Skip to main content

ஜப்பானிய அநீதி.....ஒரு கவிதாஞ்சலி!


















ஒரு ஆக்ரோஷ அரக்கனாய்
கரையைச் சுவைக்க
கால் பதித்தாயா கடலே?
ஆடும் மனிதர்களுக்குப்...
பாடம் புகட்ட ஆடிக்...
களித்தாயா நிலமே...?

என்ன செய்தோம் என்றுணரும்
தருணம் முன்பே...
நிலத்தை அள்ளிக் குடித்துவிட்டு
உயிர்களை பெயர்த்தெடுக்கும்
உன் அவசரத்தின் மீதான
என் கோபத்தை எங்கே அடுக்குவேன்?

எத்தனை உயிர்கள் போனது...?
கணக்கு வழக்காய் கழித்து
அந்த நினைவுகளை மழித்துக் கொள்ளும்
காலத்திற்கு தெரியுமா
எத்தனை கனவுகளை அழித்தோமென்று?

தனிமையில் துளிர்க்கும்...
என் கண்ணீர்த் துளிகளின் வேர்களின்
மூலம் அறிந்த அண்டமே....
மூலமில்லா பிண்டம் தாங்கிய ஆதியே
எல்லாம் எடுத்துக் கொண்டு
எம் பூமியில் உயிர்களுக்கான
சந்தோசத்தையும் சாந்தியையும்
இறைத்துப் போடு; இல்லையேல்
மொத்தமாய் பூமிப் பந்தை
அகண்டவெளியில் இருந்து..
அறுத்துப் போடு....!

இன்னுமொரு முறை
கொந்தளிக்காதே கடலே...
ஆட எத்தனிக்காதே நிலமே...
உன்னை கட்டுக்குள் கொண்டு
வர யுத்திகள் அற்றுப் போயிருக்கிறோம்...
கால்கள் இருந்தால் கொடு
பிடித்து கண்ணீரால் கழுவுகிறோம்......!

ஜப்பானிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உயிரிழந்த அத்துனை ஆத்மாக்களும் சாந்தியடைய எல்லாம் வல்ல ஏக இறையிடம் எனது ஆழ்ந்த தியானத்தையும், வேண்டுதலையும் சமர்ப்பிக்கிறேன்.


தேவா. S

Comments

சுனாமி அழிவு...மனம் கலங்குகிறது.

எனது வலைபூவில் இன்று:ஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ
அந்த உயிர்களுக்கு அஞ்சலிகள்!
Kousalya Raj said…
மிகவும் மனதை வேதனை படுத்துகிறது . உங்களின் வேதனையை கவிதையாய் கொட்டிவிட்டீர்கள்...எனக்கு என்ன எழுதவென்றே தெரியவில்லை...

இயற்கையின் முன் நாம் எல்லாம் ஒன்றும் இல்லை என்ற எண்ணமே மேலோங்குகிறது.

பாதிப்பின் முழு விவரம் இன்னும் சரியாக தெரியவில்லை. எத்தனை உயிர்களோ...?

இறைவனிடம் வேண்டுவதை தவிர வேறு ஒன்றும் இப்போது தோன்றவில்லை.

எனது ஆழ்ந்த அஞ்சலிகள்.
Balajisaravana said…
கௌசல்யா சகோ சொன்னது போல, இறைவனிடமும் இயற்கையிடமும் தான் நம் வேண்டுதல்களை வைக்க வேண்டும். அவர்களின் ஆன்மா சாந்தியடைய எனது அஞ்சலிகளும்!..
Chitra said…
இன்னுமொரு முறை
கொந்தளிக்காதே கடலே...
ஆட எத்தனிக்காதே நிலமே...
உன்னை கட்டுக்குள் கொண்டு
வர யுத்திகள் அற்றுப் போயிருக்கிறோம்...
கால்கள் இருந்தால் கொடு
பிடித்து கண்ணீரால் கழுவுகிறோம்......!


....இந்த இயற்கை நிகழ்வுகள், மனிதனின் கட்டுக்குள் உலகம் இல்லை என்பதை நினைவு படுத்துகிறது.


இந்த தாக்கத்தில் இருந்து விடுபட நாளாகும்.
உயிரழந்த - பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் பராத்தித்துக் கொள்வோம்.
Mahi_Granny said…
என் பிரார்த்தனையும் சேர்த்துக் கொள்கிறேன்
என் பிரார்த்தனையும் சேர்த்துக் கொள்கிறேன்
பாதிப்புகளைப் பார்க்கையில் அத்தனை மனங்களிலும் எழுகிற ஓலத்தைக் கவிதையாக்கியிருக்கீங்க.

உயிரிழந்தவர்களுக்கு என்னுடைய அஞ்சலிகளும்!
மிகவும் கொடூரமான வேந்தனையான சம்பவம் ..

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...