Skip to main content

திடம்...!












ட்ரெய்லர் VI


இப்போ...இப்போ...இப்போ... நிஜமாவே நினைச்சு பாக்குறேன்...!!!!!! உப்பும் உறைப்பும் ஓவரா சாப்பிட்டு சாப்பிட்டு... ரோசமும், கோவமும்...நமக்கு அதிகமா வருதோன்னு....!

மிகப்பெரிய மனப்பிறழ்ச்சியும் தவறான கற்பிதங்களையும் காட்டுவதையும்....அதில் ஏதோ அபரிதமான உண்மைகள் இருப்பது போல மனிதர்கள் ஆராவரம் காட்டுவதையும் குறைந்த பட்சம் பார்த்து விட்டு வாயில் வெற்றிலை பாக்கு போட்டு குதப்பிக் கொண்டு எங்கேயோ ஒரு மூலையில் எனக்கேன்ன என்று துப்பிவிட்டு....மேலே வானத்தில் பறக்கும் காகங்களை எத்தனை என்று எண்ணிக் கொண்டு...சாதாரணமாக நகர......கண்டிப்பாய் என்னால் முடியாது.

உலகம் மொழியற்று கிடந்த காலத்தில் இயல், இசை, நாடகம் என்று உலகிற்கு நாகரீகம் கற்பித்த ஒரு இனத்தின் கலச்சாரத்தை சாட கவர்ச்சியான மேலை நாட்டு கலாச்சாரம் உதவுகிறது என்பதை மேம்போக்காக பார்க்கும்போது உண்மை இருப்பது போல தோன்றினாலும்....ஒரு குடியின் ஒரு சமூகத்தின் பழக்கவழக்கங்கள்....வாழ்வியல் முறைகள்...ஆங்காங்கே நிகழும் சூழ்நிலைகளின் அடிப்படையில் மனோதத்துவ ரீதியில் வார்க்கப்படுபவை.......

உண்ணவும், உடுத்தவும் வாழவும் மிகையாக இயற்கையை சார்ந்திருந்த ஒரு சமூகத்தின் மனோதத்துவ இயல்புகள் என்ன? என்று ஆராய்ந்து பார்க்க கொஞ்சம் விசால பார்வையும்...தெளிந்த உள்நோக்குத் தன்மையும் அவசியம் இவை இரண்டும் அற்றுப் போனால்..மேம்போக்கான....மனம் என்ன என்ன கதைக்கிறதோ அவை எல்லாம் எடுத்து நாம் கடை பரப்பி வைத்து... லேகியம் விற்பது போல கூவி கூவி விற்க வேண்டியதுதான்.

வியாபரத்தின் அடிப்படையில் சமோயோசித புத்தியை பயன்படுத்தி..தான்... தான் என்று வாழும் ஒரு கூட்டத்திற்கு எப்போதும் அடுத்த மனிதர்கள் பற்றி கவலையில்லை....! ஒருவன் முகத்தில் காறி உமிழ்ந்தால் அதற்கு கோபம் கொள்தல்தான் மனித இயல்பு...

அங்கே கோபத்தை மறைத்து விட்டு... சிரித்துக் கொண்டு....சாதரணமாக புத்திமதிகள் சொல்லிவிட்டு போகும் இடாமாயிருக்கட்டும் இல்லை.... உன்னை நான் கண்டு கொள்ளவில்லை என்று நகரும் இடமாயிருக்கட்டும் அதற்கு பின்னால் ஏதோ திட்டமிருக்கிறது ...கபட குள்ள நரித்தனம் இருக்கிறது என்றுதானே அர்த்தம்....?

இந்திய கலாச்சாரத்தின் இரு பெரும் சீர்கேடுகள் நிகழ்த்தப்பட்டது அன்னியர்களால்....ஒன்று...பெண்ணடிமைத் தனம்.....! இதை நிகழ்த்த....அன்னியர்களின் வழிமுறைகளும்....சாஸ்திரங்களும் உதவி செய்தது......இதைக் கிழித்து வெளியே நாம் வந்து கொண்டிருந்த நேரத்தில்தான்.....வியாபாரம் செய்ய கையேந்தி நமது தேசத்துக்குள் நுழைந்தனர்....இன்று கலாச்சாரத்தின் உச்சத்தில் இருப்பதாய் நாம் நினைக்கும் வெள்ளையர்கள்.

