அது ஒரு மத்தியான குளக்கரை..நானும் சில பட்சிகளும் காற்றில் நடனமாடும் குளத்தினை ரசித்தபடி இருந்தோம். இந்த மதிய வெயிலின் கடுமைக்கு எப்போதும் சவால் விடுவது இந்த குளக்கரை அதற்கு காரணம் குளத்தின் மீது பற்றிப்பரவி படர்ந்திருக்கும் அரசமரம். மாடுகள் எல்லாம் கண்ணுக்கு எட்டிய தொலைவில்தான் மேய்ந்து கொண்டிருக்கின்றன...சற்று முன் தான் குளக்கரைக்கு வந்தேன்.....
என் கல்லூரி வார இறுதிகளில் மாடுகளை ஓட்டிக் கொண்டு மேய்ச்சலுக்கு வருவது என் வழக்கம். வாரம் முழுவதும் ஓடி ஆடி மனித சுவாசங்களை மேல் வாங்கி...இரைச்சலில் அமிழ்ந்து, கோபத்தில் கரிந்து, பொறாமையில் வெந்து ரொம்பவே தளர்ச்சியான ஒரு நிலைக்கு உற்சாகம் கொடுக்கும் என் மாடு மேய்த்தல்.
(மனசுக்குள்ள இருக்கும் போது ஒரு நடை ஆனா... பேச ஆரம்பிச்சா நம்ம சொந்த நடை வந்துடுது..சரி வாங்க பொடி நடையா போய்கிட்டே பேசலாம்)
ம்ம்ம்ம்ம்ம் அங்க பாருங்க..... அட அங்க இல்ல.. அதோ..............அங்க.. ஆமாம்.. அவளேதான்...
அந்த ஓரமா நின்னுகிட்டு கிலுவை இலைய இழுக்குறா பாத்தீகளா..செவலை கண்டு அவ பேருதான் கோமதி!
என்ன பெத்தா....நான்ன அவளுக்கு உசுரு அவன்னா எனக்கு உசுரு....கிட்ட போனாலே புஸ்ஸு புஸ்ஸூனு மூச்சு விட்டுகிட்டு முப்பது தடவை நாக்க வெளில நீட்டி நீட்டி என் கைய கால நக்கிகிட்டே இருப்பா....
நீங்க வேணா வந்து என்னைய வஞ்சு பாருங்களே.... இல்லாட்டி தள்ளி கிள்ளி பாருங்களே....உங்கள வெரட்டி வெரட்டி குத்த வருவா ஹா.. ஹா..ஹா..! பொன்னரசி அவ...முதுக தடவி..கழுத்த கட்டி கன்னத்தோடு கன்னத்த வச்சிக்கிற போது மிண்டாம நிப்பா...அம்புட்டு ஆசை எம்மேல அவளுக்கு...
அந்த வரப்பு தாண்டி எகத்தாளமா தலைய ஆட்டி…ஆட்டி திமிரா காட்டமுனுக்க செடிகிட்ட போயி திங்கிற மாதிரிபாவலா பண்ணிட்டு திங்காம...இங்கிட்டு பாத்து பல்ல காட்டி கத்துறான் பாருங்க...அவன் தான் வெள்ளையன்.. ரொம்ப மொரடன்.. .எங்க நீங்க புடிச்சுபுடிவியலாக்கும்....ஹீக்கும்... முடியாதுப்பே..நம்மளயே வெரட்டி வெரட்டி குத்த வருவான்ல....ஆன வெகுளிப்பயவுள்ள....
வெள்ளையனும் செவத்தையும் சோடி போட்டுத்தேன் நம்ம வயக்காட உழுவாய்ங்க... நுகத்தடிய மாட்டிவிட்டு வயக்காட்ல பத்தி விட்டாவுல்ல இருக்கு ..அசராம உழுவாய்ங்க.. !
எங்க அப்பு கஞ்சி குடிக்கிற செத்த வடத்துக்கு நானும் உழுதிருக்கேன்...! ஆத்தாடியோவ்.. ஒரு சேதி சொல்றே கேட்டுக்குறுங்க.. நீங்க எந் த ஊர்ல வேணா இருங்க என்ன தேசத்துல வேணா இருங்க.. ஒரு தமிழனாப் பொறந்து இருந்தியன்னா ஒரு தடவயாச்சும் வந்து வயல்ல உழுது பாருங்கப்பு....
