Skip to main content

காற்றினிலே.....!
























மொத்தமாய் தேக்கி வைத்திருக்கிறேன்..
உன்னிடம் சொல்லாமல் என்னுள்
அலைந்து கொண்டிருக்கும் காதலை..
இப்போதோ எப்போதோ...சொல்லியேவிடுவேன்
என்ற தீர்மானங்களை எல்லாம்
தின்று செரித்துவிட்டு நகரும்...
நிமிடங்களின் நகர்தலோடு கூட்டு சேர்ந்து
துடிப்பினை அதிகரிக்கிறது என் இதயம்...!

ஒரு வேளை நீ வரலாம்...
என் காதலை கூட நான் சொல்லலாம்...
அதை நீ மறுக்கவும் கூட செய்யலாம்...
கொடுத்தலும் பெறுதலும் தாண்டிய
உணர்வுக்ளின் சங்கமத்தில்...
நிறைந்திருக்கும் நிரந்தர....
காதலை யார்தான் அறிவார்?

***

மறுத்தலுக்கும் சேர்த்தலுக்கும்...
மத்திமத்தில் கிளைத்த உணர்வுகளின்...
வெளிப்பாடாய் ஜனித்திருக்கிறது...
எனக்குள் ஒரு காதல்!
காமம் கடந்த பொழுதுகளில்...
விழித்தெழுந்த காதலின் சுவடுகள்...
தப்பாமல் பதித்திருக்கின்றன..
தன்னின் தடங்களை என் இதயம் முழுதும்!

இன்றோ... என்றோ...
மரிக்கப் போகும் வாழ்வில்மறக்க முடியாத காதலை....
எங்கே கொண்டு செல்லும்...என் ஞாபகங்கள்?

***

ஆச்சர்யமாய் கேட்டாய்
உனக்கு கவிதை எழுத தெரியுமா? என்று
நான் சாதரணமாய் கேட்டேன்..
கவிதையே உனக்கு ஆச்சர்யப்படத் தெரியுமா? என்று...

***

எப்படி வேண்டுமானலும்
என்னை அழை...
ஆனால் காதலை
காதல் என்றுதானே சொல்வாய்?

***

நீயாவது சிரித்து விட்டுப் போ
என் தோட்டத்தில்
பூக்கள்தான் பூக்கவில்லை...!

***


எப்போதாவது
நீ திரும்பிப் பார்ப்பாய் என்றுதான்
எப்போதும்
உன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்!

***




சப்தமில்லாமல்
என் கவிதையை
கேட்டுவிட்டு ..
நீ புன்னைகைத்தாய்.....
கவிதை காகித்தில்
தோல்வியில் கதறியழுதது!

***

ஒரு கடற்கரை மாலை....
கடல் அலைகள்...
முன்னும் பின்னும்...
புரண்டு கொண்டிருந்தன....
எனக்குள்ளும் உன் நினைவுகள்...!


தேவா. S

Comments

க ரா said…
kavithaikala padikave vendam.. photos pothum.. kavithai epadi irkunu therinchiruchu ....

you are rocking br...
காதலில் உங்களை கரைத்த...
கச்சிதமான வரிகள்... :)

மனதை மயக்கும்
மந்திரக் கவிதை...!!

.......ரசித்தேன்.. :-))
அண்ணா உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி ..தூங்க போற நேரத்துல .....அந்த போட்டோல இருக்குற பிகுர் சூப்பர் ...யாரு அது திர்ஷாவா அல்லது அமலாபால் ல ....
இராமசாமி said...

kavithaikala padikave vendam.. photos pothum.. kavithai epadi irkunu therinchiruchu ....

you are rocking br...//

எலேய் எங்க இதுக்கு அர்த்தம் சொல்லு பாப்போம்?
இம்சைஅரசன் பாபு.. said...

அண்ணா உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி ..தூங்க போற நேரத்துல .....அந்த போட்டோல இருக்குற பிகுர் சூப்பர் ...யாரு அது திர்ஷாவா அல்லது அமலாபால் ல ....///

உனக்கு பால் ஊத்த வேண்டிய வயசுல அமலா பாலா?
//அந்த போட்டோல இருக்குற பிகுர் சூப்பர் ...யாரு அது திர்ஷாவா அல்லது அமலாபால் ல ....///

உனக்கு பால் ஊத்த வேண்டிய வயசுல அமலா பாலா//
நான் இன்னும் பால் குடிக்கிற சின்ன பையன்னு சொல்லுறயா டா .....அது சரி நான் ஒரு பால் வடியும் முகம் கொண்ட பாலகன் தானே ....
நாங்களும் கொஞ்சம் எழுதுவோம் உங்க அளவுக்கு இருக்காது....