இயல்பிலேயே....வந்தவரை வரவேற்கும் ஆதரிக்கும், நம்பும் குணம் கொண்ட லெமூரியக் கண்டத்து மக்கள் இவனின் சூழ்ச்சியில் விழுந்துதான்.....இவனிடமே நாட்டை விட்டு...விட்டு....பின் போராடி பெற வேண்டியதாகி விட்டது. சுதந்திரம் கொடுத்துவிட்டு அவன் போய் 60 ஆண்டுகளுக்கும் மேலாயும் அவனின் கபடமும் வஞ்சமும் சூழ்ச்சியும் இன்னும் நம் மனிதர்களிடம் தொக்கியே நிற்கிறது.

பெரும்பாலும் அரசியலில் அவன் விட்டுச் சென்ற ஆதிக்க மனப்பான்மை கொடி கட்டிப் பறக்கிறது. ஆக இன்றைய சமூகத்தில் ஆங்காங்கே இருக்கும் சமூக சீர்கேடுகளுக்கு காரணம் நயவஞ்சகர்களின் குள்ளத்தனம் இன்னும் நம்மிடம் எஞ்சியிருப்பது தானே?

ஒரு கணம் நில்லுங்கள்....யாரை நாம் திட்டிக் கொண்டிருக்கிறோம் தெரியுமா..... நீதிக்காக தனது புதல்வனை தேர்காலில் வைத்தானே.. .மனு நீதிச் சோழன் அவனின் சந்ததியினரை.....!!!!! ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே....குடவோலை முறை கொணர்ந்து ஜனநயகயத்தின் சாயல் உட்புகுத்தினானே...இராசராசன்...அவனின் சந்ததிகளையும்தான்......

ஒரு கோவில் கட்ட....அறிவியல் வசதிகள் அற்றுப் போயிருந்த காலத்தில்....மலைகளே இல்லாத ஒரு பகுதியில் கல்லாலேயே கோவில் செய்ததற்குப் பினால் இருந்த தொழில்நுட்பமும்.....நிர்வாகம் செய்த மூளைகளும்.....என்ன முட்டாள்களின் கூட்டமா?

" தேரா மன்னா...." என்று சபைதனில் வந்து கேட்ட பெண்ணின் கூற்றில் இருந்த உண்மை கேட்டு...." யானோ அரசன்....யானே...கள்வன்..." என்று உயிர் துறந்த வேந்தர்களின் வரலாற்றையும் உள்ளடக்கிய சந்ததியினருக்குத்தான்...இன்று கலச்சாரமற்றவர்கள் என்ற பட்டம்....

நான் பள்ளிக்கு முதன் முதலாய் செல்கிறேன்....பக்கத்து வீட்டு பாபு அங்கேயே..மூன்றாம் வகுப்பு படிக்கிறான்.....!!!! பாபுவிடம் அம்மாவிடம் என் அம்மா தம்பியை பார்த்துக் கொள்...என்று சொல்லி அனுப்புகிறாள்....தெருவில் விற்கும் பாண்டாங்களை வாங்கித் தின்னாதே தம்பி என்று கண்டிக்கிறாள்.....? பாபுவும் நானும் கைகோர்த்து பள்ளி செல்கிறோம்....கூடப்பிறக்காமலேயே பாபு எனக்கு அண்ணன் ஆகிவிட்டான்....

இது கூட்டு சமுதாயம்....!!!!!

இங்கே...மனிதர்கள் கூடி வாழ்ந்தார்கள் (இன்னமும் வாழ்கிறார்கள்)...! பின் தீர்மானித்து தலைவனை தேர்ந்தெடுத்தார்கள்.....அதன் பின் அந்த தலைவனின் கீழ்.....நிர்வாகம் நடந்தது.....! என்னதான் நிர்வாகமும் அரசும் இருந்தாலும்....இவன் பெரும்பாலும் சக மனிதனை சார்ந்தேதான் பிரச்சினைகளை தீர்க்கிறான்.

அமீரகத்தில் நான் வசிக்கிறேன்....எனக்கு முடியவில்லை ஏதோ பிரச்சினை என்றால்...ஒரே ஒரு தொலைபேசியில் ஆம்புலன்ஸ் வரும்....அவர்களே கொண்டுபோய் மருத்துவம் மனையில் சேர்த்து விடுவார்கள். இங்கே....சமூகம் என்பது அரசும் அரசுசார் நிறுவனங்களும்...இதில் ஒரு கட்டுபாட்டு இயங்குதன்மை மிகுந்திருக்கிறது. மனிதர்களும் உறவுகளும் அற்றுப் போயிருக்கும் ஒரு சூழல் இது!

