Skip to main content

ஜப்பானிய அநீதி.....ஒரு கவிதாஞ்சலி!


















ஒரு ஆக்ரோஷ அரக்கனாய்
கரையைச் சுவைக்க
கால் பதித்தாயா கடலே?
ஆடும் மனிதர்களுக்குப்...
பாடம் புகட்ட ஆடிக்...
களித்தாயா நிலமே...?

என்ன செய்தோம் என்றுணரும்
தருணம் முன்பே...
நிலத்தை அள்ளிக் குடித்துவிட்டு
உயிர்களை பெயர்த்தெடுக்கும்
உன் அவசரத்தின் மீதான
என் கோபத்தை எங்கே அடுக்குவேன்?

எத்தனை உயிர்கள் போனது...?
கணக்கு வழக்காய் கழித்து
அந்த நினைவுகளை மழித்துக் கொள்ளும்
காலத்திற்கு தெரியுமா
எத்தனை கனவுகளை அழித்தோமென்று?

தனிமையில் துளிர்க்கும்...
என் கண்ணீர்த் துளிகளின் வேர்களின்
மூலம் அறிந்த அண்டமே....
மூலமில்லா பிண்டம் தாங்கிய ஆதியே
எல்லாம் எடுத்துக் கொண்டு
எம் பூமியில் உயிர்களுக்கான
சந்தோசத்தையும் சாந்தியையும்
இறைத்துப் போடு; இல்லையேல்
மொத்தமாய் பூமிப் பந்தை
அகண்டவெளியில் இருந்து..
அறுத்துப் போடு....!

இன்னுமொரு முறை
கொந்தளிக்காதே கடலே...
ஆட எத்தனிக்காதே நிலமே...
உன்னை கட்டுக்குள் கொண்டு
வர யுத்திகள் அற்றுப் போயிருக்கிறோம்...
கால்கள் இருந்தால் கொடு
பிடித்து கண்ணீரால் கழுவுகிறோம்......!

ஜப்பானிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உயிரிழந்த அத்துனை ஆத்மாக்களும் சாந்தியடைய எல்லாம் வல்ல ஏக இறையிடம் எனது ஆழ்ந்த தியானத்தையும், வேண்டுதலையும் சமர்ப்பிக்கிறேன்.


தேவா. S

Comments

சுனாமி அழிவு...மனம் கலங்குகிறது.

எனது வலைபூவில் இன்று:ஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ
அந்த உயிர்களுக்கு அஞ்சலிகள்!
Kousalya Raj said…
மிகவும் மனதை வேதனை படுத்துகிறது . உங்களின் வேதனையை கவிதையாய் கொட்டிவிட்டீர்கள்...எனக்கு என்ன எழுதவென்றே தெரியவில்லை...

இயற்கையின் முன் நாம் எல்லாம் ஒன்றும் இல்லை என்ற எண்ணமே மேலோங்குகிறது.

பாதிப்பின் முழு விவரம் இன்னும் சரியாக தெரியவில்லை. எத்தனை உயிர்களோ...?

இறைவனிடம் வேண்டுவதை தவிர வேறு ஒன்றும் இப்போது தோன்றவில்லை.

எனது ஆழ்ந்த அஞ்சலிகள்.
Balajisaravana said…
கௌசல்யா சகோ சொன்னது போல, இறைவனிடமும் இயற்கையிடமும் தான் நம் வேண்டுதல்களை வைக்க வேண்டும். அவர்களின் ஆன்மா சாந்தியடைய எனது அஞ்சலிகளும்!..
Chitra said…
இன்னுமொரு முறை
கொந்தளிக்காதே கடலே...
ஆட எத்தனிக்காதே நிலமே...
உன்னை கட்டுக்குள் கொண்டு
வர யுத்திகள் அற்றுப் போயிருக்கிறோம்...
கால்கள் இருந்தால் கொடு
பிடித்து கண்ணீரால் கழுவுகிறோம்......!


....இந்த இயற்கை நிகழ்வுகள், மனிதனின் கட்டுக்குள் உலகம் இல்லை என்பதை நினைவு படுத்துகிறது.


இந்த தாக்கத்தில் இருந்து விடுபட நாளாகும்.
உயிரழந்த - பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் பராத்தித்துக் கொள்வோம்.
Mahi_Granny said…
என் பிரார்த்தனையும் சேர்த்துக் கொள்கிறேன்
என் பிரார்த்தனையும் சேர்த்துக் கொள்கிறேன்
பாதிப்புகளைப் பார்க்கையில் அத்தனை மனங்களிலும் எழுகிற ஓலத்தைக் கவிதையாக்கியிருக்கீங்க.

உயிரிழந்தவர்களுக்கு என்னுடைய அஞ்சலிகளும்!
மிகவும் கொடூரமான வேந்தனையான சம்பவம் ..

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த