பயணம்
யாரோ புல்லாங்குழல்
வாசிக்கிறார்கள்.....
இந்த முறையும்
தவறாமல் ...காற்றில்..
தன்னை கரைத்துக் கொண்டு...
பயணத்தை தொடர்கிறது...
மெல்லிய....கீதம்...!
* * *
கவிதை
மெல்ல நகரும்...
ஒரு ஆற்றின் ஓரத்தில்..
சப்தமின்றி..நீரில் சாய்ந்து....
கவிதை செய்கிறது
ஓற்றை நாணல்!
***
குளிர்
காத்திருகிறேன்...
மீண்டும் ஒரு குளிர்காலத்திற்கு....
கனத்த ஆடைகளைப்...
போட்டெரித்து.......
வெற்றுடம்போடு..
குளிரினைக் கட்டி அணைத்து...
நேசம் கொள்ள!
***
கூடல்
அமைதியாய் புணர்ந்து...
பிரியும்..இந்த வண்டுகளுக்காகவே...
நான் பூவாக...
பிறக்க வேண்டும்...
ஒருமுறையாவது!
***
மொழி
ஏன் இன்று வரை...
புரியவில்லை..
இரைச்சலுக்கு...
மெளனத்தின்
மொழி..மட்டும்!
***
காதல்
என்ன வேண்டும்...
கற்பனையாய் கேட்டேன்..
ஒரு மழை பெய்தால் போதும்
எதார்த்தமாய் நீ சொன்னாய்.....
சாரலாய்...என் நெஞ்சுக்குள்...
பெய்தது... நீ கேட்ட மழை...!
***
சுதந்திரம்
ஒரு காட்டு மலராய்...
இருப்பதில்தான்..
எவ்வளவு சுகம்...
மலர்ந்தாலும்..காய்ந்தாலும்...
கருத்து சொல்ல யாருமில்லை...!
***
தோல்வி
மெளனத்திற்கும்...
எதிர் கவிதை எழுத...
அந்த தருணத்திலேயே..
பட்டுப்போகின்றன வார்தைகள்!
***
வலி
உன்னைப் பிரிந்த...
அந்த தருணத்தில்...
அழுகைக்கும் சிரிப்புக்கும்
இடையே.. ஒரு பாவம் காட்டினாயே....
அதற்கு பெயர்தான் காதலா?
***
சில நேரம் மனதில் என்னவென்றே சொல்லமுடியாத இரு இனம் புரியாத பரவசம் ஏற்படும். அப்படிப்பட்ட கணங்களில் நல்ல காட்சிகளை கேமராவால் கிளிக் செய்வது போல...உணர்வுகளை வார்தைகளில் டக் டக் என்று கேட்ச் பண்ணி வச்சுகிட்டா... படிக்கும் போது எல்லாம் மனம் கிளர்ந்து எழும்.
ஒரு வண்டும் பூவிடம் செய்யும் காதலில் இல்லாத வன்முறையும் அதில் இருந்த கவிதையும், மென்மையான மலரை உரசி அதில் அமர்ந்து பறக்கும் வண்டு கண்டு அதன் மீது ஒரு காதல் ஏற்பட்டது.
இதைத்தான் அனுபவித்து....
"பூவில் வண்டு கூடும்...
கண்டு போகும் கண்கள் மூடும்"
என்று வார்தைகளுக்குள் கொண்டு வந்திருப்பானோ கவிஞன்...! நல்ல உணர்வுகளை விவாதம் செய்வது அறிவீனம்....! எல்லா நேரமும் மூளையைச் சுமந்து செல்வது இயந்திரத்தனம் ஆகிவிடும்...சில நீரம் மூளையை கழற்றி வீசிவிட்டு.....வாருங்கள்....வாழ்வின் அற்புத பக்கங்களை காண...
தேவா. S
Comments
புரிவில்லை.//
புரியவில்லை என்று இருக்க வேண்டுமோ ? நல்லா ரசிச்சு எழுதிரூகீங்கன்னா.
மீண்டும் ஒரு குளிர்காலத்திற்கு....
கனத்த ஆடைகளைப்...
போட்டெரித்து.......
வெற்றுடம்போடு..
குளிரினைக் கட்டி அணைத்து...
நேசம் கொள்ள!//
நச்!
***
ஒரு ஆற்றின் ஓரத்தில்..
சப்தமின்றி..நீரில் சாய்ந்து....
