Skip to main content

ச்ச்சும்மா....!





















எப்டி எப்டியோ ஓடிட்டு இருக்குற வாழ்க்கைல நகைச்சுவைன்ற ஒரு உணர்வு இல்லேன்னா... ரொம்ப போர் ஆயிடும் இல்லையா? சீரியஸா திங்க் பண்றதுக்கும் நல்ல நகைச்சுவை உணர்வு அவசியமாத்தான் இருக்கு. அது எப்டினு கேக்குறீங்களா...

எப்பவுமே ஒரு விசயம் அதிகமாகும் போது அதற்கு நேர் எதிரான நினைவுகள் ரொமப் ஸ்ட்ராங் ஆகும். ரொம்ப சீரியசாவே இருக்கவங்கள பாத்தா காமெடியா இருக்கும் அது வேற கதை...? அப்போ அவுங்க எல்லாம் ரொம்ப நகைச்சுவை உணர்வு மேலானவர்களான்னு ஒரு கேள்வி வருதா... இந்த இடத்துல ஒரு ஸ்டாப் கொடுங்க....

சாரி அப்டி இருக்க முடியாதுங்க ஏன் தெரியுமா?

இளகுவா இருக்குற இடத்துலதான் என்ன வேணா வரும்.. ! இறுகிப்போன நிலத்துல..? ம்ம்ஹூம் ஒண்ணுமே வராது.. ! எப்டி லாஜிக் ஒத்து வருதா? சரி எதோ பேச வந்து எங்கயோ போறது என்னோட பிரச்சினைதான் நீங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க கொஞ்சம்....

நான் 9வது படிச்சப்போ ஒரு தமிழ் ஆசிரியர் இருந்தாங்க.....இருங்க....இருங்க பேரு நினைவுக்கு வரலை...ம்ம்ம்ம்ம் பட்டுக்கோட்டை பாய்ஸ் ஹை ஸ்கூல் தான்.. ம்ம்ம்.. யெஸ்.. நாகரத்தினம் சார்! எப்டி தெரியுமா கிளாஸ் நடத்துவாங்க.. ச்சும்மா சிரிச்சுட்டே இருப்போம்...ஆமாம். தமிழ் இலக்கணம் அவுங்ககிட்ட இருந்துதான் புரிதலோட கத்துகிட்டேன். இந்த நேர்கூற்று, அயற்கூற்று, மாத்திரை கணக்கீடு, அணி இலக்கணம், பா வகைகள்... ச்சும்மா சொல்லக்கூடாது.. அவர்தான் தமிழ் விதையை எனக்குள் விதைத்த பிதாமகர். எங்க இருக்காங்கனு தெரியலை.. ஸ்டில்.. நமஸ்காரங்கள் சார்!

நாகரத்தினம் சார் சொன்ன ஒரு ஜோக் இப்ப உங்ககிட்ட ஷேர் பண்றேன்.

அதாவது எல்லா பள்ளிக்கூடத்துக்கும் இன்ஸ்பெக்சன் வருவாங்கல்ல அது மாதிரி ஒரு ஏரியாவுல இன்ஸ்பெக்டர் செக்கிங் போறது கேள்வி பட்டு ஒரு பள்ளிக்கூடத்து 8 ஆம் வகுப்பு ஆசிரியருக்கு செம டென்சன். டென்சனுக்கு காரணம் நம்ம முனியன்.

முனியன் கிட்ட போய் நீங்க பச்சை மிளகாய் என்ன கலர்னு கேளுங்களேன்.. ஒரு க்ளு கொடுங்க சார்னு உங்களையே திரும்ப கேப்பான். அப்படிப்பட்ட முனியன் கிட்ட இன்ஸ்பெக்டர் வந்து கேள்வி கேட்டு சொல்லத் தெரியாம முழிச்சா அப்புறம் ஸ்கூல மானம் போறத விட கிளாஸ் வாத்தியார் பேரு போய்டுமே.. எவ்ளோ சொல்லிக் கொடுத்தாலும் முனியன் ரொம்ப டஃப் கொடுத்தான் சாருக்கு.. .

