Skip to main content

ஹார்மோன் செய்யும் கலகம் தானடா......!



























காதல்...!

"கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டி விட்டால், மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்".

என்று சொன்ன கவிஞனையும், தலைமையின்பம் இது என்று சொன்ன மீசைக்காரனையும் துணைக்கு அழைத்துக் கொண்டு...இந்த ஹார்மோன் கலகத்தை கொஞ்சம் பிரித்து மேயலாம் என்று நினைத்தவுடன்....சட்டென்று ஒரு தொடர் இப்போதுதானே முடிச்சோம்....சரி தைரியமா அடுத்த தொடரை தொடங்கலாம் என்று தீர்மானித்ததின் விளைவு...கலகத்துக்குள் உங்களையும் அழைத்துச் செல்கிறேன்....

"
"
"

ஏதேனும் ஒரு கோவிலுக்குச் செல்லவேண்டும் என்று தீர்மானித்த ஒரு விடுமுறை நாளில்
என் அறையை விட்டு வெளியேறி...என்னுடைய ஸ்பிளண்டரை போரூர் மதானந்தபுரம் கீரீன் அப்பார்மென்ட்ஸிலிருந்து நான் சீற விட்டபோது காலை 11 மணி. எந்த கோவிலுக்குப்போவது என்று தெரியாமல் குழப்பத்தில் விக்னேஸ் அண்ணனை செல் போனுக்குள் கொண்டு வந்தேன்.

" அண்ணே கோவிலுக்கு போலாம்னு கிளம்பிட்டிருக்கேன்...".......என்னது நீயா? எதுக்குப் போற! என்று கேள்விக்குறிக்குப் பதிலாக ஆச்சர்யகுறி போட்ட விக்னேஷ் அண்ணன் தான் வாழ்க்கையில் எனக்குத் திருப்புமுனையாய் இருந்து சத்தியத்தையும் உண்மையையும் தெளிவையும் ஆன்மீகத்தின் சாரத்தையும், இந்து மதம் என்று சொல்லக் கூடிய சனாதான தர்மத்தின் சூட்சுமத்தையையும் விளக்கி...விளக்கி கேள்விகளால் நிரம்பி ததும்பி வழிந்து கொண்டிருந்த எனக்கு வழிகாட்டியவர்.

" தத்தை தத்தை..தத்தை..ஒரு அத்தை பெத்த தத்தை " என்ற ரேஞ்சுக்கு ஒரு பக்கா அக்மார்க் ஹோட்டலியர் நான்....! எனக்குள் 70%திமிரும் 30%அறியாமையும் ஆக்கிரமித்து இருந்த காலங்கள் அவை....! தெரிந்தோ தெரியாமலோ கல்லூரிக் காலங்களில் கூட பயிலும் பெண்களை கவர வேண்டுமென்று அவர்கள் முன் ஜம்பமாக பாலகுமாரன் புத்தகங்கள் எடுத்து சென்று இருக்கிறேன்....எடுத்து சென்ற பாலகுமாரனை விளையாட்டாக புரட்ட அவர் மட்டும் கெட்டியாக என்னைப் பிடித்து கொண்டு கல்லூரி தாண்டியும் என்னைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.

சரி விக்னேஷ் அண்ணன் பற்றி சொல்ல வந்துட்டு ரூட் எங்க போகுது பாருங்க....விக்னேஷ் அண்ணன் எங்க அத்தானோட நண்பர் சினிமா துறையில் இருக்காங்க...உதவி இயக்குனாராய் இருக்கிறார். இப்போது அவர்தான் மறுமுனையில் கேள்விக்குறிக்கு பதிலாக ஆச்சர்யக்குறி போட்டவர்......!