கவிதை செய்கிறது
ஓற்றை நாணல்!//
மிக அருமை.
அந்த தருணத்தில்...
அழுகைக்கும் சிரிப்புக்கும்
இடையே.. ஒரு பாவம் காட்டினாயே....
அதற்கு பெயர்தான் காதலா?//
அவுங்க தான் சொல்லனும்.
மீண்டும் ஒரு குளிர்காலத்திற்கு....
கனத்த ஆடைகளைப்...
போட்டெரித்து.......
வெற்றுடம்போடு..
குளிரினைக் கட்டி அணைத்து...
நேசம் கொள்ள!
***//
அருமையனா கனவு கவிதை...
//உனக்கென்று...
என்ன வேண்டும்...
கற்பனையாய் கேட்டேன்..
ஒரு மழை பெய்தால் போதும்
எதார்த்தமாய் நீ சொன்னாய்.....
சாரலாய்...என் நெஞ்சுக்குள்...
பெய்தது... நீ கேட்ட மழை...!
//
அருமையான காதல் உணர்வுகளை சுமக்கும் வரிகள்
என் தேவா அண்ணா , சகலகலா வல்லவன் அப்டின்னு நிருபிக்கிறார் பார்த்தீங்களா ?...நீங்க கலக்குங்க அண்ணா
ஒரு ஆற்றின் ஓரத்தில்..
சப்தமின்றி..நீரில் சாய்ந்து....
கவிதை செய்கிறது
ஓற்றை நாணல்!//
மிக அருமை.... பராட்டுக்கள்.
இருப்பதில்தான்..
எவ்வளவு சுகம்...
மலர்ந்தாலும்..காய்ந்தாலும்...
கருத்து சொல்ல யாருமில்லை...!//
சுதந்திரத்தை , இயற்கையோடு ஒப்பிட்ட இடம் நல்ல கவிஞனை இனம்காண செய்தது... நன்றி...தொடர்க.
முதல் கவிதையில் கீதம் என்றில்லாமல் சோகம் என்றுமட்டும் சொல்லபட்டிருந்தால் இன்னும் ஆழமும்.,அதிர்வும் சேர்ந்து அற்புதம் அடைந்திருக்கும்.
மெளனத்திற்கும்...
எதிர் கவிதை எழுத...
அந்த தருணத்திலேயே..
பட்டுப்போகின்றன வார்தைகள்!
***
///
நிஜமான வலி..
விஜய் சொன்னது சரி தேவா அண்ணன் சகலகலா வல்லவன் தான்
ஒரு மழை பெய்தால் போதும்
எதார்த்தமாய் நீ சொன்னாய்.....
சாரலாய்...என் நெஞ்சுக்குள்...
பெய்தது... நீ கேட்ட மழை...!
அருமையோ அருமைங்க
அது ரெண்டுபேர் மனதிலும் சேர்ந்து பெய்தால் அதான் காதலின் உன்னதம்
நல்ல இருக்குங்க தேவா
***
இதுதான் வாழ்க்கை ரகசியம்:) சூப்பர்ப் தேவா!
சரியா சொன்னீங்க.
கவிதைகள் அருமை..
ஓவராலா பார்க்கும் என்னோட காதல்கவுஜைகள்கிட்ட வந்துகிடாது.... :))
Respectful Mr. Naanjil pradhaap
please tell us the true [Warrior] மெல்ல திறக்கட்டும் மனது...! sothappala? supera?
---shyssian
Respectful Mr.Naanjil Sampath
please tell us the true மெல்ல திறக்கட்டும் மனது...! sothappalaa? supera? --shyssian
மெல்ல நகரும்...
ஒரு ஆற்றின் ஓரத்தில்..
சப்தமின்றி..நீரில் சாய்ந்து....
கவிதை செய்கிறது
ஓற்றை நாணல்!//
//சுதந்திரம்
ஒரு காட்டு மலராய்...
இருப்பதில்தான்..
எவ்வளவு சுகம்...
மலர்ந்தாலும்..காய்ந்தாலும்...
கருத்து சொல்ல யாருமில்லை...!//
எல்லாக் கவிதையும் நல்லாயிருக்கு. இது ரெண்டும் இன்னும் நல்லாயிருக்கு.
உன்னைப் பிரிந்த...
அந்த தருணத்தில்...
அழுகைக்கும் சிரிப்புக்கும்
இடையே.. ஒரு பாவம் காட்டினாயே....
