தமிழ் நாட்டு அரசியல் ஒரு பக்கம் ஒரு பக்கம் சூடு பிடிக்குதுன்னா.. பதிவுலக அரசியல் மறுபக்கம் அனலடிக்குது...! ஆமாம் இப்ப எல்லாம் பதிவு எழுதுறதும் அதை வெளியிடுறதுக்கும் மூளை வேணுமோ இல்லையோ டெக்னிக் வேணும் போல இருக்கு. சரி...சரி.. எந்தப்பக்கம் இப்ப பாயப்போறேன்னு தானே கேக்குறீக....
பதிவுலகம் சாரா...வாசகர்கள் மீதுதான்..!
ஊரான் வீட்டுப் பிள்ளையா நினைச்சுக்காதீங்க .. உங்க வீட்டுப் பிள்ளையா நினைச்சு (வடிவேலு ஸ்டைல்...) நான் சொல்றத கொஞ்சம் கவனமா கேளுங்க...! ஏன் உங்க ரசனை இப்படி போயிடுச்சு....மக்களே? எப்ப பாத்தாலும் பொழுது போக்குறதுலயே குறியா இருக்கீகளே... எப்ப ஒரு விசயத்தை முழுசா புரிஞ்சு விளங்கிக்க போறீக?
" இந்த பக்கம் போகாதன்னு போர்டு போட்டு இருப்பாங்கே........." அங்குட்டுதான் பூரா சனமும் ஓடி ஓடி பாக்கும்...! பாம்பு வித்தையும், குறளி வித்தையும், பாத்து பாத்து உங்களுக்கு சலிக்கவே இல்லையா? ஆபாசத்தையும் அரசியலையும் ரெண்டு கண்ணா நினைச்சு நீங்க காட்ற அபிமானத்த பாத்த.. இன்னும் நூறு வருசம் ஆனாலும், திருந்தித் தொலையப் போறது இல்லனு தெரியுது.
இரண்டு திராவிட கட்சிக்கு நடுவுலதானே தமிழனோட மொத்த பொழைப்பும் சீரழிஞ்சு கிட்டு இருக்கு... ! தி.மு.க. வந்தா அய்யான்னு சொல்லு அ.தி.மு.க வந்தா அம்மானு சொல்லு.. இது ரெண்டும் ஒழுங்கா சொல்லத் தெரியலேன்னா.. தமிழ்நாட்ல வாழ வக்கத்தவனா போயிற வேண்டியதுதான்.. (சத்தியமா நான் பாட்டாளி மக்கள் கட்சிய குறை சொல்லலீங்க.. யாரும் சண்டைக்கு வந்துடாதீக...)
உங்க அரசியல் புரிதல் லட்சணம்தான் இப்படின்னா வாசிக்கும் அறிவு.. சொல்லவே தேவையில்லை.. அதுக்கு ஆஸ்கார்தான் கொடுக்கணும்.
உதாரணமா.....
" அவளின் வேகமான நடையில் முன்னால் இழுத்து விடப்பட்டிருந்த கேசம் காற்றில் அலைபாயும் வேகத்தில் அவளின் முன்னழகை யாரும் கவனிக்காமல் இருக்க முடியாது. அதுவும் அவள் அணிந்திருந்த வெள்ளை நிற டி சர்ட்டில் லுக் அட் மீ என்ற வாசகம் எல்லோரையும் சிதறடித்துக் கொண்டிருந்தது.
பிரதீப்பின் அருகில் வந்து அமர்ந்தவள்.....தாமதமாய் வந்ததற்கு மன்னிப்பு கேட்கும் விதமாய் பிரதீப்பின் அருகே நெருக்கமாய் அமர்ந்து அவனின் கேசத்தை கலைத்து...காதுகளின் அருகே சென்று ....ஐ எம் சாரி என்று கூறிய வேகத்தில் சூடாய் அவளை உணர்ந்தான் பிரதீப்....கடற்கரை மாலையின் குளுமையையும் தாண்டி அவனுக்குள் சூடு பரவியது...."
இந்த மாதிரி வார்த்தைகளுக்குள் விரசத்தை விரவி விட்டு எழுத்தை வியாபரம் ஆக்கத் தெரியாத படைப்பாளிகளை நீங்கள் ஏறெடுத்தாவது பார்த்து இருக்கீகளா? பார்க்கா மாட்டீக.. உங்களுக்கு தேவை உணர்ச்சியைத் தூண்டும் அப்போ அப்போ பொழுது போக்காய் இருக்க கூடிய.. ஒரு ஃபாஸ்ட் புட் எழுத்து..... ! அம்புட்டுதானே... வேற என்னத்த செய்யப் போறீக....!
இது மட்டுமா.. ஒரு பதிவுக்கு டைட்டில் வக்கிறது கூட உங்க ரசனைக்கு ஏத்த மாதிரி...
"கிலு கிலு கில்மா
நமீதாவின் இடிப்பு சைஸ் சரியானதா?
நடு இரவில் அதிரடி....
கலைஞர் தொலைஞர்
அம்மாவின் அதிரடி யாகம்..."
இந்த ரேஞ்சுல இருந்தாத் தானே நீங்க ஒரு பதிவையாச்சும் ஓப்பன் பண்ணியாச்சும் பாக்குறீங்க...! எழுதுறவங்கள கொற சொல்றதுக்கு யாருக்கும் துப்பு கிடையாது. ஏன்னா நீங்கதான் நல்ல எழுத்தை படிக்கிறது இல்லையே....! இதே நிலைமைய விடாம நீங்க மெயிண்டெய்ன் பண்ணிகிட்டே போனா... எல்லோருமே மஞ்சள் பத்திரிக்கை ரேஞ்சுக்கு எழுத ஆரம்பிச்சுடுவாங்க?
