Skip to main content

காற்றினிலே.....!
























மொத்தமாய் தேக்கி வைத்திருக்கிறேன்..
உன்னிடம் சொல்லாமல் என்னுள்
அலைந்து கொண்டிருக்கும் காதலை..
இப்போதோ எப்போதோ...சொல்லியேவிடுவேன்
என்ற தீர்மானங்களை எல்லாம்
தின்று செரித்துவிட்டு நகரும்...
நிமிடங்களின் நகர்தலோடு கூட்டு சேர்ந்து
துடிப்பினை அதிகரிக்கிறது என் இதயம்...!

ஒரு வேளை நீ வரலாம்...
என் காதலை கூட நான் சொல்லலாம்...
அதை நீ மறுக்கவும் கூட செய்யலாம்...
கொடுத்தலும் பெறுதலும் தாண்டிய
உணர்வுக்ளின் சங்கமத்தில்...
நிறைந்திருக்கும் நிரந்தர....
காதலை யார்தான் அறிவார்?

***

மறுத்தலுக்கும் சேர்த்தலுக்கும்...
மத்திமத்தில் கிளைத்த உணர்வுகளின்...
வெளிப்பாடாய் ஜனித்திருக்கிறது...
எனக்குள் ஒரு காதல்!
காமம் கடந்த பொழுதுகளில்...
விழித்தெழுந்த காதலின் சுவடுகள்...
தப்பாமல் பதித்திருக்கின்றன..
தன்னின் தடங்களை என் இதயம் முழுதும்!

இன்றோ... என்றோ...
மரிக்கப் போகும் வாழ்வில்மறக்க முடியாத காதலை....
எங்கே கொண்டு செல்லும்...என் ஞாபகங்கள்?

***

ஆச்சர்யமாய் கேட்டாய்
உனக்கு கவிதை எழுத தெரியுமா? என்று
நான் சாதரணமாய் கேட்டேன்..
கவிதையே உனக்கு ஆச்சர்யப்படத் தெரியுமா? என்று...

***

எப்படி வேண்டுமானலும்
என்னை அழை...
ஆனால் காதலை
காதல் என்றுதானே சொல்வாய்?

***

நீயாவது சிரித்து விட்டுப் போ
என் தோட்டத்தில்
பூக்கள்தான் பூக்கவில்லை...!

***


எப்போதாவது
நீ திரும்பிப் பார்ப்பாய் என்றுதான்
எப்போதும்
உன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்!

***




சப்தமில்லாமல்
என் கவிதையை
கேட்டுவிட்டு ..
நீ புன்னைகைத்தாய்.....
கவிதை காகித்தில்
தோல்வியில் கதறியழுதது!

***

ஒரு கடற்கரை மாலை....
கடல் அலைகள்...
முன்னும் பின்னும்...
புரண்டு கொண்டிருந்தன....
எனக்குள்ளும் உன் நினைவுகள்...!


தேவா. S

Comments

க ரா said…
kavithaikala padikave vendam.. photos pothum.. kavithai epadi irkunu therinchiruchu ....

you are rocking br...
காதலில் உங்களை கரைத்த...
கச்சிதமான வரிகள்... :)

மனதை மயக்கும்
மந்திரக் கவிதை...!!

.......ரசித்தேன்.. :-))
அண்ணா உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி ..தூங்க போற நேரத்துல .....அந்த போட்டோல இருக்குற பிகுர் சூப்பர் ...யாரு அது திர்ஷாவா அல்லது அமலாபால் ல ....
இராமசாமி said...

kavithaikala padikave vendam.. photos pothum.. kavithai epadi irkunu therinchiruchu ....

you are rocking br...//

எலேய் எங்க இதுக்கு அர்த்தம் சொல்லு பாப்போம்?
இம்சைஅரசன் பாபு.. said...

அண்ணா உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி ..தூங்க போற நேரத்துல .....அந்த போட்டோல இருக்குற பிகுர் சூப்பர் ...யாரு அது திர்ஷாவா அல்லது அமலாபால் ல ....///

உனக்கு பால் ஊத்த வேண்டிய வயசுல அமலா பாலா?
//அந்த போட்டோல இருக்குற பிகுர் சூப்பர் ...யாரு அது திர்ஷாவா அல்லது அமலாபால் ல ....///

உனக்கு பால் ஊத்த வேண்டிய வயசுல அமலா பாலா//
நான் இன்னும் பால் குடிக்கிற சின்ன பையன்னு சொல்லுறயா டா .....அது சரி நான் ஒரு பால் வடியும் முகம் கொண்ட பாலகன் தானே ....
நாங்களும் கொஞ்சம் எழுதுவோம் உங்க அளவுக்கு இருக்காது....

