆக முடியும்? அப்புறம் ஏன் +2 பரிட்சைக்கு என்னை படி படி என்று கொல்லவேண்டும்..16 ட்யூசன் நான் படிக்க வேண்டும்....? எனக்குள் முரண்பட்டது... கேள்வியாய் மீண்டும் அம்மாவிடம் போய் விழுந்தது. ஆமாடா என்னமோ கிரந்தகமாம் அதுல ஏதேதோ படிச்சு இருக்கான் கடைசில லூசா போய்ட்டான்...அவ்ளோதான் தெரியும் என்று சொல்லிவிட்டு அடுப்பில் இருந்த சாம்பாரைப் பார்க்க அம்மா போய்ட்டாங்க.

கிரந்தம்.....என்பது ஒரு எழுத்துமுறை அது வடமொழியினையும் சமஸ்கிருதத்தையும் எழுத பயன்பட்டது என்பது பிற்பாடு எனக்கு தெரியவந்தது ஆனால் அந்த +2 படித்த 17 வயது அறிவுக்கு அது தெரியாது. கேள்விகளால் நிரம்பி வழிந்த காலம். அதிகம் படித்த ஒரு மனிதன் ஏன் இப்படி ஒரு உடை.. இப்படி ஒரு நடை... ஊராரின் கிண்டல் என்று வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். மாமா, சித்தப்பா, சொந்தம் , பந்தம், ஊர்க்காரர்க்ள் எல்லோருக்கும் காசி அண்ணன் பைத்தியம். வீட்டு வேலை செய்யும் ஒரு அஃறிணை.

மார்கழி மாதத்தில் அதிகாலையில் பஜனை செய்து முடித்து பிள்ளையார் கோவிலில் பொங்க சோறு கொடுப்பார்கள். பஜனைக்குப் போ என்று அம்மா வற்புறுத்தினாலும் பொங்கச் சோறு கிடைக்கும் அப்புறம் காலையிலேயே சில நண்பர்களை பார்த்து அரட்டை கச்சேரி நடத்தலாம்... ஒரு வேளை பக்கத்து தெரு பார்வதி கூட வரலாம் என்ற நப்பாசையில் ஞாயிற்றுக் கிழமைகளில் நானும் செல்வேன். பஜனைக்கு முன்...பிள்ளையார் கோவிலுக்கு பின் இருக்கும் குளக்கரையில் அமர்ந்து பேசிவிட்டு பின் கோவிலுக்குள் செல்வோம்.


ஒரு நாள் நான் தாமதாமய் வந்து விட்டேன்... கோவிலுக்குள் போவதற்கு முன் அந்த மார்கழி மாத அதிகாலை இருட்டில் கோவிலுக்குப் பின் சென்று நண்பர்கள் யாராவது இருப்பார்களா என்று தேடிக்கொண்டு கொண்டு குளக்கரையின் கீழே இறங்கி மறுபடியும் வேறு வழியே ஏறிய போது..


அரசமரத் திண்டில் யாரோ அமந்து இருந்ததைப் பார்த்து திடுக்கிட்டேன்... மெல்ல கிட்ட நெருங்கினேன்...என் இதயத்தின் லப் டப் அதிகமானது...ஓ.. சட்டையணியாமால்... ஒரு கால் மேல் இன்னொரு கால் போட்டு.... பத்மாசானத்தில்(அது பத்மாசனம் என்று பின்னாளில் அறிந்தேன்) கைகளை விரித்தபடி அமர்ந்திருப்பது யார்....? என்று பார்த்தபடி.. கிட்ட நெருங்கினேன்.....கொஞ்சம் பயமாகத்தான் இருந்துச்சு....


"காசி அண்ணன்......"


கண்களை மூடியபடி....அமர்ந்திருந்தார்.....!

அட செம லூசுதாண்டா... ! இந்தக் குளிர்ல சட்டை போடாம பஜனைக்கும் போகாம கண்ண மூடிட்டு உக்காந்துகிட்டு... எனக்கு சிரிப்பு வந்தது.....! காசி அண்னன் திருநீறுதான் பூசுமே தவிர ஒரு நாள் கூட சாமி கும்பிட்டோ கோவிலுக்குள்ள போயோ பாத்ததுல்ல....ஊர்க்காரய்ங்க சொல்றது சரிதான்னு பட்டுச்சு....சரி நாம கோவிலுக்குள்ள போவோம்...பொங்கசோறும் பார்வதியும் இருப்பாங்கன்னு நினைச்சு கிட்டு கிளம்ப நினைச்சேன்....அந்த நேரத்தில் காசி அண்ணன் கண்ண முழிச்சு என்ன பாக்குறத பாத்துட்டேன்.....


அண்ணே.....என்றேன். .......................................யாரு மாரநாட்டர் ஐயா பேரனா? குடும்ப பேர் சொல்லி கேட்டுச்சு! கூத அடிக்கிதாண்ணே.. பேச வார்த்தையில்லாமல் நான் ஏதோ உளறினேன். ஆமாப்பு..இங்கிட்டு இருங்க....என்று சொல்லி சுட்டிக்காட்டிய இடத்தில்பேசாமல் போய் அமர்ந்தேன். ஏண்ணே சாமி கும்பிட வரலையான்னு மெதுவா கேட்டேன்....!

