ஜென்மங்களாய் சுமந்து திரியும் குப்பைகளை கழித்தெறிய வேண்டி மீண்டும் மீண்டும் அந்த குப்பைகளின் வாசனைகள் துரத்த ஜனித்து, மரணித்து, ஜனித்து மரணித்து இடைவிடாமல் ஆடிக் கொண்டிருக்கும் ஆட்டத்தின் இறுதி என்னவென்றறியாமல் மூன்று வேளை உண்டு, குடித்து, அலங்கார உடைகள் உடுத்தி, ஆயிரம் பொய்கள் சொல்லி, உறவுகள் கூட்டி, கூடி, பிணி சேர்க்கும் உடல் போற்றி, இன்னதென்று இதற்கென்று அறியாத செயல்கள் செய்து...செல்லும் வாழ்வின் ஓட்டத்தின் ஒரு தினத்தில் எங்கோ ஒரு மின்னல் வெட்ட மூளை செயலற்று நின்று இதுவெல்லாம் எதற்கு? என்று கேள்வி கேட்ட தினத்தில் .....புரிந்தது எல்லாம் அர்த்தமற்றது என்று....
ஒரு விசயத்தை விட வேண்டுமெனில் அதை விடுவதற்கான செயல்கள் செய்யவேண்டும். இது லெளகீக கணக்கு ஆனால் பிறப்பறுக்கும் இந்த பிரபஞ்ச கணக்கிற்கோ....முயற்சிகள் அற்று செயல் மறந்து கருத்துக்களை துப்பிவிட்டு காத்திருக்கவே வேண்டும்.
விதிமுறைகளுக்குள் சிக்கிக் கொண்டு வீசும் காற்றும், சுற்றும் பூமியும் மட்டுப்பட்ட மனிதனின் எண்ணத்திற்கேற்ப இருக்கவேண்டுக் என்று சிந்திக்கும் மூளைகள் எல்லைகளை உடைக்க அறிந்தும் உடைக்காமல் இருப்பதிலேயே அற்ப சுகம் கண்டு விலங்குகளாய் முடங்கிப் போய் கிடக்கின்றன மூலைகளில். நான், நான் என்று கூறிக் கொள்ளும் மனிதரிகளின் அறிவு அவர்களின் புலன்களின் எல்லை என்று ஏன் அறிவதில்லை.
புலன்களின் எல்லைகள் அறுபட்ட போதுதான், மனம் மகிழ்விக்கும் இசையையும், இருள் சூழ்ந்த உலகிற்கு ஒளியும், இன்ன பிற அறிவியல் அதியசங்களையும் மனித மூளைகள் ஜனிப்பித்தன. பார்வைகளுக்கும், சராசரி நினைவுகளுக்கும் அப்பாற்பட்டு சிந்தித்த மூளைகளின் வெளிப்பாடுதானெ இன்றைய அறிவியல். முதன் முதலாய் எல்லாம் கண்டவனின் மூளைக்குள் எங்கே ஒளிந்து இருந்தது விதிமுறைகள்? எல்லாம் தெரிந்து விட்டதென்று அறிவிக்கும் பொழுதுகளில்தானே அறியாமை சிம்மாசனம் ஏறிக் கொள்கிறது.
எல்லாம் தெரியும் என்று சொல்லுமிடத்தில் மட்டுப்பட்டு மரணித்து விட்ட மெய்யறிவை அறியாது பொய்யறிவைக் கைக்கொண்டு, ஈட்டிய பொருள் கொண்டு மமதை கொண்டு, தமது பார்வைகளின் வலுவறியாது பிதற்றும் விந்தை விளங்காது இயங்கித்தான் கொண்டிருக்கிறது பிரபஞ்சம்.ஒரு பல்லியின் பார்வையின் தூரம் சில சென்டி மீட்டர்கள், ஒரு ஓணானின் பார்வையின் தூரம் இன்னும் கொஞ்சம் அதிகம், ஒரு மாட்டுக்கு இவற்றை விட கொஞ்சம் கூடுதலாய் இருக்கும்.
இவற்றின் புலன்களின் எல்லை தாண்டியதற்கு அப்பாலும் உலகம் என்றென்று ஒன்று உண்டு என்று விவரித்து கூறினால் அவை எப்படி ஏற்றுக் கொள்ளாமல் வாதம் செய்து எங்கே காட்டு என்று கேட்குமோ? அப்படியாக உண்டு, இல்லை என்று விவாதிட்டு இலக்கு விட்டு எங்கோ விலகிச் செல்லும் மானுடத்தை நிறுத்த ஒரு வழி உண்டா...?
