Skip to main content

என் தாயே....என் தமிழே...!



















யாம் பிறந்து விழுந்த பொழுதினில் எம்மில் இருந்து தெரித்து விழுந்த ஒலியாய் வெளிப்பட்ட தாயே.....என் தமிழே...! மானிடரின் சப்தங்கள் மட்டுமே மொழியாய் போன ஒரு உலகத்தில் எம்மின் உணர்வுகளை எல்லாம் வெளிக் கொணர சப்தமாய் வெளிப்பட்டு உன்னை மொழியென்றும் எம் தாயென்றும் தமிழென்றும் கொண்டோம்.

உலகம் மொழியறியா காலத்தில் கவிசெய்தோம் நாம். இயல், இசை, நாடகம் என்று உன்னில் எத்தனை எத்தனை வித்தைகள் செய்தோம். உணர்வுகளை சரியாக வெளிப்படுத்த எம்மிடம் சப்தம் இருந்ததால், சப்தமென்ற தமிழிருந்தால் வலியையும், சந்தோசத்தையும், துக்கத்தையும், சரியான பாகத்தில் எம்மால் வெளிக்கொணர இயன்றதால் மானிடரின் உணர்வு விளங்கும் தெளிந்த நிலையை எய்தினோம். ஒப்பற்ற ஒரு இனமாய் உலகுக்கு அறிமுகமானோம்!

காலங்கள் தோறும் மனிதர்கள் வந்தனர். உம்மை கற்றுத் தெளிந்து தம்மை புலவர் என்று தாமெ தம்மையே விளித்துக் கொண்டனர். உன்னைக் கொண்டு கவிசெய்தனர், புதினம் செய்தனர், பாடல் செய்தனர் இசை செய்தனர். உன்னைக்கொண்டு ஒரு வாழ்வு உம்மால் ஒரு வாழ்வு...என்று காலங்கள் தோறும் நீ வளர்த்திருக்கிறாய் மனிதர்களை. எத்துனை சுவை கொண்டவள் நீ....அடுக்குத் தொடராய், இரட்டைக் கிளவியாய், உணர்வுகளை பிரதிபலிக்கும் அணி இலக்கணமாய், வார்த்தைகளை அளவிடும் மாத்திரைகளாய்....எம்மவரின் வாழ்வில் எத்தனை எத்தனை பங்கு கொண்டாய்....

காலங்கள் தோறும் உன்னைக் கொண்டு இம்மனிதரின் வயிற்றுப்பசி அடங்கியது தாயே....! உன்னை சிறப்பாக்க, உம்மை வாழவைக்க உனக்கு விழா எடுக்க, செம்மொழியாய் நீ சிறந்தவள் என்று உலகிற்கு கட்டியம் கூறி அறிவிக்க மறந்து அரசியலாய், சுய நோக்காய்..பகட்டாய் உன்னை பகடி விளையாடி இருக்கிறார்கள் அம்மா...!

தச்சு வேலை செய்யும் கோவிந்தனுக்கும், கட்டிட வேலை செய்யும் மாரியம்மாவிற்கும், அதோ அடுத்த தெருவில் மாம்பழம் வியாபாரம் செய்கிறாளே...பொன்னம்மா பாட்டி இவர்கள் என்ன வேற்று கிரகவாசிகளா? இவர்களுக்கு தமிழின் செம்மையை யார் விளக்குவார்கள்...?

கம்பனின் சொல்லாடலை அவர்களின் தன்மைக்கேற்ப எப்படி விளங்குவார்கள்? அப்படியே விளக்கினாலும்...வெற்று வயிறும், வெறுமையான எதிர்காலமும் தமிழின் செம்மையை இவர்களின் செவிகளுக்குள் செல்ல அனுமதிக்குமா? தெருக்குத்தெரு தமிழ்ச்சுவையூட்டும் நிகழ்ச்சிகள் நடை பெற்றிருக்க வேண்டாமா? பாமரனுக்குப் புகட்டாமால் அறிஞர்களே பேசி சிரித்து, மகிழ்ந்து கொள்ள தமிழ் என்ன தனிப்பட்ட சொத்தா? உங்களின் ஆய்வுகளை எல்லாம் எதோ ஒரு பல்கலைகழகத்தில் நிகழ்த்தி அதன் மூலம் நம் மொழியின் வளத்தை நிறுவ முடிவுகள் எடுத்து அரசு நடைமுறை படுத்தியிருக்கலாமே.....? இதற்கு எதுக்கு கோடிகளில் செலவு....? மாறாக தமிழனின் வாழ்க்கை மிளிர அதை செலவு செய்திருக்கலாமோ.....?

அந்தோ பரிதாபம் எம்மொழிக்கான விழா...அதற்கு ஒரு பாடல்....இதிலேயே தெரிந்து விட்டது தமிழனின் தமிழ்ப்பற்று. எம்மண்ணின் மணத்தை பாடலிலும் பாடல் வரிகளிலும் கொணரவுமில்லை, பட்டி தொட்டி எங்கும் பாடல்கள் ஒலிக்கவுமில்லை. தமிழ் என்பது ஒலி வடிவம் கொண்ட, எழுத்து வடிவம் கொண்ட..இலக்கணத்தில் சிறந்த...தொன்மையான மொழி மட்டுமல்ல..அது நமது கலாச்சாரத்தில் ஊறிய, வாழ்வில் அங்கமான உயிரோடு கலந்த ஒரு விசயம்.


செம்மொழியின் பாடலும், தமிழனுக்கு சம்பந்தம் இல்லாதது அதில் பயன்படுத்திய வரிகள் வேண்டுமானால் தமிழோடு தொடர்புகொண்டிருக்கலாம் ஆனால் இசையும், இசைத்த கருவிகளும் தமிழோடு தொடர்பற்றது. ஒரு தாய் தன் குழந்தையை தாலட்டும் இசையில் நாம் எந்த சிரத்தையும் எடுக்காமல் தமிழ்த்தாய் வெளிப்பட்டு ஒரு வித உற்சாக அமுது படைப்பாள். ஏற்றம் இறைக்கும் உழவனும், நாற்று நடும் பெண்களுகம், ஆண்களும் இசைக்கும் பண்ணில் ஒளிந்து நின்று எட்டி எட்டிப் பார்த்து நம்மை மகிழ்விப்பாள் எம் தமிழ்த்தாய். அவளுக்கென்று ஒரு கலச்சாரம் உண்டு அந்த கலாச்சாரத்தை மேற்கித்திய இசையின் மூலம் அழிக்க நினைத்திருப்பது ஒரு கொடூரமான செயல் (இதன் இசையமைப்பாளர் எனது அபிமானமானவர்தான் அவரின் மீது குற்றம் சொல்கிறேன் என்று விசயத்தை திசை திருப்பி எங்கோ சென்றுவிட வேண்டாம். செம்மொழிப் பாடல் தமிழின் கலாச்சார வெளிப்பாடு அல்ல என்பதே என் எண்ணம்!)