ஏண்ணே நான் கோவிலுக்கு எல்லாம் போகக்கூடாதா? என்று கேட்டதற்கு 11 மணிக்கு கிளம்புறியே..... 12 மணிக்கு நடை சாத்திடுவாங்களே..முன்னாலயே போகக்கூடாதா?ன்னு கேட்டர்... 10:30க்குதானே எழுந்தேன் அத எப்படி தினசரி காலை 5:30க்கு எழும் விக்னேஷ் அண்ணன் கிட்ட சொல்றது...?" இல்லண்ணே..." என்று வழிந்தேன். சரி சரி நேரா கிளம்பி....கார்வண்னன் அங்கிள் (டைரக்டர் கார்வண்ணனேதான்...எங்க அத்தான் நண்பர்தான் இவரும்) வீட்ல இருக்கேன் வந்துடு....அப்புறமா சாப்பிட்டு விட்டு 3 மணிக்கு மேல கோவிலுக்குப் போகலாம் என்று சொல்லி முடிக்கும் முன்பே மனசு என்னிடம் சண்டை போட ஆரம்பித்து இருந்தது.

" தேவா.... நேரே பிரவுசிங் சென்டர் போ....இல்ல ஸ்பென்சர் போ....அப்படியும் இல்ல.....ஏதாச்சும் ஒரு போனா போட்டு யாரச்சும் ஒரு பொண்ணுக்குகிட்ட பேசிட்டு இரு அந்த .... கார்வண்னன் அங்கிள் வீட்டுக்கு எல்லாம் போகாத....ஏதோ கோவிலுக்கு நீ போகணும்னு ஆசைப்பட்ட அதுல கூடா ஏதாவது உள்குத்து இருக்கும்னு தெரிஞ்சுதான் சரி போகலாம்ணு நினைச்சா ....கார்வண்ணன் அங்கிள் வீட்ல போய்... நீ உக்காந்து கிட்டே இருப்ப அங்க இருக்கிற எல்லாரும் தத்துவம், கார்ல் மார்க்ஸ், லெனின், சிலப்பதிகாரம், யூதர்களின் வரலாறு, பல்லவர்களின் சிற்பக்கலை, ருஷ்ய புரட்சி, பொன்னியின் செல்வன் அது இதுன்னு ஏதேதோ புரியாத பாஷையில் பேசப் போறாங்க அதை ம்ம்ம்ம்ம்ன்னு தெரிஞ்ச மாதிரி கேட்டுகிட்டு தலையாட்டப் போற ....என்னால முடியாது வா....வேற எங்கனாச்சும் போலாம்னு மனசு முரண்டு பிடித்து என்னையே முறைச்சு பார்த்தது.

விக்னேஷ் அண்ணனிடம் இருந்த மரியாதையும்...எங்க அத்தான் மீது இருந்த பயமும் மனசை தோற்கடித்ததின் விளைவு...பக்தவச்சலம் தெருவில் (மாம்பலம் ரயில்வே ஸ்டேசன் பின்னலா இருக்கிற ஏரியா பாஸ்...சரியா அந்த ஏரியா பேர் தெரியல ஆன அந்த ஸ்டாப்..வந்து..ம்ம்ம்ம்ம் அயோத்தியா மண்டபம் ஸ்டாப்) இருந்த கார்வண்ணன் அங்கிள் வீட்டு முன்னால பைக்கை நிறுத்தினேன். மெல்ல கேட் திறக்கும் போதே சப்தம் கேட்டு நெடு நெடுவென்றிருந்த விக்னேஷ் அண்ணன் கதவைத் திறந்தார். பவ்யமாக ஒரு பூனைக் குட்டியைப் போல நடந்து கதவருகே சென்றவுடன் ஸ்னேகமாய் தோளில் கை போட்டு உள்ளே அழைத்துச் சென்றார் விக்னேஷ் அண்ணன்...

மெல்லிய இருளில் அழுந்தாமல் மெலிதாய் பரவியிருந்த அறை விளக்கில் வெளியே இருந்து வந்த எனக்குச் சுத்தமாய் கண்கள் தெரியவில்லை.....சிலீர் என்று ஏசிக் காற்று என் உடல் தழுவி நலம் விசாரித்ததில் உடம்பில் இருந்த வியர்வை எல்லாம் பயந்து ஓடியிருந்தது.....மெல்லிய இசை அறை முழுது வழிந்து கொண்டு இருந்தது.....வரவேற்பறையில் இருந்த சோபாவுக்குள் நான் என்னைப் புதைத்துக் கொண்டேன்....! கையில் ஒரு புத்தகத்தை கொடுத்துவிட்டு 20 நிமிடத்தில் வருவதாக சொல்லிவிட்டு அறைக்குள் சென்ற விக்னேஷ் அண்ணனுக்காக ஒரு குழுவே கதை விவாதாத்திற்காக காத்திருந்தது என்பது எனக்கு அப்போது தெரியாது.