பார்வையற்றோர் நிறைந்த ஒரு தீவினுள் வழி தவறி விழுந்து விட்டான் பார்வையுள்ள ஒரு மனிதன். பார்வையின்றி நூற்றாண்டுகளாக வாழ்ந்து விட்ட அந்த மக்கள் இவன் வெளிச்சத்தைப் பற்றியும், காட்சிகளைப் பற்றியும் விவரித்தது கண்டு அதை புரிந்து கொள்ள இயலாமல் அவனின் மீது கோபம் கொண்டு அவனை சிறைச்சேதம் செய்து பொய்யினை பரப்புபவன் என்றறிவித்து மரண தண்டனையும் கொடுத்து விட்டனர்.
அவன் மீது சாற்றப்பட்ட குற்றம் இல்லாத ஒன்றை கற்பிக்க முயன்றது மேலும் அதை இவர்களுக்கு உணர்த்த முடியாதது, ஒளி என்று ஒன்று உண்டு என்று அவன் வாதிட்டு சொன்ன போது அவர்கள் கேட்டது ஒளியின் தடிமன் என்ன? அல்லது அதன் சுவை எங்கே? இனிக்குமா? கசக்குமா? புளிக்குமா? அப்படி இல்லை என்னில் அதன் மணம் என்ன? என்று மாறி, மாறி கேட்டு பின் நீ சொல்லும் ஒளி என்றும் வெளிச்சம் என்றும் ஒன்று உண்டென்றால் எம்மை அது பழி தீர்க்க வரட்டும், அப்போது பார்த்துக்கொள்கிறோம் ஆனால் அப்படி ஒன்றும் வராது ஏனென்றால் நீ பொய்யுரைக்கிறாய் என்று கூறி...சாட்டையால் அடித்து மரண தண்டனையும் கொடுத்து விட்டனர்.
ஒளியைப் பற்றி அறிய வேண்டுமெனில் கண்கள்தானே திறக்கப் படவேண்டும் அதற்கான முயற்சிகள் செய்யாமல் மேலும் மேலும் வாதிட்டது பார்வை தெரிந்த மனிதனின் முட்டாள்தனம். முட்டாள்தனத்திற்கு பரிசு....மரணதண்டனை. அது போலத்தான் கடவுள் என்ற விசயத்தை முதலில் விளங்காமலேயே கடவுள் இருக்கிறார் என்று கற்பிக்க முயலும் போது ஏளனமும் சறுக்கல்களும் வந்து விடுகின்றன.
எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? ஏன்? இரண்டு கேள்விகளும் பழைய வாசனைகளை அறுக்கும் கத்திகள்...
ஒளி பற்றி நான் இபோது விளக்கவில்லை.....பார்வை சரியானால் நீங்களே உணர்வீர்கள்....! அப்போது எதையோ ஒளி என்று நம்பிக்கொண்டு ஒளிக்கு 10 கைகள் 8 தலைகள் என்று நம்பியவரும் ஒளியே இல்லை என்று வாதிட்டவரும் தமது அறியாமையை அறிவர்......!
தேவா. S
Comments
இத்தனைப் பதிவு எழுதியிருக்கீங்க நீங்க சொல்கின்ற அந்த கருவ உணரவேண்டியதற்குண்டான முயற்சி தொடங்கினாத்தான் விடை கிடைக்கும்.
அதுவரைக்கும் விடை தெரிஞ்சமாதிரி காட்டிக்கலமே தவிர உணர முடியாதுண்ணே.
இல்லன்னா நானும் கமெண்ட் போட்டேன்னு இருக்கும்.
நீண்ட நாளை என் மனதில் ஓரு கேள்வி இந்த கட்டுரைக்கு எந்த சம்மந்தம் இல்லாமை இருக்கலாம்
இந்த உயிர் இறந்தவுடன் எங்கு செல்கிறது....இதற்க்கு அடுத்த பதிவில் கூட பதில் சொல்லாம்
இருந்தாலும் இந்த கட்டுரையில் இருந்து ஏதாவது கேட்கவேண்டும் என்றால் கேட்கலாமே?
அழகான வரிகள், இவைகள் கடவுளை பற்றிய புரிதலை பற்றிய எண்ணங்கள் மற்றுமல்ல, இன்னும் மனிதனில் தவறாய் கற்பிதம், கனவு, கற்பனை செய்துகொண்டு வட்டத்துக்குள் சுற்றிக்கொண்டு இருக்கும் பல பொய்யாய் பற்றி இருக்கும் எண்ணங்களுக்கும் பொருந்தும்,சரிதானே அண்ணா ...