சோறூ சோறுன்னு சோத்த திங்கிற பயலுக நாம....சோத்த வெளச்சு வெளச்சு கொட்டி கொட்டிக் கொடுக்குற ஒரு வெவசாயியோட பொழப்பு என்னனு சத்தியமா தெரிஞ்சுகிடணும் அல்லாரும்...! வெறுங்காலோடோ அந்த சகதி மண்ணுல காலவச்சி இறங்கி நிக்கிம்போது சில்லீர்னு உடம்புக்குள்ள சொகமா ஒரு ஏத்தம் ஏறும் பாருங்க...
ஆத்தத்தோ....பொறப்பு இன்னிக்கி நிறவேறிப் போச்சுடா சாமின்னு கத்தத் தோணும்..! எனக்கு தோணும் உங்களுக்கு தோணுமான்னு தெரியல...ஆன தோணும்னுதான் எனக்கு படுது...!
மண்ணுல இருந்துதேன் மனிசங்க வந்தாய்கன்னு சொல்லுவாக...எப்படி பாத்தாலும் இந்த மண்ணுதேன் இந்த பூமிதேன் நம்மல பெத்தாரு.....!!! அட வயக்காடு கூட நீங்க வரவேணாம் ராசா செத்தவடம் காலுல செருப்பு இல்லாம பூமில நடந்தாவது பாத்துருங்க...அம்புட்டுத்தேன்...!
சலக்கு புலக்குனு சகதில நடக்குறதே செரமமா இருக்கும்...ஒரு கால ஊண்டிப்புட்டியன்னா மறுகால எடுக்குறது செரமம்...உழுவுற கொலு வேற மண்ணுல நல்லா பதியுற மாதிரி நுகத்தடிய அழுத்திப் பிடிக்கணும்..அப்படியே நம்ம பயலுகளயும் கொஞ்சம் தட்டிக் கொடுத்து வெரட்டனும்...!
ஆழமா உழுதாதேன் அப்புறமா வெதை வெதைக்கிறப்பா நல்ல ஆழத்துல போய் வேர் பிடிக்கும்..ம்ம்ம் அதுக்கப்புறம் களை எடுக்கணும், நாத்து நடணும், உரம் போடணும், தண்ணிபாச்சணும் மழை பெய்யணும்...ம்ம்ம்ம் வெவசாயம் வெவசாயம்னு பேசிறுவாக எல்லாரும்... ஆனா ஒரு வெவசாயியோட பாடு.... நாஞ்சொல்லமாட்டேன் சாமி....
அட வெள்ளையனையும் செவலையும் பத்தி சொல்ல வந்துபுட்டு எங்கயோ போய்ட்டேனே...நான்...! அத விட்டுத்தள்ளுங்க... சரி… சரி அங்கன நிக்கிற பத்து பதினைஞ்சு பயவுள்ளயும் அந்த 4 வெள்ளாடும் நம்மவுட்டுதேன்....
என்னத்த சொல்லுங்க...ஆடி ஓடி அலையுற வாழ்க்கையில் காசு பணம் சந்தோசம் எல்லாம் கிடைக்கலாம் ஆன நிம்மதி கிடைக்குமாப்பு...? சந்தேகம்தேன்...கொள்ளைப் பேரு இப்ப டவுனுக்கு போறாக... வேல பாக்க.. ஆனா எங்கள போல கிராமத்தாய்ங்க என்ன செய்றது...! விட்டுப்புட்டு நம்மூரு சனத்துல பாதியும் டவுனுக்கு போயிருச்சு... அது வேற கதை...
இருந்தாலும் பச்சப் புள்ளைய மாதிரி கிடக்குற இந்த நெலத்தையெல்லாம் தரிசா போட்டுபுட்டு போறதுக்கு எப்டிப்பு மனசு வருது...! பசிதேன்.. பஞ்சம்தேன்... மழையும் சரிய பெய்யறது இல்லா...மழை பெய்யாதுல்லப்பு.......எப்டி பெய்யும்.... ஆயிரம் கோடி.. ரெண்டாயிரம் கோடின்னு ஊழல் பண்றாக ஊருக்குள்ள அப்புறம் எப்படி மழை பெய்யும்...?