கையில் கொடுக்கப்பட்ட புத்தகத்தை மெல்ல புரட்டிக் கொண்டிருந்தேன்....தாய் என்ற தலைப்பில் மாக்ஸிம் கார்க்கி எழுதியது....ஒரிரு பக்கங்கள் புரட்டிக் கொண்டிருந்த போது....மனம் அங்கிருந்து தாவி அதற்கு முந்தைய நாள் நினைவினைப் பற்றி அசைப்போட்டது....அதன் விளைவுதான் இப்போதைய கோவில் பக்தி என்று எல்லாம் யாருக்கும் தெரியாது...அப்படி என்னதான் நடந்துச்சு...நேற்று?

ஒரு யு டர்ன் பண்ணி அப் பண்ணி என்னொடு ப்ளாஸ்பேக்குக்குள் வாருங்கள்.....ப்ளீஸ்....

அந்த நான்கு நட்சத்திர ஹோட்டலின் ப்ரண்ட் ஆபிஸ் மேனேஜராய் என்னை ஆக்கியதில் அதன் நிர்வாக இயக்குனரின் அன்பும் எனது திறமையும் இருந்தாலும் அதற்கான மெச்சூரிட்டி என்னிடம் சுத்தமாய் அந்த 23 வயதில் இல்லை என்பதுதான் உண்மை. மனசு முழுதும் துடிப்பும், அகங்காராமும், காதலும் ...ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டே இருந்ததாலேயே.....எல்லாவற்றையும் ஒரு வேகத்தில் செய்யவேண்டும் என்ற பதட்டத்தில்....துள்ளிக் கொண்டே இருப்பேன். "யு ஆர்....ஆல் வேய்ஸ் இன் ஹரி..." என்று அடிக்கடி சொல்லும் கெஸ்ட் ரிலேஸன் எக்ஸிக்யூட்டிவ் சந்தான கங்குலி மேடம்தான்...எனக்கு எப்போதும் சப்போர்ட்....!

மதிய உணவிற்கு ஏன் டெலிபோன் ஆப்பரேட்டர் கனகா, ரிஷப்சனிஸ்ட் சுனிதா, வித்யா, மற்றும் வின்சென்டை ஒன்றாக நான் அனுப்பினேன்... ? நான் மட்டும் ஏன் தனியாக ப்ரண்ட் ஆபிஸ் கவுண்டரில் நின்றேன்....? அந்த நேரம் பார்த்து ஏன் இந்த தொலைபேசி வந்தது என்று இன்று வரை புரியவில்லை....

கதறிய போனை எடுக்க ஆப்பரேட்டரின் கேபினுக்குள் (ரிசப்சனுக்கு பின்னாலே இருக்கும்) நுழைந்தேன்....." குட் ஆஃப்டர் நூன் தக்க்ஷின் மே ஐ கெல்ப் யூ? பயிற்றுவிக்கப்பட்ட வாடிக்கையாளர் சேவை... நுனி நாக்கிலிருந்து புறப்பட்டு ரிசீவர் வழியே எதிராளியிடம் சென்று சேர்ந்த பின் .....எதிர்பார்க்காத குரல் பதிலாய் என்னைத்தாக்கியது....


" ப்ளீஸ் டோண்ட் கீப் த போன் டவுன்...ப்ளீஸ்....டோண்ட் டிஸ்கனெக்ட் த லைன்....ஸ்பீக் வித் மீ.... ப்ளீஸ்…. ப்ளீஸ் … ப்ளீஸ்" என்று அழுகையும் கெஞ்சலுமாய் என்னிடம் பேசிய குரல்.....தன்னுடைய பெயர் கவிதா என்று அறிமுகப்படுத்திக் கொண்டது..........


திடுக்கிடலோடு....அவள் சொல்வதை கேட்க ஆரம்பித்த எனக்கு தலை சுற்றியது.....!