சரின்னுட்டு... என்ன கேள்வி காமனா எல்லா ஸ்கூல்லயும் கேக்குறார் இன்ஸ்பெக்டர்னு விசாரிச்சு பாத்திருக்கார் நம்ம சார். அப்டி விசாரிச்சதுல " பூமியின் வடிவம் என்ன? " அப்டீன்ற கேள்விய காமனா கேக்குறதா கண்டிபுடிச்ச வாத்தியர்.

முனியனை கூப்பிட்டு ப்ராக்டிஸ் கொடுக்க ஆரம்பிச்சார்... பூமியின் வடிவம் என்ன? முனியான்னு கேட்டு உருண்டைன்னு அன்னிக்கு புல்லா (நல்லா கவனிங்க அப்டி சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கும் போது திங்கட் கிழமை....) சொல்லி கொடுத்து ஒராயிரம் தடவைக்கு பின்னாலும் முனியன் திரு திருன்னு முழிக்கிறத நிறுத்தவே இல்லை......

நம்ம சாரும் யோசிச்சு யோசிச்சு.. ஃபைனலா ஒரு முடிவு எடுத்தாரு.. அதாவது சாருக்கு மூக்கு பொடி போடுற பழக்கம் இருக்கு...சோ அவர் ஒரு உருண்டையான குடுவைல பொடிய போட்டு வச்சி இருப்பாரு.. அதுதான் அவர் பொடி டப்பா... ! முனியன் கிட்ட பூமியின் வடிவம் என்னனு கேட்டுட்டு.. டக்குனு பொடி டப்பாவை ஞாபகத்துக்காக காட்டி சொல்லிக் கொடுத்து இருக்காரு.. பையனும் நெருப்பு மாதிரி பிடிச்சுகிட்டான்.. சாருக்கும் சந்தோசம்....

செவ்வாய்கிழமை - கிளாஸ்குள்ள நுழைஞ்ச உடனே.. சார் கேட்டு இருக்காரு.. "ஏய் முனியா பூமியின் வடிவம் என்ன? (அட பொடி டப்பாவா கைல எடுத்து காட்டிகிட்டுதாங்க...) ........." முனியன் பளீச்னு சொல்லியிருக்கான்.. "உருண்டை சார்" ! நம்மா சாருக்கு செம சந்தோசம்...

புதன் கிழமை - " ஏய் முனியா பூமியின் வடிவம் என்ன" சார் பொடி டப்பாவை காண்பித்து கேக்க.. முனியனும் டக்குனு உருண்டை சார்.னு சொல்லிட்டான்.. !

வியாழக்கிழமை - ஏய் முனியா.....பூமியின் வடிவம்.....ம்ம்ம்ம்?????? உருண்டை சார்.. செம ஸ்பீடா பதில் முனியன் கிட்ட இருந்து (அட மூக்கு பொடி டப்பாவ பாத்துதாங்க.. ரொம்ப நம்பீடாதீங்க அவன் நம்ம முனியன்...). வியாழக்கிழமை ஈவ்னிங் ஸ்கூலுக்கு இன்பர்மேசன் வந்துடுச்சு.. அடுத்த நாள் .. இன்ஸ்பெக்டர் வர்றார்னு......அதாவது வெள்ளிக்கிழமை...

(டென்சனா இருக்கா? முனியன் என்ன பண்ணினானு தெரிஞ்சுக்க.. பேசாம தொடரும் போட்டுடவா? ஹா ஹா ஹா சரி.. சரி .. மேல படிங்க)

வெள்ளிக்கிழமை - நம்ம சார்க்கு செம டென்சன் இன்ஸ்பெக்டர் வருவாரு கேள்வி கேப்பாரு, நேரத்துக்கு ஸ்கூல் போகணும்னு அடிச்சு பிடிச்சு.. ஸ்கூல்க்கு வந்தாரு.. கொஞ்சம் லேட் வேற ஆச்சு...! நல்ல வேளை இவர் கிளாசுக்கு இன்னும் இன்ஸ்பெக்டர் வரலை....