யூனிகோட் என்னும் அச்செழுத்தினை இனி அனைவரும் பயன்படுத்தவேண்டும்....சரி....

வலைப்பூக்களில் தமிழ் மிளிர்கிறது .....சரி

உலகெமெங்கும் இருந்து தமிழறிகள்......கட்டுரைகளை சமர்ப்பித்தனர்......சரி..

மக்கள் கூட்டம் கரை புரண்டது........சரி

தமிழில் கையெழுத்திட அனைவரும் முன் வரவேண்டும்...சரி...

இனி தொடர்ந்து செம்மொழி மாநாடு நடக்கும்.....சரி....


தனியார் தொலைக்காட்சி நிகழ்சிகளில் இயன்ற வரை தமிழ் புகுத்தப் பட வேண்டும் என்றும் லேகியம் விற்கும் விற்பன்னர்களுக்கும், ராசிக்கல் விற்கும் வியாபாரிகளுக்கும், தொடர் நாடகம் என்னும் ஒரு மனோதத்துவ தாக்குதல் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கும் நேரம் ஒதுக்கும் இவர்கள்....அதிகபட்ச மக்கள் பார்க்கு நேரங்களில் செம்மொழியான எம் தாய்மொழியின் பெருமை சொல்ல நேரம் ஒதுக்க ஏதேனும் சட்டம் உள்ளதா?

எல்லா தமிழ் ஊடங்களும் தமிழின் சிறப்பினை கூற தனியே பக்கங்கள் ஒதுக்க வேண்டும் என்று கட்டளைகள் எதேனும் பிறப்பிக்கப்பட்டுள்ளதா? மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் மொழியின் வளமறியும் நிகழ்வுகள் ஏதேனும் உண்டா?

தமிழ் மொழி இல்லாத விண்ணப்ப படிவங்கள் எல்லாம் செல்லாது என்று அறிவிக்க முடியுமா?

சென்னையை வலம் வந்து பாருங்கள்....பேருந்தில் ஏறினாலும் சரி, மீன் வாங்க கடைத்தெருக்களுக்குச் சென்றாலும் சரி, இல்லை திரை அரங்குகளுக்குச் சென்றாலும் சரி...தமிழின் ஊடே எத்தனை எத்தனை ஆங்கில வார்த்தைகள். அலுவல் மொழி ஆங்கிலமாய் இருக்கும் பட்சத்தில் தமிழில் உரையாடுவதும், எழுதுவதும் பழக்கத்தின் அடிப்படையில் சிறிது கடினம் என்றாலும் இயன்றவரை மக்களை முயலச் செய்ய...

தமிழரிடம் தமிழில் பேசுங்கள் என்று கண்டித்து சொல்லா ஏதேனும் வழிவகை உண்டா.....?

ஒரு அலுவல் விசயமாக வேறு அலுவலகத்திற்கு சென்ற நான் ...அங்கு நான் சந்திக்க வேண்டிய மனிதரும் தமிழர்தான் என்று அறிந்து ...தமிழா நீங்கள் என்று கேட்க (இது நடந்தது துபாயில்) யெஸ் என்று இறுக்கமாய் பதில் சொல்லி தொடர்ந்து ஆங்கிலத்தில் உரையாடிய போது உடையில்லாமல் நின்று பேசியது போல உணர்ந்தேன்.....

இன்னும் சில தமிழர்கள் நாம் தமிழில் பேசினால் மதிப்பதே இல்லை....ஆங்கிலத்தில் பேசினால் மரியாதை சரளமாக வரும்.....எதாவது வேலை ஆகவேண்டும் அல்லது புகார் கொடுக்க வேண்டும் என்றால் உரக்க ஆங்கிலத்தில் பேசினால் ...பயப்படுகிறார்களா இல்லையா....? மனோதத்துவ ரீதியாக மனதிலே ஒரு எண்ணம் எடுத்துக் கொண்டு ஆங்கிலத்தில் பேசினால் பயப்படும் நிலை மாற...ஏதாவது விளக்க வகுப்புகள் எடுக்கப் போகிறீர்களா....செம்மொழி விழா நடத்தியவர்கள்.....?

மொழிக்கான விழா எடுத்ததற்கு வாழ்த்துச் சொல்லும் அதே நேரத்தில் தமிழை மேம்படுத்தும் வேளையில்..........தமிழனை மேம்படுத்தவும் ஏதாவது செய்யுங்கள் பெரியவர்களே.....!

தமிழ்....பேச.....தமிழன் இருக்க வேண்டும்...முதலில் இல்லையெனில் ஆராய்ச்சி முடிவுகளையும் சிறப்புகளையும்....அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டிய நிலை வரும்...

போற்றுவார் போற்றட்டும்...
புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும்...!
தொடர்ந்து செல்வேன்....
ஏற்றதொரு கருத்தை...
எனதுள்ளம் ஏற்றதால்..
எடுத்துரைப்பேன்....எவர்வரினும்....
நில்லேன்....! அஞ்சேன்...!


தேவா. S




Comments

veeramanikandan said…
ஒரு அலுவல் விசயமாக வேறு அலுவலகத்திற்கு சென்ற நான் ...அங்கு நான் சந்திக்க வேண்டிய மனிதரும் தமிழர்தான் என்று அறிந்து ...தமிழா நீங்கள் என்று கேட்க (இது நடந்தது துபாயில்) யெஸ் என்று இறுக்கமாய் பதில் சொல்லி தொடர்ந்து ஆங்கிலத்தில் உரையாடிய போது உடையில்லாமல் நின்று பேசியது போல உணர்ந்தேன்..... maanakkedu...

ullam thotta padhivu...
Unknown said…
தமிழந்தான் இப்படிதான் இருப்பான்(என்னையும் சேர்ந்துதான்).
அப்படியே செவிட்டில் அறைந்தாற்போல் உள்ளது தேவா.. உனது ஒவ்வொரு வரிகளும், ஏன் வார்த்தைகளும் கூடத்தான்... இந்த எழுத்துக்கள் கூட சுடுகின்றன. இந்தப்பதிவினை, அந்த விழாவினை பெருமை(!!!)யுடன் நடத்தி முடித்த அத்துனை பெரியவர்களும் படித்து பாடம் கற்க வேண்டும்....
- சிறுகுடி சுப. இராமநாதன், சிங்கப்பூர்.
உம்மை வாழவைக்க உனக்கு விழா எடுக்க, செம்மொழியாய் நீ சிறந்தவள் என்று உலகிற்கு கட்டியம் கூறி அறிவிக்க மறந்து அரசியலாய், சுய நோக்காய்..பகட்டாய் உன்னை பகடி விளையாடி இருக்கிறார்கள் அம்மா...!//

சரிதான் அம்மா நடத்தி இருந்தால் இது அரசியல் ஆகியிருக்கும்.