ஆமாம் இறுக்கத்தோடு....ஒவ்வொரு கட்டுப்படுகளை எண்ணத்தில் கொண்டு வாழும் மனிதர்கள் பெரும்பாலும் சுயநலமாய் இருந்து போவதால் பக்கத்து வீட்டுக்காரனின் பெயரே கூட தெரிவதில்லை.....தெரியவேண்டிய அவசியமும் இல்லை.... இந்த சூழல் அப்படி.....

ஆனால்...சொந்தமோ இல்லையோ....சும்மாவே..... மாமா, சித்தப்பா, பெரியப்பா, பங்காளி, மாப்பிள்ளை, மச்சி....என்று உறவோடு வாழும் பெருங்கூட்டம் நாம். ஒருத்தருக்கு உடம்பு முடியவில்லை எனில் தெருவே கூடி நின்று அவரை மருத்துவமனையில் சேர்க்கும்.....பக்கத்து வீட்டுக்காரன் சமைத்து அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பான்...

எங்கள் கலாச்சாரத்தில் ஒருத்தருக்கு ஒருவர் நாங்களேதான் உரிமைகளை கொடுக்கிறோம்.....எங்களுக்கு....இப்படி வாழ்வதில் சுகம் இருக்கிறது. நாங்கள் கூட்டம் கூட்டமாக..... உண்டு வாழ்ந்து வளர்ந்தவர்கள்....!!!!

கலச்சாரம் போதிக்கும் நாடுளில் வாழும் மனிதர்களை நாம் குறை சொல்வதற்கில்லை.....அது அவர்களின் கலாச்சாரம். அவன் பர்கர்தான் எனக்கு பிடிக்கும்....காலையில் ஒரு பிரட் டோஸ்ட் சாப்பிடுவேன்.... என்று சொன்னால் அது இயல்பு...!!!! நான் போய் அங்கே உட்கார்ந்து கொண்டு அவர்கள் போல நடந்து கொண்டால் அது நடிப்பு......!!!!!!!

மனிதன் வேறுபட்டவன் அவன் எக்காலமும் மத்த ஜீவராசிகளோடு ஒத்துப் போகாதவன்.....சிந்திக்கவும் ஒரு விசயத்தை உணரவும் மனிதானல் மட்டுமே முடியும்.....!!!!! அந்த உணர்தலும் விட்டுக் கொடுத்தலும், சகித்துப் போதலும்...அடுத்த மனிதரின் மனம் புண்படுமே என்று யோசித்து வாழ்வதும்...கொஞ்சம் ஆழமாக சுவாசித்து....இயற்கையைச் சார்ந்து வாழ்பவனுக்கு மட்டுமே கை கூடும்.....

நாம் இயற்கையோடு ஒத்து வாழ்ந்தவர்கள்.....வாழ்பவர்கள்....இங்கே எமது மனிதர்களின் செயல்பாடுகளில்...விதிமுறைகளில்...மனோதத்துவ ரீதியான...மிகப்பெரிய பரந்த விசயங்கள் இருக்கின்றன... அவை மிக சூட்சுமமானவை....!

எவையெல்லாம் எமது திடமோ...அவையெல்லாம் புரிந்து கொள்ளப்படாமையால்....அவை குறையாகத் தெரிகின்றன....என்பதுதான்....சரியான உண்மை...


இன்னும் விரிவாக பேசுவோம் தோழர்களே.....காத்திருங்கள்...


அப்போ......வர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்ட்டா!!!!!


தேவா. S

Comments

நல்ல பகிர்வு நண்பரே. தொடருங்கள்.
எங்கள் கலாச்சாரத்தில் ஒருத்தருக்கு ஒருவர் நாங்களேதான் உரிமைகளை கொடுக்கிறோம்.....எங்களுக்கு....இப்படி வாழ்வதில் சுகம் இருக்கிறது. நாங்கள் கூட்டம் கூட்டமாக.....வாழ்ந்து உண்டு வளர்ந்தவர்கள்....!!!!////

உண்மைதான் இது தான் எங்கள் கலாச்சாரம்
////வியாபரத்தின் அடிப்படையில் சமோயோசித புத்தியை பயன்படுத்தி..தான்... தான் என்று வாழும் ஒரு கூட்டத்திற்கு எப்போதும் அடுத்த மனிதர்கள் பற்றி கவலையில்லை....! ஒருவன் முகத்தில் காறி உமிழ்ந்தால் அதற்கு கோபம் கொள்தல்தான் மனித இயல்பு...