(காத்திருங்கள்...காதலுக்காக)


தேவா. S

Comments

//ஒரு யு டர்ன் பண்ணி அப் பண்ணி என்னொடு ப்ளாஸ் பேக்குக்குள் வாருங்கள்.....ப்ளீஸ்....//
நீங்க கூப்பிட்டு வராமா போயிடுவோமா ( வேற வழி ? )

//" ப்ளீஸ் டோண்ட் கீப் த போன் டவுன்...ப்ளீஸ்....டோண்ட் டிஸ்கனெக்ட் த லைன்....ஸ்பீக் வித் மீ.... ப்ளீஸ்…. ப்ளீஸ் … ப்ளீஸ்" என்று அழுகையும் கெஞ்சலுமாய் என்னிடம் பேசிய குரல்.....தன்னுடைய பெயர் கவிதா என்று அறிமுகப்படுத்திக் கொண்டது..........//

நல்லா சஸ்பென்ஸ் வைக்குறீங்க ....

ராஜேஷ்குமார் நாவல் படிச்சமாதிரி இருக்குங்க ...
Subankan said…
அருமையான ஆரம்பம், ரசித்தேன் :)
ஸ்பீக் வித் மீ.... ப்ளீஸ்…. ப்ளீஸ் … ப்ளீஸ்... என்ன நடந்தது கட்சி பொதுக்குழுவை கூட்டி உடனே ஓரு முடிவு சொல்கிறோம்
elei ithe velaya pocch unakku oru todara aramikka vendiyathu appadiye nirutha vendiyathu unaku thuppaki nicchayam.

@soundar

antha AK47 ready pannu
Chitra said…
காதல் கதையில், இத்தனை திடுக்கிடல் திருப்பங்கள்..... தொடர்ந்து அசத்துங்க... நல்லா போய்க்கிட்டு இருக்குதுங்க.. :-)
@@@LK ஆரம்பிச்ச தொடர் எல்லாம் முடிச்சுகிட்டுதானே இருக்காரு..அப்புறம் எதுக்கு துப்பாக்கி....????
////ஒரு யு டர்ன் பண்ணி அப் பண்ணி என்னொடு ப்ளாஸ் பேக்குக்குள் வாருங்கள்.....ப்ளீஸ்....////
ஆனா நான் ஒன் வே ல போயிட்டிருக்கேன் அண்ணா ...!!
// திடுக்கிடலோடு....அவள் சொல்வதை கேட்க ஆரம்பித்த எனக்கு தலை சுற்றியது.....!//

எங்களுக்கும்தான் சுத்துது. எங்க ஆரம்பிச்சு எங்க போய் நிக்குது.
///elei ithe velaya pocch unakku oru todara aramikka vendiyathu appadiye nirutha vendiyathu unaku thuppaki nicchayam. ////
தொடர் ஆரம்பிச்சு நிறுத்தின துப்பாக்கி தராங்களா ...?
அப்படியே லைசென்ஸ் எடுத்து கொடுத்திருங்க ..!!
Anonymous said…
நல்லா இருக்குங்க.
Unknown said…
உங்கள் எழுத்தின் ஆளுமை.. என்னை மீண்டும் மீண்டும் படிக்க வைக்கிறது...
க ரா said…
அண்ணாச்சி தாங்க முடியல எனக்கு.... காதல்.. காதல்.. காதல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்... என்னவோ போங்க.. நடத்துங்க :)
க ரா said…
// உங்கள் எழுத்தின் ஆளுமை.. என்னை மீண்டும் மீண்டும் படிக்க வைக்கிறது...
//
ஊருக்கு நாலு பேரு இப்படி இருந்தா.. இவர் ஏன் இப்படி ஆட மாட்டாரு .. இம்ம்... :)
//ஆரம்பிச்ச தொடர் எல்லாம் முடிச்சுகிட்டுதானே இருக்காரு..அப்புறம் எதுக்கு துப்பாக்கி....?/

anga anga supsense podarare adhukuthan
ஹேமா said…
வித்தியாசமான தொடர்.காத்திருப்புக்களோடு.
ramyapilai said…
# தத்துவம், கார்ல் மார்க்ஸ், லெனின், சிலப்பதிகாரம், யூதர்களின் வரலாறு, பல்லவர்களின் சிற்பக்கலை, ருஷ்ய புரட்சி, பொன்னியின் செல்வன் #

வாழ்கையை மிகச் சிறப்பாய், எடுத்துக்கட்டும் விஷயங்கள்...
மிக எளிதாய், ஏதோ என்று அறிமுக படுத்தி விட்டீர்கள்!