எவனாச்சும் யாரயச்சும் திட்டினாலோ அல்லது அடிச்சிகிட்டு கட்டி உருண்டாலோ வாசகப் பெருமக்களாகிய நீங்க கொடுக்குற ஆதரவு இருக்கு பாருங்க.. நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன் மக்கா...! ஆமாம் தெருவுல ரெண்டு பேரு அடிச்சுகிட்டாலே செம ஜாலியா இருக்கும்.. .ஓரமா நின்னு அழகா வேடிக்கை பாத்துட்டு.. நமக்கு என்னாச்சுன்னு... தேமென்னு போவோமே....
அதுவும் எழுத்துல இருந்துச்சுன்னா நாங்க என்ன புறக்கணிக்கவா போறோம்...! செம ஜாலி பாஸ்னு வாயை பொளந்துகிட்டு கூட்டமா நின்னு வேடிக்கைப் பார்ப்போம். எங்களுக்கு தேவை டைம் பாஸ்....எப்பவுமே சீரியசா இருக்க முடியாதுன்னு நீங்க சொல்ற லாஜிக் என்னவோ ஓ.கே.தான்...ஆனா நீங்க எப்பவுமே ஜாலியாவும் இருக்க முடியாதுன்ற லாஜிக்கை ஏன் மறந்துடுறீங்க?
"ஊரைத் திருந்த வந்த நல்லவன்" னு ஒரு டைட்டில் வச்சா ஒரு சனமாச்சும் வந்து எட்டிப்பார்க்கும்ன்றீங்க.. நாலு கெட்டவார்த்தையில .. "டேய்..!" " என்னாடா..." " இந்தாங்கடா..." அவனே இவனேன்னு ஒரு டைட்டில் வச்சா...ஊருச் சனமே.. கியூவ்ல வந்து எட்டிப்பார்க்கும்...! ஏன் நாம டிக்கட் போட்டு காசு வசூல் பண்ணினா கூட கூசாம குடுத்துட்டு ஊர் புறணி பேசவும் கேட்கவும்...ஆளுக இல்லனு மட்டும் சொல்லாதீக.....
எதையுமே விட்டுக் கொடுத்துடாதீங்க வாசகர்களே...! இதே மாதிரியான உங்க அகில உலக நேர்மையான பார்வையோடவே நாட்டின் நிகழ்வுகளையும், அரசியலையும், சினிமாவையும், பக்கத்து வீட்டுக்காரனையும் எதிர்த்த வீட்டுகாரனையும், பத்திரிக்கைகளையும், எழுத்தாளர்களையும் ஆதரிச்சுகிட்டே இருங்க....
தமிழன் குடி குன்னக்குடி ஆகி காவடி எடுத்துக்கிட்டே இருக்கட்டும்...!
அப்போ வர்ர்ர்ர்ட்டா...!
தேவா. S
Comments
அட்டகாசம்...
வாசகனுக்கு இதை விட சூடா கொடுக்க முடியாது.
வாசகர்கள் இதைதான் விரும்புராங்கனு ஒரு முடிவு பண்ணிட்டு எழுதுறாங்க பாருங்க, பாவம் பதிவர்களை குறை சொல்ல முடியாது தான்.
அந்த மாதிரி போஸ்ட் பக்கம் போவதை குறைத்து கொண்டாலே அப்படி எழுதுறவங்க தன்னால நிறுத்திடுவாங்க ... அதனால் வாசகர்கள் முடிவு பண்ணிகோங்க...
தேவா இப்போதைக்கு மிக தேவையான ஒரு பதிவு....நன்றி.
yes... correct...
Pathivugalil nalla pathivugalai palar padippathillai...
நான் கூறுவது பதிவுலகம் சாரா பொதுவான வாசகர்களை!
தம்பி.. நகைச்சுவை பதிவுகள் இருக்க கூடாதுன்னு எங்கயுமே நான் சொல்லலையே!
இங்க இருக்குற பிரபலம் ஒரு மாயை , பதிவுலகத்துல நண்பர்களைப் பெற முடியும் .
அத விட்டுட்டு வேற விசயங்கள் எதுக்கும் பயன்படாது .. சரி நான் கிளம்புறேன் .. ஹி ஹி
வீடு எப்படி இருக்குமோ அதை போன்றே நாடும் இருக்கும்... இது அறிஞர் அண்ணா கூறியது.
நாடு எப்படி இருக்கிறதோ பதிவுலகமும் அப்படியே இருக்கும்.
நீங்க ரொம்ப நல்லவரா இருப்பதால் பதிவுலகமும் அப்படியே இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறீர்கள்.
பதிவுலகத்தை திருத்த நீங்கள் மற்றும் உங்களை போன்றவர்கள் உங்கள் குழந்தைகளுக்கு எப்படி பட்ட படைப்புகளை வாசிக்க வேண்டும் என்று கற்று கொடுங்கள் . அடுத்த தலைமுறையிலாவது நல்ல பதிவுலகம் கிடைக்கும்.
இப்படிக்கு
வாசகன் மட்டும்
இந்தப் பதிவின் தலைப்பு ஹிஹி.. என்ன வகை?
அதிகமாக எழுதுவதை விட தரமாக எழுத அனைவரும் முயன்றால் இது மாறும்.
இங்கே ரேட்டிங், தரவரிசை எல்லாம் வைத்து அனைவரையும் பந்தயத்தில் ஓட வைத்துவிடுகிறார்கள்.
பதிவுலகம் பற்றிய வேறு ஒரு கோணம், பார்வை... ரசித்து வாசித்தேன்..
நன்றி..