காகிதம்
உன் மேல் காதல் கொண்டேன்
இன்று வரை என்
காதலை சொல்ல
எழுதி வருகிறேன் ...
உன் மேல்...
என்று தான் படிப்பாயோ..!
@தேவா

//எப்போதாவது
நீ திரும்பிப் பார்ப்பாய் என்றுதான்
எப்போதும்
உன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்!//

ரசித்தேன்...


(டாய் ரமேஷ்.. நான் திருந்திடேன். இனி கவிதைதான் படிப்பேன் கவிதை தான் எழுதுவேன். நான் உன் ப்ளாக் வர்னும் சொன்னா நீயும் கவிதை எழுது... )
TERROR-PANDIYAN(VAS) said...

@தேவா

//எப்போதாவது
நீ திரும்பிப் பார்ப்பாய் என்றுதான்
எப்போதும்
உன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்!//

ரசித்தேன்...


(டாய் ரமேஷ்.. நான் திருந்திடேன். இனி கவிதைதான் படிப்பேன் கவிதை தான் எழுதுவேன். நான் உன் ப்ளாக் வர்னும் சொன்னா நீயும் கவிதை எழுது... )
///

கவிதை - போதுமா மச்சி. போகி அன்னிக்கே இவனை கொளுத்துங்கடான்னு சொன்னேன். எவனாவது கேட்டானா?
// ஆச்சர்யமாய் கேட்டாய்
உனக்கு கவிதை எழுத தெரியுமா? என்று
நான் சாதரணமாய் கேட்டேன்..
கவிதையே உனக்கு ஆச்சர்யப்படத்
தெரியுமா? என்று... //

கவித.. கவித..!!
ரொம்ப அருமை..!!
Unknown said…
ஆச்சர்யப்படும் காதல் அருமை...
//கொடுத்தலும் பெறுதலும் தாண்டிய
உணர்வுகளின் சங்கமத்தில்...
நிறைந்திருக்கும் நிரந்தர....
காதலை யார்தான் அறிவார்?//

ரைட்டு.. :))

//ஆச்சர்யமாய் கேட்டாய்
உனக்கு கவிதை எழுத தெரியுமா? என்று
நான் சாதரணமாய் கேட்டேன்..
கவிதையே உனக்கு ஆச்சர்யப்படத் தெரியுமா? என்று...//

ஆச்சர்யப்பட வைக்கும் கவிதை! செம! செம!!

கலக்குங்க தேவா சார்..
படங்கள் அருமை!
ரொம்ப ரசிச்ச கவிதை..
//மறுத்தலுக்கும் சேர்த்தலுக்கும்...
மத்திமத்தில் கிளைத்த உணர்வுகளின்...
வெளிப்பாடாய் ஜனித்திருக்கிறது...
எனக்குள் ஒரு காதல்!//

ரொம்பநாளா உங்க பிளாக் படிச்சுட்டு இருக்கேன் அண்ணா இப்போதான் கமெண்ட் போடறேன் ரொம்பநல்லா எழுதுறீங்க...
Kousalya Raj said…
காதலை மெல்லிய இழையாய் இழைத்து பரவ விட்டு இருக்கிறீர்கள்...ஒவ்வொரு வரிகளிலும் மௌனமாய் உங்கள் அன்பு, காதல் பேசி இருக்கிறது...எனக்கு இங்கே காதலை தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை.
இதயமாய்
உணர்வுகளாய்
சுவடுகளாய்
ஞாபகங்களாய்
ஆச்சரியமாய்
பூக்களாய்
நினைவுகளாய்
கவிதைகளாய்

இங்கு தவழ்ந்து வந்து சிரிக்கிறது காதல் காதலாகவே.....!!!
மிகவும் அழகாக, மென்மையாக இருக்கிறது சகோ, உங்கள் வலைப்பூ.. நன்று...

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...