ஆனா சார் போன பத்து நிமிசத்துல வந்துட்டாரு...இன்ஸ்பெக்டர்...! சரி அடுத்து நாம எல்லோரும் எதிர்பார்த்த படி...இன்ஸ்பெக்டர் கரெக்டா முனியனை எழுப்பி (அவனத்தான எழுப்பணும் அதுக்கு தானே முனியன் கேரக்டர ஸ்டார்டிங்கல் இருந்து ஃப்ளாஷ் பண்றோம்.. ஹி ஹி ஹி சேம் டமில் சினிமா ஸ்டைல்) கேள்வி கேட்டாரு...

பூமியின் வடிவம் என்ன தம்பி?னு கேட்டார் இன்ஸ்பெக்டர்.... முனியன் சார பாக்குறான்.. சார் டக்குனு மூக்கு பொடி டப்பா எடுத்து காட்ட.......முனியன் பதில் சொல்ல ஆரம்பிச்சான்...

"திங்கட்கிழமை, செவ்வாய்கிழமை, புதன் கிழமை, வியாழக்கிழமை பூமி உருண்டை சார்.....அப்புறம் வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை சப்பட்டையா போய்டும் சார்னு"

நம்ம சார் என்ன பண்ணி இருக்காரு இன்ஸ்பெக்டர் வர்ற அவசரத்துல.. நார்மல் பொடி டப்பாவை வீட்ல மறந்து வச்சிட்டு வர்ற வழில அவசரமா பொடிய வாங்கி வாழைப்பட்டைல கட்டிட்டு வந்துட்டார். அதை முனியன் கிட்ட பழக்க தோசத்துல காட்டிட்டார்....! நம்ம புத்திசாலி முனியனும் ப்ராப்ரரா ஆன்சர் பண்ணிட்டான்.....ஹா.. ஹா ஹா... ஆனா அது கூட இல்லை மேட்டர்..இன்ஸ்பெக்ட்டர் ஆச்சர்யமா முனியன பாத்து சிரிச்சுட்டே கேட்டார்...

" ஏன் தம்பி.... சனி, ஞாயிறு அன்னிக்கு உன் பூமி என்ன ஆவும் தம்பின்னு" கேட்டவுடனே முனியனுக்கு வந்துச்சு பாருங்க கோவம்......

"சார் உங்களுகு ரொம்பத் தெரியுமோ....சனி ஞாயிறு ஏது சார் பூமி? அன்னிக்கு லீவு சார்.......நீங்க எல்லாம் ஒரு இன்ஸ்பெக்டருன்னு" ரொம்பவே டென்சனாயிட்டான் முனியன்.....

அப்புறம்.. முனியனுக்கும், அந்த கிளாஸ் சாருக்கும் என்ன நடந்து இருக்கும்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.. ஹா ஹா...ஹா!

சில நேரத்துல நாம சீரியசா இருப்போம்......சூழ்நிலை காமெடியா போய்டும்...! அப்புறமா யோசிச்சு யோசிச்சு சிரிப்போம். நான் எங்க அப்பத்தாவ பாக்க எங்க கிராமத்துக்கு போயிருந்தேன்.. அப்போ நான் ஸ்டார் ஹோட்டல்ல ப்ரண்ட் ஆபிஸ் மேனேஜரா சென்னைல வொர்க் பண்ணிட்டு இருந்தேன்...