காகிதம்
உன் மேல் காதல் கொண்டேன்
இன்று வரை என்
காதலை சொல்ல
எழுதி வருகிறேன் ...
உன் மேல்...
என்று தான் படிப்பாயோ..!
@தேவா

//எப்போதாவது
நீ திரும்பிப் பார்ப்பாய் என்றுதான்
எப்போதும்
உன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்!//

ரசித்தேன்...


(டாய் ரமேஷ்.. நான் திருந்திடேன். இனி கவிதைதான் படிப்பேன் கவிதை தான் எழுதுவேன். நான் உன் ப்ளாக் வர்னும் சொன்னா நீயும் கவிதை எழுது... )
TERROR-PANDIYAN(VAS) said...

@தேவா

//எப்போதாவது
நீ திரும்பிப் பார்ப்பாய் என்றுதான்
எப்போதும்
உன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்!//

ரசித்தேன்...


(டாய் ரமேஷ்.. நான் திருந்திடேன். இனி கவிதைதான் படிப்பேன் கவிதை தான் எழுதுவேன். நான் உன் ப்ளாக் வர்னும் சொன்னா நீயும் கவிதை எழுது... )
///

கவிதை - போதுமா மச்சி. போகி அன்னிக்கே இவனை கொளுத்துங்கடான்னு சொன்னேன். எவனாவது கேட்டானா?
// ஆச்சர்யமாய் கேட்டாய்
உனக்கு கவிதை எழுத தெரியுமா? என்று
நான் சாதரணமாய் கேட்டேன்..
கவிதையே உனக்கு ஆச்சர்யப்படத்
தெரியுமா? என்று... //

கவித.. கவித..!!
ரொம்ப அருமை..!!
Unknown said…
ஆச்சர்யப்படும் காதல் அருமை...
//கொடுத்தலும் பெறுதலும் தாண்டிய
உணர்வுகளின் சங்கமத்தில்...
நிறைந்திருக்கும் நிரந்தர....
காதலை யார்தான் அறிவார்?//

ரைட்டு.. :))

//ஆச்சர்யமாய் கேட்டாய்
உனக்கு கவிதை எழுத தெரியுமா? என்று
நான் சாதரணமாய் கேட்டேன்..
கவிதையே உனக்கு ஆச்சர்யப்படத் தெரியுமா? என்று...//

ஆச்சர்யப்பட வைக்கும் கவிதை! செம! செம!!

கலக்குங்க தேவா சார்..
படங்கள் அருமை!
ரொம்ப ரசிச்ச கவிதை..
//மறுத்தலுக்கும் சேர்த்தலுக்கும்...
மத்திமத்தில் கிளைத்த உணர்வுகளின்...
வெளிப்பாடாய் ஜனித்திருக்கிறது...
எனக்குள் ஒரு காதல்!//

ரொம்பநாளா உங்க பிளாக் படிச்சுட்டு இருக்கேன் அண்ணா இப்போதான் கமெண்ட் போடறேன் ரொம்பநல்லா எழுதுறீங்க...
Kousalya Raj said…
காதலை மெல்லிய இழையாய் இழைத்து பரவ விட்டு இருக்கிறீர்கள்...ஒவ்வொரு வரிகளிலும் மௌனமாய் உங்கள் அன்பு, காதல் பேசி இருக்கிறது...எனக்கு இங்கே காதலை தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை.
இதயமாய்
உணர்வுகளாய்
சுவடுகளாய்
ஞாபகங்களாய்
ஆச்சரியமாய்
பூக்களாய்
நினைவுகளாய்
கவிதைகளாய்

இங்கு தவழ்ந்து வந்து சிரிக்கிறது காதல் காதலாகவே.....!!!
மிகவும் அழகாக, மென்மையாக இருக்கிறது சகோ, உங்கள் வலைப்பூ.. நன்று...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...