நீங்கள் புரிதலை உண்டாக்க கோர்த்து இருக்கும் வார்த்தைகள் அழகாய் பதிவில் பயணிக்க வைக்கிறது அண்ணா ...
:)
invite debate........... want to popularise?
u...if anybody disuss about it .......realyshame......!!!!!!!!!!
we see lot of debate about the topic.....do some useful things....... use u r mind to do something for society..........
உங்கள் முதல் கேள்வி(பயம் )என்ன?..
இந்த பதிவை பிரசத்திபெற செய்ய போராடுகிறோம் என்றா?..
முதலில் கருத்துக்களை பிரசித்து பெறசெய்வதில் தவறில்லை, மொக்கை பதிவுகளில் அரை குறை உடைகளையும், காமம் தெறிக்கும் வார்த்தைகளை, காதல், இன்னும் கவரும் வண்ணங்களில் போட்டு வலைதளத்தை பிரசித்து பெரும் எண்ணம் இதில் இல்லை என்பதை புதிதாய் இந்த வலைத்தளத்தை வாசிக்கும் சிறுவனுக்கு கூட தெரியும்.
அப்படி இருக்க உமக்கு எப்படி தெரியாமல் போயிற்று என்று தெரியவில்லை.
ஒவ்வொருவனுக்குள் அறிவு நிரம்பி இருக்கும் பட்ச்சதிலும் ஏன் முட்டாள்களாக மனிதன் சில நேரங்களில் திரிகிறான், அறிவு நிரப்பி வைக்கபட்டிருக்கும் மனதனின் மூளை பெட்டகத்தில் ஏதோ ஒரு மூலையில், சரியாக நிரப்பபடாத அறிவும்,அறியாமை எண்ணமும் இருக்கின்றன,
can you please tell me the result of the debates?
எழுதி பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள், குறை சொல்லி பேர் வாங்குபவர்களும் இருக்கிறார்கள். நீர் எந்த வகை என உமக்கே தெரியும்
உதாரணத்துக்கு லாஜிக் ஒத்து வரலையே..பாஸ்.
( கண்ணு தெரியாதவன் இவ்வளவு செய்யும் போது கண்ணு தெரிஞ்சவன் எஸ்கேப் ஆகுறது கஷ்டமா))
அவ்வ்வ்வ்வ்
அடிப்படையான ஒரு விசயத்த பற்றிய புரிதலுக்கான வெளியாகத்தான் இந்த தளம் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது. இந்த புரிதல் சாத்தியமாச்சுன்னா இந்த உலகத்துல நடக்கக்கூடிய பல பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
உன்னை விடவா, நாங்களெல்லாம் ...
என்னதான் இருந்தாலும் உங்களை போல real street dog .... அஹ எங்களால வர முடியாது தலைவா
அவன் தப்பிக்க முயற்சி பண்ணல....மாறாக ஒளியைப்பற்றி அவுங்களுக்கு விவரிக்க முயன்று கொண்டிருந்தான்...
அப்புறம் ஒரு விசயம்...கதையில அது இல்ல லாஜிக்....வேற ஒண்ணு.....
அது தெரிஞ்சா...இந்த கேள்வி வராது....கண்டு பிடிங்க..அதை....!
தூக்கம் கலைஞ்சுருச்சா பாஸ்...
அழகா சொன்னீங்க அண்ணா ..!!
///எல்லாம் தெரிந்து விட்டதென்று அறிவிக்கும் பொழுதுகளில்தானே அறியாமை சிம்மாசனம் ஏறிக் கொள்கிறது.///
//அது போலத்தான் கடவுள் என்ற விசயத்தை முதலில் விளங்காமலேயே கடவுள் இருக்கிறார் என்று கற்பிக்க முயலும் போது ஏளனமும் சறுக்கல்களும் வந்து விடுகின்றன.///
எவ்வளவு ஆழமான சிந்தனை..! நிச்சயம் கடவுள் என்ற ஒன்றை முதலில் நம்புவர் தெளிவாக உணர வேண்டும். பின்னரே நம்பாதவர்க்கு எடுத்துக்கூற முடியும். நம்புவரே சரியாக உணரவில்லைஎன்றால் அதனை நம்பாதவரிடம் ஏளனப்பட்டுத் தான் நிற்க வேண்டும்..!!
you are not brave enough to show ur face. u dont have right to call us as dogs
ingau yarum yaraium sandaikku alaikka villai./ muthalil pathivi olunga padiyungal
I think i have courtesy to publish your comments even though you are not criticizing or debating and not leading to any kind of wisdom or healthy arguments….