அப்பத்தாவும் நானும் வீட்டு வாசல்ல உக்காந்து பேசிட்டு இருந்தோம். அப்பா பில்லப்பன் அப்டின்னு ஒரு அண்ணன் எங்கள கிராஸ் பண்ணி போனாங்க.. போனவரு சும்மா போலம்லயா...? கையில இருந்த மாட்டை மரத்துல கட்டிட்டு.. எங்க கிட்ட வந்து "ஆரு இது சுப்பையா மயனா? எப்ப வந்கீகன்னு" கேக்க.. நான் காலைல வந்தேன் அண்ணேன்னு சொல்லி நலம் விசாரிச்சுகிட்டோம்...

அப்ப பில்லப்பன் அண்ணன் எங்க அப்பத்தா கிட்ட கேட்டாரு...தம்பி சோலி (வேலைதான்) ஏதும் பாக்குதா இல்லை சும்மா இருக்கானு கேட்க.. எங்க அப்பத்தா பெருமையா சொன்னிச்சு.. அட அவன் களப்பு கடையில இருக்கான்டா (ஹோட்டலை கிளப் கடைன்னு சொல்லுவாங்க அதை வழக்கில் களப்பு கடைன்னு திரிஞ்சும் சொல்லுவாங்க..நம்ம ஊரு புரோட்டா போடுற டீக்கடைதான்ப்பு...அவ்வ்வ்வ்வ்வ்)சொன்னிச்சி...! சரி அப்பத்தா ஏதோ சொல்லுது சொல்லிட்டு போகட்டும்னு நானும் விட்டுட்டேன்....

பில்லப்பன் அண்ணன் திருப்பிகிட்டு கேட்டாரு..."ஏத்தா களப்பு கடையில என்னா வேலை.பாக்குது? பில்லு போடுற வேலையான்னு...." நான் கொஞ்சம் டென்சனாகி ... "அண்ணே அது ஹோட்டல்னே.. ஆளுப்பேருக தங்குவாக, நான் பில்லு எல்லாம் போட மாட்டேன்ன்னு' கொஞ்சம் சூடவே சொல்லிட்டேன்...

"ரூம்பு எல்லாம் இருக்குமா? சரி சரி வாடகைக்கு விடுவாய்களே அதானேன்னு.. சொன்னவரு பேசாமா போயிருக்கலாம்...ஆன போகலை எங்க அப்பத்தாகிட்ட போயி ரொம்ப சோகமா சொன்னாரு....

" ஏத்தா.... இம்புட்டு காசு போட்டு சுப்பையா படிக்க வச்சானே மயனை....போயிம் போயிம் களப்பு கடையிலயா வேலவாக்கணும்....அதுவும் மெட்ராசுல போயி.....இங்கனாதான் சிவங்ஙேலதானா (சிவகங்கை) எங்குட்டாச்சும் நல்லா கடை நாடி(பக்கம்) சேந்துருக்கலாம்ல....என்னமோத்தா.. இந்தக்காலத்துல புள்ளக்குட்டியள காசக் கொட்டி படிக்க வச்சா படிக்கவா செய்யுதுக்கன்னு ' சொல்லிட்டு என் மேல கோவம சொல்லிக்காம கொள்ளாம மாட்ட பத்திட்டு போய்ட்டாரு...

எங்கப்பத்தாக்கு நான் சொல்லி தேத்தி புரிய வைக்க பட்டபாடு....என் செம்மம் (ஜென்மம்) முத்தியடஞ்சு போச்சுடா சாமி....!

என் பிரச்சினையே இதான் பேசுனா பேசிட்டே இருப்பேன்....ஹா ஹா ஹா.. நேரமாச்சு...கிளம்புறேன்.....!


அப்போ வர்ர்ர்ர்ட்டா....!


தேவா. S

Comments

அட டா எல்லா கிளாஸ்லையில் ஒரு முனியன் இருப்பாங்க.....ஹி ஹி இவரு புதுசா இருக்கார்..ஏன்னா நம்ம தேவா பிரென்ட் இல்லையா...!