அறிவியல் விஞ்ஞானம்னு என்ன என்னவோ பேசுறாக....ஆனா கிராமத்துக்கும் இந்த வயித்துப்பாட்டுக்கும் மொறயா ஒண்ணும் செய்யிறது கிடயாது....! படிச்ச பக்கிகளுக்கு இது பத்தி சொல்லிகுடுக்குறது இல்ல..ஏப்பு விவாசாயம் பாக்குறது கேவலமா....?
நானும் காலேஷ்லதான் படிக்கிறேன்... மூணாவது வருசம் பி.காம்.....படிச்சுப்புட்டு விவசாயம்தான் பாக்க போறேன்....! அப்போ ஏன் படிச்சேன்னு கேக்குறியளா...ஏப்பு படிப்பு வேலை பாக்க மட்டுமில்லப்பு...அது அறிவு வளக்கவும்தேன்...
ஆத்தாடி பேசிகிட்டே இருந்திட்டேனே....பொழுது சாஞ்சி போச்சு....மாட்ட பத்திகிட்டு போவணும். ஆமா நீங்க டவுனுல இருந்து வந்திருக்கியலா.... ஹோப் யூ ஹேவ் ப்ளசண்ட் ஸ்டே அட் அவர் வில்லேஜ்.......இஃப் டைம் பர்மிட்ஸ்....ப்ளீஸ் டூ நாட் ஹெசிட்டேட் டு கம் அவர் ஹவுஸ்......பை த வே......
என் பேரு மாரிமுத்து... சரீங்களா...என்ன இங்கிலிபீசுன்னு பாத்தீங்களா சும்மாதேன்... தெரிஞ்சு வச்சுகிறது எப்பவும் உதவுமுங்களே.... நாம படிச்சது எல்லாம் மெட்ரிகுலேசன் ஸ்கூலுதேன்...பக்கத்து டவுன்ல…..!
ஏய்....செவல.....ஹேய்....ஹேய்..... ட்ரியோ...ட்ரியோ...ட்ரியோ....ஏய்... இங்குட்டு வாங்க எல்லாம் ...பொழுதோடிப் போச்சு வீட்டுக்கு போகலாம்...!
ஏய் கோமதி ம்ம்ம்ம்ம்ம்ம் ப்ப்ப்பூப்ப்ப்ப்ப்ப்ப்பு…………..
வாங்க வாங்க....! எல்லாத்தையும் ஒதுக்கிட்டேங்க.. நான் கிளம்புறேன்....சமயம் கிடச்சா வீட்டுப்பக்கம் வாங்க.....தெக்கிதெரு....அய்யாவு வீடு எதுன்னு கேட்டா ஊரு சனமே சொல்லும்....ஹா...ஹா..ஹா..
அப்போ வர்ர்ர்ர்ட்ட்ட்ட்டா....!
தேவா. S
Comments
நிறைவேறியது ., நிறைவேறியது ..!!
இந்த அனுபவம் எனக்கும் இருக்கு அண்ணா ., எங்க வீட்டுல இருக்குற மாடும் இதே மாதிரி பண்ணும் , கிட்டப் போன போதும் அது என்ன சொல்ல வருது அப்படின்னு புரிஞ்சிக்கிற அளவுக்கு இருக்கும் . !
உணர்வு நிலையோட வாழ்ந்த கூட்டம் என் கூட்டம்.
மேற்கித்திய நாடுகள் புலன் வயப்பட்டு... சட்ட திட்டங்கள் போட்டு போய்க்கிட்டு இருந்தப்ப நம்ம ஆளுக மனோதத்துவ ரீதியா ஆத்மார்த்தமா....கூட்ட பாக்காம உசுர பாத்து வாழ்தவய்ங்க...
விதண்டாவாதம் பேசுற மூக்குகளும் காத்தத்தானேப்பு சுவாசிக்கிது...! வேணாம்னு விட்றுமா என்ன?