அதற்கு பெயர்தான் காதலா?
அருமை
// ஏன் இன்று வரை...
புரியவில்லை..
இரைச்சலுக்கு...
மெளனத்தின்
மொழி..மட்டும்!//
இது ரொம்ப நல்லாருக்கு.
அந்த தருணத்தில்...
அழுகைக்கும் சிரிப்புக்கும்
இடையே.. ஒரு பாவம் காட்டினாயே....
அதற்கு பெயர்தான் காதலா? //
அனுபவம் பேசுது........
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஒரு காட்டு மலராய்...
இருப்பதில்தான்..
எவ்வளவு சுகம்...
மலர்ந்தாலும்..காய்ந்தாலும்...
கருத்து சொல்ல யாருமில்லை...!
....... தேவா...... மிகவும் ரசித்து வாசித்தேன் ...... இந்த கவிதை தான் பெஸ்ட். பாராட்டுக்கள்! ஒவ்வொரு கவிதையும் இனிமையாய் கருத்துக்களை சொல்கின்றன. :-)
அப்போ நீங்க ஆபிச்ல உட்கார்ந்துகிட்டு வேலை செய்யாமா நல்லா ஓபி அடிக்குறீங்க.
நல்லா ஓபி அடிங்க அப்பத்தான இந்த மாதிரியான அருமையான நினைவுகள பதிவு செய்வீங்க. இங்க இருக்குறதுல எல்லாமே எனக்கு பிடிச்சிருக்கு. நான்கே வரிகளில் எத்துனை அற்புதமான உணர்வுகளின் வெளிப்பாடுகள்.
பின் குறிப்பு: நிறைய தொடர் இருக்கு அதையும் கொஞ்சம் பாருங்க. அதிகமா காக்க வைக்குறீங்க.
இந்த தலைப்பிலேதான் எத்தனை அமைதி.
உன் ஒவ்வொரு...
மெளனத்திற்கும்...
எதிர் கவிதை எழுத...
அந்த தருணத்திலேயே..
பட்டுப்போகின்றன வார்தைகள்!
***
..... Very nice! :-)
...... நேர்த்தியான கருத்து, தேவா.... அழகு! பாராட்டுக்கள்!
கண்டு போகும் கண்கள் மூடும்"...............
.......அழகான் பாடலின் வரிகள். உங்களுக்குள் கவித்துவம் இருக்கிறது. மேலும் பல கவிகள் புனைய வாழ்த்துகிறேன்.
கவி மழையில் நனைய காத்திருக்கிறேன். பாராடுக்கள். நட்புடன் நிலாமதி
இருப்பதில்தான்..
எவ்வளவு சுகம்...
மலர்ந்தாலும்..காய்ந்தாலும்...
கருத்து சொல்ல யாருமில்லை...!//
ம்ம்
நல்லா வந்திருக்கு பாஸ் !!!!
கலக்குங்க ! :)
ஒரு காட்டு மலராய்...
இருப்பதில்தான்..
எவ்வளவு சுகம்...
மலர்ந்தாலும்..காய்ந்தாலும்...
கருத்து சொல்ல யாருமில்லை...!///
இதுதான் நான் மிகவும் ரசித்த கவிதை... மிக அருமை. வாழ்த்துக்கள் மாப்ஸ்.
Respectful Mr. Naanjil pradhaap
please tell us the true [Warrior] மெல்ல திறக்கட்டும் மனது...! sothappala? supera?//
Respectful Mr.Sasi Kumar,
As I am suffering from Fever...
அடச்சே... Respectful போட்டாலே பள்ளிக்கூட லீவு லெட்டரதான் ஞாபகத்துக்கு வருது...
கவித சூப்பர்தான்... நான் சொன்னத சும்மா லுல்லலலா...
//மெல்ல திற்க்கட்டும் மனது//
இந்த தலைப்பிலேதான் எத்தனை அமைதி.//
ஷபீர்... சரி...சரி... கொடுத்த காசுக்கு மேல கூவ கூடாது...தல.... :))
வெறும்பய...@ நன்றி தம்பி....!
செளந்தர்...@ வரவர....பேரரசு படம் மாதிரி இல்ல போய்கிட்டு இருக்கு பில்டப் எல்லாம்...!
சிவா...@ நன்றி தம்பி!
வீரமணி...@ நன்றி தம்பி!