எம்மண்ணின் மணத்தை பாடலிலும் பாடல் வரிகளிலும் கொணரவுமில்லை, பட்டி தொட்டி எங்கும் பாடல்கள் ஒலிக்கவுமில்லை//

இது தவறு இந்த பாட்டு அனைத்து தமிழர்களின் அனைவர் வீட்டிலும் ஒலிக்கிறது, ஒளிக்கிறத



சொம்மொழி வேண்டாம் என்று சொல்லுவோருக்கு இது தான் பதில்
போற்றுவார் போற்றட்டும்...
புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும்...!
தொடர்ந்து செல்வேன்....
ஏற்றதொரு கருத்தை...
எனதுள்ளம் ஏற்றதால்..
எடுத்துரைப்பேன்....எவர்வரினும்....
நில்லேன்....! அஞ்சேன்...!
கலைஞரின் குடும்பம் நடத்தும் தொலைக்காட்சியின் பெயர் தமிழில் உள்ளதா? இப்படி பல ஆயிரம் உதாரணங்கள் சொல்லமுடியும்.

மொழிப்போருக்கு உரிமை கொண்டாடும் தி.மு.க. மொழிப்போர் வரலாற்றை இதுவரைக்கும் அடுத்த தலைமுறை படிக்கும் விதத்தில் பாடத் திட்ட்த்தில் சேர்க்காதவர் தான் இந்த செம்மொழிகொண்டான். எத்தனை தமிழறிஞர்களின் வரலாறு மாணவர்களுக்கு போய்ச்சேர்கிறது. கண்டவனுக்கெல்லாம் மணிமண்டபம் கட்டும் கருணாநிதி மொழிப்போர் தியாகிகளுக்கு செய்தது எதுவுமே இல்லையே..இதன் பொருள் என்ன..? மொழிப்போராட்டத்தாலும் , மொழிப்போராட்ட தியாகிகளாலும் கருணாநிதியின் புகழ் மங்கிவிடும் என்பதால் தானே இவற்றையெல்லாம் கண்டுகொள்ளவில்லை....

பக்கத்தில் உள்ள கர்நாடகாவில் பத்தாம் வகுப்புவரை கன்னடமொழியை ஒரு மொழிப்பாடமாக கட்டாயம் படித்தே ஆகவேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் கருணாநிதி ஐந்து முறை ஆட்சிபொறுப்பில் இருந்தும் சட்டம் இயற்றவில்லை. ஐந்தாம் வகுப்புவரை தமிழை தமிழ்நாட்டில் பயிற்று மொழியாக்க ஒரு அரசாணை வெளியிட்டார். இந்த அரசாணை என்பது சட்டம் இல்லை .ஆதலால் தி.மு.க.வின் ஒன்றிய செயளாலர் ஒருவராலயே நீதிமன்றத்தில் தடையாணை வாங்கப்பட்டுத் தோற்கடிக்கப்பட்டது. தமிழ் நாட்டில் மட்டும் தான் ஒருவன் தமிழ் மொழியைப் படிக்காமலே உயர்படிப்புவரை படிக்கலாம். இது இன்றும் தொடர்கிறது. இந்த நிலை தொடர பொறுப்பானவர் ஐந்துமுறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி இல்லையா..?
தமிழை தமிழ்நாட்டில் பயிற்று மொழியாக்க ஒரு அணுவளவேனும் முயற்சி செய்யாமல் செம்மொழி மாநாடு நடத்தி தமிழ்மொழி வளர்ச்சிக்கு என்றால் இதன் பெயர் என்ன...? மோசடி இல்லையா..?
டி.ஆர்.பாலு மத்தியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த போது தமிழ்நாட்டில் மைல்கற்களில் ஹிந்தியில் எழுதப்பட்டதே.? அப்போது இவர்கள் சொன்ன பதில் இன்றும் நினைவில் இருக்கிறது. வட இந்தியக்காரன் சரக்குந்து ஓட்டிவருகிறான் என்பதற்காக தமிழ்நாட்டு மைல்கல் ஹிந்தி எழுத்துக்களை சுமக்க வேண்டும் என்று நாக்கூசாமல் சொன்னார்களே..? இவர்ளால் வேறு மாநிலத்தில் இப்படி பேச முடியுமா..? இவர்கள் நடத்தும் செம்மொழி மாநாடு தமிழை வளர்க்கும் என்று நாங்கள் நம்பவும் வேண்டுமோ...?
இன்றளவும் இந்திய அரசு தனது திட்டங்களுக்கு ஹிந்தியில் பெயர் சூட்டி தமிழ்நாட்டு குக்கிராமங்களுக்கும் (படம் இனைக்கப்பட்டுள்ளது) சென்று விளம்பரம் வைக்கிறதே. கருணாநிதி அரசின் கவனத்துக்கு வராமல்தானா இந்த ஹிந்தி திணிப்பு நடக்கிறது..?.

கலைஞர் டி.வி. புகழ் நடிகை நமீதா
நிகழ்ச்சி தொகுப்பாளரா இருந்தா?!
அந்தம்மா வழக்கமா கலைஞர் டி.வியில பேசுறமாதிரி …
‘நம்ம கலைஜர் மச்சான்… செம..மொலி மாநட்டை..சூப்பரா.. நடத்துறாரு… நம்ம கலைஜர் மச்சானுக்கு உடன் பிரப்பு எல்லாம் ஒரு ஓ…போடு…’ ன்னு பேசுனா?’
நினைக்கவே நமக்கு சங்கடமா இருக்கு. உடன்பிறப்புகளுக்கு எப்படி இருக்குமோ தெரியலையே?

பெருந்துன்பமும் கவலையும் எதிர்காலம் குறித்த பயமும் சூழ ஈழத் தமிழர்கள் அன்றாடம் செத்து மடிந்து கொண்டிருக்கும் நிலையில் செய்த துரோகத்தை மறைக்க மக்கள் வரிப்பணத்தில் 400 கோடி ரூபாய் செலவில் செம்மொழி மாநாட்டை கோவையில் நடத்திக் கொண்டிருக்கிறார் கருணாநிதி. இந்த மாநாட்டில் சாதிவெறியர்கள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் என ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகளும் சிறப்பாக கருணாநிதியில் அல்லகைகளுமே அதிகமாக.

வாங்கிய பணத்துக்கு மேல இப்படி கூவினாங்க எல்லா தமிழ் உணர்வாளர்களும்.

மொத்தத்தில் கலைஞர் இறப்பதற்கு முன்பே ஒப்பாறி மேடையில் பாடினார்கள் என்றுதான் சொல்லவேண்டும். அந்த வகையில் இறக்கும் முன்பே ஒப்பாறி பெற்ற தானைத்தலைவர் கலைஞர் என்ற பட்டத்துக்கும் சொந்த காரர் ஆகிவிட்டார் கலைஞர்.