இந்தக் கட்டுரையின் நோக்கம் இதுதானே அண்ணா ..!!
சிரிச்சி பேசி சண்டை போட்டு,...குப்பை போட்டு , குப்பை பொறுக்கி...எல்லாமே வாழ்க்கைதானுங்களே...அரங்கத்தனமா இறுக்கமா...வாழ்த்துட்டு என்ன பண்ண போறாக ...? சாகத்தானே போறோம்...மனுச இயல்புகளோட வாழ்வோமே...!
//
சரியா கேட்டீங்க தேவா. அதுதான் உயிர்த் தொழில்
ஆமா! நல்லா குளிச்சி முழுவி துன்னூத்துப்பட்டையெல்லாம் பூசிகிட்டு வெரதச் சாப்பாட்டுக்கு ஒக்காற்ரப்ப சோத்துக்கு நடுவ கறித்துண்ட வெச்சமாரி என்ன திடீருன்னு இங்கிலிபீசு வேண்டிகெடக்கு?
செல்வு @ ஆமா தம்பி.....கோட்டும் சூட்டும் நுனி நாக்கு ஆங்கிலமும் ஒரு பண்பாடு...இது நம்ம பண்பாடு....
ஆம்பளையும் பொம்பளையும் கூடி வாழ்றது மட்டும் ஒரு கல்ச்சர் இல்ல... நம்மளோட பலமான தூண்கள் நிறைய இருக்கு....விவசாயம் பண்ணும் ஒரு ஆத்மார்த்தம் இன்றைய இளைஞர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும்....
காட்டு மிராண்டி சமுதாயமில்ல நாம...இது எல்லோரும் உணரணும்...!
சரியா சொன்னீங்க வேலு...சமுதாய அடையாளம்...! அத தொலச்சுப்புட்டு..என்ன பண்ண போறோம்....? மண்ணுல போற மனுசன் அட மண்ண மதிச்சாத்த என்னா தப்பு?
நம்மாளுவ எல்லாத்தையும் கப்பான்...ஆனா அமெரிக்கவுல நாசாவுல கூட வேல பாப்பான்..ஆன ஊருக்கு வந்துட்டா வேட்டிய கட்டிகிட்டு.. எம்மக்களோட மக்களா சேந்துடுவான்..அவனுக்கு நடிக்கத்தெரியது...
ஆன சில பேரு நடிக்கிறாவோ.. தம்பி....!
முடியல முடியல முடியல.. பதிவு பெருசா இருக்கு என்னால பாதிக்கு மேல படிக்க முடியல.... :))
(இது சாமி சத்தியம டெம்ப்லேட் கமெண்ட் இல்லை)
நன்றி... தொர்ந்து எழுதுங்கள் தொடர்கிறேன்.
தொப்பி தொப்பி..@ ஹி ஹி ஹி..நல்லா சிரிச்சியப்பு... ( கேலியும் நம்ம கூட பொறந்த கழுதைதேன்.. இருந்துட்டு போகுது ஒரு ஓரமா)/////
உங்களை போல பின்னூடம் போடுபவரை சகட்டு மேனிக்கு திட்டுபவரை நான் கண்டிக்கிறேன்
அந்த சகதி மண்ணுல காலவச்சி இறங்கி நிக்கிம்போது சில்லீர்னு உடம்புக்குள்ள சொகமா ஒரு ஏத்தம் ஏறும் பாருங்க...
//
ஆமாம் தேவா. நான் அனுபவிச்சிருக்கேன்.
உழுவுற கொலு வேற மண்ணுல நல்லா பதியுற மாதிரி நுகத்தடிய அழுத்திப் பிடிக்கணும்..அப்படியே நம்ம பயலுகளயும் கொஞ்சம் தட்டிக் கொடுத்து வெரட்டனும்...!
//
அதுமட்டுமில்ல கொஞ்சம் அசந்தா கொலு மாட்டு காலுல ஏறிடும்..........
இன்றைய விவசாயத்தில் நிச்சயமாக மன நிறைவு கிடையாது ....போட்ட காசு கைக்கு வரவே வராது .........அப்புறம் நஷ்ட்டம் அடைஞ்ச எங்க மன நிறைவு கிடைக்கும் கே .ஆர் .பி அண்ணா ...நானும் பார்கிறேன் அதனால் சொல்லுகிறேன் ...........கூடிய விரைவில் வேனும்ம்ன வரலாம் ...........