அங்கதான் சாமி இருக்குன்னு உனக்கு தெரியுமா...? காசி அண்ணன் கோவிலைக் சுட்டிக் காட்டி என்னைக் கேட்டார். யாரோ சொல்றதை எல்லாம் நம்பாத...உண்மையில் சொன்னா இவுக சாமின்னு சொல்லி கும்புடுறது எல்லாம் சாமியே இல்ல...என்று எனக்குள் வெடிகுண்டை வீசினார். நான் அமைதியாய் அவரைப் பார்த்தேன்....அப்ப சாமி இல்லையாண்ணே? மெதுவாய் கேட்டேன். சாமி எதுக்கு இருக்கணும்? எதிர் கேள்வி கேட்டார். அட இது என்னடா விவகாரமா போச்சே....பொங்கலும் போச்சு...பார்வதியும் போச்சு...அரட்டையும் போச்சும் இப்படி வந்து மாட்டிகிட்டமேன்னு யோசிச்சிட்டு இருந்தேன்.....

காசி அண்ணன்....அதட்டினார்....சாமி எதுக்கு இருக்கணும் சொல்லு....? நான் பயத்தில் எச்சில் முழுங்கத்தொடங்கினேன்......



(காசி அண்ணன் அடுத்த பதிவில் தொடர்ந்து வருவார்.....)



பின் குறிப்பு: என்ன பிரச்சினை எங்கிட்ட? எதுவுமே எடுத்தமா முடிச்சமான்னு முடிக்க முடியலையே.... தொடர வேண்டியதாவே இருக்கே....ஏன் இப்படி?



தேவா. S

Comments

(அட இது என்னடா விவகாரமா போச்சே....பொங்கலும் போச்சு...பார்வதியும் போச்சு...அரட்டையும் போச்சும் இப்படி வந்து மாட்டிகிட்டமேன்னு யோசிச்சிட்டு இருந்தேன்)

எது நடந்தாலும் கவலை படாம காரியத்தில் கண்ணாக இருந்திருக்கிறீங்க..வாழ்த்துக்கள் தேவா
சரியான இடத்தில் நிறுத்தி விட்டார் கோவத்துடன்......அடுத்த பதிவுக்கு வெயிட்....
காசி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
ஆகா...

முக்கியமான கட்டத்தில் தொடரும் போடுறீங்களே......

//எதுவுமே எடுத்தமா முடிச்சமான்னு முடிக்க முடியலையே.... தொடர வேண்டியதாவே இருக்கே....ஏன் இப்படி?//

அதானே.. சீக்கிரம் அடுத்தது போடுங்க...
இப்போது அடுத்த பதிவு வேண்டும்......
Paleo God said…
//பின் குறிப்பு: என்ன பிரச்சினை எங்கிட்ட? எதுவுமே எடுத்தமா முடிச்சமான்னு முடிக்க முடியலையே.... தொடர வேண்டியதாவே இருக்கே....ஏன் இப்படி?//

நல்லா தெளிவாத்தான் இருக்கீங்க.. அவ்வ்வ்வ் :))
க ரா said…
நல்லா இருக்குன்னே. தொடருங்க.
Jeyamaran said…
பொங்கலும் போச்சு...பார்வதியும் போச்சு...அரட்டையும் போச்சு
மொத்தத்தில் வடை போச்சு
next part la பாப்போம் என்ன தான் நடக்குதுன்னு
Chitra said…
பல மேட்டரை தொடரில் விட்டு இருக்கீங்க..... ம்ம்ம்ம்...... ஒன்றோடு ஒன்று மிக்ஸ் பண்ணாம "தொடர" முயற்சி பண்றோம். ..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... கருத்துக்களை, நல்லா அலசி சொல்றீங்க..... தொடருங்க....!
vasu balaji said…
அது அப்படித்தான். நீங்க தொடருங்க தம்பி:)
ஆஹா, தேவா... மறுபடியும் ஆரம்பிச்சுட்டியா? தொடரும் போட!

அருமையா இருக்கு... கொஞ்சம் திரு. பாலகுமாரன் அவர்களுடைய புத்தகத்துக்குள் புகுந்து வந்ததுபோல் உள்ளது...
ஹேமா said…
அதானே....சாமி எதுக்கு இருக்கணும் சொல்லுங்க....!
S Maharajan said…
அதானே.. சீக்கிரம் அடுத்தது போடுங்க...
///////காசி அண்ணன் அடுத்த பதிவில் தொடர்ந்து வருவார்.....)///