அன்பான தமிழ் உறவுகளே உலகத்தில் எந்த இனத்துக்கும் இல்லாத நெருக்கடி தமிழினத்துக்கு இன்று. நாம் தமிழ் இனத்தை காத்து தமிழ் மொழியையும் காக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். இந்திய சிங்கள அரசுகள் தற்ப்போது செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் தமிழ், தமிழர் என்ற வார்த்தையை எதிர்காலத்தில் இல்லாமல் செய்யப்போகிறது. தமிழ் நாட்டில் தமிழ் உணர்வாளர்களை ஒடுக்க உளவு நிறுவனங்களுடன் கைகோர்த்து வேட்டையை தொடங்கிவிட்டது கருணாநிதி அரசு . இதையெல்லாம் முறியடித்து வெற்றிகொள்ளும் வேட்கையுடன் விழிப்புடன் இருப்போம். வெற்று ஆராவாராங்களையும் இனத்துரோகிகளையும் புறக்கனித்து தமிழ்தேசிய இலக்கு நோக்கி பயனிப்போம். இதுவே ஒவ்வொரு தமிழனுக்கும் இன்றைய கடமை.
விடுத‌லைவீரா said...
கலைஞரின் குடும்பம் நடத்தும் தொலைக்காட்சியின் பெயர் தமிழில் உள்ளதா? இப்படி பல ஆயிரம் உதாரணங்கள் சொல்லமுடியும்.//

@@விடுத‌லைவீரா கலைஞர் டிவி,இசைஅருவி,சிரிப்பொலி,செய்திகள்,இது தான் அவர்கள் டிவி
எல்லாமே சாக்கடையா ஆகிய பின்னே எந்த சாக்கடைல அழுக்கு கம்மியா இருக்கோ அங்க போக வேண்டிய ஒரு நிலைமைய நாமளே நமக்கு உருவாக்கிவிட்டோம்.
பெருந்துன்பமும் கவலையும் எதிர்காலம் குறித்த பயமும் சூழ ஈழத் தமிழர்கள் அன்றாடம் செத்து மடிந்து கொண்டிருக்கும் நிலையில் செய்த துரோகத்தை மறைக்க மக்கள் வரிப்பணத்தில் 400 கோடி ரூபாய் செலவில் செம்மொழி மாநாட்டை கோவையில் நடத்திக் கொண்டிருக்கிறார் கருணாநிதி///

@@@விடுத‌லைவீரா said...400 கோடி கிடையாது வெறும் 68 கோடி தான்
விஜய் said…
அண்ணா கலக்கிடீங்க....
//காலங்கள் தோறும் உன்னைக் கொண்டு இம்மனிதரின் வயிற்றுப்பசி அடங்கியது தாயே....! உன்னை சிறப்பாக்க, உம்மை வாழவைக்க உனக்கு விழா எடுக்க, செம்மொழியாய் நீ சிறந்தவள் என்று உலகிற்கு கட்டியம் கூறி அறிவிக்க மறந்து அரசியலாய், சுய நோக்காய்..பகட்டாய் உன்னை பகடி விளையாடி இருக்கிறார்கள் அம்மா...!//

செருப்பை கலட்டி அடிச்ச மாதிரி காட்டி இருக்கீங்க அண்ணா, என் தமிழ் மொழியை சுயநலத்திற்காக அரசியலாக்கிய மிருகங்களை என்ன செய்ய, இப்பொழுது நிஜமாய் வருந்துகிறேன், சட்டம், மற்றும் காவல் துறை போன்ற உயர் பதவிகளை பெற படிக்காமல் விட்டு விட்டேன் என்று, என் தமிழ் மொழியை தன் புகழ் பாட பயன்படுத்திகொண்ட ,தமிழனத்தலைவன் எனும் போர்வையில் மறைந்து கொண்டு இருக்கும் நாய்களை சுட்டு எரிய ..

எனது அடுத்த பதிவு இதை தான் பதிக்க இருந்தேன், நீங்கள் முந்திகொண்டீர்கள் அண்ணா, உங்களை விட ஆணித்தரமாய் சொல்லி இருக்க முடியாது என்னால். ஆதலால் உங்க பதிவிற்கு தலை வணங்குகிறேன்....

உங்கள் வார்த்தைகளின் கூர்மையை இப்பொழுது கனடியன், மெய் சிலிர்க்கிறேன் அண்ணா ...

நன்றி நன்றி நன்றி.....நம் தமிழ் மொழி வளர பாடு பட எனது கரத்தை முதலில் வைக்கிறேன் அண்ணா ...
விஜய் said…
அருமையான பதிவு அண்ணா...இன்னும் நிறையா உங்கள் இந்த பதிவை பற்றி எழுதவேண்டும் போலிருக்கிறது....
மனதைத் தொட்ட பதிவு நண்பா..
//
ஒரு அலுவல் விசயமாக வேறு அலுவலகத்திற்கு சென்ற நான் ...அங்கு நான் சந்திக்க வேண்டிய மனிதரும் தமிழர்தான் என்று அறிந்து ...தமிழா நீங்கள் என்று கேட்க (இது நடந்தது துபாயில்) யெஸ் என்று இறுக்கமாய் பதில் சொல்லி தொடர்ந்து ஆங்கிலத்தில் உரையாடிய போது உடையில்லாமல் நின்று பேசியது போல உணர்ந்தேன்.....//


தமிழனின் நிலையை இதைவிட ஆழமாகச் சொல்லமுடியாது நண்பா..
தமிழ்....பேச.....தமிழன் இருக்க வேண்டும்...முதலில் இல்லையெனில் ஆராய்ச்சி முடிவுகளையும் சிறப்புகளையும்....அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டிய நிலை வரும்...//

உண்மைதான் நண்பா..

மொழி அழிந்த பின்பு இனம் எப்படி இருக்கும்..

ஓட்டு வாங்கும் வியாபாரிகளும்..
ஓட்டுப் போடும் இயந்திரங்களும் சிந்திக்க வேண்டிய பதிவு..
VELU.G said…
உங்கள் ஆதங்கங்கள் புரிகிறிது. இனியேனும் தமிழுக்கு முதலில் நம் மக்களிடத்திலாவது அங்கீகாரம் கிடைக்கிறதா பார்ப்போம்

அருமையான பதிவு
Unknown said…
வணக்கம் தேவா முதலில் கலைஞர் தொலைக்கட்சியில் தமிழ் படும் பாட்டை பாருங்கள்..
நொந்து போவீர்கள்...
//இன்னும் சில தமிழர்கள் நாம் தமிழில் பேசினால் மதிப்பதே இல்லை....ஆங்கிலத்தில் பேசினால் மரியாதை சரளமாக வரும்.....எதாவது வேலை ஆகவேண்டும் அல்லது புகார் கொடுக்க வேண்டும் என்றால் உரக்க ஆங்கிலத்தில் பேசினால் ...பயப்படுகிறார்களா இல்லையா....? மனோதத்துவ ரீதியாக மனதிலே ஒரு எண்ணம் எடுத்துக் கொண்டு ஆங்கிலத்தில் பேசினால் பயப்படும் நிலை மாற...ஏதாவது விளக்க வகுப்புகள் எடுக்கப் போகிறீர்களா....செம்மொழி விழா நடத்தியவர்கள்.....?
//
:)
கே.ஆர்.பி.செந்தில் said...
வணக்கம் தேவா முதலில் கலைஞர் தொலைக்கட்சியில் தமிழ் படும் பாட்டை பாருங்கள்..
நொந்து போவீர்கள்..//