கொஞ்சம் சூடவே சொல்லிட்டேன்...///

ஹி ஹி ஹி நான் பில்லு போட மாட்டேன் சூடா ஏதாவது போடுவேன் சொன்னா அதான் அவர் சொல்லிக்காம போய்ட்டார்...... பாவம் சுப்பையா மகன் அடுப்புல வேலை பாக்குறான் சொல்லாம போனாரே.....!!!!


சரி சரி அந்த களப்பு கடையில் எனக்கு ரெண்டு பரோட்டா சொல்லுங்க......

எல்லாம் சரி ஒரே ஒரு கேள்வி....?

ரொம்ப சீரியசாவே இருக்கவங்கள பாத்தா காமெடியா இருக்கும் அது வேற கதை...?////

இது யாரு அது என்ன கதை....

அப்போ நான் வர்ர்ர்ர்ட்டா....!
இப்படி அடிகடி இந்த மாதிரி எழுதுங்க ......நல்ல இருக்கு ....ஆனாலும் இன்னும் ரத்தின சுருக்கமா எழுதனும்னு நினைக்கிறன் தேவா அண்ணா
இம்சைஅரசன் பாபு.. said...
இப்படி அடிகடி இந்த மாதிரி எழுதுங்க ......நல்ல இருக்கு ....ஆனாலும் இன்னும் ரத்தின சுருக்கமா எழுதனும்னு நினைக்கிறன் தேவா அண்ணா///

@@@@@இம்சைஅரசன் பாபு.. யார் அது ரத்தினம் அவரை ஏன் சுருக்கமா எழுதணும்.....??????
ஒக்கே. சிரிச்சாச்சு..
பொடி டப்பா ஜோக்கு தெரிஞ்சதுதான்.. நீங்க நல்லா சொல்லி இருக்கீங்க..
இன்பெக்சனா ஸ்கூலே அல்லோலப்படும்... பசங்கள விட வாத்தியாருங்கதான் ரொம்ப டென்சனா இருப்பாங்க... ஆனா களப்பு கட மேட்டரு சூப்பரு... எங்க அண்ணன் சாப்ட்வேர் டிரைனிங் இன்ஸ்டிடியூட் வச்சிருக்கார், ஊர்ல கிரமத்துல போய் சொன்னா அவங்க கேப்பாங்க் கம்பியூட்டர் கடையான்னு. ஆமான்னு சொல்லிட்டு நடைய கட்டிட்டே இருப்பேன்.
Arun Prasath said…
ஹாய் அண்ணன் பதிவு இன்னைக்கு எனக்கு புரிஞ்சிருச்சு... பூமியின் வடிவம் சப்பட்டை...
சொல்ல கூடாதா இது காமெடி பதிவுன்னு வழக்கம் போல படிக்காம போயிட்டேன் ஹிஹி
Anonymous said…
ஏதோ ஜோக்குனு சொன்னீங்களே.. நானும் தேடிப்பாத்தேன். காணோமே..
நல்ல நகைச்சுவை. அந்த இரண்டாவது சம்பவம் மாதிரி நிஜத்தில் கிராமத்து மக்களுக்கு சில விசயங்களை புரிய வைப்பதற்கும் போதும் போதுமென ஆகிவிடும்!
Chitra said…
வட்டார வழக்கு பேச்சுடன், எதார்த்தமாய் பதிவு இருக்குது.. சூப்பரு!
ஹேமா said…
பாவம் தேவா நீங்க...கடைசில பூமி உருண்டையா சப்பையான்னு நீங்களாச்சும் சொல்லிடுங்க !
முனியன்னு பேர் மாத்தி வெச்சுக்கிட்டா நாங்க உங்களை அடையாளம் காட்டிற மாட்டோமா.... யார்கிட்ட :-)

அப்புறம் அப்பத்தா கதை சூப்பர்... எனக்கும் இந்த மாதிரி அனுபவம் உண்டு.. எங்க ஆச்சி கிட்ட :-) படிப்பதற்குச் சந்தோஷமாக இருந்தது தேவா சார்..

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த