I don’t know who you are; you are abusing me and my brothers still am publishing your comments….. ! Cann’t you feel our kind of attitude and respect.
Hope this is the limit i can bear with and if you wanna really argue...lets come as MAN as MAN with ur email id and name....!..
We are educated and wy should argue like barbarians....
Thank you very much for you valued... time!
Dear friends sorry for the debate. I accept your point..!!///
என்ன சார் அதுக்குள்ள திருந்திட்டீங்களா..? என்னால நம்பவே முடியல ..?
அது தெரிஞ்சா...இந்த கேள்வி வராது....கண்டு பிடிங்க..அதை....!//
நீங்க நல்லவரா கெட்டவரா...?..!!ஹா..ஹா..
(எங்க பாஸ் தூங்க விடுறீங்க...இன்னும் அங்கதான் ஒளிஞ்சிகிட்டு இருக்கேன்)
தலைவா உங்களை தான் தலைவா,
சரி இப்பவாவது உங்க பெயரை சொல்லலாமே அதான் ஞானம் வந்துடுச்சுல்ல ..
அட இது என்ன புது குழப்பமா இருக்கு...அதான பார்த்தேன் நீங்க அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக்கொண்டு இருக்க மாட்டீங்கன்னு...உங்க நேம் சுரேந்தர் அஹ...
---------------------
//Anonymous said...
Dear friends sorry for the debate. I accept your point..!! //
உங்களால , எங்கள பாராட்டின name தெரியாத இன்னொருத்தர சந்தேகப்பட வேடியதா போய்டுச்சு
சரி எங்க கருத்த ஏற்றுகிட்ட நீங்களும் இதே மாதிரி பெயர் சொல்லிடுங்க, confuse ஆகாது பாருங்க ...
ஏதோ ஆர்கியுமென்ட் ஓடுதுன்னு தெரியுது. தமிழ்ல இருந்தா எங்கள மாதிரி ஆளுங்களுக்கு புரியும். குறைந்தபட்சம் தேவாவது தமிழில் பேசலாமே.
என்ன செய்ய தோழி...ஆற்றாமை கூடிகிட்டே இருக்கு.....ஹா...ஹா..ஹா...! நன்றி தோழி...!
தலைவா எங்களுக்கு தைரியம் இருக்கு, இருக்கிறதால தான் முட்டாள் தனமா, உன் சிறுபுள்ள தனத்த கூட publish பண்ணி இருக்கோம், அதுமட்டும் இல்ல தைரியம் இருக்கிறதால தான் கழுகு என வலை தளம் ஆரம்பிச்சு , உன்னை மாதிரி முட்டா பசங்களையும், முட்டாள் தனத்தையும் தைரியமா சொல்லிவரோம், விழிப்புணர்வும் ஏற்படுத்துறோம் ...
உதாரணம் சொல்லுவாங்க, படத்தோட நடுவுல வந்துட்டு, ஹீரோ, heroine கூட romance பண்றத பாத்துட்டு, rape panraannu சொல்லி கத்தினானாம் , அந்த கதையா இருக்கு உன் கதை ...
//u bloodys street dogs......<<<<<<<< //
u bloodys street dogs...... அப்டின்னு பேசின நீயெல்லாம் social ethics பத்தி பேசுற ..எல்லாம் நேரம்..உன் நேரம் நல்லா இருக்குன்னு நினைக்கிறேன் surrender ....
ஒளி ஆனால் இங்கு நன்றியுள்ள .....யின் ஒலியும் கேட்பதைக் கண்டு மனசு சங்கடமாக இருக்கின்றது.
இதில் ஒரு இடத்தில் "ஒரு பல்லியின் பார்வையின் தூரம் சில சென்டி மீட்டர்கள், ஒரு ஓணானின் பார்வையின் தூரம் இன்னும் கொஞ்சம் அதிகம், ஒரு மாட்டுக்கு இவற்றை விட கொஞ்சம் கூடுதலாய் இருக்கும்.ஆனால் ....யின் பார்வை தூரம் தெருமுனை வரைதான் என்று நான் நினைக்கின்றேன்.
க.பார்த்திபன்
சிங்கப்பூர்.
மீண்டும் சொல்கிறேன் கடவுளை பற்றி எனக்கு அதிகம் புரிதல் இல்லை.
u...if anybody disuss about it .......realyshame......!!!!!!!!!!//
அனானி அண்ணா உண்மையைச் சொன்னாலும் சங்கைத்தை கலைக்கமா இருககாணுவ ,பில்டிங் ஸ்ட்ராங் .பேஸ்மென்ட் இருக்கா ?