@@@கே.ஆர்.பி.செந்தில் said..நம் மக்கள் எத்தனை பேர் மக்கள் டிவி பார்கிறார்கள்
சௌந்தர் நான் சொன்னது கலைஞர் குடும்பம்,, ஏன் சன் டிவி,கே டிவி இது எல்லாம் பெயர் மாற்ற சொல்ல வேண்டியது தானே கலைஞர்.நான் கேட்ட அனைத்து கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். செம்மொழியால் யாருக்கு என்ன லாபம் என்று சௌந்தர் நீங்கள் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.. நீங்கள் அங்கு நடந்த நிகழ்வுகள் அனைத்து பார்த்தீர்களா? தமிழை பற்றி யாரும் பேசவில்லை. கலைஞருக்கு தான் ஜால்ரா அடித்தார்கள்.நீங்கள் விவாதாம் செய்வதை வரவேற்கிறான். அதனால் என்ன பயன் மக்களுக்கு என்று நீங்கள் விளக்கம் கொடுங்க...
400 கோடி செலவில்லை என்று சொல்லும் சௌந்தர் 68கோடிதான் என்று சொல்றீங்க..உங்களுக்கு பல இணையத்தில் வந்த செய்தியை தருகிறேன் பாருங்க..பதில் சொல்லுங்க

மகனுக்கு (மு.க.ஸ்டாலின்) பொறுப்பு, மகளுக்கு (கனிமொழி) பொறுப்பு, பேரனுக்கு (கலாநிதி மாறன்) பொறுப்பு, வளர்ப்பு மகளின் கணவருக்கு பொறுப்பு (சரத்குமார்-ராதிகாவை கலைஞர் மகள் என அழைப்து வழக்கம்), நண்பர்களுக்கு பொறுப்பு, எதிரிகளுக்கும் பொறுப்பு என தினமும் ஏதாவது ஒரு குழுவையும், குழு உறுப்பினர்களையும் அறிவித்து வருகிறார் கலைஞர்.

கோவை முழுவதும் சுற்றி வந்தேன். அருணாசலம் திரைப்படம் பார்த்திருப்பீர்கள். ரஜினியின் தகப்பன் 30 கோடியைக் கொடுத்து 30 நாட்களுக்குள் செலவழிக்க வேண்டும் என்று ரஜினியிடம் சொல்லி இருப்பார். செலவழித்த காசால் எந்த வருமானமும் வரக்கூடாது என்ற நிபந்தனையும் விதித்திருப்பார். அருணாசலம் படம் போல நடக்குமா என்று கூட நாம் வியந்திருப்போம். ஆனால் அதை விட கொடுமையாக 400 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டிருக்கிறது.

http://velichathil.wordpress.com/2010/06/23/
சௌந்தர் கீழே கொடுத்திருக்கும் இணையங்களை பாருங்க..

செம்மொழி மாநாடு… மெத்தசெலவு ரூ 311.5 கோடி
http://www.envazhi.com/?p=19320
மக்கள் வரிப்பணத்தில் 400 கோடி ரூபாய் செலவில் செம்மொழி மாநாட்டை கோவையில் நடத்திக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.
http://inioru.com/?p=14309
செம்மொழி மாநாடு நடத்துவது ஏன்? ...... 400 கோடி ருபாய் செலவு செய்து இருநூறு கோடி ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=23868
http://www.yarl.com/forum3/index.php?showtopic=72833
ரூபாய் 400 கோடி செலவில் நம் முதல்வர் உருவாக்கிய முக்கிய அறிவிப்புகள்
http://ponraj-tuticorin.blogspot.com/2010/06/400.html
மாநாடு துவங்குவதற்கு 400 கோடி ரூபாய் ... செம்மொழி மாநாடு நடத்தப்படுகிறது? ... பல கோடி செலவில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. ...
www.adhikaalai.com/index.php?option=com_content...id...
400 கோடி ரூபாயில் கருணாநிதி கோவையில் நடத்தும் செம்மொழி ... உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பல கோடி ரூபா செலவில் மிகப்பிரமாண்டமாக ...
www.tamilveli.com/v2.0/tagsearch/
வெற்றி வெற்றி செம்மொழி மாநாடு வெற்றி ... 400 கோடி ரூபாய் செலவில் ஒரு தமிழ் மாநாட்டை ...
jothibharathi.blogspot.com/2010/06/blog-post_26.html
400 கோடி செலவில் நடத்தப்பட்ட செம்மொழி மாநாடு ஒரு வழியாக நிறைவுக்கு வந்துவிட்டது. ...
thatstamil.oneindia.in/comment/2010/06/4/102815.html
க ரா said…
//தமிழரிடம் தமிழில் பேசுங்கள் என்று கண்டித்து சொல்லா ஏதேனும் வழிவகை உண்டா.....?//

மனமிருந்தால் மார்க்கமுண்டு

//தமிழா நீங்கள் என்று கேட்க (இது நடந்தது துபாயில்) யெஸ் என்று இறுக்கமாய் பதில் சொல்லி தொடர்ந்து ஆங்கிலத்தில் உரையாடிய போது உடையில்லாமல் நின்று பேசியது போல உணர்ந்தேன்...../
அங்கன்னு இல்ல தமிழநாட்டுலயே பணியிடங்களில் இப்படித்தான் இருக்கிறது. இதுல ஒரு விசயம் என்னன்னா இப்பல்லாம் எல்லா மொழி மக்களும் ஒரு இடத்துல வேலை நிமித்தம் கூடுறதால அங்க ஒரு பொது மொழிலதான்(ஆங்கிலம்) பெரும்பாலும் பேச வேண்டியிருக்கிறது. அதனால இத மன்னிச்சிறலாம்.