அப்ப தொடர் பதிவா போடலாம் லா ..........
டெரர்...@ 3 நாள் லீவு வருதுல்ல பொறுமையா படி மாப்ஸ்.... ( இன்னிகே படிக்கணும்னு முறைப்பாடா என்ன?) அவ்வ்வ்வ்!////
@@@ஓஹ இந்த பதிவை படிக்க 3 நாள் ஆகுமா அப்போ நான் படிக்கலை
படிச்சவன் கண்டிப்பா சோறு திங்கணும்ன விவசாயம் நல்ல இருந்த தன முடியும் மக்கா ..........
செளந்தர்..@ எப்டி எப்பவுமே இப்டியா இல்லா அப்போ அப்போ வருமா ... ஏம்பா ஒரு கட்டுரை எழுதியிருகேன்.. அதபத்தி பேச ஓண்ணுமே இல்லேண்ணா.. ட்ராக்க மாத்தி விடுற....அச்சோ..அச்சோ.. என்னத்த சொல்ல...!
அடா அடா.. நான் என்ன பண்ணுவே என்ன பண்னுவே...? முதலு போச்சே...!
இம்சை.. @ அப்போ கையில காசு வர்ற மாதிரி தொழில் எல்லாம் மன நிறைவுன்ன்னு சொல்ற.. சரியா?
//உங்களை போல பின்னூடம் போடுபவரை சகட்டு மேனிக்கு திட்டுபவரை நான் கண்டிக்கிறேன்//
செளந்தர்..@ எப்டி எப்பவுமே இப்டியா இல்லா அப்போ அப்போ வருமா ... ஏம்பா ஒரு கட்டுரை எழுதியிருகேன்.. அதபத்தி பேச ஓண்ணுமே இல்லேண்ணா.. ட்ராக்க மாத்தி விடுற....அச்சோ..அச்சோ.. என்னத்த சொல்ல...!/////
இன்னும் ட்ராக் மாறலையா இதோ வரேன்
கஷ்டம் தான்.... நீங்க சொல்றதே அங்க கூட்டிட்டு போற மாறி இருக்கு
தஞ்சாவூர் பொன்னி, ஐ.ஆர். 8 எல்லாம் எங்க இருந்து கிடைக்கும்....?
புரிதலுகு நன்றி தம்பி!
வயக்காட்டுக் மணம் பதிவு வழியா இங்க வீசுது அண்ணே :)
"மாடு மேய்க்கத்தான் லாயக்குன்னு" யாரையும் திட்டக்கூடாது போலருக்கே.
டெரர்...@ 3 நாள் லீவு வருதுல்ல பொறுமையா படி மாப்ஸ்.... ( இன்னிகே படிக்கணும்னு முறைப்பாடா என்ன?) அவ்வ்வ்வ்!///
என்னது டெரர் மூணு நாள்ல படிச்சி புரிஞ்சிக்கிற அளவுக்கு அறிவாளி ஆயிட்டாரா # டவுட்டு...
மூக்கு பொடியா? மசால் பொடியா?
அதுவே இப்ப உங்களுக்கு முழு நேர தொழில் ஆகிடுச்சே...
ஊழல் பண்ணினா மழை பேயாதா. அறிய விஞ்ஞான கண்டுபிடிப்பு..
i ve had the same experiance till 12 yrs (dad and mom both are veterinary doctorungooo)
aaathee enna vanjipudadhiga tamil font work seyyavillai
அருமையான நடை.
எப்படிங்க இப்ப்ப்ப்ப்ப்ப்புடி எழுதுறீங்க...?? :-))
இந்த போஸ்ட்-க்குத்தேன் இப்படி ஒரு நடைன்னா... உங்க எல்லா போஸ்ட்-க்கும் செம நடையா இருக்கே...??
சொல்லுங்க தேவா ....சொல்லுங்க.... :-)
(நீங்க கம்ப எடுக்க முதல்.. மீ எஸ்கேப்.........)
No violence.... Be happyyyyyy..!!!