பத்மா...@ ஆமாங்க.. நீங்க சொல்றது சரிதான்... இவன் மனசுல மழை பெய்தா....அடுத்து அவ மனசுல பெய்ற மாதிரி செஞ்சுடுவான்ல...!
தமிழ் மதுரம் @ மிக்க நன்றி!
அம்பிகா....@ நன்றி தோழி!
நாஞ்சில்...@ மாப்ஸ்....உன்கிட்ட வாழ்த்து வாங்குறது....பெரிய பாடா போச்சு....என்னா வில்லத்தனம்....? உன் கவுஜ கிட்ட யாரு மாப்ஸ் வரமுடியும் ?
சசிகுமார்....@ நன்றி சசி!
ரமேஷ் (ச்ரிப்பு போலீஸ்) - நன்றி தம்பி!
கலா நேசன்..@ நன்றி கலா நேசன்...!
ப.ரா..@ நன்றி சித்தப்பா...! சித்தப்பா...மறு உலை வச்சுதான் ஆகணும் போலயே....
ஜெய்லானி...@ ரிப்பீட் ராஜாவுக்கு நன்றி...!
சித்ரா...@ இப்டிதான் பண்றதா... உங்க வீட்டு தேவைக்கு லேட்டா வர்றதா...? நன்றி தோழி!
ஜீவன் பென்னி...@ இருப்பா..ஒவ்வொருத்தனா வாங்க...மொத்தமா வந்தா நான் என்ன செய்யுறது.? ஹா...ஹாஅ..ஹா...
நிலாமதி...@ நன்றி தோழி!
நேசமித்ரன்... @ நன்றி தோழர்....!
சிறுகுடி ராமு.....@ நன்றி மாப்ஸ்!
பாலாண்னே....(வானம்பாடிகள்) @ நன்றின்ணே...!
@எல்லோரும் நாஞ்சில் பிரதாப்ப விட்டுடுங்க... ...அவரு நம்ம மாப்ஸ்தான்....!
ரிபீட்ட்ட்ட்ட்ட்டேய்.
ஷமீர் அகமது.
"ஒரு காட்டு மலராய்...
இருப்பதில்தான்..
எவ்வளவு சுகம்...
மலர்ந்தாலும்..காய்ந்தாலும்...
கருத்து சொல்ல யாருமில்லை...!"
"ஒரு காட்டு மலராய்...
இருப்பதில்தான்..
எவ்வளவு சுகம்...
மலர்ந்தாலும்..காய்ந்தாலும்...
கருத்து சொல்ல யாருமில்லை...!"
எல்லாவற்றையும் விட இந்த கவிதை ரொம்பப் பிடித்தது.
அற்புதமான வரிகள் அண்ணா ..!! நீங்க கவிதை கூட நல்லா எழுதறீங்க ...!!
///உன்னைப் பிரிந்த...
அந்த தருணத்தில்...
அழுகைக்கும் சிரிப்புக்கும்
இடையே.. ஒரு பாவம் காட்டினாயே....
அதற்கு பெயர்தான் காதலா?///
எனக்கு தெரியலை ...
'கூடல்' மிக அருமை.
என்ன வேண்டும்...
கற்பனையாய் கேட்டேன்..
ஒரு மழை பெய்தால் போதும்
எதார்த்தமாய் நீ சொன்னாய்.....
cute
அந்த தருணத்தில்...
அழுகைக்கும் சிரிப்புக்கும்
இடையே.. ஒரு பாவம் காட்டினாயே....
அதற்கு பெயர்தான் காதலா?//
அருமை...
ஒரு காட்டு மலராய்...
இருப்பதில்தான்..
எவ்வளவு சுகம்...
மலர்ந்தாலும்..காய்ந்தாலும்...
கருத்து சொல்ல யாருமில்லை...!////////
அந்தரத்தில் கயிற்றில் நடக்கும் வீரனை ஒத்த உணர்வுகள கொண்ட வார்த்தைகள் மிகவும் ரசிக்க வைத்தது .பகிர்வுக்கு நன்றி நண்பரே
அருவி போல் பாய்ந்து வாருங்கள் இன்னும் இன்னும்..
பிரியும்..இந்த வண்டுகளுக்காகவே...
நான் பூவாக...
பிறக்க வேண்டும்...
ஒருமுறையாவது!//
காட்டு மலர் ஈர்த்தாலும் இது ரொம்பப் பிடிச்சு இருக்கு தேவா