அங்கே கோபத்தை மறைத்து விட்டு... சிரித்துக் கொண்டு....சாதரணமாக புத்திமதிகள் சொல்லிவிட்டு போகும் இடாமாயிருக்கட்டும் இல்லை.... உன்னை நான் கண்டு கொள்ளவில்லை என்று நகரும் இடமாயிருக்கட்டும் அதற்கு பின்னால் ஏதோ திட்டமிருக்கிறது ...கபட குள்ள நரித்தனம் இருக்கிறது என்றுதானே அர்த்தம்....?////

உண்மையிலும் உண்மை மாப்பு....!
//எங்கள் கலாச்சாரத்தில் ஒருத்தருக்கு ஒருவர் நாங்களேதான் உரிமைகளை கொடுக்கிறோம்.....எங்களுக்கு....இப்படி வாழ்வதில் சுகம் இருக்கிறது. நாங்கள் கூட்டம் கூட்டமாக.....வாழ்ந்து உண்டு வளர்ந்தவர்கள்....!!!!//

சபாஷ் ............சபாஷ் ................சும்மா நச்சுன்னு மண்டைல ஆணி அடிச்ச மாதிரி இருக்கு ..............
VELU.G said…
//
மனிதன் வேறுபட்டவன் அவன் எக்காலமும் மத்த ஜீவராசிகளோடு ஒத்துப் போகாதவன்.....சிந்திக்கவும் ஒரு விசயத்தை உணரவும் மனிதானல் மட்டுமே முடியும்.....!!!!! அந்த உணர்தலும் விட்டுக் கொடுத்தலும், சகித்துப் போதலும்...அடுத்த மனிதரின் மனம் புண்படுமே என்று யோசித்து வாழ்வதும்...கொஞ்சம் ஆழமாக சுவாசித்து....இயற்கையோடு சார்ந்து வாழ்பவனுக்கு மட்டுமே கை கூடும்.....
//

நிச்சயமான உண்மை

அருமையான சிந்தனை
VELU.G said…
//
மனிதன் வேறுபட்டவன் அவன் எக்காலமும் மத்த ஜீவராசிகளோடு ஒத்துப் போகாதவன்.....சிந்திக்கவும் ஒரு விசயத்தை உணரவும் மனிதானல் மட்டுமே முடியும்.....!!!!! அந்த உணர்தலும் விட்டுக் கொடுத்தலும், சகித்துப் போதலும்...அடுத்த மனிதரின் மனம் புண்படுமே என்று யோசித்து வாழ்வதும்...கொஞ்சம் ஆழமாக சுவாசித்து....இயற்கையோடு சார்ந்து வாழ்பவனுக்கு மட்டுமே கை கூடும்.....
//

நிச்சயமான உண்மை

அருமையான சிந்தனை
Unknown said…
பேசலாம்....
Arun Prasath said…
உள்ளேன் அய்யா
உண்மையிலும் உண்மை...
அருமையான சிந்தனை.
Balajisaravana said…
உங்கள் சிந்தனையின் முழு விவரிப்புக்காக காத்திருக்கிறேன் அண்ணா
super........ waiting for the next one.....
ஹேமா said…
எப்படித்தான் ஒவ்வொருநாளும் வாழ்வுக்குத் தேவையான விஷயங்களை அலசுகிறீர்களென வியக்கிறேன் தேவா !
//ஒரு கோவில் கட்ட....அறிவியல் வசதிகள் அற்றுப் போயிருந்த காலத்தில்....மலைகளே இல்லாத ஒரு பகுதியில் கல்லாலேயே கோவில் செய்ததற்குப் பினால் இருந்த தொழில்நுட்பமும்.....நிர்வாகம் செய்த மூளைகளும்.....என்ன முட்டாள்களின் கூட்டமா?/