நான் உங்கள் "தேடல்" பதிவு தான் முதன் முதலில் படித்தேன்.மிகவும் அருமையான,வரிக்கு வரி ஆழமான கருத்துக்கள் இருந்தன.இந்தப் பதிவும் அதைப்போலவே மிகவும் ஆழமான கருத்துக்கள் இருக்கிறது.சுவாமி விவேகானந்தரின் நூல்கள் சிறிது படித்தது உங்கள் பதிவை புரிந்து கொள்ள உதவுகிறது.உண்மையிலேயே வரிக்கு வரி ஆழமான கருத்துக்கள் .
///ஆனால் பிறப்பறுக்கும் இந்த பிரபஞ்ச கணக்கிற்கோ....முயற்சிகள் அற்று செயல் மறந்து கருத்துக்களை துப்பிவிட்டு காத்திருக்கவே வேண்டும்.///
அனால் நீங்கள் குறிப்பிட்ட இந்த வரிகளுக்கு அர்த்தம் எனக்குப் புரியவில்லை.சிறிது விளக்கவும்.
இந்த பதிவை பிரசத்திபெற செய்ய போராடுகிறோம் என்றா?..
விஜய் அண்ணா,மன்னிக்க வேண்டும் இல்லை இந்த ப்ளாகையே பிரசத்திபெற...
சிந்திப்பவன் @ கேள்விக்கு முதலில் நன்றி!
முயற்சிகள் எல்லாம் ஒரு செயலாய் வெளிப்பட்டு விடுகின்றன. வெளிப்பட்ட செயல்கள் எல்லாம் ஏதோ ஒரு அனுபவத்தை கொடுத்து விடுகின்றன. அந்த அனுபவம் நினைவுப் பகுதியில் சேமிக்கப்பட்டு அதனை மனம் கிரகித்துக் கொள்கிறது. மனம் கிரகித்த அனுபவத்தை உடலோடு தொடர்புபடுத்தி விடுகிறது. நமக்குள் இருக்கும் சூடு அந்த உயிர் உடல் அல்ல என்று உடல் சம்பந்த்தப்பட்ட எந்த நினைவுகளும் அல்ல இதுதான் சத்தியம்.
ஒவ்வொரு செயலும் எதிர் விளைவை ஏற்படுத்தும் அதே நேரத்தில் செயல்கள் செய்யாமல் இருக்கவும் முடியாதல்லவா அதனால்தான் எல்லா செயல்களிலும் பற்று வைக்காமல் இவை நிரந்தரமென்று எண்ணாமல் அதாவது பற்றறு செயல் நடுத்துவது எதிர்விளைவுகளை ஏற்படுத்தாது.
ஆனால் ஆன்மீகவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட பல்வேறு செயல்களையும் முறைகளையும் கொடுத்து மேலும் மேலும் நமது சுமைகளை அதிகரிக்கவே செய்கின்றனர்.
எந்த முயற்சியும் அற்று என்ற இடம் அதிக அழுத்தம் கொடுக்காமல் செயல்கள் செய்வது என்று கொள்க;
1) கடமையைச் செய்...(கருத்து வைக்காதே) பலனைப்பற்றி கற்பனை செய்யாதே...
2) நல்ல ஆன்மீகவாதி என்பவர் கேள்விகளுக்கு பதில் அளிப்பதில்லை மாறக கேள்விகளை அழிக்க விரும்புகிறார்.
கேள்விகள் இல்லாத பிறப்பு இல்லாத ஒரு நிலை வேண்டுமெனில் செயலன்று செயலாற்றவேண்டும்...!
இன்னும் வேண்டுமானால் மின்னஞ்சல் செய்யுங்கள் சொல்கிறேன்....! முடிந்தவரை என் எண்ணத்தை எழுத்தாக்கி உங்களுக்கு தந்துள்ளேன் என எண்ணுகிறேன்!
உங்களின் ஏக்கம் உங்கள் வரிகளில் மிக அழமாக தெரிகிறது ..கட்டுரையை முழுவதுமாக உள்வாங்கி படிப்பவர்களுக்குமட்டுமே புரியும் ..சில அரைகுறைகளை நினைத்து வருதபடவேண்டம் நண்பரே ..சிறந்த பகிர்வுக்கு நன்றி .
உங்கள் விளக்கத்திற்கு நன்றி சார்,புரியும்படி இருந்தது.