//மொழிக்கான விழா எடுத்ததற்கு வாழ்த்துச் சொல்லும் அதே நேரத்தில் தமிழை மேம்படுத்தும் வேளையில்..........தமிழனை மேம்படுத்தவும் ஏதாவது செய்யுங்கள் பெரியவர்களே.....!
//
செவிடன் காதுல ஊதுற சங்கு மாதிரிதான் போகுது இந்த வார்த்தைகள். யாரு கேக்கறா இதல்லாம். செம்மொழி மாநாட்டுல கூட தாத்தவோட குடும்பம்தான் மேடை முழுக்க. ஒரு வேள அவங்க மட்டும்தான் தமிழர்களோன்னு ஒரு சந்தேகம் வந்துரும் வெளில இருந்து பாக்கறவங்களுக்கு.
விடுத‌லைவீரா said...
400 கோடி செலவில்லை என்று சொல்லும் சௌந்தர் 68கோடிதான் என்று சொல்றீங்க..உங்களுக்கு பல இணையத்தில் வந்த செய்தியை தருகிறேன் பாருங்க..பதில் சொல்லுங்க

மகனுக்கு (மு.க.ஸ்டாலின்) பொறுப்பு, மகளுக்கு (கனிமொழி) பொறுப்பு, பேரனுக்கு (கலாநிதி மாறன்) பொறுப்பு, வளர்ப்பு மகளின் கணவருக்கு பொறுப்பு (சரத்குமார்-ராதிகாவை கலைஞர் மகள் என அழைப்து வழக்கம்), நண்பர்களுக்கு பொறுப்பு, எதிரிகளுக்கும் பொறுப்பு என தினமும் ஏதாவது ஒரு குழுவையும், குழு உறுப்பினர்களையும் அறிவித்து வருகிறார் கலைஞர்.

கோவை முழுவதும் சுற்றி வந்தேன். அருணாசலம் திரைப்படம் பார்த்திருப்பீர்கள். ரஜினியின் தகப்பன் 30 கோடியைக் கொடுத்து 30 நாட்களுக்குள் செலவழிக்க வேண்டும் என்று ரஜினியிடம் சொல்லி இருப்பார். செலவழித்த காசால் எந்த வருமானமும் வரக்கூடாது என்ற நிபந்தனையும் விதித்திருப்பார். அருணாசலம் படம் போல நடக்குமா என்று கூட நாம் வியந்திருப்போம். ஆனால் அதை விட கொடுமையாக 400 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டிருக்கிறது.//


இது உலகத்தில் நடக்கும் ஒன்று தான் Clinton மனைவி இப்போது அமைச்சராக இருக்க வில்லையா
சிதம்பரம் பையன் அரசியலில் இருக்க வில்லையா,
இது நீங்கள் அரசியலில் இருந்தா உங்க பதவியை உங்க பையன்னுக்கு தான் தருவிங்க என் கலைஞர் மட்டும் உங்க கண்ணனுக்கு தெரிகிறார்
தச்சு வேலை செய்யும் கோவிந்தனுக்கும், கட்டிட வேலை செய்யும் மாரியம்மாவிற்கும், அதோ அடுத்த தெருவில் மாம்பழம் வியாபாரம் செய்கிறாளே...பொன்னம்மா பாட்டி இவர்கள் என்ன வேற்று கிரகவாசிகளா? இவர்களுக்கு தமிழின் செம்மையை யார் விளக்குவார்கள்...?//


இதைத் தான் எதிர்பார்தேன். தாய்த் தமிழகத்தில் உள்ள வறிய கிராம மக்களின் வாழ்க்கையில் எம் தமிழ் மொழிக்கு விழா எடுப்பவர்கள் தமிழினை எளிய வடிவில் அவர்களுக்கு விளங்க வைக்க ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா?

எல்லாமே அரசியல். பாவம் தமிழ்த் தாய்.. தன்னைப் புகழ்கிழ்பவ்பர்களால் கற்பழிக்கப்பட்டு கதறியழுகிறாள்! என்ன செய்ய? எல்லாமே வியாபாரமாகி விட்டது. முதலில் சண் குறூப்பிலை தமிழ் தமிழாக ஒளிபரப்பாகட்டும். அதற்குப் பிறகு தமிழுக்கு விழா கொண்டாடட்டும்.
பாவம் தமிழ்த் தாய்
தன்னைப் புகழ்கிறார்கள்
என எல்லோராலும் சொல்லப்படும்
காமுகர்களினால் கற்பழிக்கப்படுகிறாள்
ஐம்பெரும் அணிகலன்கள்
யாவும் அரங்கிலே
இருப்பவர்கள் முன்னே
கவியரங்கம் எனும்
சுய பல்லவியின்
துணையுடன் நொருக்கப்படுகின்றன.
இனியும் பொறுத்தல் தகுமா
என்ற படி தமிழ்த் தாய் ஒரு
நாள் சீறுவாள்- அப்போது
கலைஞர்???????
// ஒரு அலுவல் விசயமாக வேறு அலுவலகத்திற்கு சென்ற நான் ...அங்கு நான் சந்திக்க வேண்டிய மனிதரும் தமிழர்தான் என்று அறிந்து ...தமிழா நீங்கள் என்று கேட்க (இது நடந்தது துபாயில்) யெஸ் என்று இறுக்கமாய் பதில் சொல்லி தொடர்ந்து ஆங்கிலத்தில் உரையாடிய போது உடையில்லாமல் நின்று பேசியது போல உணர்ந்தேன்.....//

ஹ்ம்ம்.. புரியுதுங்க.. எனக்கும் இந்த அனுபவம் இருக்குதுங்க.. நீங்க தமிழான்னு கேட்டுட்டு உடனே தமிழ்ல பேச ஆரம்பிச்சா அவங்க ஆங்கிலத்தில் பேசும்போது... கடுப்பா வரும்..

என்னத்த சொல்ல..!!

/// இன்னும் சில தமிழர்கள் நாம் தமிழில் பேசினால் மதிப்பதே இல்லை....///

ஹ்ம்ம்..ரொம்ப ரொம்ப சரியா சொன்னிங்க.. தேவா..
விடுமுறைக்கு இந்தியா சென்று இருந்த போது, எங்கயாவது நம்ம தமிழ்ல பேசினா.. நம்மள ஏதோ பூச்சிய பாக்கற மாதிரி பாக்குறாங்க.. (நீ அமெரிக்கா-ல இருந்து தான் வந்தியா...என்கிற மாதிரி)

//தொடர்ந்து செல்வேன்....
ஏற்றதொரு கருத்தை...
எனதுள்ளம் ஏற்றதால்..
எடுத்துரைப்பேன்....எவர்வரினும்....
நில்லேன்....! அஞ்சேன்...! ///

இவ்வழியில் என் தோழர்
உம்முடன் பயணம் செய்ய
எனக்கும் மகிழ்ச்சி..!!
Chitra said…
மொழிக்கான விழா எடுத்ததற்கு வாழ்த்துச் சொல்லும் அதே நேரத்தில் தமிழை மேம்படுத்தும் வேளையில்..........தமிழனை மேம்படுத்தவும் ஏதாவது செய்யுங்கள் பெரியவர்களே.....!

.... வழிமொழிகிறேன்!
Riyas said…
//தொடர்ந்து செல்வேன்....
ஏற்றதொரு கருத்தை...
எனதுள்ளம் ஏற்றதால்..
எடுத்துரைப்பேன்....எவர்வரினும்....
நில்லேன்....! அஞ்சேன்...! ///

தேவா அவர்களே, தொடர்ந்து செல்லுங்கள்..