நன்று தேவா!
அசத்தல் ஆரம்பம்....!!
VELU.G said…
நல்லா இருக்கு தேவா continue
vasu balaji said…
நல்லா போகுது தேவா:)
இந்த தொடரின் ஆரம்பமே மிகவும் எதிர்பார்பை தூண்டும் வகையில் தொடக்கி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் .

ஆங்கிலத்தை அதிகமாக தமிழில் எழுதுவது கூட அழகாகத்தான் இருக்கிறது ஆனால் ஆங்கிலம் தெரியாதவர்கள்தான் பாவம் . புரிதலுக்கு நன்றி
mkr said…
தொடர்ச்சியை எப்பொழுது இடுவிர் என்ற ஆவலை தூண்டும் வகையில் இருக்கிறது உங்கள் எழுத்து நடை.பாரட்டுகள் தேவா
கலக்கலா தொடங்குது. வழக்கம்போல அசத்துங்க.
ஆஹா....கிளம்பிட்டான்யா...கிளம்பிட்டான். ஆரம்பமே அமர்க்களமா இருக்கு மாப்ஸு. நீ வெளுத்துக் கட்டு! (ஆமா.....தங்கச்சிக்கு இந்த மேட்டர் தெரியுமா?)
விஜய் said…
ஒருத்தங்களோட ரியல் வாழ்க்கையை புரட்டிப்பார்க்க அத்தனை பேருக்கும் ஆசை வரும், இது மனித இயல்பு, அந்த ரியல் வாழ்க்கையில் இருந்து எவற்றை கற்றுக்கொள்ள அவர்களது ரியல் வாழ்க்கையை புரட்டி பார்க்கிறோம் என்ற வேதாந்தம் தேவை இல்லை, ஆயிரம் கதையின் வார்த்தைகள் படித்து மனதில் ஏற்றுவதை விட , ஒருத்தரோட ரியல் வாழ்க்கையின் பின்னணி, என்ன நடந்தது, எப்படி சமாளிக்கபட்டது, எதை ரியல் கதையின் நாயகன் கற்றுகொண்டார் என்பதில் படிக்கும், தெரிந்துகொள்ளும் ஒவ்வொருவரின் ஆழ்மனதில் பதிகிறது.
அப்படி பதியப்பட்ட ரியல் வாழ்க்கையின் சாராம்சம் படிப்பவனால், தெரிந்துகொள்பவனால் எடுத்து கொள்ளப்படுகிறது, எடுத்து கொள்ளப்பட்ட சாராம்சம் (ரியல் வாழ்க்கை கதையை)படித்தவானால் கதையின் நாயகனோடு , தன்னை சமப்படுத்தி ஏறக்குறைய பொருந்தும் குணங்களோடு பொருத்தி, தன்னை மாற்றிகொள்கிறான்..
நான் சொல்ல வந்ததவிட்டுட்டு எங்கயோ போய்ட்டேன்...சரி சரி சரி இதோ வரேன்...
அண்ணா என்ன இது பரபரப்பா போய்கிட்டு இருக்குறப்ப தொடரனும்னு போட்டுடீங்க ....

:(
எழுதி இருக்குற விதம், நீங்க தொடர்ம்னு போட்டதும், எப்போ அடுத்த பதிவு என ஏங்க வைக்குது ..
நீங்க கலக்குங்க அண்ணா
mohan baroda said…
Sir,
I have come to your post today only through Subadhra Pesarenn.

After reading 15 posts at one go, now I am reading Harmone Seyyum Kalagamdanada.
While going through the first part, I came across the name of Director Karvannan. Immediately there is a small flash in my mind. Because Mr.Karvannan studied with me in PUC at Vivekananda College during the year 1976-1977.
Hence, I posted this comment.
In one of his movies, even Dr.Ramadoss acted without any make-up and the movie's name is I thing PALANGAL.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த