அண்ணன் காசிக்காக நானும் காத்திருக்கிறேன்
அனு said…
ம்ம்ம்...அப்புறம்??
விஜய் said…
தேவா அண்ணா ,என்ன என்னமோ எழுதுறீங்க ,படிக்கரவங்களா அழகா உங்க எழுத்து மேல பயணிக்க வைக்குறீங்க..இந்த ஒரு திறமை தாங்க அண்ணா ஒரு எழுத்தாலனக்கு வேணும் ,அது உங்ககிட்ட நிறையா இருக்கு..நிறையா எழுதினாதால இந்த திறமை வந்தது அப்டின்னு சொல்றத விட இயற்கையிலே உங்க கிட்ட இருக்கு அப்டிங்கறது தான் யதார்த்தமும் உண்மையும் கூட. ..இவ்வளவு திறமை இருந்தும் எங்கள மாதிரி கத்துக்குட்டிகளை எல்லாரையும் தம்பி அப்டின்னு அரவணைக்கிறது ரொம்ப ஆச்சர்யமாவும்,பிடிச்சும் இருக்கு அண்ணா ..
VELU.G said…
நல்லாயிருக்கு....

தொடருங்கள்....
மேகசின் படிக்கிற மாதிரி உங்க பதிவு. ஒரு தொடர் இருக்கும். ஒரு சிறுகதை இருக்கும். ஒரு துணுக்கு இருக்குமே அதுபோல. ஆனா அனைத்துமே நல்லாயிருக்கு.
super na... fantastic... enna solrathunnu theriyalai..
உங்களுக்கு ஒண்ணு தெரியுமா.. அதிகமா கணிதப்பாடத்த உள்ளாழ்ந்து படிக்கிறவங்க சிலபேர் எனக்கு தெரிந்தே காசியண்ணன் மாதிரி இருந்திருக்காங்க..இருக்காங்க.. அதுமாதிரி சிலவிசயங்கள்ல ரொம்ப உள்ளப்போறவங்களுக்கு இந்தமாதிரி மனப்பிறழ்வு ஏற்பட வாய்ப்பதிகம்.. அதனாலத்தான் நான் பி.எஸ்.சி (கணிதம்) யோட நிப்பாட்டிட்டேன்... நீங்க தொடருங்க...
இப்பவே கண்ணைக் கட்டுதே.
dheva said…
வீரா...@ நினைசேங்க....பார்வதி மேலதான் உங்க கன்ணு போகும்னு..ஹா...ஹா...ஹ...

செளந்தர்...@ வெயிட் பண்ணுங்க தம்பி ...சீக்கிரம் வந்துடும்!

ரமேஸ்...@ நன்றி தம்பி

அகல்விளக்கு ராஜா...@ இன்னைக்கு முடிச்சுடலாம் பாஸ்!

சங்கர் (பலா பட்டறை).....@ நல்லாத்தான் இருந்தேன். ..பாஸ்.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

இராமசாமி கண்ணன்...@ வாங்க தம்பி... நன்றி!

சித்ரா...@ ஆமங்க....காசிய முடிச்சிட்டு சூப்பர் ஸ்டார கொண்டு வரணும்.. ஹா..ஹா....ஹா...!


வானம்பாடிகள்...@ ரொம்ப நன்றிணே.... உங்க.. ஊக்கம்தாண்ணே...!

சிறுகுடி ராமு...@ மாப்பு...அப்படி எல்லாம் சொல்லாதே மாப்பு...ஐயாவுக கூட நம்மள வச்சுப்பாக்கவே கூடாது. கத்துக்குட்டிய புடிச்சு வம்புல மாட்டி விடுறியேடா..ஹா...ஹா...ஹா...!


ஹேமா...@ அதானே.... ! என்னங்க.. காசி அண்ணே மாதிரியே கேக்குறீங்க....!

மகராஜன்....@ நீங்களுமாப்பு...ஒரு குருப்பாதாய்யா இருக்காய்ங்க....!


அனு....@ நல்ல கேக்குறீங்க.. டீட்டெயிலு....! இதோ மிச்சத்த போட்டுறலாம்...!

பனித்துளி சங்கர்.....@ வந்துருவாக தம்பி....காத்திருங்கள்...! மிக்க நன்றி!

ஜெயராமன்....@ மிக்க நன்றி தம்பி!

வேலு...@ நன்றி வேலு!


ஜெயந்தி....@ மிக்க நன்றி தோழி....(என்னய வச்சு காமெடி கீமடி ஏதும் பண்ணலியே....!)


செல்வகுமார்....@ வாங்க தம்பி.. ! மிக்க நன்றி!


பாலாசி...@ அப்படீங்களா.... நீங்க கணிதமா? ஒரு கண்க்காதான் இருக்கீகப்பு.....! நன்றி பாலசி!


ஜீவன் பென்னி....@ கண்ண கட்டுதா....இருங்கப்பு...அடுத்த பாகத்தை படிச்சுட்டு மொத்தமா போகலாம்....ஹா....ஹா...ஹா....! நன்றி தம்பி!
dheva said…
விஜய்.....@ என்ன தம்பி இப்படி சொல்லிட்ட... அட எல்லோரும் தம்பி எழுதின
வதம் செய்தே தீரவேண்டும் படிங்க.. தம்பி....எப்டி எழுதியிருக்கான்னு...! Ur great pa!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த