தங்களின் பதிவு அருமை அருமை அருமை
//உலகம் மொழியறியா காலத்தில் கவிசெய்தோம் நாம்.//

சூப்பர் மாம்ஸ்....

பதிவு கலக்கல்... ஆனால் செம்மொழி மாநாடு தொடங்குறதுக்கு முன்னாடி போட்டிருந்தா இன்னும் சூடாயிருந்திருக்கும்... ஆனால் நெதியடி கேள்விகள்...
ஊருக்குத்தான் உபதேசம்...
எங்கு எது நடந்தாலும் வேடிக்கை பார்ப்பது என்பது தமிழனின் தனி திறமை என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது இது போன்ற மாநாடு
நிகழ்சிகளைப் பார்க்கும்பொழுது .

சிறப்பாக சாடி இருக்கிறிகள் . பகிர்வுக்கு நன்றி நண்பா
ஹேமா said…
முழுதுமான தமிழ்ப் பதிவு.த‌மிழோடு கலந்த அலசிய உங்களுக்கு பாராட்டுக்கள் தேவா.போற்றத்தக்க பதிவு.

http://santhyilnaam.blogspot.com/
சத்தியத்தில் கவிபாடும் உண்மை கவி இன்றில்லை எங்குமே! திராவிட கட்சியின் அஸ்திரமே ஆதிமுதல் மொழிதான் அதை இன்றுவரை பற்றி வெற்றிகொடிகட்டிகொண்டிருக்கிறார்கள் அவர்கள் தாய் தமிழல்ல என்பது சொல்லவண்ணா வேதனை தருகிறது! என்செய்ய? தமிழ் தாய்மககளெல்லாம் ஆங்கில மோகத்தில் அடிமையாகிகிடக்க அவர்களது தினசரி வாழ்வு குட்மார்னிங்கில் தொடங்கி குட்நைட்டில் முடிகிறது! இதில் ஆட்சியாளர்களின் குற்றம் மட்டுமா உள்ளது? வேண்டும் விழிப்புணர்வு ஒவ்வொரு தமிழனிடத்திலும்! ஒவ்வொரு தமிழ் இல்லங்களிலும் தமிழ் மணம் வீசவேண்டும்!
நம்மொழி செம்மொழி அரியணை ஏறியது!

இறுதியில் இதாவது தமிழுக்கு கிடைத்ததே என்று எண்ணத்தோடு..
//@@@கே.ஆர்.பி.செந்தில் said..நம் மக்கள் எத்தனை பேர் மக்கள் டிவி பார்கிறார்கள் //

மானாட மார்பாட போன்ற மட்டமான நிகழ்ச்சிகளினால் மக்கள் மதிமயங்கிருக்கும் இந்நாளில் தாய்தமிழ் மணத்தோடு "மண்ணும் பயணுறவேண்டும்" என்ற சீரிய சிந்தனையோடு ஆரம்பித்து தொடர்ந்து தமிழ்மக்களின் ஆதரவோடு அணிசெய்துகொண்டிருக்கிறது..
நண்பர் சௌந்தர் அவர்களே!

மகனுக்கு (மு.க.ஸ்டாலின்) மகன்(அழகிரி) மகளுக்கு (கனிமொழி) பேரனுக்கு (கலாநிதி மாறன்) பொறுப்பு,
என்று நான் கேட்ட கேள்விக்கு உங்களின் விபரம் அறியாத பதில்-
இது உலகத்தில் நடக்கும் ஒன்று தான் Clinton மனைவி இப்போது அமைச்சராக இருக்க வில்லையா
சிதம்பரம் பையன் அரசியலில் இருக்க வில்லையா,
இது நீங்கள் அரசியலில் இருந்தா உங்க பதவியை உங்க பையன்னுக்கு தான் தருவிங்க என் கலைஞர் மட்டும் உங்க கண்ணனுக்கு தெரிகிறார்.

கிளிண்டன் மனைவி அவரது அமைச்சரவையில் பதவியில் இருந்தாரா? சிதம்பரத்தின் மகன் என்ன பதவியில் உள்ளார்? கலைஞரின் ஒட்டு மொத்த குடும்பமும் பதவியில் இருப்பது போல வேறு எங்கேயும் இல்லை. பின்னூட்டம் போடுவது தவறு இல்லை. கொஞ்சம் சிந்தித்து பதில் போடுங்கள். அதுமட்டுமல்ல நான் கேட்ட பல கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியாதையும் நான் அறிவேன்.

உங்களுக்கு தெரிந்த கேள்விகளுக்கு எதோ கலைஞர் மேல உள்ள பாசத்தால் பதில் சொல்லி இருப்பதும் புரிகிறது. நானும் ஒரு திராவிட இயக்கதில் உள்ளவன் தான். ஆனால் யார் தவறு செய்தாலும் தவறு என்று சுட்டி காட்ட வேண்டும். உங்களை போல ஜால்ரா அடிப்பதில் எனக்கு விருப்பமில்லை...

உங்களுக்கு நேரம் இருப்பினும் மக்கள் தொலைக்காட்சி பாருங்கள்.மற்ற தொல்லைகாட்சிக்கும் இதுக்கும் உள்ள வேறுபாடு அறிவீர்கள்.
Mahi_Granny said…
"தச்சு வேலை செய்யும் கோவிந்தனுக்கும், கட்டிட வேலை செய்யும் மாரியம்மாவிற்கும், அதோ அடுத்த தெருவில் மாம்பழம் வியாபாரம் செய்கிறாளே...பொன்னம்மா பாட்டி இவர்கள் என்ன வேற்று கிரகவாசிகளா? இவர்களுக்கு தமிழின் செம்மையை யார் விளக்குவார்கள்."..? இந்த நிலைமை தான் எனக்கும் . இன்று எல்லோரும் அழகு தமிழில் எழுதி கலவரப்படுத்தி விட்டிர்கள். உங்களது இடுகையில் முதல் பத்தி படித்தவுடன் நானெல்லாம் தமிழில் படித்தேன் என்று சொல்லவே பிடிக்கவில்லை. பெயருக்கேத்த warrior தான். வாழ்த்துக்கள் தம்பி
//வெற்று வயிறும், வெறுமையான எதிர்காலமும் தமிழின் செம்மையை இவர்களின் செவிகளுக்குள் செல்ல அனுமதிக்குமா? //

நச் நண்பரே...

மொழி நிலைக்க வேண்டுமானால் மனிதம் நிலைக்க வேண்டும்...
dheva said…
பின்னூட்டமிட்டுள்ள அனைத்து...அன்பு நண்பர்களுக்கும், தம்பிகளுக்கும் தோழிகளுக்கும்...எனது அன்பான நன்றி கலந்த வணக்கங்கள்!
SASIKUMAR said…
thanks to http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=19877&Itemid=147---- shyssian
SASIKUMAR said…
thanks to http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=19877&Itemid=147----shyssian
Anonymous said…
தலைப்பு முதற்கொண்டு உங்களை பற்றி சொல்வது வரை ஆங்கிலத்தில் சொல்லி விட்டு ஊருக்கு மட்டும் உபதேசமா நண்பா?