சரியான நேரத்தில் சரியான கேள்வி அண்ணா ., எனக்கும் ஆச்சர்யங்கள் பல உண்டு .. அதிலும் ஒரு வருடத்திற்கு முன்பு கும்பகோணம் சென்ற போது அங்கிருக்கும் கோவில்களின் கலை வேலைப்பாடு பிரமிக்க வைத்தது. தஞ்சைப் பெரிய கோவில் மற்றும் கும்பகோண சுற்றுவட்டாரக் கோவில்கள் வாய்ப்பே இல்லை ..!!
//ஆனால்...சொந்தமோ இல்லையோ....சும்மாவே..... மாமா, சித்தப்பா, பெரியப்பா, பங்காளி, மாப்பிள்ளை, மச்சி....என்று உறவோடு வாழும் பெருங்கூட்டம் நாம். ஒருத்தருக்கு உடம்பு முடியவில்லை எனில் தெருவே கூடி நின்று அவரை மருத்துவமனையில் சேர்க்கும்.....பக்கத்து வீட்டுக்காரன் சமைத்து அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பான்...
//

இதுவும் உண்மைதானே அண்ணா ., நாம கூட அண்ணா , தம்பி , மச்சி அப்படின்னு பதிவுலகதுக்குள்ள கூட பேசிக்கிறோம் ..!!
dheva said…
செல்வா...@ சுகம்னு சொல்லிக்கிட்டு தனித்தனியா வாழ்ற்துல பெரிய அர்த்தங்கள் இருக்கப்போறது இல்ல தம்பி.....

மனுசனா பொறந்தா ஒரு நாளைக்கு சாகத்தான் வேணும்....சரியா? எத்தனை பேர நம்ம ஆயுள்ள சம்பாரிச்சு இருக்கோம்.. பேசி சிரிச்சு இருக்கோம்...இதுதான் நமக்கு கிடைக்கிற ஒரு சந்தோசம்.

நான் எப்படி வேணும்னாலும் வாழ்ந்துக்கிறேன்னு உனக்கு என்னனு கேக்கறது மிகப்பெரிய மனித அபத்தம்.....

இது பத்தி நான் கட்டுரையில விலாவரியா சொல்றேன்...!!!

இப்போ நீ என் பாசத்துக்குரிய தம்பி..... இங்க நிக்குறது நம்ம அன்பு மட்டும்தானப்பா? வேறு என்ன இருக்க முடியும்...!!!! இது எல்லாம்...நம்ம கலாச்சரத்துல அதிகமா சாத்தியப்படுற விசயங்கள்...!
இன்னுமா.............


present sir... busy with valaicharam sir.. sorry sir
//எவையெல்லாம் எமது திடமோ...அவையெல்லாம் புரிந்து கொள்ளப்படாமையால்....அவை குறையாகத் தெரிகின்றன....என்பதுதான்....சரியான உண்மை..//

yes..!
நல்லா சொல்லியிருக்கீங்க.
//Arun Prasath said...

உள்ளேன் அய்யா//

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ullen ayyyaaaa//

தேவாண்ணா எனக்கும் அட்டண்டெஸ் போட்டுருங்க...
தினமும் இவ்வளவு விஷயம்..எப்படினா?
//ஆனால்...சொந்தமோ இல்லையோ....சும்மாவே..... மாமா, சித்தப்பா, பெரியப்பா, பங்காளி, மாப்பிள்ளை, மச்சி....என்று உறவோடு வாழும் பெருங்கூட்டம் நாம். ஒருத்தருக்கு உடம்பு முடியவில்லை எனில் தெருவே கூடி நின்று அவரை மருத்துவமனையில் சேர்க்கும்.....பக்கத்து வீட்டுக்காரன் சமைத்து அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பான்...//

வாழ்ந்தவர்களுக்குத்தான் தெரியும்!

//நான் போய் அங்கே உட்கார்ந்து கொண்டு அவர்கள் போல நடந்து கொண்டால் அது நடிப்பு......!!!!!!!//

சூப்பர்ப்...

தேவா உலகமே ஒரு ன்னு ஷேக்ஸ்பியர் எழுதுன கவிதை நியாபகத்துக்கு வருது...

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா நேரம் வரு காத்திருந்து பாரு ராஜா

சிச்சுவேசன் சாங்கா பங்கு?
Chitra said…
நிறைய விஷயங்களை ஒரே பதிவில் தந்து இருக்கீங்க... யோசிச்சிட்டு வாரேன்.
Ramesh said…
//எவையெல்லாம் எமது திடமோ...அவையெல்லாம் புரிந்து கொள்ளப்படாமையால்....அவை குறையாகத் தெரிகின்றன....என்பதுதான்....சரியான உண்மை...//

உண்மை தேவா.. சரியா சொல்லியிருக்கீங்க..

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த