இது என்ன நியாயம்?

அந்த கடவுளுக்கே வெளிச்சம்

உண்மை தமிழன்
unmai tamilan said...

தலைப்பு முதற்கொண்டு உங்களை பற்றி சொல்வது வரை ஆங்கிலத்தில் சொல்லி விட்டு ஊருக்கு மட்டும் உபதேசமா நண்பா?

இது என்ன நியாயம்?

அந்த கடவுளுக்கே வெளிச்சம்

///

அட உண்மை தமிழா.. எல்லாமே சரியா சொல்லிட்டு உங்க சுயவிவர பெயர மட்டும் ஆங்கிலத்தில் போட்டுட்டீங்களே..!

இது நியாயமா உண்மை தமிழா ?
விஜய் said…
உண்மை தமிழன் தோழரே, தேவா அவர்களாவது தமிழ் படும் பாட்டையும், அதற்க்கு என்ன செய்ய வேண்டும் என்ற கருத்தை வைத்தார், இன்னும் அழகான கருத்துக்களை , அழகான பதிவுகளை தன்னால் இயன்றவரை தமிழில் வைத்து உள்ளார், உண்மை தமிழன் என் பெயர் வைத்து இருக்கும் நீவீர் தமிழுக்காக என்ன செய்தீர், ஒன்றே ஓன்று மட்டும் செய்தீர் ,உண்மை தமிழன் என்ற கணக்கை அவசரமாய் திறந்து ,இப்படியொரு கேள்வியை கேட்டு இருக்கிறீர், நிஜமாய் நீங்கள் தேவா அவர்களின் எழுத்தை பிடிக்காத ஒரு ஆசாமியை தான் இருக்க வேண்டும்
Admin said…
நல்லதொரு பதிவு நண்பா... உங்கள் கருத்துக்களோடு நான் உடன்படுகிறேன். இதனை நான் கலைஞர் என்று செம்மொழி மாநாடு பற்றி பேச ஆரம்பித்தாரோ அன்றே உணர்ந்து கொண்டேன்.



இதனை செம்மொழி மாநாடாக நான் பார்க்கவில்லை. கலைஞரின் புகழ் பாடும் ஒரு விழாவாகவே பார்க்கிறேன். இன்று உலகிலேயே சிறந்த ஒரு மொழியாக இருக்கின்ற தமிழ் மொழியை விற்று அரசியல் நடாத்திக் கொண்டிருக்கின்றனர் பலர்.
Admin said…
//விஜய் said...
உண்மை தமிழன் தோழரே, தேவா அவர்களாவது தமிழ் படும் பாட்டையும், அதற்க்கு என்ன செய்ய வேண்டும் என்ற கருத்தை வைத்தார், இன்னும் அழகான கருத்துக்களை , அழகான பதிவுகளை தன்னால் இயன்றவரை தமிழில் வைத்து உள்ளார், உண்மை தமிழன் என் பெயர் வைத்து இருக்கும் நீவீர் தமிழுக்காக என்ன செய்தீர், ஒன்றே ஓன்று மட்டும் செய்தீர் ,உண்மை தமிழன் என்ற கணக்கை அவசரமாய் திறந்து ,இப்படியொரு கேள்வியை கேட்டு இருக்கிறீர், நிஜமாய் நீங்கள் தேவா அவர்களின் எழுத்தை பிடிக்காத ஒரு ஆசாமியை தான் இருக்க வேண்டும் //

வழிமொழிகிறேன்.
veeramanikandan said…
@உண்மை தமிழன் unmaithamilan அந்த உண்மை தமிழன் என்ற தோழர் தயவு செய்து உங்கள் படைப்புகள் அல்லது ஆக்கங்கள் ஆகியவற்றின் இணைப்பை அனுப்பவும், அவை படித்த பிறகு நீங்கள் இந்த பின்னூட்டம் அனுப்பியதர்க்கான என்னத்தை எங்களால் நிரூபிக்க முடியும்... கல்லெறிவது யார் நோக்கமாக இருந்தாலும் எங்கள் நோக்கமல்ல... இதை நீங்கள் இந்த தேவா அண்ணனின் அன்புத் தம்பிகளின் பாசமாக கூட என்னலாம். உண்மையில் பாலை மண்ணில் இருந்து கொண்டு தமிழை வளர்க்கும் எண்ணம் கொண்டு தன் படைப்புகளை தன்னிகரில்லாமல் எழுதி வரும் தேவா விற்கு சிலை வைக்க முடியாவிட்டாலும் தயவு செய்து இப்படி வலை பின்னதீர்கள்... உள்ளத்து நெஞ்சத்தின் கருத்தை தடுத்திட ஒரு போதும் போலி முகவரிகள் உதவாது... முன் நின்று படைப்புகளை காட்டுங்கள் பிறகு நாம் கூறலாம் எது உண்மை? எது பொய் என்று?
//தலைப்பு முதற்கொண்டு உங்களை பற்றி சொல்வது வரை ஆங்கிலத்தில் சொல்லி விட்டு ஊருக்கு மட்டும் உபதேசமா நண்பா?

இது என்ன நியாயம்?

அந்த கடவுளுக்கே வெளிச்சம்

உண்மை தமிழன் //

தண்ணியக்குடி தண்ணியக்குடி........ அப்பத்தாங்க தெளிவு வரும். வந்த பின்னாடி உண்மையான முகம் மட்டும் போதாது அகத்தோட வாங்க.
dheva said…
மீண்டும் பின்னூட்ட்மிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.............!

உண்மைத்தமிழனின் கருத்த்துக்கு என்னுடைய அ நேக நமஸ்காரஙக்ள்.. நல்ல கருத்தை சொல்ல ஒரு பெயரில்லாமல் வரவேண்டும் என்பது மட்டும் விளங்கவில்லை...

உங்களின் சுயவிபரம் சரியாக இருக்கும் பட்சத்தில் நானும் தங்களுக்கு பதிலளிக்கிறேன்....! மற்றபடி உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி தோழரே...!
///தெருக்குத்தெரு தமிழ்ச்சுவையூட்டும் நிகழ்ச்சிகள் நடை பெற்றிருக்க வேண்டாமா? பாமரனுக்குப் புகட்டாமால் அறிஞர்களே பேசி சிரித்து, மகிழ்ந்து கொள்ள தமிழ் என்ன தனிப்பட்ட சொத்தா? ////

அருமை அண்ணா .. அனைவரும் அரசியலை மட்டுமே விமர்சித்தார்கள்.. நீங்கள் தான் அதனை எப்படி செய்திருக்க வேண்டுமென கூறியுள்ளீர்கள்..!!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த